Followers

Saturday, September 26, 2009

வேப்ப மர உச்சியில்............

வேப்ப மர உச்சியில்............

அந்த ஊரின்  துடிப்பான இளையவர்கள் சேர்ந்து . கொள்ளும் இடம்.  புதிதாக ஒரு எண்ணம் தோன்றவே  ராகுல் அண்ட் கம்பனி தீட்டினார்கள் ஒரு திட்டம்.   மச்சான் ஆவி.........இருக்காடா ......சென்ற வருடம் முதலியார் மாணிக்கம் , குச்சொழுங்கை ...வேப்பமரத்தின் நிழல் வழியே வந்த போது பேயடித்தது உண்மையாடா ......?   பல வாறு சிந்தனைகள் ......கதைகள் ....மறுத்தல்கள் நடுவே வீரமுள்ளவன் ....அவ்வூர் சேமக்காலையில் (கிறிஸ்துவ் மயானம்).வரும் வெள்ளி இரவு ,நள்ளிரவு  பன்னிரண்டு  ஐந்து( 12 .05  ) நிமிடமளவில் வேப்பங்கன்று நடுவதாக தீர்மானிக்க பட்டது.......இந்த மாணவ குழுவில் ஐவர் இருந்தனர் ராகுல் அதில் துடிப்பான இளைஞ்ன் ஆவி இல்லை ..........என்றுவாதிடுபவன். மாணவர்கள் தங்களிடையே மச்சான்" .....என்று அழைத்து கொள்வர் .இது கூட்டாளி ..தோஸ்த்து என்று பொருள் படும்.

அந்த நாளும் வந்தது .......காலையில் ஒன்றுகூடிய போது ராகுல் தான் அங்கு சென்றுவீரம் காட்டுவதாக, வேப்ப  மரம் சுடலையில் நாட்டுவதாக முடிவு செய்ய பட்டது........இதில் சிலர் இறுதியாண்டு கல்லூரி பரீட்சைமுடிவை எதிர் பார்ப்பவர் சிலர் இறுதியாண்டு படித்துகொண்டிருப்பவர்கள். அப்போதுகைத்தொலை பேசி வசதியெல்லாம் இல்லை.  சைக்கிள் தான் அவர்கள் வாகனம்.

