Followers

Thursday, July 8, 2010

படிக்கற்கள். ...........



அந்தக்கிராமத்தில் வீரசிங்கதுக்கும், பாரியார் கண்மணியம்மாவுக்கும்  நீண்ட காலமாக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவர் ஒரு காணிப்பதிவுக் கந்தோரில்   எழுதுவினை ஞர்  பதவியில் இருந்தார். ஊர் மக்களின் அறிவுரைக்கேற்ப ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்கள். அவளும் கல்வியிற் சிறந்து ..விளங்கினாள்.  ..உய்ர்கல்வி பெற்றதும் ..கண்மணிம்மவுக்கு பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ் ஆர்வம் வந்தது .காலா காலத்தில் ..புரோக்கர் மூலம் திருமணம் நிச்சயமானது ..அந்த வருடம் வந்த ஒரு நல்ல நாளில் மங்கை கலைவாணியும் ஆசிரியர் செல்வதாயாளனும் இனிதே திருமண் பந்தத்தில் இணைந்தனர் ....காலம் யாருக்காகவும் காத்திராமல் ...உரிய வேளையில் ..கலைவாணி எனும் வாணி  ஒருபெண் குழந்தைக்கு தாயானாள். ....வீரசிங்கம் குடும்பத்துக்கு அளவில்லாத மகிழ்ச்சி ...தயாளன் வாணி வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருந்தது . இரண்டு வருடங்களின் பின் .ஆசிரியர் தாயாலனுக்கு ....ஒரு ஒதுக்கு புறமான் ஒரு கிராமத்துக்கு மாற்றல் கிடைத்து. .அங்கு மின்சார வசதி கூட இல்லை. மாணவர்களும்  மிகவும் வறுமை பட்ட் குடும்பத்திலிருந்து வந்தவர்களாய் இருந்தார்கள். சிலருக்கு சாராயம் காய்ச்சுவதே தொழிலாய் இருந்தது.அவ்வூர்  கிராம் அதிகாரி ...மற்றும் ஊர்காவலார்கள் கண்டும் காணாமல் கையூட்டு வாங்கி ....அத்தொழில் வளர்சியடைந்த்து .....ஆசிரியரும் ..தனிமை ..கவலையை  போக்க ...இவர்களுடன் கூட்டுச சேர்ந்து குடிவகை பாவிக்கக் பழகினார். வருட விடுமுறை வந்த போது ...இவரிடம் மனைவி சில மாற்றங்களை கண்டு கொண்டாள். அவர்களது ஊரிலும் குடிவகை விற்கும் இடங்களை தேடிப் போனார். வருடங்கள் செல்ல செல்ல ...ஒவ்வொரு குழந்தையாகக் பிறந்து ...அவர்கள் குடும்பம் தாய் தந்தையுடன் எண்ணிக்கையில் பதினொன்றாகியது...( ஒன்பது குழந்தைகள்) ..ஆசிரியரின் மாத வருமானமும் குறைந்தது..வீரசிங்கம் நோய் வாய்பட்டார்....மூன்றாம் மாதம் காலமாகி விடார்.

வாணிக்கு குடும்பகஷ்டம் ..போதிய வருமான மின்மை குழந்தை செல்வங்களின் சிரமங்களால் வேதனைபட்டாள். ஆனால் எல்லோருக்கும் கல்வியறிவில் மிகுந்த நாட்டம் காட்டினாள் . . ஒருவாறு பெரிய அதிகாரிகளை கண்டு கணவனுக்கு ஊருக்கு மாற்றம் வாங்கினாள். தாயார் கண்மணி அம்மாளும் வயோதிபத்தால் ...தளர்ந்து போனார். தாயின் ஓய்வூதிய பணம் , கணவனின் மாத வருமானதுடனும் குடும்பம் மிகவும் கஷ்ட பட்டது.... அப்போதும் ஆசிரியர் தாயாளன்  குடிப்பழக்கத்தை விடுவதாயில்லை. பகலில் ஓரளவு நிதானமாய் இருந்தாலும் பாடசாலை  விட்டதும  நேரே குடிக்க போய் விடுவார் . ஒரு வழிகாட்டியாக் இருக்க வேண்டிய ஆசிரியரே இப்படி என்றால் .என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். வீரசிங்கதாருக்கு  இருந்த மதிப்பும் மரியாதையும் இவரால் ..இவர்கள் குடும்பத்துக்கு,  ஊரவர்கள் மத்தியில் குறைந்து போயிற்று. பிள்ளைகளும்  தந்தை மீது பற்று இன்றி ... நடந்து கொண்டனர்..........ஒரு நாள் ..மாலை...தெருவிளக்கு இல்லாத நிலையில் ..ஆசிரியர் வரும் போது ...ஒரு லாரி யினால் மோதிக் கொல்ல பட்டார்..அப்போ தும் ....அவள் பத்தாவது ... குழந்தையை மூன்று மாதமாக் சுமந்து  கொண்டு இருந்தாள். வாணி மிகவும் கஷ்ட பட்டாள்.  அன்றாட உணவுச்..செலவுக்கே போதியதாக இல்லை. மூத்தவள் காயத்திரி ....பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.

