Followers

Saturday, February 6, 2010

உன்னால் முடியும்................

..

வாழ்க்கை இன்பமும் துன்பமும் நிறைந்தது தான். இன்பம் வரும்போது துள்ளிக்குதிக்கும்  மனசு துன்பத்தில் துவண்டு தான் போகிறது துன்பத்தையும் ஏற்று  சகித்து வாழ் பழகினால் வாழ்கை ஒரு கின்னஸ் பதிவு ஆகி விடுகிறது. இதோ ஒரு சாதனைப்  பெண்ணின் கதை.

தாய் தந்தையர்களுக்கு செல்லப் பெண்ணாக  வளர்ந்தவள் தான் மஞ்சு என்னும் மஞ்சுளா ஆசைக்கு ஒரு அண்ணா. ..அவள் வளர்ந்து மணப்பருவம் அடையும் காலத்தில் ....மாதவனுக்கு வாழ்க்கைபட்டு ..வெளி நாட்டு ஆசை கொண்டு ...கனடாவுக்கு வந்து சேர்ந்தாள்.  காலபோக்கில் இரு ஆண் குழந்தைகளுக்கு தாயானாள். கணவன் ஒரு தனியார் கம்பனியில் உதவி முகாமையாளராக பணி புரிந்தான் ....வீடில் குழந்தைகளை கவனிக்க வேண்டு மென்பதாலும்  மாதவன் விரும்பாததாலும் அவள் வேலைக்கு போவதில்லை. ஒரு கோடை விடுமுறையின் போது ...நான்கு,  எழு வயதுக் .குழந்தைகளுடன் அண்ணா வீட்டுக்கு  , லண்டனுக்கு போக ஆசைப்பட்டாள்.   மாதவனுக்கு ...விடுமுறை கிடைக்காததால் ,மனைவி மக்களை அனுப்பி வைத்தான். அவர்களும் சேமமே சென்று ....பொழுதை இன்பமாக் களித்தனர். மஞ்சுவுக்கு கணவன் வராதது சற்று மனவருத்தம் இருப்பினும்... மகன்களின் சந்தோஷதுக்காக  சகித்து கொண்டாள் .அவளும் பிள்ளைகளும் மாதவனுடன் அடிக்கடி தொலைபேசியில் பேசிக் கொள்வார்கள்.

 இவர்கள் வருவதற்கு இரண்டு நாள் இருக்கையில் ஒரு அதிர்ச்சி நடந்தது..........மாதவன் வார விடுமுறையின் போது நண்பனுடன் ஒரு ஒன்று கூடலுக்காக சென்றவன்,  . பழைய நண்பர்கள் புதியஅறிமுகங்கள் என்று .... அங்கு ஏனைய நண்பர்ககள் ஒன்று கூடியதும். ...".பார்டி " களைகட்ட தொடங்கியது. பலவித உணவுகள் ...மது உட்பட ....உண்டு  களித்து....அதிகாலை வேளயில் கூடி சென்ற நண்பன் ....அவனது தொடர்மாடிக்கு மீண்டும் கொண்டு வந்து விட்டிருந்தான்.  மாதவனுக்கு லிப்ட்( உயர்த்தி ....தமிழ் தெரியலை  )  இருந்தாலும் .படிஎறித்தான் செல்வான். மூன்றாம் மாடியில் இருந்த அவன் மாடிக்கு ஏறி ..அரை பங்கு  தூரம் சென்றதும் ....சிறு தடுமாற்றமாய்  வரவே , ( ஓரளவு  குடித்திருந்தான் ) விழுந்து விடான்...நன்றாக் தலையின்  பின் பகுதி அடி பட்டு விட்டது ..விழுந்தவன்  தான்.........முடிவு விபரீதமாகி வி ட்டது. அதைகண்டவர்கள் நிர்வாகத்துக்கு அறிவித்து ...வைத்திய சாலைக்கு அனுப்பப் பட்டான் .........அங்கு சிறிது  நேரத்தில் உயிர் பிரிந்தது ...உறவினர் .....   அயலவர்கள் உதவியுடன் .....செய்தி பறந்தது............