மாலை இருள் கவிழ்ந்ததும் ,கன்று  நடுவதற்கு குழி தோண்டுவதற்கு ,மண் வெட்டி , பிக்கான், அலவாங்கு ..........மூன்றுஅடி உயர வேப்பங்கன்று (கல்லூரியில் புரஜக்டு க்கு தேவை என் வீடில் களவாடினது.)...........கொண்டு போய் சேம காலையின்  ஒரு சுவர் ஒரமாக மறைத்துவைக்கபட்டது....இரவு எட்டு மணியில் எல்லோரும்கூடி முடிவெடுத்தபின் கலைந்துவிட்டனர் ..........ராகுலனுக்கு தூக்கமே வரவில்லை .......வீடில் இறுதியாண்டு  பரீட்சைக்கு ப்படிப்பது போல பாவனை செய்தான். வீட்டில் எல்லோரும் உறங்க சென்றுவிட்டனர். மணி இரவு பதினொன்றே முக்கால் , அறைக்குள் சென்று ,அரைக்காற்சட்டை போடுக் கொண்டு  அதன் மேல் .சாரம் (லுங்கி)அணிந்தான். .நெஞ்சு சம்மட்டிய் கொண்டு அடிப்பது போல அடித்து கொண்டது. பூனை போல வீட்டு மதிலால் ஏறி மறுபக்கம் குதித்தான் . மடியில் செருகியிருந்த்த் டார்ச் லையிற் ...பத்திரமாக இருப்பதை  உறுதி செய்துகொண்டான். கைக்கடிகாரம் மணி பன்னிரண்டு காட்டியது. முன்னரே கொண்டு வைத்திருந்த பொருட்களை மதிலால் உள் நோக்கி வீசினான். பின் தானும்குத்தித்து ..........அவர்கள் குறித்த திசை நோக்கி பொருட்கள் எடுத்துக்கொண்டு நடந்தான் அந்த இளம் குளிரிலும் நெற்றியால் வியர்வை வழிந்தது . உட்காந்து முதலில் புல்லை மண்வெட்டியால் செருக்கினான்.இரண்டு சதுர அடிக்கு  செதுக்கிய பின் ...இடையில் தண்ணீர் விடாய் போன்ற உணர்வு....பின் அலவாங்கினால் இரண்டு குத்துக்கள் போட்டதும் கற்பாறை தென்படவே  அதை தனக்கு  பின் குற்றி செருகி விட்டு பிக்கான் எடுத்து கிண்ட தொடங்கினான். இரண்டு மூன்று கிண்டல் போட பின்னாக இருந்து அவன் சாரத்தை  யாரோ இழுப்பது போன்ற உணர்வு. பயம்  .....தனித்த  உணர்வு...ஒருவாறு தன்னை  தேற்றி மீண்டும் ஓங்கி நிலத்தில் குழி பறிக்கும் முயற்சி. மீண்டும் பின்னால் பிடிதிளுப்பது போன்ற உணர்வு..........அந்த வேளையில் தூரத்தே ஒரு நாயின் ஊளைச்சத்தம். நாய்களின் கண்களுக்கு பேய் தென்படும்  என்று பாட்டி கதை  சொன்ன ஞாபகம். ஒரு வேளை ஆவி தன்னை நோக்கி வருகிறதோ ............... சாரத்தை கழற்றி விட்டு ஒரே ஓட்டம் ....வீடு போய் சேர்ந்து எப்படி படுத்தான் என்று தெரியவில்லை. மறு நாள் காலை அவனை தாய் தட்டி எழுப்பிய போது உடல் அனலாக கொதித்து. அவ்ள்மீண்டு போர்த்திவிட்டு ...குடிநீர்க் .கசாயம் வைக்க சென்று விடாள். காலையில் நண்பர்கள் சென்று பார்த்த போது ராகுலனின் சாரம் அலவாங்கினால் குத்தபட்டு   (சாரத்தின் தலைப்பு  பகுதியில் அலவாங்கு இறங்கி இவன் அசையும்
போது பின் நோக்கி இழுத்தது ).காணப்பட்டது ஓஹோ ...........மச்சான் இரவு இங்கு வந்திருக்கிறார்.போட்டியில்  வெல்லும் எண்ணத்துடன் என்று நண்பர்கள் கூடி கதைத்து கொண்டார்கள். அன்று மாலை ராகுலனை காணவில்லை  என்று வீட்டுக்கு  சென்ற போது அவன் காய்ச்சலில் இருப்பதை  எண்ணி தங்களுக்குள் சிரித்து கொண்டார்கள். தாங்கள் போய் பார்த்ததையும் சொல்லி எள்ளி நகையாடினார்கள்.

உண்மையில் பேய் என்பதே இல்லய் அவரவர் மனப் பயம் தான் அருண்டவன் கண்க்கு இருண்டதெல்லாம் பேய் ......... பேய் பிடித்தவர்கள் என்பது உண்மையில்  மன நிலைக் கோளாறு  .மன அதிர்ச்சியால் ஏற்படுவது ..........முற்றும். .

மண் வெட்டி ..........ப வடிவ மரப்பிடி  போட்ட மண் கொத்தும் கருவி .........
அலவாங்கு .............இரண்டு மூணு கிலோ உள்ள முனை கூர்மையான இரும்பு கம்பி
பிக்கான்........இரண்டு முனையும் கூர் உள்ள பிறைவடிவ மரப்பிடி  போட்ட இரும்பு

இந்த பாடல் நினைவு வருகிறது ........

.சின்ன பயலே சின்ன ப்பயலே சேதி கேளடா...............
வேப்பமர உச்சியில் நின்று பேயொன்று ஆடுதென்று ....
விளையாடப் போகும் போது சொல்லி வைப்பாங்க .....
வேலையற்ற வீணர்களின் தேவையற்ற வார்த்தைகளால்
உன் வீரத்தை  முளையினிலே  கிள்ளி வைப்பாங்க.............

Tuesday, September 22, 2009

பாடம் சொன்ன பாப்பா .....(குழந்தை ).

