Followers

Wednesday, January 20, 2010

சித்திரம் பேசுதடி ........

சித்திரம்  பேசுதடி ........

வாழ்வின் எண்ணங்கள்  ..ஆசைகள் கரை புரண்டோடும் இளம் பருவம். நவீன கால தொழிநுட்ப வளர்ச்சியில் சில  வருடங்களுக்கு மேலாக் மிகவும் கொடிகட்டி ...வலம் வந்து கொண்டிருப்பது தான் இந்த கணணி யுகம் ...இப்போது அது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அலுவலகம் முதல் பாலர் வகுப்பு வரை எல்லோரும பயனடையும் ஒரு பயனுள்ள பொருள் தான்  இந்த கணனி ....பாலர் நுழைய இலகுவாக் கணணி மயப்படுத்த் பட்ட விளையாட்டுக்கள் . இளையவர்களுக்கும்  அது தான் இன்றைய விளயாட்டு பொருள். . பொழுது போக்கும். இந்த விளையாட்டை விரும்பி விளையாடுவார்கள். அந்த விளையாட்டின்  ஈர்ப்பில் ஈடுபட்ட இரு உள்ளங்கள் தான் . சுகுமார் , மது மிதா ......அவர்களின் கதை இதோ.....


சுகுமார்.....ஒரு வர்த்தகவியல் பட்டாதாரி .பல் கலைக் கழகம்    முடிந்ததும் ....ஒரு வங்கியில் சேர்ந்து ....படிப்படியாக முன்னேறியவன். மாலை நேரங்களில் ...செய்தி தேடி வாசிகக் மிகவும் விரும்புவான். சில நட்பு  வட்டங்களும்  உண்டு. அவர்களுடன் அரட்டையில் ஈடுபடுவான் ...ஒரு சில பள்ளித் தோழிகளும்  உண்டு ....தோழியின் தோழியாக  ஒரு நாள் அறிமுகமானாள் .மது மிதா . ஒரு சில வார்த்தைகளுடன் விடை பெற்று சென்று விடுவாள். இவன் தேடித்  தேடிப்  பேசுவான்.....தோழியின் நட்பு குறைந்து ,மது மிதாவுடன் ....விரும்பிப்  பேசுவான்  காலப்போக்கில் அவளது பெயர் மது வாகி விட்டது ...அவர்களது படிப்பு ...........சொந்த இடம் .. புலம்பெயர்ந்து அவள் வாழும் இடம்..........குடும்ப் உறவுகள் ......போன்றவை பரிமாறப்பட்டன.   சுகுமாரும் ....தன்னை பற்றி  சொன்னான். ஆர்வமிகுதியால் ஒரு நாள் அவன் தன் நிழற்படத்தை  அனுப்பி வைத்தான்........இவளையும் , மிக மிக வேண்டிக்கேட்கவே அவளும் அனுப்பி வைத்தாள். பார்வைக்கு அழகான் பெண் ....வயதும் பொருந்தியது .......சாதி .....மதம்......சொந்த இடம் ......என்பன ஒத்துப்  போகவே .....சுகுமார் தான் விருப்பத்தை சொன்னாள். இவள் தனக்கு வேலை  கிடைக்க வில்லை என் றும் தேடிக்கொண்டிருப்பதாகவும்  சொல்லுவாள். முன்பு சில இடங்களில் தொண்டு அடிப்படையில் வேலை பார்த்த அனுபவமும் உண்டு என்பாள்.   இந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடிக்குள் இருப்பதால் .......வேலை  கிடைப்பது மிகவும் கஷ்டம் என்றும் ...முயற்சியை  தளரவிடாது ..........தொடரும்படியும் சொல்வான்....இவன் விருபத்தை சொன்ன போது ......அவள் இது நடக்க கூடியதல்ல்....... என்று மறுத்து வந்தாள்.இவனும் விடாமல் கேட்டு வந்தான்.ஒரு நாள் ஒரு முக்கியமான இடத்தில் சந்திக்கும்படி கேட்டு கொண்டான்.......பல வற்புறுத்தல் களுக்கு மத்தியில் ..சம்மதித் தாள்... அந்த நாளும் வந்தது .......என்ன நிற ஆடை என்பதில் இருந்து ....தொலை பேசி எண்கள்  வரை .......பேசி பரிமாறப்பட்டது.....சுகுமாருக்கு மிகுந்த ஆவல்......

அந்த வினாடிகள் நெருங்கவே .....அவன் நண்பனுடன்  ஒரு காபி ஆடர் பண்ணி விட்டு காத்திருந்தான் .   ஒரு சில நிமிடங்களின் .பின் ஒரு பிரத்தியேக வண்டியில்  வந்து சேர்ந்தாள்.......அவள் . அதே நிற ஆடை ..அதே நிற சுடிதார்...
ஆனால் ....

