Followers

Tuesday, October 27, 2009

அஸ்தமனத்தில் ஓர் உதயம் .............

அஸ்தமனத்தில் ஓர் உதயம் .............

அதிகாலை பனிக்குளிர் மெல்ல வாட்ட .........இன்னும் சற்று நேரம் உறங்கலாம் போலிருந்தது ராஜரத்னம் ஐயாவுக்கு. இருந்தாலும் கோவில் மணியோசை அவரை இன்னும் தூங்கவிடாமல் எழுப்பியது. நேரம் மணி ஆறு என்று கடிகார முள் காட்டியது எழுந்து பல துலக்கி காலைக் கடன் முடிக்கவும்  சாரதா கோப்பியுடன் முன்னே வந்தாள். அந்த ஊரில் இவரை மாஸ்டர் என்று அழைப்பார்கள் இவர் அந்த ஊரின் ஆரம்ப பாடசாலையின் தலைமை  ஆசிரியர்.பாட சாலை வேலைகளுடன் ஊர்  நற் பணி யிலும் பெரும் பங்கு வகிப்பவர். இப்போது இளைப்பாறி ........வீடோடு இருக்கிறார். காலைக் கோப்பி முடிந்ததும் அன்றைய  தினசரியில் மூழ்கி விடுவார். இன்று தினசரி வர தாமதமாகியது. வாயில் ஒரு வெண் சுருட்டை பற்ற வைத்தவர் கடந்த காலங்களில் மூழ்கினார்.

அப்போது , கம்பீரமான தோற்றம், மாஸ்டர் ........என்றால்  அத்தனை மதிப்பு .கண்டிப்பும் கண்ணியமும் மிக்கவர். ஊரில் முக்கிய கூட்டங்களில் முன் நின்று தலைமை தாங்குபவர். அந்த ஊரில் தை மாதத்தில் அதிக வேலையிருக்கும் பாடசாலை  அனுமதிகள். இடமாற்றங்கள் புதிய நியமன்கள் என்று. அவருக்கு ஆணும் பெண்ணுமாய் இரு குழந்தைகள் .கல்வி ...கலைகளில் திறமை சாலிகள். நன்றாக படித்து , உயர்கல்வி பெற்ற பின் மேற படிப்புக்காக அண்ணாவை தொடர்ந்த  தங்கையும் ...சென்று பட்டம் பெற்று உயர் உத்தியோகம் பெற்று ....ஊருக்கு வந்து கலியாணம் கட்டி சென்று விட்டனர். இவர் மனைவி மாமலரும் ...அதன் பின் நோயாளியாகி விடார். அவர் வீடில் , இவர் பிள்ளைகளோடு , பிள்ளையாக யாக வாழ்ந்தவள் தான் சாரதா , மாமலரின் தங்கை.

மாமலர் மாஸ்டரை முடித்த மறு வருடமே , அவர்களின் தந்தை மாரடைப் பில் காலமாகிவிட்டார் .   ஒருவர் பின் ஒருவராக. பெற்றாரை இழந்த தனித்து விடப்பட்ட இளம்பெண்ணை , மாஸ்டர்  தான் பொறுப்புடன் கூட்டி  வந்து ஒரு உடன் பிறவா சகோதரியாக வளர்த்து வந்தார்.காலம் செல்ல செல்ல சாரதா பருவ பெண்ணாக் வளர்ந்து வந்தாள். தேவையான் கல்விகளும்  பெற்றாள்  ஆனால்திருமணம்பேசியதும் ஒவ்வொன்றாக  தட்டிக் கழித்துக் கொண்டே வந்தாள். சில காலம் தன் வருமானதுக்காய் ஊர் பிள்ளைகளுக்கு படிப்பு சொல்லிக்கொடுத்தாள்.ஊரவர்களும் பலவாறு மாஸ்டரையும் இவளையும் இணைத்து பேசினார்கள். அவள் இதை சட்டை செய்வதே இல்லய் .  அந்த ஊரில் ஒரு நாள் ராணுவம் தரை இறங்கியது. ஊரவர்களுடன். அவர்களும் இடம் பெயர்ந்தார்கள். ஆனால் அவர்களது ஊருக்கு திரும்பி போகும் நிலை வரவே இல்லை. இடப் பெயர்வினாலும் போதிய மருத்துவ வசதியின்மையாலும் நோயாளி மனைவி மாமலர் இறந்து விட்டாள் . மீண்டும் ஒரு இடப்பெயர்வு. எந்த வேளையிலும் மாஸ்டர்,   மனைவியின் தங்கையை ஆதரித்தே  வந்தார். முன்பு மறை முகமாக் பணிவிடை செய்து வந்த சாரதா........இப்போது அவருக்காகவே வாழ்ந்தாள். ஒரு நாள் மாஸ்டர் சிந்தித்தார் . தான் இல்லாத காலத்தில் இவளுக்கு யார் துணை ....தனித்து  விடப்படுவாள் ,  பொருளாதாரக் கஷ்டமும்  இவளை வாட்டும்,   என்று சிந்தித்து ஒரு முடிவெடுத்தார். பதிவு கந்தோரில் இவளை மனைவியாக ஏற்றுக்கொள்ள சம்மதம் கேடார். அவளும் சம்மதிக்கவே. அறுபது வயது சாரதாவும் , எழுபதின் ஆரம்ப ராஜரத்னம் மாஸ்டரும் தம்பதிகளாயினர். ஒரு நல்ல நாளில் ஊர் கோவிலில் , மாலை மாற்றி தாலியை அணிவித்தார். மனதார அவருடன் வாழ்ந்த் ஒரு தலைக்காதல் வாழ்வின் இறுதி பகுதியில் .( அஸ்தமனத்தில்) நிறைவேறியது . பெரும் பேறாக கருதும் தாலிப்பாக்கியம் அவளுக்கு கிடைத்தது  , அவளுக்கு கிடைத்த தாலிப்பாக்கியம்  ,வாழ்வின் ஓர் உதயமாக , .அஸ்தமனத்தில் அவளுக்கு வாழ்க்கை தொடங்கியது . .

