வேண்டாம் ....கண்ணா
பசும் பாலும் சுவைக்க் வில்லை
பாட்டியின் மடியும் இனிக்க வில்லை....
கண்டதும் தாவி வருகிறான்.
உண்டாலும் பசியடங்கவில்லை
தாகமும் தவிப்பும் தீரவில்லை
வேம்பின் எண்ணெயும் கசக்கவில்லை
ஊர் அடங்கி உறங்க சென்றதும்
மெல்ல நுழைந்து இறுக்கி அணைத்து
சேலை விலக்கி நுழைந்து விடுவான்
" அம்மா பாப்பா (பால்) ..........என்று
அவள் இரண்டு வயது கடைக்குட்டி ......
Followers
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
என் இதயம் கவர்ந்தவளே கண்கள் கண்டதால் கவரபட்டதால் காதல் கொண்டதால் கருத்து ஒன்றி அதனால் இணைந்து கொண்ட இருவர் கருத்து வேறு பட்டாலும் ...
-
அமைதியான வாழ்வில் புயல்போல் வந்தது சாரங்கனின்...புறப்பாடு ........ அவன் பிரபலமான ஒரு பல் கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்தான். இனப...
7 comments:
குழந்தைக் கண்ணனின் குறும்பா...ஆசையா.
வெட்கமும் வந்திடிச்சா அவருக்கு.
அம்மா பால் குடிக்க போராட்டமா.
வேம்பெண்ணையா வெட்கமா...
அம்மாப் பாலுக்காக தாண்டலாமே எல்லாத்தையும் !
ஆஹா... அழகாயிருக்கே கவிதை
தாய் சேய் உறவின் கவிதை மிக அழகு ....
பல் முளைக்காமலே இருந்தால் மாறி இருக்குமோ இந்த நிலை... அழகான, தாய் பால்...கவிதை அருமை அக்கா....
இப்போதும் பக்கத்து வீட்டு பாட்டி என்னைப் பார்த்து சிரிக்கிறார்கள்.. ‘வேப்பெண்ணை தடவினப்புறம்தானே விட்டே’னு. கவிதை பழைய நினைவுகளைச் சுலபமாய் தூசி தட்டிக் காட்டியது.
நன்று. ரிஷபனின் கருத்தை ஆமோதிக்கிறேன்
நல்ல கவிதை இப்ப கவிதையும் நன்றாக எழுதுகிறீர்கள்
Post a Comment