Followers

Saturday, August 22, 2009

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை..

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை...

நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , நான் அன்புக்கு பஞ்சம் இல்லை . பெரிய பட்டண த்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பழவகை எல்லாம் ...கொண்டு வருவார் ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் அப்பா .. நெஞ்சிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) என்று தொடரும் ..

.பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . நானும் புலம் பெயர்ந்து , நானும் அம்மாவாகி , புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டேன் அப்பா அந்த பாட்டு ...

தொலை பேசி யில் கை நடுங்க ..படித்து காட்டினர் ..நீங்க என் நாட்டுக்கு வாங்க என்றால் " அந்த குளிர் இந்த உடல் தாங்காது ...என்பார் ..கடைசியில் .

பென்சனியர் , அம்மவும் காலமாகி விட்டா. நாங்களும் போக முடியாத நிலை . எங்கள் வீட்டு சொக்கன் (தோட்ட வேலை செய்தவர் ) பெற்ற பிள்ளையுடன் இருந்து காலமாகி விட்டார். கடைசி வரை அப்பா என்னுடன் இருக்க கொடுத்து வைக்கவில்லை ..இன்று அதி காலை கனவு கண்டேன் . எனக்கு உறக்கம் இல்லை ...ஒரே பழைய கால சிந்தனையாகவே இருக்கிறது. அவர் விரும்பி பாடும் பாடல் இது தான் ..........

நான் பெற்ற நவமான செல்வம்,.... தேன் மொழி பேசும் சிங்கார ச்செல்வம் நீ...அன்பே இல்லா மானிடரால் ..... அன்னை யை இழந்தாய் இளவயதில் ...
பண்பே இல்லா பாதகர்கள் வாழுகின்ற பூமி இது .............நீ நான் பெற்ற செல்வம்.

8 comments:

சப்ராஸ் அபூ பக்கர் said...

தாங்களுக்கு அன்போடு ஒரு விருது வழங்கி இருக்கிறேன்.

என் தளத்திற்கு வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளவும்...

சீமான்கனி said...

//தொலை பேசி யில் கை நடுங்க ..படித்து காட்டினர் ..நீங்க என் நாட்டுக்கு வாங்க என்றால் " அந்த குளிர் இந்த உடல் தாங்காது ...என்பார் ..கடைசியில் //.

முதுமை ஒரு பலவினமான அனுபவசாலி.....பல ஆசைக்கு வேளி....

நிலாமதி said...

அபூ ..........நான் விருதுக்கு தகுதி உள்ளவளா என தெரியவில்லை இருபினும் உங்க நல் மனதுக்கு என் உள்ளதால் நன்றி .

நிலாமதி said...

சீமான் கனி உங்க வரவுக்கும் பதிவுக்கும் நன்றி . என் பதிவுகளை ஆர்வத்தோடு படிக்கும் உங்களுக்கு , என் இதயத்தில் நட்பாய் மலர்கிறது ஒரு பூ.

Admin said...

தப்போது நேரம் கிடைப்பது அரிது என்றாலும் உங்கள் இடுகைகளை வாசித்து வருகிறேன். இடுகைகள் அருமை வாழ்த்துக்கள்.

நீங்கள் விருதுக்கு தகுதியானவரேதான் ஏன் தயக்கம்.

ஈரோடு கதிர் said...

மென்மையாய் இதயம் வருடம் சோகம்....

யோ வொய்ஸ் (யோகா) said...

உங்களுக்கு ஒரு விருது எனது என் தளத்தில் உள்ளது, வந்து பெரு மனதோடு அதை ஏற்றுக் கொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கிறேன்.

நிலாமதி said...

கதிர் ...உங்கள்வரவுக்கும் பதிவுக்கும் நன்றி கடந்து விட்டகாலங்க்ளை நினைக்கையில்..வாழ்வில் சோகம் அலைகளாய் துரத்துகிறது,