பேப்பர் காரப்பையன் பேப்பர் எனறு அழைத்தும்.......கனவுலகிற்கு சென்று இருந்த மாஸ்டர் .......நினைவு திரும்பினார்.

Monday, October 26, 2009

ரயில் பயணத்தில் .... ......

ரயில் பயணத்தில் ..........

குறிப்பு :.....  சில வாரங்களாக எதுவுமே எழுத முடியவில்லை. உறவுக்குள் ஒரு இழப்பு அயல் ஊர் ...பயணங்கள் ...பின்பு அன்பான் சில பொறுப்புகள்.   வீடில் சில் அலுவல்கள் என்று வலைத் தள பக்கம் வரவேயில்லை. வந்தாலும் ஒரு சிலதை வாசித்து விட்டு  போய் விடுவேன் இன்று ஏதும் எழுதனும் என்று தோன்றவே ஒரு சிறு பதிவு . உங்களுடன்........

செந்தூரன் அன்று காலை அவனது ஊர் நோக்கிய பயணம். பயணப்பை டிக்கட் எல்லாம் சரி பார்த்தபின் டாக்க்சி பிடித்து ரயில் நிலையம் வந்தடைந்தான். மூன்று வருடங்களுக்கு பின் , ஊர் நோக்கி புறப்டுகிறான். இது வரையில்  படிப்பு கலாசாலை  விடுதி என்று இருந்தவன் கடைசியாக  புரபசராக பதவி கிடைத்தபின் .........இப்போது ஊர் நோக்கி .............

செந்து .......எனும் செந்தூரனுக்கு பெண் பார்த்து , பெற்றார்கள்  அவனை இந்த முறையாவது ஊருக்கு  தீபாவளிக்கு வரும்படி வற்புறுத்தி அழைத்து இருந்தார்கள். ஒரு வார விடுப்பில் செல்கிறான். அன்று திங்கள் கிழமை . முதல் வகுப்பில் புக் செய்து இருந்தான். கிழமை நாள் என்பதால் அதிக சனக்கூட்டம் இல்லை. தன் சீட் தேடி அமர்ந்தான். சுற்று முற்றும் பார்த்தான் யாரும் தெரிந்தவர்கள் இல்லை . கையில் ஒரு புத்தகத்தை எடுத்து , வாசிக்க ஆரம்பித்தான். சடேன்று ஒரு வயதான அம்மாளுடன் ஒரு இளம் பெண் , அவனது இருக்கைக்கு முன் இருக்கையில் அமர்ந்தாள். அந்த அம்மாள் அவள் தங்கி இருக்கும் வீடுக்காரியாக இருக்க வேண்டும்., என்பது பேச்சு வாக்கில் புரிந்தது . அவள் விடை பெற்றதும்  சற்று நேரத்தில் ரயில் புறப்பட ஆரம்பித்து. அவசரமாக் தன் பயணப் பையை தலைக்கு   மேல் உள்ள பலகையில் பொருத்த  முயன்றாள் முடியவில்லை. மீண்டும் முயற்சிக்கையில் இவன் ..... May I help you .?........yes please. ..thanks. இதன் மூலம்  அவர்களது பரீட்சயம் ஆரம்பமாகியது. மாதங்கி தனது கல்லூரிப்படிப்பு முடிந்து  தனது ஊர் நோக்கி செல்கிறாள். பரீட்சை முடிவுக்காக காத்திருபவள். தனது ஊர் நோக்கி செல்வதாகவும் , தான் ஒரு உறவுக்கார அம்மாவின்  வீடில் தங்கி இருந்து படித்த  தாகவும் பேசி கொண்டதில் இருந்து தெரிந்தது.   சிறிது நேரம் பேசிக் ்கொண்டு இருந்தவள் தன் புத்தகத்தில் மூழ்கினாள். அது ஒரு எட்டு மணி நேரப்பயணம். காலை  எழு மணிக்கு புறபட்ட்வர்கள். மாலை  நான்கு , நாலரை மணியாகும்  அவர்கள் பயணம் முடிய . ... அவனது ஊருக்கு ....முன்னிய தரிப்பில் அவளது தரிப்பு ...அவள் இறங்க வேண்டி வரும்.அழகான் படித்த பெண் . இனிமையாக் பேசுகிறாள்.வீடில் பெண் பார்க்கிறார்கள். இவளை போல் ஒரு பெண் அமைந்தால்...........ரயிலின் தாலாட்டு .அவனை சற்று உறங்க செய்தது .........

