Followers

Monday, March 1, 2010

நலம், நலமறிய ஆவல் ......

நலம் , நலமறிய ஆவல் ......

காலம் தான் எவ்வளவு வேகமாக் ஓடுகிறது..............கடந்த மூன்று வாரங்களாக் பதிவு எதுவும் போடவில்லை ...காரணம் வீடில் குடும்ப குடும்ப தலைவருக்கு  உடல் நலமில்லை . சிறு விபத்து ...வைத்திய சாலை வீட்டு  வேலைகள் உறவுகளின் வருகை நலன் விசாரிப்புகள் என்று மனமும் உடலும் சோர்ந்து விட்டது. இன்னும் வழமைக்கு திரும்பவில்லை  இருப்பினும் ...ஒரு மன ஆறுதலுக்காக சில வேளைகளில் ஓடி வந்து பார்த்து விட்டு   போய் விடுவேன். தனி மடல் மூலம் சுகம் விசாரித்தவர்களுக்கும் , என்னை தேடிய வாசகர்களுக்கும் அன்பு உள்ளங்களுக்கும் நன்றி.  நீங்கள் எல்லோரும் நலமாய் இருக்கிறீர்கள் தானே .  மீண்டும்  இரண்டு மூன்று வாரங்களில் சந்திப்பேன். அதுவரை விடை பெறும் நிலாமதி .

17 comments:

ஈரோடு கதிர் said...

நிலா...

தங்கள் கணவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்..

நீங்களும் நலமாய் இருக்க வேண்டுகிறேன்

நன்றி

சாமக்கோடங்கி said...

பொறுமையாக, அனைத்துப் பணிகளையும் செவ்வனே கவனித்து விட்டு வாருங்கள்...

காத்திருக்கிறோம்...

அண்ணாமலையான் said...

get well soon....

சீமான்கனி said...

ஆண்டவனே...!!!!!என்ன ஆச்சு அக்கா...அவரின் உடல் விரைவில் நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்.....

நிலாமதி said...

கதிர் .....பிரகாஷ் .அண்ணாமலை ......சீமான் உங்களுக்கு என் அன்பான் நன்றிகள். வலது முழங்கைக்கு அண்மித்த பகுதியில் எலும்பு வெடிப்பு.....கட்டு போடபட்டு இருக்கிறது பனிச் சறுக்கலில் வழுக்கியது .( black ice ) இப்பொது ஓய்வெடுக்கிறார் மூன்று வார விடுமுறை , தந்தார்கள் மீதி குணமாக் இன்னும் மூன்று வாரமாகலாம் .வாகனத்துக்கு சற்று சேதம். உங்கள் அன்பான் ஆதரவுக்கும் ஆறுதலுக்கும் நன்றி .

ஹேமா said...

அன்பு நிலா...என்ன சொல்ல !
நான் 2 - 3 தரம் வந்து பார்த்துப் போனேன்.விடுமுறையாயிருக்கலாம் என்று மட்டும் நினைத்திருந்தேன்

தோழி...ஆறுதாலாய் இருங்கள்.சீக்கிரம் சுகமே அமையும்.
கவனித்துக்கொள்ளுங்கள்.குளிர் நாடுகளில் நாங்கள் கவனமாயிருந்தாலும் நடக்கக்கூடிய ஒரு விஷயம்தான்.என்றாலும் இனி மிகவும் அவதானமாய் இருக்க வையுங்கள்.

Jerry Eshananda said...

பிரார்த்திக்கிறேன்.

Romeoboy said...

அவர் நல்லபடியாக குணமடையா வேண்டுகிறேன்.

சைவகொத்துப்பரோட்டா said...

உங்கள் தலைவர் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன்.

thiyaa said...

தங்கள் கணவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்..

Kanagu said...

தங்கள் கணவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்..

யோ வொய்ஸ் (யோகா) said...

கணவர் சீக்கிரமே குணமடைய பிரார்திக்கிறோம் அக்கா.

முடியவே வாருங்கள்

'பரிவை' சே.குமார் said...

நிலா...

தங்கள் கணவர் விரைவில் பூரண குணம் அடைய வேண்டுகிறேன்..

க. தங்கமணி பிரபு said...

பெரிதும் சிறிதுமாய் உள்ள துயரங்கள் யாவும் உங்களை விட்டு வெயில் பட்ட பனித்துளியாய் உடனே விலகிட பிரார்த்தனைகள்!

அகல்விளக்கு said...

விரைவில் நலமடைய வேண்டுகிறேன்...

அன்புடன் மலிக்கா said...

அண்ணாவிற்க்கு சீக்கிரம் குணமடைந்துவிடும் கவலை படவேண்டாம் நிலா.
இறைவன் நல்லருள்பாலிப்பானாக.

KANA VARO said...

நன்றி உங்கள் கருத்துக்கு, உங்கள் குடும்பம் நலமோடு வாழ பிரார்த்திக்கின்றேன்