Followers

Monday, August 9, 2010

தொடர் பதிவு.

வலையுலக் சக பதிவர் முனியாண்டி பெருமாள் ....அழைத்தமைக்கு ஏற்ப இதை தொடர்கிறேன்.


(1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
 
(2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

தோன்றும் பெயர் ....நிலாமதி (புனை பெயர் ).....பெயர் வைக்க காரணம்.

 தாயகத்தில் என் நண்பியின் பெயர்.


(3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

யாழ் களம் என்னும் வலைத்தளத்தில்  உறுபினராக் இருக்கிறேன். அங்கு தான் தமிழ் எழுத கற்றுக் கொண்டேன். பின்பு நிறையவே தமிளிஷ் இல் வாசிப்பேன் அந்த முயற்சி என்னை வலைப்பதிவு தொடங்கக் காரணமானது. .

(4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன வெல்லாம் செய்தீர்கள்.....
 
எதுவுமே செய்யவில்லை .  தமிளிஷ் இல் என் பதிவு வந்தது. அதிகம் தமிழ் நாட்டு நட்புகள்  கருத்து சொன்னார்கள்.

(5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு .என்ன? இல்லை  என்றால் ஏன்...........

பகிர்ந்து கொண்ட துண்டு.. என் வாழ்வே ஒரு பாடம். பெயர்களை மாற்றி கதைகளாக்  எழுதியுள்ளேன். மற்றும் நான் காணும் நண்பர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் எழுதினேன். ஒருவருக்கு ஏற்பட்ட் அனுபவங்களை பகிரும் போது மற்றவர்களுக்கு பாடமாக் அமையம் . என்  மனப்பாரம் சற்று குறையும்.

.(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா..........

பதிவுகள் ஒருவகை ஆத்ம திருப்தி ...பொழுது போக்கு தான்.

(7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன.......

..ஒன்றே ஒன்று ...நிலாமதியின் பக்கங்கள். என்பது தான்.

(8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் .யார் அந்த பதிவர்.........

..யார் மீதும் கோபம் இல்லீங்க. பொறாமையும் இல்லீங்க.

(9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.....

சீமான் கனி ...ஈரோடு கதிர் ...சந்துரு.......என்பவார்கள் என் வளர்ச்சியை ஊக்குவிப்பவர்கள். சீமான் கனி ...பிழைகளை சுட்டிக் காட்டுவார். வேண்டுமென்று எழுத்துப் பிழை விடுவதில்லை கணனி சதி செய்வதுண்டு. மற்றும் அவசரம்..மீண்டும் வாசித்து திருத்துவதில்லை. பல நட்புகளை பெற்றுக் கொண்டேன். பாராடுக்களயும் பெற்றேன்.

(10) கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்துப் பெண. தாயகத்தை பிரிந்த வலி  இன்றும்  உண்டு. தாயகத்தில் வளமாக் வாழ்ந்தேன். பல சோதனைகள் சோகங்கள் உண்டு. என் இளமைக்கால் எழுத்து திறமைகள் இப்போது தான் ..வெளியிட களம் அமைந்தது .
இனிய ஒரு பொழுது போக்கு . கண்ணியில் சில  நுட்பங்க களை  தெரிந்தேன் இன்னும் நிறையவே அறியவேண்டும்.  என்னுடைய பதிவுக்கு பதில் கருத்து கூறி நட்பு பாராட்டும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

நான் யாரையும் வலிந்து அழைக்க வில்லை. இன்னும் யாராவது பதிவு ( தொடர் பதிவு ) போடாதவர்கள் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.