அவனது பேசும் சித்திரம்...சக்கர  வண்டியில் ...மோட்டார் பொருத்த பட்ட ஆளி (சுவிச் )மூலம் இயக்கும் வண்டி .சுகுமாருக்கு அதிர்ச்சியான், அதிர்ச்சி  ...சுதாகரித்துக்கொண்டான்....அவர்களது உரையாடல் தொடர்ந்தது .....விடைபெற்று சென்றனர் ....சுகுமார் மட்டும் ..........கனத்த மனதுடன். முடிவு.............?

சில கிறுக்கல்கள் சித்திரமாகும்....சில சித்திரங்கள் பேசும்..........சில ஓவியமாகும் ....சில காவியங்களை எடுத்துரைக்கும் .இந்த சித்திரம் எந்த வகை ...........

இது  கற்பனைஅல்ல .............நிஜத்தை வரும் நாட்களில் எழுதுவேன்..........

முடிவை நீங்களே யூகித்து  .. ....எனக்கு எழுதுங்கள்

.........முடிவு ............

சுகுமார் ..பின்பும் ஆவலுடன் தொடர்ந்து நட்பில் இருந்தான் அவள் நிலைக்காக கவலைப்பட்டான் . தொடர்ந்தும் அவள் மீது விருப்பு உண்டென்றும் பெற்றவர்களிடம் முடிவு கேட்கும்படியும் சொன்னான்.  அவர்கள் சம்மதிக்க வில்லை ..சீதனம் அழகு அந்தஸ்து பார்க்கும் உலகில் இப்படி ஒருவன் வருவானா? .என்று சந்தேகப்பட்டனர் .......அவள் திருமணம் செய்யலாம் ஆனால் கருத்த்ரிக்க  கூடாது என்று வைத்தியர் சொன்னார் ..தங்கினால் அவள் உடல் நிலை மேலும் சிக்கலாகும் என்றார். காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது . முடிவு எட்டப்ப்டாமலே .............

Tuesday, January 19, 2010

உனக்கான பெண்.......

உனக்கான பெண்.........

அந்த நகரத்தின் ...சற்று ஒதுக்கு புறமான அழகிய வீடு அதில் , வாழ்த்து வருபவள் தான்  சுஜித்தா  எனும் சுஜி, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தான்.....தன் தாயை கான்சர் வருத்தத்துக்கு பலி கொடுத்தாள். அழகிய அடக்கமான பெண் . சென்ற வருடம் தான் பட்ட படிப்பை முடித்திருந்தாள்.  அவள் தந்தை மிகவும் , நேசிக்கும் ஒருத்தி ..மொத்தத்தில் அவர் அவளுக்காகவே வாழ்கிறார்....அவரது நிருவனங்க் களை மேற்பார்வை செய்வதிலும்....அங்கு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதிலும் அவரது காலம் .... ஓடிக்கொண்டு இருந்தது....அன்று காலை தேநீரை கொடுத்தவள் அப்பா.....என்று இழுத்தாள். எத்தனை வேலையாட்கள் இருப்பினும் அம்மா நோயாளியாக இருக்கும் போது ......இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டவள். தந்தைக்கு விருப்பமான் தும் கூட . அவ்வேளைகளில் அன்றைய தன் வெளி அலுவல்களை பற்றியும்  கலந்து உரையாடிக் கொள்வார்கள் . இன்று அவள் அப்பா........என்பதில் எதோ தேவை இருப்பதாய் புரிந்து கொண்டார்.....என்னம்மா சுஜி ? .....வந்து எனக்கு போரடிக்குதுப்பா ...மகளிர் சங்க காரியாலயத்தில் ....பணிக்காக் கேட்கிறார்கள். போகலாமாப்பா ...? இங்க பாரும்மா ....உனக்கு தீவிரமாக் மாப்பிள்ளை பார்க்கும் பணியில் இறங்கியிருக்கேன்...வெளித்தொடர்பு ....காதல் அது இது எல்லாம் எனக்கு பிடிக்காத்தாம்மா ...நீ கவனமாய் இருப்பதாக , வாக்கு கொடுத்தால்...உன் ...நேரம் பயனுள்ளதாக இருக்குமானால் போய் வா என்றார். ,,,அவளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை....மானாக துள்ளி சென்றாள்.  காலம் யாருக்காகவும் ,காத்திராமல் ஓடிக்கொண்டிருந்தது....வீட்டில் இரண்டு கார் இருந்தும்...தன்  உந்துருளியிலே ...(.skooter )
போவாள். ஒரு நாள் ...இடையில் வண்டிக்கு ...ஒரு சிறு சிக்கல் வரவே ..வீதியில் நின்று செய்வதறியாது நின்றாள் .. அந்த வழியில் வந்தது ஒரு வண்டி.....அதிலே ராகுலன்  என்னும் அழகிய  இளைஞன் . , வண்டியை ...திருத்தும் இடத்துக்கு அனுப்பவும். அவளை காரியாலயம் செல்லவும் உதவினான். ......தொலைபேசி மூலம் இவர்களது நட்பும் நீடித்தது ......ஒரு நாள் அவளை தனிமையில் கண்டு பேச விரும்புவதாக சொன்னான். அந்த நாளும் வந்தது....இருவரும் ஒரு ....போது இடத்தில சந்தித்தார்கள்.....அவன் தன் விருப்பத்தை சொன்னான்.....மறு வாரம் சொல்வதாக சொல்லி இருவரும் விடை பெற்றனர்....மறு வாரத்தில் ஒரு நாள் அவன் அலுவலக முகவரிக்கு ஒரு மடல்........

