Followers

Tuesday, December 21, 2010

மார்கழித் திங்கள் அல்லவா



மார்கழித் திங்கள்  அல்லவா ?

மார்கழி மாதம் என்றால் கடுங்குளிரும் , வெளி நாடுகளில் வாட்டும்பனி ..பொழிவும் ஒரு ஆண்டின் முடிவும் அடுத்த ஆண்டிற்கான் எதிர்பார்புகளுடனான   .ஒரு மகிழ்வும் பழையன  கடந்து புதியனவற்றை மகிழ் வோடு எதிர்  நோக்கியிருக்கும்  மகிழ்வும் மக்கள் மனத்தில் தென்படதொடங்கும். வெளி நாடுகளில் கார்த்திகை முடிவிலே சோடினைக்கான ஆயத்தங்கள் கடைத்தொகுதியில் விளம்பரதுக்கான் சோடினைகள் , மகிழ்ச்சியுடன்  , பரிசு பொருட்களின்  தேர்வு என்று சனக்கூட்டம் களை கட்ட் தொடங்கும்.

 உங்களைப் போலவே நானும் மகிழ்வோடும் எதிர்பார்போடும் கிறீஸ்து பிறப்பின்  மகிழ்வு உலகுக்கும் நாட்டும் வீட்டுக்கும் அமைதி சமாதானம் மகிழ்வு கொண்டு வரவேண்டும். என் எதிர்பார்ப்புகளுடன் கிறீஸ்து பிறப்பின் நாளை எதிர் கொண்டு , ஆவலுடன் இருக்கிறேன். என் குழந்தைகள் நத்தார் தினமாகிய இந்த நாட்களில் முன்பு சோடினைகள் செய்ய சொல்லி என்னவரை கட்டயபடுத்துவார்கள். இப்பொது வளர்ந்து விடார்கள் பரிசுப் பொருட்களுக்காக காத்திருப்பார்கள். வீட்டின் ஒரு மூலையில் கிறிஸ்மஸ் மரம் அலங்க்கரித்தாகி  விட்டது .