Followers

Friday, July 17, 2009

என்னவளே .....அடி என்னவளே

என்னவளே .....அடி என்னவளே .


அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ..சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு ....தொலை பேசியின் கிணு கிணுப்பு .விழித்து எழ வைத்தது ,சுதா எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ....கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .....பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம்.

அவன் சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் .........சுதா என்னை மறந்து விடாயா ?நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் ......நீண்ட காலத்தின் பின் மனம் மாறி அவனை விரும்பியவள். இவள் பத்தாம் வகுப்பு இறுதி சோதனை செய்யும் போது அவன் பல்கலை கழகம் நுழைய இருந்தவன். ரண்டு வயது இவளை விட கூடியவன். ஒரு நாள் இவள் ... பஸ் தரிப்பில் கண்டதும ஓடி வந்து தான் நாட்டு நிலைமை காரணமாக் வெளி நாடு செல்ல இருப்பதாக வந்து சொன்னவன் ......"..காத்திரு வருவேன் " என்றவன். கொழும்பில் நின்று இரண்டு மடல்கள் நண்பன் மூலம் கொடுத்து விடிருந்தான். பின் இரண்டு வருடங்களாக எதுவுமே இல்லை. இவை எதுவுமே சுதாவின் பெற்றாருக்கோ சுந்தரின் பெற்றாருக்கோ தெரியாது . காலம் யாருக்காகவும் காத்திராமல் உருண்டு ஓடியது .......

இடப்பெயர்வுகள். ...கெடுபிடிகள். குண்டு சத்தங்கள் ....என்று ஐந்து வருடங்கள்.
ஓடி விட்டன . எல்லோரைய்ம போலவே சுதாவும் இடம் பெயர்ந்து வவனியாவந்து பின் கொழும்பில் உள்ள ஒரு மாமா வீட்டுக்கு வந்து சிலகாலம் தங்கி இருந்தார்கள். பின் சுதாவின் பெரிய மாமாவின் உதவியுடன் ஒரு வீடின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து கொண்டார்கள். ஒரே ஒரு பிள்ளையான சுதாவை ஒரு நல்லவன் கையில் பிடித்து கொடுக்கவேண்டும் என்று பெற்றவர்கள். பேசிக்கொண்டனர். சுதாவின் தந்தையும் ஊரில் செய்த தரகு வேலை இல்லாததால் புடவை கடை ஒன்றில் சிறு பணியை தேடிக்கொண்டார். அவர்கள் வாழ்வு அமைதியாகவே போனது .....சுந்தரின் எது வித தொடர்பும் இல்லாததால் சுதாவும் எதுவும் பெற்றவருக்கு சொல்லவில்லை.காலம் தான் யாருக்கும் காத்திருப்பதி ல்லையே . சுதாவுக்கு திருமணம் முற்றாகி ...வெளிநாடு மாப்பிள்ளைக்கு மனைவியானாள். ஆறு மாதமாக் வதிவிட விசாவுக்காக காத்திருந்தவள் , மூன்று மாதமுன்பு தான் கனடாவந்து சேர்ந்தாள். தன கதையை சொல்லி முடித்தவள் மறு முனையில் ...சுந்தரின் கதையை கேடும் அழுதே விடாள். சுந்தர் கொழும்பில் இருந்து வெளிக்கிட்டு ..மலாசியா வந்ததும் ...ரண்டு முறை திருப்பி அனுப பட்டதும் , பின் மூன்றாம் முறையில் அமெரிக்க வந்து .....கடந்த மூன்று வருடமாக் கனடாவில் இருப்பதாய் அறிந்து கொண்டாள். இவளை பற்றி விசாரித்த போது இவள் வவனியாவில் இருப்பதாக் தான் கேள்வி பட்ட்தாக் சொனார்கள்.

