Followers

Wednesday, September 1, 2010

பொருத்தம்.

பொருத்தம்



பொன்னூர் எனும் அந்த அழகிய சிறு கிராமத்தில் பிறந்து  வளர்ந்தவர்கள தான்.
நிதி என்னும் சிறுமியும் மதியழகன் எனும் சிறுவனும். எல்லோராலும் அழகன் என அழைக்க பட்டவன். குடும்பத்தில் இவனுடன் இன்னும் இரண்டு ஆண் குழந்தைகள். தந்தை ஒரு கிராம சபை கந்தோரில் செய்லாளராக் இருந்தார். இவனது பெற்றோருக்குப் பெண குழநதையில்லையே என்னும் கவலை. துள்ளி விளையாடும் பள்ளிப்பருவம்மாறி உயர் கல்லூரி சென்றான். அழகன்.

நிதி எனும் தயாநிதி குடும்பத்துக்கு ஒரே ஒரு பெண குழந்தை . வசதி வாய்ப்புக்கள் இருந்தும் ஏனோ அவளுக்கு சக உறவுகளுக்கான பலன் இருக்கவில்லை. சிறு வயது முதல் சக மாணவனான அழகனுடனும்  அவனது நட்பு களுடனும் விளையாடி வருவாள். காலபோக்கில் அவள் பருவ வயது அடைந்ததும் விளையாட்டுக்கள் எல்லாம் நி ன்று போய் விட்டது . ஏன் அவனை பார்ப்பதும் அனுமதிக்க் படவில்லை.  காலம்தான்  தன் பாட்டுக்கு சுழன்று கொண்டே இருந்தது. அவள் கல்லூரி  வாழ்வு முடிந்ததும் அவளுக்கு நோர்வே நாட்டில் உள்ள மண  மகனுக்கு திருமணம் பேசி கோலாகலமான திருமண  விழாமுடிந்து ஆறு மாதங்களில் நோர்வே சென்று விடாள்.