Followers

Monday, February 1, 2010

அழியாத காதல் ..............

அழியாத காதல் ................

மனித வாழ்வில் அழியாத சில நிகழ்வுகள்  பொன் எழுதுக்களால் பொறிக்கப்படும். அந்த வகையில் சோபிதாவின் வாழ்கையில் ஏற்பட்ட திருப்பம் மிகவும் முக்கியமான் ஒன்று.

.........சோபிதா அழகான  சிறுமி . காலம் செய்த கோலம் ஐந்து வயதில் தந்தையை இழந்தவள் . மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன்  ஐந்தாவதாக் வளர்ந்த கடைக்குட்டி .தாயின் சிறந்த செல்லம். தாய் இளமையில் மிகவும் கஷ்டபட்டு இவர்களை வளர்த்தாள். இருந்தும் அந்த இன்பம் நீடிக்க வில்லை.  சில வருடங்களில் தாய் குணமாக்க முடியாத நோயில் இறந்து விட்டாள் .  கால மாற்றத்தில் எல்லா பெண் சகோதரிகளும் திருமணம் முடித்து தம் கணவருடன் சென்று விடவே இவள் பனிரெண்டு வயதில் ...விடுதிக்கு அனுப்ப பட்டாள் . சில காலம் தாபரிப்பு பணம் கட்டினார்கள் பின்பு அவர்களுக்கும் கஷ்டம்  பள்ளி விடுமுறையின் போது மட்டும் போய் ஒவ்வொரு சகோதரிகள் வீடிலும் மாறி மாறி தங்கி வந்தாள். காலப்போக்கில் அவர்கள் வந்து பார்ப்பதும் குறைவு...... பின்பு பணம் கட்டுவதும் நின்று விட்டது ....விடுதியில் உறவினர் வந்து பொறுப்பு எடுக்க வராவிடால் தனியே அனுப்ப மாடார்கள். விடுதி மேற்பார்வையாளர் சில கடிதங்கள் போட்டு பார்த்தார் . அவை மீண்டும் திரும்பி வந்தன .    அது ஒரு கிறிஸ்தவ துறவியர் நடத்தும் விடுதி .....முறையாக் பணம் கட்டவில்லை .. யாரும் பார்க்க வாருவதுமில்லை.  அவர்களுக்கும் என்ன கஷ்டமோ இவள் ...அதே மடத்தில் இருந்த .( orphanage ) கதியற்றவர் பகுதியில் சேர்க்க பட்டாள். பள்ளியில் தொடர்ந்தும் படித்து கொண்டிருந்தாள் .கால ஓட்டத்தில் பன்னிரண்டு வயதில் சேர்க்கப் பட்டவள் . உயர் வகுப்பில்  சித்தியடைந்த்தும்..அந்த ஊரின் மத்தியில் உள்ள ஒரு , தொழிற்சாலையில் ,மடத்துக் கன்னியர்களின் அனுமதியுடன் தொழிற்சங்க நிர்வாகி உதவியுடன் , வேலையில் சேர்ந்து கொண்டாள்.

  விடுதியின் நிபந்தனைக்கு ஏற்ப பத்தொன்பது வயது வந்தததால் ,விடுதியில் தங்க முடியாத காரணத்தால் , தொழிற்சங்க த்தில் இவளுடன் வேலை பார்க்கும் நண்பியின் உதவியுடன் ,வாழ்வதற்கு ஒரு இல்லிடமும் தெரிந்து கொண்டு அங்கு வசித்து வரும் நாளில் , தினமும் சந்திக்கும் ஜான்சன்   இவளை விரும்புவதாகக் சொன்னான் .தனது நிலையை சொல்லி மறுத்த போதும் காலப்போக்கில் மனம் மாறி ஜான்சனை மிகவும் நேசித்தாள். இவளுடைய உறவுகளில் ஒரு சிலர் ஈழத்தின் சண்டைநடைபெற்ற பகுதியில் வசித்தனர் . மற்றவர்கள் இவளை பொறுப்பு எடுத்துக் கொள்ள விரும்பாது ...இவளுக்கு விலாசம் தெரியாது மறைந்து வாழ்ந்தனர்.  சண்டை மிக உக்கிரமாக் ஆரம்பிக்கவே இவள் , தலை நகருக்கு மாற்றலாகி போனாள். பின்பு சில காலம் ஜான் சனின் தொடர்பு இருந்தது .அவர்களது நட்புறவில்  பேசும் போது அவன் சொல்வான் தனக்கு  சில பொறுப்புகள் இருபதாகவும் ...ஒரு வேளை தனக்கு உயிராபத்து நெருங்கும் போது ..தான் வேறிடம் சென்று விடுவதாகவும் எந்த ஜென்மத்திலும் நீ தான் என் மனைவி என்றும் சொல்லியிருந்தான் பணியில் அவள் மிகவும் ஈடுபட்டிருந்ததால் காலமும் மிக விரைவாக வே ஓடிக்கொண்டிருந்தது .  யாழ்ப்பாணத்தில் இருந்து தொடர் புகள்  கிடைப்பது  மிகவும் சிரமமாக  இருந்தது . கடைசியாக் ஒரு கட்டத்தில் ..மிக அவசரமான் மடல் ஒன்று வந்தது. தான் நாட்டை விட்டு புறப்படுவதாகவும்  நேரில் கண்டு சொல்ல முடியாதென்றும்  எழுதியிருந்தான் . நண்பன் மூலம் அனுப்ப பட்ட அந்த க்கடிதம் இவன் புறப்பட்டு  சில வாரங்களின் பின் தான் இவள் கைக்கு கிடைத்தது........அவளுக்கும் சோதனை மேற் சோதனைகள். ..