விதியே நம்மை சேர்த்து வைக்கவில்லை. என் மன ஆதங்கம் தீர தான் உன்னை தேடி தொடர்பு கொண்டேன் . திருமண விடயமும் கேள்வி படேன் . நீ எனக்கு இல்லய் என்றதும் எவ்வளவு கவலை படேன். நம்ம விதி அவ்வளவு தான் சந்தோஷமாக் இரு . நான் உன்னை தொடர்பு கொண்டத்தை கணவனுக்கு சொல்லாதே வீண் சந்தேகங்களும் பிரச்சினைகளும் வரும் .என் சுதா சந்தோசமாக் இருக்கிறாள் என்ற மன அமைதியில் வாழ்ந்து விடுவேன். எப்போதாவது என்னை கண்டால் ... பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்தி ஒரு வார்த்தை கதைத்து விடு .எனக்கு மேலும் யுனி வரை படிக்கவில்லை என்ற கவலை தான் நாடுக்கு வந்த காசுபிரசினை தீர்க்க வேலை செய்யவெளிக்கிட்டு ...கடன் கட்டியது தான் மிச்சம் . ஒரு காலத்தில் என் பிள்ளையும் உன் பெண்ணும் கல்லூரியில் படித்தால் ....சேர்த்து வைப்போம். இனி மேல் உன்னுடன் தொடர்பு கொள்ள மாடேன். சந்தோசமாயிரு . எந்த விதத்திலும் உன்னை தொல்லை படுத்த மாடேன் இது தான் முதலும் கடைசியுமான அழைப்பு . என்னை நம்பு சுதா .

சுதா கண்ணீருடன் கட்டிலில் விழுந்தாள் .சுந்தர் இங்கு இருக்கிறான் என்று தெரிந்தால் நான் கலியாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாடேன். எந்த நம்பிக்கையை வைத்து நான் காத்திருபது ...புயல் வீசியது போல இருந்த உரையாடல் .

எழுந்து சென்று குளித்து விட்டு தன் ஆங்கில வகுப்புக்கு போக ஆயத்தமாகி பஸ் தரிப்பில் நின்றாள்.

நிறை வேறாத ஆயிரம் ஆயிரம் காதலில் அவளது காதலும் சேர்ந்து கொண்டது .

Sunday, July 12, 2009

பரிசு ..............

பரிசு ..............

அந்த சிறு கிராமத்தில் . வாழ வந்தவள் தான் , சாவித்திரி . தபாற்காரன் சோமுவுக்கு மனிவியாக , இனிதே இல்லறம் நடத்தி வந்தாள் . மூத் தவள் , .சோபனா , சுதா ..இருவரும் படிப்பில் கெட்டிகாரி கள். . கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து . தானும் தன பாடுமாக வாழ்ந்து வந்தாள் . சோமுவும் கம்பீரமான தோற்றம் கொண்டவள். அந்த ஊர் மக்களால் மிகவும் விரும்ப பட்டவன் . காதலர்களுக்கு தெய்வமானவன். வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில் அந்த ஊர் இளையவர்கள் பலே கிலாடிகள். வீடில் வந்து எதுவுமே சொல்லமாட்டான்.அந்த ஊரில் தபால் அதிபர் , இருவருடதுக்கு ஒரு முறை மாற்றம் பெறுவார்கள். இடையில் அவர்களது குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கவும் அனுப்ப படுவான் . காலையில் , காக்கி சட்டையுடன் புறப்படும் அவன் . மாலையில் சிலசமயம் மதியமே வீடு வந்து விடுவான். ரயில் வர தாமதமாகும் நாட்களில் அவனும் வீடு திரும்ப நேரமாகும் . தபால் கந்தோருக்கு வரும் பென்சன் காரருக்கும் மிக நட்பானவன். அந்த ஊரில் பதின் நான்குக்கும் பதின் ஆறுக்கும் இடையில் வரும் ஒரு வேலை நாளில் ஓய்வூதியம் கொடுப்பார்கள் . வாசிக்க சாலை பெரியவர்கள் இவனை கண்டால் " சோமு எப்பவாம் இந்த முறை பென்சன் " என்பார்கள். அவனுக்கு தெரிந்தால் அந்த நாளை சொல்வான்.

