Followers

Monday, October 25, 2010

அழகுக்குட்டி செல்லம் .






அழகுக்குட்டி செல்லம் 

.சென்ற வார  விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டுக்கு  சென்று இருந்தேன்..அவளுக்கு பெண  குழந்தை கிடைத்து பத்து மாதங்கள் ஆகின்றன. முதற்குழந்தை,  அவளது தாயார் தாயகத்தில். இடையில் நானும் அவளது ம ச்சாளும் (கணவனின் தங்கை) உதவியாய் இருந்தோம். . கணவன் காலயில் வேலைக்குபோயவிடுவார் நம்ம செல்லக் குட்டி எழும்பிவிடுவாள். காலையில் டாட்டா பாய் சொல்லி ..அப்பாவை அனுப்பி வைப்பாள். அக்கா மகள் தன்  வேலைகள் ஆரம்பிப்பாள் .அடிக்கடி நப்பி மாற்றுதல்,( diaper )தூங்க செய்தல் ...நேரத்துக்கு பாலூட்டுதல் என்று தனியாகவே எல்லாம் செய்வாள்.  கற்றுக் கொண்டுவிடாள். சில சமயம் வீட்டில்  எல்லோரும் தூங்கக் செல்லக்குட்டி மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் இருபாள். இதனால் தாயும் காலயில் சேர்ந்து  தூங்கி விடுவார் .

 நல்ல பண்பான் பொறுமை சாலி  மருமகன்.   தானே எழுத்து காலையில் காப்பி  காபிபோட்டு குடித்து தன் சாப்பாட்டு பெட்டி  ( குளிரூட்டியில் இருக்கும்) எடுத்துக் கொண்டு மனைவிக்கு காப்பியும்  வைத்து விட்டு செல்வார்.  மாலை ஆறு மணியாகியதும்....நம்ம கதாநாயகி வாயிலை பார்த்த படியே இருப்பாள். கதவில் திறப்பு போட்டு சத்தம் கேட்டதும் ......ப்பா ......ப்பா என்று தாவியோடுவாள். மீண்டும் தாயிடம் வ்ர கஷ படுவாள் பிகு பண்ணுவாள். .என என்  அக்கா மகள் சொல்வாள் . நானிவளை கழுவி துடைத்து உணவூட்டி தூங்க வைத்து பாலூட்டி எல்லாம் செய்கிறேன் . அழும்போது மட்டும் ம்மா மா என்கிறாள். மற்றும்படி ஒரே ப்பா ப்பா தான்.......கணவனுக்கு
( மருமகன்) தாயின் சுருளான கேசம், தனது  நிறத்தில் மகள் கிடைத்ததை இட்டு உள்ளூர பெருமை. பெண குழந்தை கள் தந்தையுடன் கூட ஓட்டுத்லாய் இருப்பார்கள் என்று சொல்வார்கள். கண்மணியான .செல்லத்துடன் ஒரு உயிரும் ஈருடலுமாய் தான் வாழ்கிறார்கள். .

22 comments:

எல் கே said...

பெண் குழந்தைகள் என்றும் தந்தையுடந்தான் ஒட்டுதல் அதிகம். உங்கள் வீடு குட்டி செல்லத்துக்கு என் ஆசிகள்

எஸ்.கே said...

அனுபவம் இனிமை!

எல் கே said...

படம் வரவில்லை

சைவகொத்துப்பரோட்டா said...

குழந்தைகள் என்ன செய்தாலும் அழகுதான்!

கவி அழகன் said...

நல்லா அனுபவிச்சி எழுதியுள்ளீர்கள் வாழ்த்துக்கள்

வெங்கட் நாகராஜ் said...

எப்போதுமே பெண் குழந்தைகள் அப்பாவுடனே அதிகம் ஒட்டிக்கொண்டுவிடும். என் பெண்ணும் இதே கதைதான், நான் அலுவலகத்திலிருந்து திரும்பிய பின் அம்மாவை சீண்டுவதில்லை.. குழந்தைகளின் ஒட்டுதல் ஒரு அழகுதான் சகோ... பகிர்வுக்கு நன்றி.

தினேஷ்குமார் said...

நல்ல பகிர்வு தோழி
என் தோளில் இருக்கும் அண்ணன் மகள் அஞ்சநாதேவியை பாருங்கள் இப்ப எங்க வீட்டு வாயாடி ஒன்னரை ஆண்டுகள்தான் ஆகுது அந்த வாண்டு போன்ல பேசும்போது கேட்கனுமே அப்பா ஜாக்கி வா அப்பா மம்மு வா

சிவராம்குமார் said...

குழந்தைகளுடன் இருக்கும் போது நாம் ஒரு தனி உலகத்தில் சஞ்சரிப்போம்!அது நமக்கே நமக்கான ஒரு சுகம்! அருமை!

நிலாமதி said...

என் வலைப்பக்கம் வருகை தந்த எல் கே ..எஸ் கே ...சைவ கொத்து பரோட்டா..... யாதவன் ,வெங்கட் நாகராஜன், தினேஷ்குமார் சிவா
யாவருக்கும் என் நன்றிகள்.

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

பெண் குழந்தை என்றாலே அப்பா சைடு தான்... நானே அப்படித் தான்.. :-))))

என் மகளும் அப்படியே.. :-)) அழகா சொல்லிருக்கீங்க... :-)

sakthi said...

அழகு குட்டி செல்லத்தை பற்றி நீங்கள் விவரித்துள்ள விதம் அழகு நிலாமதி தொடருங்கள்!!!!

Ravi kumar Karunanithi said...

good post

Muruganandan M.K. said...

குழந்தைகள் உலகில் எங்களையும் நனைய விட்டீர்கள். நன்றி

Sriakila said...

// Ananthi சொன்னது…
பெண் குழந்தை என்றாலே அப்பா சைடு தான்... நானே அப்படித் தான்.. :-))))

என் மகளும் அப்படியே.. :-)) அழகா சொல்லிருக்கீங்க... :-)

//
நானும் அப்படித்தான்!

Thanglish Payan said...

Ippadi kavithuvama anupuvam...
Awesome experience.

Chitra said...

Daddy's little girl!
...very cute!

ப்ரியமுடன் வசந்த் said...

பெண்குழந்தைகள் தந்தையுடனும் ஆண் குழந்தைகள் தாயுடனும் ஈர்ப்பாய் செல்வது இயல்பு!

'பரிவை' சே.குமார் said...

உங்கள் வீட்டு செல்லக்குட்டி என் ஆசிகள்.

Unknown said...

மிகவும் அருமை

http://usetamil.forumotion.com

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

மிகவும் அருமை தோழி.. உங்கள் வீட்டு செல்ல குட்டிக்கு எனது வாழத்துக்கள்...

Vijiskitchencreations said...

நல்ல அருமையா சொல்லிட்டிங்க. சூப்பர் குட்டிக்கு என் வாழ்த்துக்கள்.

”ஆரண்ய நிவாஸ்”ஆர்.ராமமூர்த்தி said...

அனுபவம் புதுமை!
அனைத்தும் அருமை!!