Followers

Monday, November 14, 2011

என் அப்பம்மா


ராஜரத்தினம் கோகிலா தம்பதிகளுக்கு மூத்தவள் பெண் நிரஞ்சினி .....ராஜா ரத்னம் தலை நகரில் புடவைக்கடைகளுக்கு சொந்தக்காரர்..நிரஞ்சினிக்கு  துணி மணிகளுக்கு களுக்கு குறைவே இருக்கவில்லை. அடுத்தடுத்து   மூன்றும்  பையன்களாக் பிறக்கையில் இவளுக்கு மதிப்பு  மிகவும் உயர்ந்தது.............இவளுக்கு ஆறு வயதிருக்கும் பொது ....
.ஒரு தடவை கிராமத்துக்கு சென்றார்கள். ராஜரத்தினம் தனது தாயார் மீது மிகவும் நேசம் வைத்திருந்தார். ஒவ்வொரு பள்ளிவிடுமுறைகளின் போதும் எப்படியாவது நேரம் ஒதுக்கி குடும்பத்தினரை ஊருக்கு அழைத்துச் செல்வார். பின்பு பள்ளி தொடங்கும் போது மீண்டும் வ்ந்து  தலை நகருக்கு கூட்டிபோவர். இக்காலத்தில் ஊர்க் கோவில் திருவிழா நடை பெறும் .ராஜரத்னம ஐயா என அழைக்கப்படும் இவருக்கு மிகுந்த் செல்வாக்கு உண்டு............நிரஞ்சனி   அப்பம்மாவுடன் கோவில் .நடைமுறைகளில் கலந்துகொள்வாள். இதற்காக பட்டுச் சட்டை  ...பாவாடை எல்லாம் விசேடமாக் தைக்க கொடுத்து எடுத்து வைப்பார் அப்பம்மா ..

.ஒருதடவை விடுமுறைக்கு வந்தவர்கள் போகும்போது
......நிரஞ்சனி அப்பம்மாவுடன் மிகவும் நெருங்கி விட்டாள் .. தான் அவ்வூர் பள்ளியில் சேர்ந்து படிக்க் இருப்தாகவும் சொன்னாள்........ராஜரத்தினம் கோகிலாவுக்கு மிகவும் அதிசய மாயிருந்தது ..ராஜ ரத்தினத்தாருக்கு   தன் தாயின் வேண்டுதலையும் மகளின் விருப்பையும் ஒதுக்கி தள்ளி அவர்களை மனம் நோக செய்ய விரும்பவில்லை .........மறு நாளே இவர்கள் பயணம் தடை பட்டு அவ்வூர் பள்ளியில் சென்று அனுமதி வாங்கி வந்தனர். .அப்பம்மாவுக்கு மிகவும் சந்தோஷம்.........குடும்பத்தார் பயணம் சென்றனர். நிரஞ்சினி மிகவும் நல்ல  பெண்ணாக வளர்ந்து வந்தாள். பள்ளியும் அப்பம்மாவின் அணைப்பும்  அவளுக்கு மிக்வும் பிடித்திருந்தன ............அப்பம்மா கதை கதையாக  சொல்வார். அவளது பெயர் கூட தனது தேர்வு என்று சொல்வாள். நிறைந்த மகளாக இருக்கணும்  என்பதால் நிரஞ்சினி .........என பெயரிட்டதாக  சொல்வாள் ....பாட்டி தனது கணவர் இறந்த பின் மிகவும் ஒரு சந்தோஷ வாழ்க்கை தன் பேத்தியால் கிடைத்தது என்பாள். வெள்ளி தோறும் கோவிலுக்கு போகையில் பாட்டியின் மதிப்பு மரியாதையும் பேத்திக்கும் கிடைக்கும்..........ராஜரத்தினத்தின் தந்தை அவ்வூரின் ....மதிப்புக்குரிய பெரு மகன்............கால ஓட்டத்தில் ...நிறைஞ்சினி .........பெரியவளா னாள் ......ஊரைக் கூட்டி  விழா எடுத்தனர்......கொண்டாட்டம் நிறை வடைந்ததும் ...எல்லோரும்  புறப்படத் தயாரானார்கள். ...கோகிலாவுக்கு இனியும் பாட்டியுடன் மகளை விட்டு  வைக்க விரும்பவில்லை .........ராஜராத்னமும் அவரது வயோதிபத்தை சாட்டி ........மகளை  அழைத்து சென்றனர்..........

