Followers

Thursday, November 4, 2010

மழலைகள் வரைந்த ஓவியம்

சிற்ப்பிகள் இருவர் 
வரைந்த சித்திரம் 
வெள்ளை நிறத்தில்
விடை இல்லா விளையாட்டு 
 மழலைகள்  கோலங்கள்
வியந்தவர் பலர்
நிலவுகள் எழுதிய
கவிதைகள் இங்கு 
சமாதான நிறத்தில்
கோலங்களை ரசிப்பதா 
தரையை சுத்தஞ் செய்வதா 
கோபம் கொண்டு அடிக்கவா
குளிக்க விடுவதா 
குறுஞ்செய்தியில் போடவா 
குஞ்சுகளை என்ன செய்வேன் .....


..நீங்களே சொல்லுங்கள்
படத்தை கண்டதும் வந்த ரசனை .எப்படி இருக்கிறது .?.


Wednesday, November 3, 2010

தீபாவளி வாழ்த்துக்கள்.





இணையத்தள  நட்புகளுக்கு தீபாவளி வாழ்த்துக்கள். 



Tuesday, November 2, 2010

அம்மா உன் அன்பு உள்ளவரை



அம்மா உன் அன்பு உள்ளவரை
தனிமை தெரிவதில்லை
உன் கரிசனம் இருக்கும் வரை
உணவும் தேவையில்லை

தனித்த் போது ஒரு சிணுங்கலில்
தாவி ஓடி அணைத்திடுவாய்
அள்ளி முத்தம் தந்திடுவாய்
அம்மா  மடி மீதும் நான் மட்டும் அரசாட்சி

கண்ணுறங்க கதை  சொல் வாய்
அப்பாவை  எனக்கு
அறிமுகம செய்தவளே
தப்புக்கள் நான் செய்தால்
தட்டிக் கேட்பவளே

பகட்டான பட்டுச்சட்டை
கலர் கலராய் காலுறை
மெத்தென்ற சப்பாத்தும்
கை காது கழுத்துக்கும்
 நகையணிபூட்டி
அழகு பார்த்தவளே

பள்ளிக்கு சென்று நானும்
பாடங்கள் பல படித்து
பரீட்சையில் சித்தி பெற்று
பட்டங்கள் பல பெற்று
பாங்காய் ஒரு பணியிடத்தில்

பல்லாயிரம் பணம் பெற்று
பக்குவமாய் வீடு கட்டி
பல பேரும் பார்த்து நிற்க
பாரினிலே தலை நிமிர்ந்து
"பாருடா என் பிள்ளயை "என்று

மார் தட்டி புகழ்  வைப்பேன்.
கலங்காதே என் தாயே ......
காலம் .....ஒரு காலம் வரும் ..
கனவில்லை இது நிஜம்