சொந்தங்கள்....என் றும் தொடர் கதை
அந்த அழகிய சின்ன கிராமத்தில் .. மக்களை துயிலெழுப்பும் எழுப்பும் அந்த ஆலயமணி . அதிகாலை ஐந்தரைக்கு ஒலிக்கும். அது ஒரு அதிக கத்தோலிக்கர் வாழும் கிராமம். சில இந்துக்களும் கலந்து நட்புறவோடு வாழ்த்திருந்தார்கள். பண்டிகை நாட்களில் ஆலய குலதெய்வம் ( புனிதர் ) பவனிவரும் நாட்களில் இந்துக்களும் கலந்து கொள்வார்கள். கோவில்வ்ளவு தென்னந் தோரனக்களால் அலங்க்கலரிக்க் பட்டு ஒரு கோலாக லமான கொண்டாடமாக் காணப்படும்.காலை பூசை வழிபாட்டில் பாடகர் குழாமில் ரோஸ்மேரி . பியானோ வாத்தியம் இசைப் பாள். இளம்பெண்களும் ஆண்களும் சேர்ந்து பாடகர் குழாமாக் பாட்டு இசைப்பார்கள். போதனைகளும் பொருத்தமான் பாடலும் அமைந்தால் இறைவழிபாடு மிகவும் மெய் மறக்க செய்யும் .