அவள் வேலை பார்த்த தொழில் நிறுவனம் மிகவும் நட்டத்தில் சென்றதால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அவள் தாதியர் பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பித்து அங்கு அனுமதியும் கிடைத்து விட்டது . பயிற்சி பெற்று  ....பணிக்கு தெரிவு செய்ய பட்டாள். இருந்தாலும் என்றாவது அவன் தொடர்பு கொள்வான் என்ற நம்பிக்கையில் வருடங்கள் பத்து உருண்டோடி  விட்டது . அவனை தவிர ...யாரையும் திருமணம் செய்யும்எண்ணமே இல்லை பலர் புத்தி சொல்லிபார்த்தார்கள்.

 அவளது முப்பத்தைந்தாவது பிறந்த நாள் முடிந்த மறு நாள். ஐரோப்பாவில் இருக்கும் தூரத்து உறவு மூலம் ...இவளது ஜான்சன் ....கனடா நாட்டில் இருப்பதாக  அறிந்து கொண்டாள். தனது முயற்சி எல்லாம் திரட்டி தேடினாள் ....இறுதியில் வெற்றியும் பெற்றாள் . ஜான்சன் இன்னும் அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தான்... அவளுக்கு வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சி ..........ஈழத்தின் ஒரு போர் நிறுத்தக்காலத்தில்,  விடுமுறையில் ஜான்சன் சென்று திருமணம் செய்து வந்தான் ......குடிவரவு சட்ட திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு  இங்கு வந்து கடந்த ஒரு சில வருடங்களாக  இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருகிறாள்.

அவளை பல வருடங்களுக்கு பின் அடையாளம் கண்டு பேசிய எனக்கு இனம் புரியாத அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி . நிறைய பேச நினைத்தாலும் நேர ம இடம் கொடுக்க வில்லை. தொலைபேசி எண்களைபரி மாறிக் கொண்டு வந்து விட்டேன் .

நிஜக்கதை கேட்ட உங்களுக்கு....என் நன்றிகள்.    அழியாத காதல் இரு உள்ளங்களை  இணைத்து வைத்தது என்ற மகிழ்வில்  நானும்,  உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.

17 comments:

அண்ணாமலையான் said...

மிக்க மகிழ்ச்சி..

ஈரோடு கதிர் said...

அந்த தம்பதிக்கு வாழ்த்துகள்

ஈரோடு கதிர் said...
This comment has been removed by a blog administrator.
thiyaa said...

நல்ல கதை
வாழ்த்துகள்

அன்புடன் மலிக்கா said...

அழகான முடிவு. நிலாமதி சூப்பர்..

சீமான்கனி said...

அழகான காதல்...உங்கள் எழுத்து வடிவில் அழகாய் வந்திருக்கு அக்கா...
வாழ்த்துகள்....

பனித்துளி சங்கர் said...

{{{{{{{{{{ அவளை பல வருடங்களுக்கு பின் அடையாளம் கண்டு பேசிய எனக்கு இனம் புரியாத அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி . நிறைய பேச நினைத்தாலும் நேர ம இடம் கொடுக்க வில்லை. தொலைபேசி எண்களைபரி மாறிக் கொண்டு வந்து விட்டேன் . }}}}}}}}}

இதை படித்த எனக்கு என்ன சொல்வது என்று தெரியவில்லை . சில நேரங்களில் என்னை அறியாமலே இதயம் கனத்து விடுகிறது . இன்றும் அப்படியே . பகிர்வுக்கு நன்றி !

தமிழ் உதயம் said...

பிரிவதில்லை காதல். அழிவதில்லை காதல்...
காதல் உண்மையாக இருப்பின்.

நிலாமதி said...

அண்ணா மலையான் உங்கள் வரவுக்கு நன்றி ....

நிலாமதி said...

கதிர் உங்கள் வரவுக்கு நன்றி...இரண்டு தடவை பதிய பட்டதால் ஒன்றை நீக்கினேன்.

நிலாமதி said...

தியா......மாலிக்கா ...சீமான் கனி .......உங்கள் வரவுக்கும் கருத்து பகிர்வுக்கு மிக்க நன்றி .....

நிலாமதி said...

நன்றி சங்கர் உங்கள் வரவுக்கு நன்றி .....அந்த வார விடுமுறை அவ்விடத்தில் சந்தித்த எனக்கும் இன்ப அதிர்ச்சி.

நிலாமதி said...

நன்றி தமிழ் உதயம்.........உண்மை என்றும் அழிவதில்லை.

Unknown said...

அழகான காதல்...அற்புதமான எளிய நடை...அந்த காதலர்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்!

'பரிவை' சே.குமார் said...

நல்ல கதை வாழ்த்துகள் நிலாமதி.

ஹேமா said...

நல்லதொரு கதை நிலா.மனம் கனத்தபடி வாழ்த்து மட்டும்.

kavya said...

அற்புதமான காதல்.அவர்கள் நலமுடன் வாழ வாழ்த்துக்கள்.