அந்த ஊரில் விசில் சத்தம் வீட்டு காரரை வாயிலுக்கு அழைக்கும். கடிதம் விநியோகத்துக்காக . இனிமையாக போய் கொண்டிருந்த அவர்கள் வாழ்வு ஒரு நாள் இருண்டு விட்டது ...ஒரு நாள் சோமு கடித பரிமாறல் செய்து கொண்டிருக்கும் ஒழுங்கையால் வந்து திரும்பும் போது , எதிரே வந்த லாரி யை ( கன ஊர்தி ,கன ரக வாகனம் )) கவனிக்க வில்லை இவன் மீது மோதி விட்டது சைக்கிள் (மிதி வண்டி ) ஒரு புறம் ....சிதறிய தபால் பொதிகள் ஒரு புறம் ரத்தவெள்ளத்தில் கிடந்தான் . பின்பு அம்புலன்சு ......பொலிசு ( நகர் காவலர் ) ......விசாரணை என்று எல்லாம் முடிய அவனது உயிரற்ற உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது .......ஊரவர்கள் எல்லோரும் கண்ணீர் மல்க விடை பெற்றான் இரு பெண்குழந்தைகள் பத்து ..ஒன்பது அனாதைகளாக விடப்பட்டனர். கையில் இருந்தவற்றை கொண்டு காலத்தை ஓட்டினாள்.எல்லாம் முடிய அவனது பென்சன் , பணத்துக்காய் பார்த்து கொண்டு இருந்தாள் ....அது வர மிக தாமதமாகியது ....கூலி வேலைக்கும் சென்றாள். ,,,,பிள்ளைகளும் வளர்ந்து மூத்தவள் பெரியவ ஆனாள் .அத்தோடு ....அவள் பாடசாலை இடை நிறுத்தபடார். இளையவள் ...சிலகாலம் படித்தும் ...முடியவில்லை. ..அவளுக்கு ஆங்கில அறிவும் குறைவு . தபால் அதிபர் ...மேலதிகாரிகள் என்று எல்லாரிடமும் பேசி பார்த்தாள். இவள் கோலத்தை கண்டு யாரும் மதிக்கவில்லை. ...கையூட்டு கேட்பவராக் இருந்தனர். இதன் போது தான் அந்த ஊர் " கந்தோர் கந்தசாமி "....அறிமுகமானார். இவள் தன பிரச்சினையை சொல்லி கேட்டால் ஆங்கிலத்தில் கடிதம் எழுத அடிக்கடி இவள் வீடுக்கு வருவார். பெஞ்சனியராக் இருந்தாலும் கம்பீரமான இருப்பார் . இரு மகன் கள் பெரியவர்கள் ....வெளி நாடில் இருந்தார்கள். மனைவி சாரதாம்பாள் எந்நேரமும் கோவில் குளம் என்று திரிவாள். பணியாட்களை கொண்டு பூக்களை கட்டி கோவிலுக்கு ..சிலைகளுக்கு அணிவிப்பாள் . ,விரதம் இருப்பது என்று . எந்நேரமும் சமய அலுவல் செய்வாள். கந்தோர் கந்தசாமியார் சாவித்திரி வீட்டுக்கு போய் வருவது ...ஊரவர்களால் தப்பாக பேசபட்டது இது சாரதாம்பாளுக்கும் காதில் எட்டவே கணவனை கண்டித்தாள். சிலர் மாலை மங்கும் நேரங்களிலும் போய் வருவதாக சொன்னார்கள். ..

.இப்படி பல மாதங்கள் சென்றன. ஒரு நாள் ....அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு ரண்டாந்தாரமாக் மூத்த பெண்ணை கேட்டனர். அயல் ஊரில் இருந்தவர்கள். மகளுக்கு சிறியவயது என்று தட்டிக்களித்து விடாள்.ஒரு நாள் ....வழமையாக கூலி வேலைக்கு செல்லும் அவள் வேலைக்கு வராததால் .....அந்த ஊர் பெரியவர் ஒருகூலி ஆளை அனுப்பி சென்று கூப்பிடு பார்த்த போது . அவள் இல்லை. ...பிள்ளைகள் இரண்டும் . தூரத்து கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்று விடார்கள் வந்து பார்த்தபோது .........சாவித்திரி ...வீட்டின் முகட்டின்

சீலை இல் தொங்கி கொண்டு இருந்தாள் .........பாவம் அந்த சாவித்திரி க்கு ஊர் கொடுத்த் பரிசு .......நடத்தை. கெட்டவள். i

விலைமாதர் ...........விபச்சாரிகள் ....நடத்தை கெட்டவர்கள்.... அவர்களாக பிறப்பதில்லை .......உருவாக படுகிறார்கள்.

This post has been edited by நிலாமதி: Yesterday, 11:09 PM