மஞ்சு ....மிகவும் துயரத்துடன் வந்தாள் ....அதிர்ச்சியடைந்து விட்டாள்  .  போய்வா என்றவன் ஒரேயடியாய்  போய்விடானே..........இனி , என் எதிர்காலம் என்ன ...குழந்தைகளை எப்படி வளர்ப்பேன்...........என்று பல் கேள்விகளுடன்  வந்து சேர்ந்தாள்.  மிகவும் சோகமாக மரணச்சடங்கு நிகழந்தது.............வந்த அயலவர் உறவுகள் எல்லோரும் போய் விட்டனர் . அவளது சகோதரனும் ...புறபட்டு விடான். இப்போது தனிமை மிக வாடியது அடுத்தது என்ன என்று........குழந்தைகளும் மிகவும் சோகமாய் இருந்தனர். .ஊரில் உள்ள தாய் தந்தையார் தம் மகளின் வாழ்வு இப்படியாகி விட்டதே  என்று அடிக்கடி கடதமும் தொலை பேசியிலும்  தொடர்பு கொள்வார்கள். நாங்கள் இருக்கிறோம் மனதை தளரவிடாதே என்று ஆறுதல் கூறுவார்கள்.

பாடசாலை ஆரம்பமாகியது மகன்களும் சென்று விட்டனர் . மாலை வரபோகிறார்கள் என்று உணவு சமைக்க ..ஆயத்தமானாள் .......உறவுகளின் உதவியாலும் , மாதவனின் இன்சூரன்சு  ( ஆயுட்ஆயுத காப்புறுதி ) பணத்தினாலும் , மரண செலவு வேறு செலவுகள் போக மூன்று மாதங்களை கடந்து விடாள். அடுத்து என்ன என்பது தான் அவளது பெரும் கேள்வியாக் இருந்தது. தனிமையை போக்க , உறவுகள் அயலாவர்களின் பிள்ளிகளுக்கு பியானோ வாத்தியம் கற்றுக்கொடுத்தாள். இளம் பருவத்தில் அவள் கற்ற  இசைக்கருவிகளின் ...படிப்பு வீண் போகவில்லை. நான்காவது மாதம் ...இருப்பிட வாடகைப் பணத்துக்காக  கடிதம் வந்த போது ....துவண்டு போனாள் இனி என்ன செய்வது என்று.........

அவளது தந்தையின் நண்பர்  ஒருவர் ....அங்கு தனியார் கல்வி நிறுவனமொன்றை நடத்திக் கொண்டிருந்தார்.அங்கு சென்று கற்பிப்பதற்காக ...ஒரு வேலையை பெற்றுக்கொண்டாள் ...முதலில் அங்கு  ஆசிரியைக்கான  தேவை இருக்க்வில்லை என்றாலும். இவளது நிலையை எண்ணி சம்மதித்தார். .முன்பு கணவனுடன்  தவிர அதிகம் வெளியில் செல்லாதவள்  இப்போது தனித்து எல்லாம் செய்ய கற்றுக்கொண்டாள். கடுங்குளிர் காலத்தில் போக்கு வரத்து மிகவும் கஷ்டமாக் இருந்தது ....கார் ஓட்டக் கற்றுக் கொண்டாள். மகன்களை பள்ளியில் விட்டு விட்டு தானும் வேலைக்கு சென்றாள். அம்மாவின் கடும் முயற்சியுடன் மகன்களும் புரிந்து  கொண்டு நடந்தார்கள் .   காலம் வெகு வேகமாக் ஓடியது..........இன்னும் சில வாரத்தில் அவளது தாயம் தந்தையும் .....குடிவரவு முறையில் வர இருக்கிறார்கள் . தனித்து விடப்பட்ட போது என்னால்  முடியும் என்ற தன்னம்பிக்கை , அவளே செய்ய வேண்டும் , இயங்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம்,  இன்று அவளை மேல் நிலைக்கு உயர்த்தியது............

பெண்கள் எப்படி இருக்கவேண்டும் , என்பதற்கு இவளது வாழ்வு ஒரு எடுத்துக்காட்டு.........தன்னம்பிக்கையும் கடவுளின் அருளும் இருப்பின் எதையும் சாதிக்கலாம்.

