Followers

Friday, January 14, 2011

நான் ஏன் பதிவெழுத வந்தேன்?

நான் ஏன்(எப்படி) பதிவெழுத வந்தேன்?

தம்பி கவிக் கிழவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க இதை தொடர்கிறேன்........
என்னை மாட்டி  விடுவதில் அவ்வளவு இன்பமா? ஏன் எழுதுகிறேன் என்பதை விட எப்படி இந்த ஆர்வம் வந்து என்று சிந்தித்தால் .............

தமிழ் மீது எனக்குள்ள் ஆர்வத்தை  வளர்த்துக்கொள்ள வேளையும்., வளமும் ,வசதி வாய்ப்பும் கிடைத்தது ., என்று சொல்லலாம். .என்று கூறலாம். பள்ளி வாழ்வின் பின்  கடிதம்  தவிர பத்திரிக்கை வாசிப்பதுடன்  நின்று விட்டது தமிழ் எழுத்தின்  ஆர்வம்கடின முயற்சிக்கு பின் கணனியில் தமில் l  வாசிகக் கற்றுக்கொண்டேன். பின்பு நான் ஆரம்பத்தில் இணைந்தத "யாழ் இணையம் " எனும் தளம் எனக்கு தமிழை எழுத வழி சொல்லித்தந்தது. அங்கு உறுப்பினராக இணைந்து தமிழ் எழுதவும் பங்கு பற்றவும்  கற்றுக் கொண்டேன். .அங்கு ஏற்பட்ட் சில தொடர்புகளால்  வலைபப்க்கத்தையும்  எட்டிபார்க்க் வசதி கிடைத்தது

Monday, January 10, 2011

மெளனமாய் ஒரு காதல்




மெளனமாய் ஒரு காதல் 

அந்த பள்ளி நாட்கள் நீண்டு போகாதா?  என் அங்கலாய்க்கும் ஒரு மாலைபொழுதில் ..............
கிராமத்தின் முக்கியமான்( இருபாலாருக்குமான )கலவன்  பாடசாலைகளில் ஒன்றில் ராகவன் உயர்வகுப்பு இரண்டாம் ஆண்டு படித்துக்கொண்டு இருந்தான். பணி நிமித்தம் இடம் மாற்றலாகி வந்தவர்கள் தான் .கேசவ வாத்தியார் குடும்பம். அவர்களுக்கு அழகான் ஒரே ஒரு பெண . அன்று ஒரு தை திங்கள் முதலாம் வாரம் , இவர்கள் பாட்சாலை யின் அனுமதிக்காக காத்திருந்தார்கள் அப்பாவும் பெண்ணும். தலைமை  ஆசிரியர் அன்றைய பணியில் மூழ்கி இருந்ததால் , ராகவன், அவர்களுக்கு உதவும் முகமாக , வரவேற்பறையில் ஒரு ஆசனத்தில் இருத்தி , காத்திருக்கும்படி சொன்னான். அவன் வகுப்புக்கு சென்றுவிடான். சில மணி நேரங்களில் வகுப்பு ஆசிரியரை இடை மறித்த தலைமை  ஆசிரியர் தேவகியை அறிமுகம் செய்தார்.