Followers

Saturday, April 3, 2010

சின்னச் சின்னக் கண்ணம்மா

 சின்னச் சின்னக் கண்ணம்மா

வாழ்க்கையின் சுழற்சியில் ...துன்பங்களை கண்டு துவள்வதும் இன்பங்களை கண்டு மகிழ்வில் துள்ளுவதும் இயற்கை. கடந்த இரு மாதங்களாக் ...நோய் துன்பமும் நெருங்கிய உறவின் இழப்பும். என்னை பாடாய் படுத்தி விட்டன. வலி கண்ட பின் வழி பிறக்கும் என்பார்கள். உடலுமுள்ள்மும் சற்று தெளிந்த நிலயில் .. ஒரு நீண்ட விடு முறையின் பின்... உங்களுடன் ..நானும். ...

இன்று நீண்ட காலத்தின்பின் என் உறவுக்கார பெண் வீட்டுக்கு  போய் இருந்தேன். அவளுக்கு முதலில் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை .  இப்போது இரண்டாம் முறையில் இரு அழகான் பெண் குழந்தைகள். கர்ப்பம் தங்கிய நாளில் இருந்து ...பட்ட  அவஸ்தைகள் சொல்லில் எழுத முடியாது . மிகுந்த அவதிப்ப ட்டாள் உன்னுவதேல்லாம் வாந்தியாக் எடுத்தாள் ..அதற்கு மருந்து எடுத்தும் நிற்கவில்லை .  அடிக்கடி வைத்தியசால யில் அனுமதிக்க்ப்பட்டாள். மிகவும் பலவீனமாய் இருந்தாள் .  இந்த குழந்தைகளை பெற்றுக்கொள்ள முழு நேர கவனிப்பில் இருந்தாள். .மார்கழி பதினெட்டு அந்த சுப நாள். இரு குழந்தைகளும் சேமமாக் வெளி வந்தனர் சிசேரியன் முறை மூலம். எங்கள் உறவுக்குள் இது தான் முதற்தடவை ....இரட்டைக்குழந்தைகள். .அவளின் பூட்டி ( அம்மம்மாவின் தாய் )  க்கு இரட்டை குழந்தைகள் இறந்து  பிறந்ததாக  சொன்னார்கள் )

இரட்டைக்குழந்தைகள். ....அவளது தாயாரும் அருகில் இல்லை ..தாயின் சகோதரி முறையான் ஒருவரும் ... நானும் இடையில் பார்த்து வந்தோம்....கடந்த சில வாரங்களாக  எனக்கும் போக முடியாத் நிலை.....என் வீட்டிலும் அவருக்கு  சுகவீனம். வைத்திய சாலைக்கு  போவது ....என் வீட்டு வேலைகள் ...என்று .....இப்போது தான் சற்று... தெளிந்த  பின் இன்று  போய் வந்தேன்...

காலத்தின் ...விளையாட்டு அவர்கள் நன்றாக் வளர்ந்து  விடார்கள் முகம் பார்த்து சிரிக்கிறார்கள்.   எமிக்கா ......எலனா என்ற அழகான் தேவதைகள். ..மிகவும் ஆச்சரிய பட்டு போனேன்..........அவள் பட்ட வலிகளின் பரிசா...இறைவனின் திருவிளையாடலா?  வேதனையின் பின்  ஒரு சுகம் என்பார்களே அதுவா? .என்னே இறைவனின் கருணை.............

சின்ன சின்னக் கண்ணம்மா ...பேசும் மொழி என்னம்மா ..
தாய் மனம் பூத்திருக்கு ......