.திடீரென டிக்கட் பரிசோதகர் .தட்டிஎழுப்பவும் . தனது இருக்கையில் இருந்து  எழுந்து தனது . டிக்கட்டை காடினான். இதன் பிறகு   அவன் உறக்கம் கலைந்து விட்டது.....மாதங்கி தொடர்ந்து படித்து கொண்டே இருந்தாள். அடுத்த தரிப்பில் மதிய உணவு வேளையாதலால் சற்று நீண்ட நேரம் இருந்தது ரயில் புறப்பட . அவன் எதாவது சாப்பிட வாங்க வேண்டி புறப்பட்ட வேளையில்,  இறங்க தலைபட்ட்வனை  அந்த குரல்  அழைத்து ..........பிளீஸ் .........எனக்கும் ஒரு தண்ணீர் போத்தல் வாங்கி வருவீர்களா? மறுப்பு சொல்லாமல் , இறங்கினான் காசு கொடுக்க முற்பட்டவளை தடுத்தான்.இறங்கி சென்றவன்.   தனக்கு இரண்டு பண்ணும் ஒரு சோடாவும் வாங்கி கொண்டான். அவளுக்கு தண்ணீர்  போத்தலுடன் வந்தவன் அதை கொடுத்தும்,  நன்றி சொல்லி வாங்கி கொண்டாள்.
நேரமும் விரைவாக ஓடிக்கொண்டே இருந்தது . வெளியில் செல்லும் போது வாங்கிய அன்றைய தினசரியை புரட்டி கொண்டு இருந்தான். அடுத்ததாக ,   அவளும்  இறங்க வேண்டிய, நிறுத்தம் வந்தது . அவள் இறங்கி  நன்றி தெரிவித்த போது மீண்டும் ஒரு பொழுதில் சந்திப்போம் என்றாள். சற்று நிமிடங்கள் ஓடின அவன் நினைவு மட்டும் அவளையே சுற்றி சுற்றி வந்தன. இறுதியாக அவனது ஊருக்கான தரிப்பு வரவே அவன் இறங்கி கொண்டான். வீட்டை அடைந்தவன் சென்று கால் முகங்கழுவி ,தேநீருக்காக தயாரான போது , அம்மா சில படங்களுடன் வந்தாள். படங்களை பார்த்தது ம அவனுக்கு அதிர்ச்சி .. அவளது படமும் இருந்தது . அவளுக்கு தெரியாமல் அவளது தந்தை அவளுக்கு திருமணப்பேச்சில் ஈடுபட்டிருந்தார். எனபது . ......அவள் வீட்டை  அடைந்ததும் தான் தெரியவரும். .இரு குடும்பமும் பேச்சு வார்த்தை நடத்தி செந்து ........மனம் கொண்ட அதே பெண் மண மகளாக  வாய்த் தாள் . திருமணம் இனிதே நிறைவடைந்தது .

ரயில் பயணம் (சிநேகம் ) பாதி வழியில் முடிந்து விடும் என்பார்கள். ஆனால் இவர்களையும் இணைத்து வைத்தது அந்த ரயில் பயணம் (சிநேகம்) தான்.