 பாடம் சொன்ன பாப்பா (குழந்தை )

      வாயிலில் தந்தையின் மோட்டர் வண்டியின் ஒலி கேட்கவே குட்டி அக்ஷயா , ஓடோடி சென்று வாயில் கதவை (கேட்) திறந்து விடாள். பின் தந்தையின் மடியில் உட்கார்ந்த அந்த சிறு  இடை வெளியில்பயணம் செய்தாள். சத்தம் கேட்ட லக்ஸ்மி , வாயிற் படிக்கு செல்லவும் குட்டி அக்ஷயா தாவி , தோள் மீது உட்கார்ந்து கொண்டாள். . வேலைக்களையால் வந்த மாதவன் , குளித்து வரவும் , அப்பாவின் தேநீருக்கு பங்கு க்கு நின்றாள் தானும் ஒரு மிடறு குடித்து சுவைப்பதற்காக என்று . மூன்று வயதான் அக்ஷயா , நல்ல அழகான் பெண் அலை போன்ற அழகான் கேசம், முத்து பற்கள். நீலக்கண்கள் என்று எல்லா அழகையும் சேர்த்து பிறந்திருந்தாள். வீடிலே எல்லோருக்கும் அவள் செல்ல பிள்ளை . தேநீர் வேலை முடிந்த்ததும் , லக்ஸ்மி இரவு உணவு தயாரிப்பதில் ஈடுபட்டிருந்தாள். மாதவன் அன்றைய தினசரியில் மெய் மறந்திருந்தான்.

        சிறுமி அக்ஷயா , தனது விளையாட்டு பொருட்களுடன் விளையாடிக்கொண்டு இருந்தாள். அவளது அப்பப்பா , பின் வீட்டு தோட்டத்தில் இருந்து நாளை சமையலுக்கு தேவையான , காய் கறிகளை ஆய்ந்து கொண்டு வந்திருந்தார். விளையாட்டு பொருட்கள் சலித்து போகவே  , மூணு சில்லு  சைக்கிள் வண்டியை உருட்டிகே கொண்டு இருந்தாள் .
சிறிது நேரம் செல்லவே அதிலும் சலித்து போய் . படுக்கையறைக்குள் சென்று விடாள்.வாயிலில்  மணிச் சத்தம்கேட்கவே ..........மாதவன் சென்று பார்த்தான்.

வீடுகாரர் எல்லோரும் தங்கள் வேலையில் மும்முரமாக்  இருந்தனர். அவளது பாட்டி தனது பழைய சீலைகள் உள்ள பெட்டியை திறந்து ,  அதை ஒழுங்காக அடுக்கி கொண்டு இருந்தார். சிறுமி அக்ஷயாவைகானவே இல்லய் .திடீரென , மாதவன் தன் குழந்தை நினைவு வந்தவனாய் , படுக்கை  அறையில் சென்று பார்த்தான் . அவன் கண்ட காட்சி அவனை  அதிர்ச்சிக்குள்ளாக்கியது .........குட்டி அக்ஷயா ..........கண்ணாடி முன் நின்று ,கண்ணில் தந்தையின் கூலிங் கிளாசும் , கையில் குழாய் போல (சிகரட் ) சுருட்டிய வெண் பெப் பர் , வாயில் வைப்பதும் எடுபப்துமாக  அப்பா போல பாவனை செய்து கொண்டிருந்தாள்.
மாதவன் ரகசியமாக் அவளை குழப்பாமல் , வீட்டார் அனை வருக்கும் காட்டினான் . மாதவனுக்கு அன்று இரவு ஒரே குழப்பமாக் இருந்தது .தன்னை  பார்த்து தன் மகள் செய்து விடாளே என்ற கவலை ......காலயில்  கண் விழித்ததும் தீர்மானித்தான் ஆரம்பத்தில் கஷ்டமாக் தான் இருந்தது . தான் விடா முயற்சியால் கொஞ்சமாக் குறைத்து பின்பு  ஒரு நான்கு மாதத்தில் முற்றாக விட்டு விடான்.

தந்தைக்கு பாடம் சொல்லி தந்த குழந்தை ...

..( கதை உண்மை) புகை பிரியர்கள் மன்னிக்கவும். முயன்றால் முடியாதது எதுவுமில்லை.