Followers

Friday, November 19, 2010

என் இதயம் கவர்ந்தவளே



 என் இதயம் கவர்ந்தவளே
கண்கள் கண்டதால்
கவரபட்டதால்
காதல் கொண்டதால்
கருத்து ஒன்றி அதனால்
இணைந்து கொண்ட இருவர்
கருத்து வேறு பட்டாலும்
கடிந்து பேசினாலும்
பிரிந்து போகலாமா

கனத்தத் மனதுடன்
கலந்து பேசி நாமும்
கலைத்திடுவோம் பகை
கன்னி உனக்கு ஆகாது
கருத்து மோதலில்
கரையும் நம் வாழ்க்கை
கண்மணியே வா
காலமெலாம் கை
கொடுப்பேன்
காலம் இன்னும்
கடக்க வில்லை

மன்னிப்போம் மறப்போம்
மங்கை நீ மனது வைத்தால்
மா மலையும் ஒரு துரும்பு
மகிழ்வான காலம் இருக்கு
மனது வைத்து மன்னித்தால்
மாலை யிட்ட மணாளனின்
மனது தன்னை புரிந்து விடு
புரிதலும் விட்டுக் கொடுத்தலும்
இனிய  இல்லறத்துக்கு
புகழ் சேர்க்கும் புனித மொழி
புரிந்து கொள் , புறப்படுவாய்
புகலிடம் நோக்கி

உன் வரவைக்கான விரும்பும் ................

27 comments:

எல் கே said...

நல்லா இருக்குங்க

ADHI VENKAT said...

படித்தேன். ரசித்தேன்.

Sivatharisan said...

ரசித்தேன் ரசித்தேன் ரசித்தேன்

'பரிவை' சே.குமார் said...

நல்லாயிருக்குங்க....

கவிதையாய் இருந்தால் நல்ல வரிகள்...
வாழ்க்கையாய் இருந்தால் வலி நிறைந்த வரிகள்...

Ananthi (அன்புடன் ஆனந்தி) said...

கவிதை சூப்பரா இருக்கு..

கவிதையில் விரைவில் வர சொல்லி கடிதமா?? :-))

Sriakila said...

//மன்னிப்போம் மறப்போம் //

புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இல்லறத்துக்கு மட்டுமல்ல, அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும். முழுமையான மனிதப்பிறவிக்கு அது அழகு.

நிலாமதி said...

எல் கே, கோவை டு டில்லி, சிவதர்ஷன் ...உங்கள் வரவுக்கும் பகிர்வுக்கும் நன்றி ..

நிலாமதி said...

சே குமார் ....படம் கண்டதும் கற்பனைக் .கவிதை முயற்சி தான் .வரவுக்கு நன்றி

நிலாமதி said...

ஆனந்தி ......ஸ்ரீ அகிலா .....உங்கள் வரவுக்கு நன்றி .

ஹேமா said...

ம்ம்....நடத்துங்க.கவித்தூது நல்லாயிருக்கு நிலாமதி !

sathishsangkavi.blogspot.com said...

ரசித்தேன்....

வெங்கட் நாகராஜ் said...

படமும் கவிதையும் நன்று. அழகிய கற்பனை.

Unknown said...

என் வரிகளுக்கு ஊக்கமாய் உங்கள் கருதுரைகை இருந்தது தோழியே .

தங்கள் இந்த வரிகள் எனை சற்று யோசனை கடலில் மூழ்கசெயதது ..

நன்றி ...

Maheswaran

Software Engineer, Ecotech IT Solutions pvt,

Coimbatore, India.

Unknown said...

http://usetamil.net

படித்தேன். ரசித்தேன்.

டிலீப் said...

கவிதை சூப்பர் வாழ்த்துக்கள்

ஆமினா said...

அழகான வரிகள்!!!

வாழ்த்துக்கள்

சிவகுமாரன் said...

படத்திற்கேற்ற கவிதை. அழகாய் இருக்கிறது.

Arun Prasath said...

நல்லா இருக்குங்க

Muruganandan M.K. said...

"...புரிதலும் விட்டுக் கொடுத்தலும்.." இருந்தால் எந்த வாழ்வும் உல்லாசபுரியாகும் அல்லவாகும்.
நல்ல கவிதை.

Thoduvanam said...

நிலவு பதித்த கவிதை
முக்காடு திறந்து
முறுவலிக்கிறது ..
வாழ்த்துக்கள் சகோதரி ..

செய்தாலி said...

கவிதை அழகு வரிகள் நன்று

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

"புரிதலும், விட்டுக் கொடுத்தலும் இல்லறத்துக்கு மட்டுமல்ல, அனைத்து உறவுகளுக்கும் பொருந்தும்."

மிக அழகான கவிதை அக்கா

தமிழ்த்தோட்டம் said...

அழகு வரிகள் அருமை

!♥!தோழி பிரஷா( Tholi Pirasha)!♥! said...

கவிதை சூப்பரா இருக்கு..

Anonymous said...

நிலாமதியின் எண்ணங்களுக்கு இதயநிலாவின் வாழ்ததுக்கள் !

பால்ராஜ் said...

நிலாமதியின் எண்ணங்களுக்கு இதயநிலாவின் வாழ்ததுக்கள் !

தமிழ்பிரியன் said...

//கருத்து வேறு பட்டாலும்
கடிந்து பேசினாலும்
பிரிந்து போகலாமா//

நன்று சொன்னீர்கள்.. :)