Followers

Monday, July 27, 2009

அமைதிக்கு பெயர் தான் சாந்தா ....

அமைதிக்கு பெயர் தான் சாந்தா .....

அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான
இரு குடும்பங்கள். .செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள்.ஆணும்
பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் குடும்பமும் குழந்தைகளுமாக
வாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று
உயர் பதவிபெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா
வங்கியில் பணியில் சேர்ந்தாள்.

தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான்.
காலம் உருண்டு ஓடியது .சாந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான்.


ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண்
கேட்டு தியாகர் செல்லமனியிடம் வந்தார்.தம்பி இதை எல்லாம்
நீ கேட்க வீண்டுமா?பிறந்த பொழுதே நிச்சயமானது தானே

எதற்கும் ஒரு வார்த்தை பிள்ளைகளிடமும் கணவரிடமும் கேட்டு சொள்கிறான் என்றாள்.ஆரம்பம், ....ஆயத்தங்கள்... எல்லாம் முடிந்தது. அமைதியாக
வாழும் காலத்தில் ,தாய் நாட்டின்.அவலம் அவர்களை புலம் பெயர
வைத்து விட்டது


மணம் முடித்து மூன்று மாதத்திலே பயணமாகவேண்டி வந்தது. வந்ததும்
ஆண்டு ஒன்று கழிந்ததும் அவர்களிடையே பிரச்சனை.... வீட்டுக்கு வராமை..
...ஒன்றாக செல்லாமை ...,பெரிய பிரிவாகி விட்டது . ராகவனும் மனித

பலவீனத்தில ஒரு வேறு இனத்தை சேர்ந்த பெண் துணைதேடி
ஒரு மகனையும் பெற்றான்

செயதி தொலைபேசியில் நாளாந்தம் அலை அலையாக பறந்தது.


இரு வீடாரும் பெரும்.. பகையை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்வு இப்படியா
போக வேண்டும் .. இது யார் செய்த தவறு?.... புலம் பெயர் தவறா?..


சாந்தாவின் விட்டுகொடாமையா? ராவனின் புரிந்து கொள்ளாமையா?..

.அவன் செய்த துரோகமா?......

சாந்தா இன்னும் காத்து இருக்கிறாள். எத்தனையோ திருமணம் பேசியும்

..மறுத்து விட்டாள.



..வாழ்கை என்றால் ஒருவனுடன் தான்...........ஒருமுறைதான்...என்று .....

6 comments:

Admin said...

நல்ல கதை தொடருங்கள்..........

யோ வொய்ஸ் (யோகா) said...

நன்றாக எழுதுகிறீர்கள் வாழ்த்துகள்

சப்ராஸ் அபூ பக்கர் said...

ரசனையோடு வாசித்தேன். அருமையாக இருந்தது. வாழ்த்துக்கள்...

தொடருங்கள் உங்கள் பயணத்தை......

நிலாமதி said...

நன்றி ...........யோ , உங்கள் வருகைக்கும் பதிவுக்கும்.
தொடர்ந்து இணைந்து இருங்கள்.

நிலாமதி said...

சப்ராஸ் ......உங்கள் கருத்துக்கு நன்றி.உங்கள் வருகையும் உக்குவிப்பும்
என்னை மேலும் ஆக்குவிக்கும்.

Anonymous said...

வாழ்க்கை என்றால் ஒருவருடன்தான், ஒருமுறைதான்... ஹும்.. யோசிக்கவேண்டிய விசயம்.