Followers

Tuesday, March 1, 2011

சோகத்திலும் ஒரு தாகம்...

 சோகத்திலும் ஒரு தாகம்.................

Post by nilaamathy Today at 6:27 pm
சோகத்திலும் ஒரு தாகம்..........

செயற்ககைக் கைகளுடன் நான் டொக்டருக்குப் படிக்கலாமா?

2006ஆம் ஆண்டு யுத்தம் ஆரம்பமாகியபோது வீட்டுக்கொருவர் போராட்டத்தில் இணைய வேண்டும் என்று என்னை புலிகளுடன் இணைப்பதற்கு பலர் முயற்சி செய்தார்கள். பாடசாலை விட்டு வரும்போது என்னை பலவந்தமாக வாகனத்தில் ஏற்ற முற்பட்டனர். நான் ஒருவாறாக எனது சைக்கிளையும் விட்டுவிட்டு குறுக்கு வீதிவழியே வீட்டிற்கு ஓடி வந்து விட்டேன்.

இது 2008 ஜனவயில் நடைபெற்றது. அன்றிலிருந்து நான் பாடசாலைக்குப் போகவில்லை. அத்துடன் எனது தங்கைமாரையும் பெற்றோர்கள் நிறுத்தி விட்டார்கள். படிக்க முடியவில்லைவீட்டைவிட்டு வெளியிறங்க முடியவில்லை.எனது வாழ்க்கை மிகவும் விரக்தியாகவே இருந்தது. அத்துடன் மாலைவேளையில் நான் திருநகர் மைதானத்தில் ஒரு மணித்தியாலம் வரை உதைப்பந்து விளையாடுவேன்