சில நாட்களில் பாட்டி மிகவும் நோய் வாய்பட்டார் ...........தன் பேத்தியுடனான   வாழ்வை ஆசை போட்டு பார்ப்பார் .எந்த வைத்தியத்துக்கும் நோய் குணமாகவில்லை .............இறுதியில் ராஜரத்தினம் குடும்பத்துடன் .வந்து சேர்ந்தார்..........அப்பம்மா என அழைத்து  கொண்டு வரும் தன் பேத்தியை ........கண்டதும் ..சற்று முனகியவாறு ...கண் திறந்தார்.........இறுதியாக.. அவ்வூர்  வைத்தியர்.......அவருக்கான காலம் இன்னும் மூன்றுநாட்கள் என காலக்கெடு சொல்லிச்சென்றார். மூன்றாம் நாள்..அதிகாலை ஈனக் குரலில் ...நிரஞ்சினியை அழைத்தார்............அருகில் சென்று ..வருடிக்கொடுத்து .. இருக்கையில் தாகமேடுப்ப்தாக  சொல்லவே  நிரஞ்சினி ...அருகில் இருந்த குவளயில் ......சிறிது பாலை கரண்டி மூலம் பருக்கி கொண்டு இருக்கும்போது ..இரண்டாம் கரண்டி பால் ...அவரது   கடைவாயிநூடே வழிந்தது ....பின் தலை  கீழ் நோக்கி சரிந்து ...அவரது ஆன்மா ...இறைவனிடம் சங்கமமாகியது.

நிரஞ்சினி மிகவும் கவலை யடைந்தாள் ..............அப்பம்மாவின் ஒவ்வொரு செயலயும்..சொல்லி சொல்லி ............அழுதாள்......... ஒருவாரத்தில் இறுதிக் கடன்கள் யாவும் நிறைவேறியதும்  மீண்டும் அவளது படிப்பை தொடர தலை நகருக்கு சென்றாள். ...இந்தப்பாடல் ஒலிபரப்பும் போதெல்லாம்  பாட்டியின் நினைவில் மூழ்கி விடுவாள் ..............நீங்களும் கேளுங்கள் இனிய பாடல். ..http://www.youtube.com/watch?v=3xy3eYNKShw&feature=related.  

11 comments:

Yaathoramani.blogspot.com said...

பதிவைப் படித்து பாடலைக் கேட்கையில்
பதிவின் உள்ளுணர்வை நாங்களும் உணர முடிகிறது
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்

கவி அழகன் said...

சூப்பர் கதை மனச தொட்ட கதை

அம்பலத்தார் said...

கதையும் பாடலும் நல்ல பொருத்தம். தொடரட்டும் உங்கள் பாடலும் தேடலும்......

ஹேமா said...

எனக்கு என் அப்பம்மாவைத் தெரியாது.படித்து முடிக்கையில் மனதில் பாரம் !

முற்றும் அறிந்த அதிரா said...

இது கதையல்ல நிஜம்போல இருக்கே... மனதை நெருடும் கதை, ஆனாலும் முடிவில் பேத்தி வந்து அருகிலிருந்தது கொஞ்சம் நிறைவைத் தருகுது....

நதியாவின் பாட்டும் சூப்பர்.

Learn said...

அருமையான கதை மனதை தொட்டு விட்டது அக்கா பாராட்டுக்கள்

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

Muruganandan M.K. said...

உங்கள் படைப்பில் உள்ள உணர்வு மனதிற்கு நெருக்கமாகிவிட்டது. பாட்டன் பாட்டிகள் இவ்வாறுதான்...

ம.தி.சுதா said...

/////கோகிலாவுக்கு இனியும் பாட்டியுடன் மகளை விட்டு வைக்க விரும்பவில்லை .........ராஜராத்னமும் அவரது வயோதிபத்தை சாட்டி ........மகளை அழைத்து சென்றனர்/////

உண்மையிலேயே இப்படிச் சில சம்பவத்தை பல இடத்தில் கண்டிருக்கிறேன்..

பேத்தி வளத்தால் பேய்ப்பிள்ளை என்று ஒரு பழமொழி வேற...


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
மழை காலச் சளித் தொல்லைக்கு வீட்டில் ஒரு சிக்கன மந்திரம் Nuisance cold solution

Unknown said...

உறவுகளை ,உணர்வுகளுடன்
சொன்ன கதை ,படிக்க பார்க்க
இதமாய் இருந்தது உண்மை .
http://vazeerali.blogspot.com/

எஸ் சக்திவேல் said...

அம்மம்மா அப்பம்மா என்னும் உறவுகள் இக்காலங்களில் அருகி வருகின்றன. (இருக்கிறார்கள், ஆனால் அவர்கள் வேறுநாட்டில், பேரப்பிள்ளைகள் வேறுநாட்டில்); ...... அம்மம்மாவில் இருக்கும் நெருக்கம் அப்பம்மாவில் இருப்பதில்லை, அன்பு இருந்தபோதிலும்...

எஸ் சக்திவேல் said...

உங்களுக்கு அப்பம்மாவும் நெருக்கமாக இருந்ததை அறிய மகிழ்ச்சி.