இரண்டு வருடங்கள் சென்றது ....வாணி விழித்துக் கொண்டாள். தான் கற்ற கல்வி கை கொடுக்க ஆசிரிய பயிற்சிக்கு விண்ணப்பித்து ..அவ்வூரில் வேலை கிடைத்தது. மேலும் பயிற்சிக்கு ஆசிரிய ..பயிற்சிக் கலாசாலைக்குக்கு செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகளை தாயின் கவனிப்பில் விட்டு விட்டு அங்கு சென்றாள். மாலையில்  பஸ் வண்டியால் ...வீடு வரும் போது அத்தனை குழந்தைகளும் அம்மாவுக்காக . காத்திருப்பார்கள். மூத்தவள் .. இருக்கும் உணவை பகிர்ந்து எல்லோருக்கும் கொடுப்பாள். வந்த களையுடன் இரவு உணவு சமைத்து ......குளித்து ...தன் வீட்டுப்  பாடங்கள் செய்து ....தூங்க செல்ல நள்ளிரவு தாண்டி விடும்...தான் ஒரே ஒரு மகளாக் வாழ்ந்து தனக்கு ... இறைவன் இவ்வளவு குழந்தை செல்வங்களை தந்தும் அவர்களை நல்ல படியாக் வாழ் வைக்க வேண்டுமென்று திட சங்கற்பம் கொண்டாள்.

சில காலம் செல்ல தாயார் கண்மணிம்மாலும் காலமாகி விடார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டில் இனக்கலவரம் தொடங்கியது .வீட்டை விற்று .......ஒவ்வொரு  பிள்ளைகளாக  மேற்படிப்புக்கு   வெளி நாடு அனுப்பி வைத்தாள். அவர்களும் மிகுந்த சகோதர பற்று உடையவர்கள். ஒருவர் ஒருவருக்கு உதவியாக எல்லோரும் வெளி நாட்டு க்கு சென்று விட்டனர் .. இறுதியாக் அவர்களது ஊரில் இருக்க முடியாத் நிலை வரவே  ..அவளை தலை நகரில் இருக்க வழி செய்தனர். அப்போது கடைசி இரண்டு பிள்ளைகளும் இவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மூத்தவள் வெளி நாட்டுக்கு சென்று திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள். படிப்படியாக் ..எல்லோரும் வெளி நாடுவந்த பின் ..தாயாரையும் கடைசி மகள் அழைத்துக்கொண் டாள் . மூவர் லண்டன் மா நகரிலும் ..இருவர் பிரான்சு நாட்டிலும் ....மூவர் கன்டா நாட்டிலும்  ..இன்னும் இருவர் திருமணமாகாமல் தாயுடனும் அவுஸ்திரேலியா நாட்டில்  வாழ்கின்றனர்.

 எல்லோரும் மாறி மாறி தாயை தங்கள்நாட்டுக்கு அழைத்து கவனிப்பார்கள். இப்பொது அவருக்கு சற்று வயது முதிர்ச்சி ....இருப்பினும் பழைய கதைகளை சொல்லுவார். அத்தனை சோதனைகள் மத்தியிலும் அந்த தாய் எடுத்த முயற்சி ..பிள்ளைகளுடனும்  காத்த் பொறுமை ...சகோதர பாசம் ....தாயின் கஷ்டம் உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கை .....இன்று அவர்களை நல்ல நிலைமையில் வைத்து இருக்கிறது.

ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு சோதனைக்களம் . அதில் வரும் சவால்களை சந்தித்து ..முன்னேறினால் வாழ்வு பிற்காலத்தில் வசந்தம் ஆகும். இவரது வாழ்வு ஒரு வழிகாட்டியாக பலருக்கு அமைந்தது என்பதால் இதை உங்களுடன் பகிர்கிறேன். ..வாழ்வில் ஆயிரம் தடைக்கற்கள் வந்தாலும் அதை  படிக்கல்லாக்குவது   ஒவ்வொருவருடைய முயற்சியிலும் இருக்கிறது . .

கதை உண்மை பெயர்கள் கற்பனை ......


12 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு....ஊஊஊஊஊஊ...

சீமான்கனி said...

வலிகளை தாங்கி வந்த வாணியின் வாழ்க்கை நிகழ்வுகளை பாடமாய்...பகிர்ந்த நிலாக்காக்கு நன்றிகள்... சரி சரி எனக்கு மட்டும் அவங்க யாருன்னு சொல்லணும் சரியா???

ஹேமா said...

ஈழத்தவர் வாழ்வு கதைகளாகிப் பதிவுகளாகிறது.வருங்காலச் சந்ததிகள் எங்கள் வலிகளைப் படித்துப் புரிந்துகொள்ளட்டும்.

நிலாமதி said...

சீமான் கனி .....ஹேமா ..உங்கள் வருகைக்கு நன்றி.

dheva said...

தன்னம்பிக்கையை ஊட்டும் விதமா இருக்கு நிலாமதி நீங்க எழுதியிருக்கும் உண்மைக் கதை. வாசிக்கும் போதே ஒரு மெல்லிய சோகம் மனதில் படர்வதை தவிர்க்க முடியவில்லை.

ஈழத்தில் எம் மக்கள் பட்ட, படுகின்ற வேதனைகள் நெஞ்சில் வடுவாய் பதிந்து இருக்கிறது... நமக்கான காலம் வந்தே தீரும் தோழி.....அதில் சுதந்திர ஈழத்தின் காற்றினை நாம் இல்லாவிட்டாலும் நமது சந்ததியினர் சுவாசிப்பார்கல் சுதந்திரக் காற்றை....

வாழ்த்துக்கல் நிலாமதி...!

வெங்கட் நாகராஜ் said...

வலிகள்... வலிகள்.. கதை பகிர்வுக்கும் நன்றி.

தமிழ் மதுரம் said...

அடி மேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாம்...

இப் பழமொழிக்கு இதில் வரும் வாணியின் வாழ்வு உதாரணம்.

தன்னம்பிக்கையின் பலாபலனையும், மன உறுதியின் திடசங்கற்பத்தையும் சொல்லும் கதை ‘எங்கள் சமூகத்துள் தேடி எடுத்த முத்திற்குச் சமம்.

தொடருங்கோ!

பனித்துளி சங்கர் said...

அக்கா உங்களின் ஒவ்வொரு பதிவும் வலிகளையே இதயம் முழுவதும் நிரப்பி செல்கிறது . பகிர்வுக்கு நன்றி

'பரிவை' சே.குமார் said...

வலிகள்... வலிகள்.. கதை பகிர்வுக்கும் நன்றி.

தூயவனின் அடிமை said...

அந்த சகோதரியின் தன்னம்பிகை, இன்று அவைகளை உயர்த்தி உள்ளது.

ரிஷபன் said...

வாழ்வில் ஆயிரம் தடைக்கற்கள் வந்தாலும் அதை படிக்கல்லாக்குவது ஒவ்வொருவருடைய முயற்சியிலும் இருக்கிறது . .

இப்படித்தான் சிலர் வாழ்க்கை ஆகிவிடுகிறது.. சூழ்னிலை மீறி ஜொலித்த அந்த அன்னைக்கு நமஸ்காரம்.

Anonymous said...

வணக்கம் நிலாமதி அவர்களே..

உங்கள் தளம் கண்டேன் மனது குளிர்ச்சியாக இருக்கிறது. எனக்கு சிறுகதைகளில் அதிகம் நாட்டம் தங்கள் தளத்தில் அதை அதிகம் காண முடிந்தது. இந்த கதை அருமை. நேரம் கிடைக்கும் போது ஒவ்வொன்றையும் படிக்கிறேன். வாழ்த்துக்கள். உங்கள் அன்பை என்றும் நாடும். கோவை ரவி