 உன்னால் முடியும் தம்பி தம்பி .....உனக்குள் இருக்கும் உன்னை நம்பி நம்பி ....என்னும் பாடல் என் நினைவில்............நிழலாடுகிறது. நம்பிக்கையுடன் வாழுங்கள் நாளை உங்கள் கையில். ( உபதேசம் செய்வது ...எளிது ...நடைமுறைபடுத்துவதுதான்..........?.காலம் கை கொடுக்கும். )

Monday, February 1, 2010

அழியாத காதல் ..............

அழியாத காதல் ................

மனித வாழ்வில் அழியாத சில நிகழ்வுகள்  பொன் எழுதுக்களால் பொறிக்கப்படும். அந்த வகையில் சோபிதாவின் வாழ்கையில் ஏற்பட்ட திருப்பம் மிகவும் முக்கியமான் ஒன்று.

.........சோபிதா அழகான  சிறுமி . காலம் செய்த கோலம் ஐந்து வயதில் தந்தையை இழந்தவள் . மற்றும் நான்கு பெண் குழந்தைகளுடன்  ஐந்தாவதாக் வளர்ந்த கடைக்குட்டி .தாயின் சிறந்த செல்லம். தாய் இளமையில் மிகவும் கஷ்டபட்டு இவர்களை வளர்த்தாள். இருந்தும் அந்த இன்பம் நீடிக்க வில்லை.  சில வருடங்களில் தாய் குணமாக்க முடியாத நோயில் இறந்து விட்டாள் .  கால மாற்றத்தில் எல்லா பெண் சகோதரிகளும் திருமணம் முடித்து தம் கணவருடன் சென்று விடவே இவள் பனிரெண்டு வயதில் ...விடுதிக்கு அனுப்ப பட்டாள் . சில காலம் தாபரிப்பு பணம் கட்டினார்கள் பின்பு அவர்களுக்கும் கஷ்டம்  பள்ளி விடுமுறையின் போது மட்டும் போய் ஒவ்வொரு சகோதரிகள் வீடிலும் மாறி மாறி தங்கி வந்தாள். காலப்போக்கில் அவர்கள் வந்து பார்ப்பதும் குறைவு...... பின்பு பணம் கட்டுவதும் நின்று விட்டது ....விடுதியில் உறவினர் வந்து பொறுப்பு எடுக்க வராவிடால் தனியே அனுப்ப மாடார்கள். விடுதி மேற்பார்வையாளர் சில கடிதங்கள் போட்டு பார்த்தார் . அவை மீண்டும் திரும்பி வந்தன .    அது ஒரு கிறிஸ்தவ துறவியர் நடத்தும் விடுதி .....முறையாக் பணம் கட்டவில்லை .. யாரும் பார்க்க வாருவதுமில்லை.  அவர்களுக்கும் என்ன கஷ்டமோ இவள் ...அதே மடத்தில் இருந்த .( orphanage ) கதியற்றவர் பகுதியில் சேர்க்க பட்டாள். பள்ளியில் தொடர்ந்தும் படித்து கொண்டிருந்தாள் .கால ஓட்டத்தில் பன்னிரண்டு வயதில் சேர்க்கப் பட்டவள் . உயர் வகுப்பில்  சித்தியடைந்த்தும்..அந்த ஊரின் மத்தியில் உள்ள ஒரு , தொழிற்சாலையில் ,மடத்துக் கன்னியர்களின் அனுமதியுடன் தொழிற்சங்க நிர்வாகி உதவியுடன் , வேலையில் சேர்ந்து கொண்டாள்.