நட்புடன் ராகுலனுக்கு.........என்னைக்கண்டதும் என் பால் ஈர்க்க பட்டதும் எனக்கும் புரியும . ஆனால் ....உங்களுக்கான பெண் நானல்ல .......இந்த உலகம் பூந்தோட்டம் ஆயிரம் பெண்களை சந்திக்கலாம் ஆனால் நான் என் தந்தையின் சொல்லை மீற முடியாதவளாக இருக்கிறேன்.....ஒரு வேளை நீங்கள் என் தந்தையிடம் பெண்கேட்டு வந்து அது நிறைவேறினாலும் ....நிறைவேறாவிடாலும்.....நான் உங்களை காதலித்தேன் என அறிந்தால்  என் தந்தை என்னை இருபத்து மூன்று வயதுவரை வளர்த்த ...பாசம்....சத்தியம்... இன்றும் இன்னொரு மனைவியை தேடாத வைராக்கியம் ,...என்பவற்றை சிதறடித்தவளாகி விடுவேன் .......ராகுலன் .....என்னை மன்னித்து விடவும்....இந்த எண்ணம் வரும் என, எண்ணியியிருந்தால்...உங்களிடம் நட்பை  வளர்த்திருக்க  மாட்டேன் .....சத்தியத்தை ..காப்பாற்ற மிகவும் போராடுபவள்....அப்பா எனக்கு விரைவில் திருமண பணத்தில் ஈடுபட வைக்க இருக்கிறார்..அவர் விருப்பமும் ஆசைகளும் ....எனக்கு மிகவும் முக்கியம்....உங்கள் , எண்ணத்தை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன்......இந்த எண்ணம் தொடர்ந்தும் உங்களுள்ளத்தில் இருக்குமானால் என்னை தொடர்பு கொள்ள , தொந்தரவு செய்ய , வேண்டாம்.......
நட்புடன் சுஜி .........

.மடல் கண்ட ராகுலனுக்கு.......அவன் ஏக்கத்துக்கு ஒரு இடி......இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா? ........இரண்டு வாரங்களாக ஒரு பதிலும் சொல்லாதிருந்தான்....மூன்றாம் வாரம்....

.நட்புடன் சுஜிக்கு......செல்வ செழிப்பிலும் ...உன் தந்தையின் ..வளர்ப்பிலும்..... உன் அழியாத பாசத்தை மெச்சுகிறேன்.....என விருப்பம்  உன்னிடம் ஒரு விண்ணப்பம் மட்டுமே .......உன் இன்பமான் மண வாழ்வுக்காக வாழ்த்தும் ராகுலன்.......

.மறு வாரமே அவளுக்கு நிச்சய தார்த்தங்களுக்கான  ஆயத்தங்கள் நடந்தது ......சுஜி யின் தூரத்து உறவு......அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சென்றவன்.......சுஜியையும் ஏற்று தந்தையின் ..தொழிலை  பொறுப்பெடுத்து பார்துக்கொள்வதாக் ஏற்றுக்கொண்டு ....வாக்கு சொன்னவன்.....பாலேந்திரன்........சுஜிக்கு மண மகனாக  ஏற்படுத்த பட்டான்.....

சில காதல் கனிந்து மணம் பரப்புவதுண்டு .....பல காதல்  மலராமலே போவதுண்டு.....ஒரு சில மலர்ந்து இடையில் வாடி விடுவதும் உண்டு........ராகுலனுக்கான் பெண்......அவள் அல்ல ..எங்கோ ஒருத்தி பிறந்திருப்பாள்.......