Followers

Friday, March 18, 2011

தோற்றுப் போனவள்.


தோற்றுப் போனவள். 

காமாட்சி .......கனகர் தம்பதிகளுக்கு இரு பெண பிள்ளைகள். மூத்தவள் படிப்பு முடிந்ததும் , கனகர் வேலைக்கு  விட மறுத்து விடார்.  இளையவள்  தந்தையுடன் போராடி மேற்படிப்புக்காக் . யுனிவேர்சிட்டியில் படித்து கொண்டு இருந்தாள். கனகர் அந்த ஊரிலே பெரும் அரிசி ஆலைக்கு சொந்தக் காரர். முப்பது மேற்பட்ட் பணியாளர்களை கொண்டு தொழிலை நடத்தி வந்தார். மாலையில்  நிர்வாகத்தின் கணக்கு வழக்குகளை கவனிக்க் தங்கை மகன் , வாகீசனை துணைக்கு அழைத்தார் . அவனும் மாமன் மீதுள்ள் மரியதை யால் ஏற்றுக்கொண்டான். . 

முன்பு அவன் மத்திய கிழக்கு நாடு ஒன்றில் வேலை  பார்த்தவன்.  அவனது கம்பனி , ஒப்பந்தம் முடிந்ததால் , ஊருக்கு வந்து வேறு  நிறுவனத்தில் இணைய காத்திருப்பவன். கனகரின் தங்கை விசாலம் , கணவனை இழந்த பின் ஒரே மகனைக்  கண்போல் காத்து படிப்பித்து ...மாமன் கனகர் சொல்லவும் கேளாமல் மத்திய கிழக்கிற்கு பணிக்கு ஆட்களை எடுபதாக் மகன் கேட்ட போது  அனுப்பி வைத்தாள்.   தற்போது , ஓய்வாக் இருப்பதால் அவனும் சம்மதித்து , கணக்கு வழக்குகளை பார்பான். சில சமயம் மாமன் வீடில் அந்த , விபரங்களைக் கொண்டுபோய் கொடுக்க வேண்டியிருக்கும். அங்கே அழகு தேவைதை யான் மைத்துனியை சந்தித்ததும் காதல் வயபட்டான்.

Monday, March 14, 2011

இடைவெளிகள் .

இடைவெளிகள்  

நீண்ட நாட்களாக ஒரு சிரிப்பு பதிவு போடணும் என்று ஆசை .அதிகம் சோகம் கலந்த பதிவுகள் போடுவதாகவும் ஒரு செல்ல கண்டனம். சரி இதை   பகிர்வோம்,   என விழைகிறேன். 

 ஈழத்து  போரினாலும் பொருளாதார தேவை நிமித்தமும  பலர் புலம்பெயர்ந்தனர். அந்த வகையில் ராஜசேகரன் கனடா நாட்டுக்கு மேற்படிப்பின் நிமித்தம் புலம் பெயர்ந்தான். தாயகத்தில் மனைவி மேகலாவும் குழந்தை (ஆறுமாதம் ) அபிசேக் கையும் பிரிய வேண்டியதாயிற்று . காலபோக்கில் ராஜசேகரன் கல்வி  நிலையில் உயர்ந்து  தனக்கென ஒரு தொழில் தேடிக்கொண்டான். குடிவரவு முறைப்படி  மனைவி மேகலாவும் குழந்தை அபிஷேக் உம் நான்கு வருடங்களின் பின் தந்தையுடன் இணைந்து  கொண்டனர். அவர்கள் ஒரு கோடை விடுமுறையின் போது நாட்டுக்கு வந்தனர். இங்கு புரட்டாதி  மாதம் பள்ளி தொடங்கும் காலம் . அபிக்கு நான்கு வயது முடிந்து இருந்ததால். அவனை பாலர் பாடசாலையில் சேர்த்தனர் . அவனும் நன்றாக் பள்ளி செல்ல விருப்பம் கொண்டவன். ஒரு தவணை முடிந்து அடுத்தவ வரடம் பங்குனி மாதம் ஆரம்பமாகியது. குழந்தையின் தேவைகளை கவனிக்க் வேண்டியிருந்ததாலும் , நாட்டின் நடை முறைகளை பழக வேண்டியிருந்ததாலும். மேகலா  பகுதி நேரம் ,   ஆங்கில் வகுப்புக்கு சென்று கொண்டிருந்தாள்.  தாயகத்தில் சில  இடையூருக ளால் ஆங்கில்க் கலவி தடைபட்டது . போதிய அறிவு பெற முடியாததாய் இருந்தது. இங்கும் பள்ளி முடிந்து அபியை போய் கூடிவரவேண்டியதாயிர்று . பள்ளி அண்மையி லி ருந்த்தால் பஸ் போக்குவரத்தும் கிடைக்கவில்லை