  விடுதியின் நிபந்தனைக்கு ஏற்ப பத்தொன்பது வயது வந்தததால் ,விடுதியில் தங்க முடியாத காரணத்தால் , தொழிற்சங்க த்தில் இவளுடன் வேலை பார்க்கும் நண்பியின் உதவியுடன் ,வாழ்வதற்கு ஒரு இல்லிடமும் தெரிந்து கொண்டு அங்கு வசித்து வரும் நாளில் , தினமும் சந்திக்கும் ஜான்சன்   இவளை விரும்புவதாகக் சொன்னான் .தனது நிலையை சொல்லி மறுத்த போதும் காலப்போக்கில் மனம் மாறி ஜான்சனை மிகவும் நேசித்தாள். இவளுடைய உறவுகளில் ஒரு சிலர் ஈழத்தின் சண்டைநடைபெற்ற பகுதியில் வசித்தனர் . மற்றவர்கள் இவளை பொறுப்பு எடுத்துக் கொள்ள விரும்பாது ...இவளுக்கு விலாசம் தெரியாது மறைந்து வாழ்ந்தனர்.  சண்டை மிக உக்கிரமாக் ஆரம்பிக்கவே இவள் , தலை நகருக்கு மாற்றலாகி போனாள். பின்பு சில காலம் ஜான் சனின் தொடர்பு இருந்தது .அவர்களது நட்புறவில்  பேசும் போது அவன் சொல்வான் தனக்கு  சில பொறுப்புகள் இருபதாகவும் ...ஒரு வேளை தனக்கு உயிராபத்து நெருங்கும் போது ..தான் வேறிடம் சென்று விடுவதாகவும் எந்த ஜென்மத்திலும் நீ தான் என் மனைவி என்றும் சொல்லியிருந்தான் பணியில் அவள் மிகவும் ஈடுபட்டிருந்ததால் காலமும் மிக விரைவாக வே ஓடிக்கொண்டிருந்தது .  யாழ்ப்பாணத்தில் இருந்து தொடர் புகள்  கிடைப்பது  மிகவும் சிரமமாக  இருந்தது . கடைசியாக் ஒரு கட்டத்தில் ..மிக அவசரமான் மடல் ஒன்று வந்தது. தான் நாட்டை விட்டு புறப்படுவதாகவும்  நேரில் கண்டு சொல்ல முடியாதென்றும்  எழுதியிருந்தான் . நண்பன் மூலம் அனுப்ப பட்ட அந்த க்கடிதம் இவன் புறப்பட்டு  சில வாரங்களின் பின் தான் இவள் கைக்கு கிடைத்தது........அவளுக்கும் சோதனை மேற் சோதனைகள். ..

அவள் வேலை பார்த்த தொழில் நிறுவனம் மிகவும் நட்டத்தில் சென்றதால் மூடப்படும் அபாயம் ஏற்பட்டது. இதனால் அவள் தாதியர் பயிற்சி கல்லூரிக்கு விண்ணப்பித்து அங்கு அனுமதியும் கிடைத்து விட்டது . பயிற்சி பெற்று  ....பணிக்கு தெரிவு செய்ய பட்டாள். இருந்தாலும் என்றாவது அவன் தொடர்பு கொள்வான் என்ற நம்பிக்கையில் வருடங்கள் பத்து உருண்டோடி  விட்டது . அவனை தவிர ...யாரையும் திருமணம் செய்யும்எண்ணமே இல்லை பலர் புத்தி சொல்லிபார்த்தார்கள்.

 அவளது முப்பத்தைந்தாவது பிறந்த நாள் முடிந்த மறு நாள். ஐரோப்பாவில் இருக்கும் தூரத்து உறவு மூலம் ...இவளது ஜான்சன் ....கனடா நாட்டில் இருப்பதாக  அறிந்து கொண்டாள். தனது முயற்சி எல்லாம் திரட்டி தேடினாள் ....இறுதியில் வெற்றியும் பெற்றாள் . ஜான்சன் இன்னும் அவளுக்காகவே வாழ்ந்து கொண்டிருந்தான்... அவளுக்கு வார்த்தையில் சொல்ல முடியாத மகிழ்ச்சி ..........ஈழத்தின் ஒரு போர் நிறுத்தக்காலத்தில்,  விடுமுறையில் ஜான்சன் சென்று திருமணம் செய்து வந்தான் ......குடிவரவு சட்ட திட்டங்கள் பூர்த்தி செய்யப்பட்டு  இங்கு வந்து கடந்த ஒரு சில வருடங்களாக  இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டிருகிறாள்.

அவளை பல வருடங்களுக்கு பின் அடையாளம் கண்டு பேசிய எனக்கு இனம் புரியாத அதிர்ச்சி கலந்த மகிழ்ச்சி . நிறைய பேச நினைத்தாலும் நேர ம இடம் கொடுக்க வில்லை. தொலைபேசி எண்களைபரி மாறிக் கொண்டு வந்து விட்டேன் .

நிஜக்கதை கேட்ட உங்களுக்கு....என் நன்றிகள்.    அழியாத காதல் இரு உள்ளங்களை  இணைத்து வைத்தது என்ற மகிழ்வில்  நானும்,  உங்களிடம் இருந்து விடை பெறுகிறேன்.