Followers

Thursday, July 15, 2010

இடைவெளிகள்......

.இடைவெளிகள்

அந்த பிரமாண்டமான் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது ..பல் கற்பனைகள் கடந்த கால நினைவுகளோடு  புஷ்பாவும் இரு குழந்தைகள் அருண் அர்ச்சனாவும் விடுமுறைக்கு புறப்படுகிறார்கள். . கனடாவில் இருக்கும் தங்கள் சகோதரியை , பெரியம்மாவை பார்பதற்காக. புஷ்பாவின் எண்ணங்கள் சில கணம் தாய் நாட்டின் கிராமத்து வாழ்வை  நோக்கி அசை போடுகிறது. தாய்  தந்தைக்கு எழு குழந்தைகள் அரச பணியகத்தில் வரும் அளவான் வருமானத்தில்  வளமாக் தான் தாயார் மீனாட்சி குடும்பம்  நடத்தினாள். நானு பெண்களும் மூன்று ஆண்க்களுமாக் எழு குழந்தைகள். நான்காவதாக் இந்த  பாமா  என்னும்  கனடாவில் இருப்பவர்  பிறந்தார். ஐந்தாவ்தாக் புஷ்பா . வாழ்வு தான் காலச்சக்கரத்தில் .. சுழன்று கொண்டே இருந்தது . கடைசி மூவரும் தங்களுக்குள் கொப்பி( நோட் புக்)  புத்தகம் பேனா பென்சில் என  சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். புஷ்பா சற்று பயந்த சுபாவம். பாமா சற்று துடினம். அந்தக் காலத்தில் ஒரு புத்தகம் வாங்கினால் அது பரம்பரை சொத்து போல அண்ணா ... தங்கை தம்பி ...என இரு வருடங்களுக்கு இடைவெளியில் பிறந்த குழந்தைகள் பாவித்து கொள்வார்கள்.


மூத்தவள பெண ..காலா காலத்தில் கலியாணம் செய்து போய் விட்டாள். அதன் பின் ஆண்கள் இருவரும்  பட்டினத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார்கள் கடைசி மூவரும் தங்களுக்குள்  சண்டை சச்சரவுகளை வளர்த்து கொண்டே இருந்தார்கள். பாமா திருமண் வயதை அடைத்தும் தான் விருப்பிய ஒருவனை.பிடிவாதமாய் திருமணம் செய்து கொண்டாள். இதனால் அடுத்தவள் புஷ்பாவுக்கு ....வரும் வரங்கள் சற்று தாமதமாயின . இறுதியாக ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளை . அவர் பிரான்சு தேசத்தில் வாழ்ந்து  வந்தார் . கலியாணம் முற்றாக்கி ..புஷ்பா பிரான்சு நாட்டுக்கு  சென்றாள். காலபோக்கில் அவளும் மூன்று குழந்தைகளுக்கு தாயானாள். கால சுழற்சியில் ..அக்கிராமத்தில் படை நடவடிக்கை தொடங்கியதும் எல்லோரும் .புலம் பெயர்ந்தார்கள். பாமா புஷ்பா குடும்பத்தினரும் பெரும் நிர்பந்தத்தின் பேரில்....வெளி நாடு போய் விட்டனர்.  அவர்களது தாய் தந்தையரும் .ஒருவர் பின்னொருவராக  இறந்து விட்டனர் . எழு பேரும் ஜெர்மனியில் இருவர் ...பிரான்சில் இருவர் ....இத்தாலியில் ஒருவர் ...கனடாவில் ஒருவர். இலங்கையில் தலை நகரில் ஒருவராக  கூடு கலைந்த பறவைகள் போல .....வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது .

குழந்தைகளுக்கு  அந்த நாட்டு மொழி கற்க   வேண்டிய நிர்ப்பந்தம் கற்றுக்கொண்டனர் . தாய் மொழி தமிழ் மட்டும் ஒரு இணைப்பு பாலமாக் இருந்தது. காலபோக்கில் ..கல்வி படிப்பு ..வேலை என்று இயற்கையின் நியதி ஒருவரோடு ஒருவருக்கு  இருந்த  தொலைத்தொடர்பும்    குறைந்து போனது....வருடமொரு முறை வரும் திரு நாட்களின் போது எடுத்து தொலைபேசியில்,பேசிக் கொள்வார்கள்.   அவர்களின்,குழந்தைகளுக்கிடையிலான தொடர்பு  குறைந்து அற்று போனது...........அந்நாட்டு மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றார்கள். தமிழ் மொழியின் வளம் குறைந்து போனது. பல வருடங்க்களின் பின் ...இப்போது சகோதரியை ....பெரியம்மாவை பார்க்க போகிறார்கள்.. அவர்கள் எப்படி இருப்பார்கள் ...தன் குழந்தைகளை அணைத்துக் கொள்வார்களா? . குழந்தைகள் வேறுபாடு காட்டிக் கொள்வார்களா?...இவ்வளவு இடைவேளையில் பின் பல கதைகள் பேச வேண்டும் ஊர் நினைவு  மீட்ட  படவேண்டும். பல் சிந்தனைகளுடன் தூங்கி போனவளை மகன் அருண் தட்டி எழுப்பினான் . தாங்கள் வந்த விமானம் தரையிறங்கக் போகிறது ஆயத்தமாகுங்கள் என்று .....தன்னை ஆசுவாசபடுத்தி தயாரானாள் புஷ்பா.

கனடாவின் டொரோண்டோ மாநகரத்தில் பியசொன் ....(pearson )..விமான நிலையத்தை இவர்களை சுமந்து  வந்த விமானம் அடைந்தது. குடிவரவு குடியகல்வு சோதனைகளை முடித்துக்கொண்டு ....இவ்ர்களுகாக் வாகனத்தில் காத்திருக்கும் பெரியப்பா பெரியம்மாவை நோக்கி ஓடுகிறார்கள். அருணும் அர்ச்சனாவும். . அறிமுகம் ( இதுவரை படத்தில் தான்பார்த்துண்டு ) முடித்து ..பெரியம்மாவின் பிள்ளைகள் சுபாங்கன் சுமுதாவை காண ஆவலோடு ...அவர்கள் பயணம் தொடர்கிறது ...ஈழத்து புலப்பெயர்வில் இழந்தவைகள் ஏராளம்.  அதில் குடும்ப் உறவு ... சக் உறவுகளின் நெருக்கம் ...உறவுப்பாலம் ..சக உறவுகளின் பிள்ளைகளின்  நெருக்கம் ....நட்பு.....தொலைந்தது உண்மை . வருங்காலத்தில் கட்டிஎழுப்ப  பட வேண்டும்...இடைவெளிகள் இட்டு நிரப்ப படலாம். இழந்தவைகள் மீளுமா? .

.