Followers

Tuesday, April 17, 2012

கடந்து போன காலம் .

கடந்து போன காலம் .

அந்தக் குடும்பத்தில் ஐந்துபேருமே பெண குழந்தைகளாக பிறந்து விட்டனர் .பூமலர் கந்தையா தம்பதிகளுக்கு . கந்தையா கடின  உழைப்பாளி பயிற்செய்கை (விவசாய மேற்பார்வை)உத்தியோகத்தராக பணி புரிந்தார். மூத்தவள் நல்லகெட்டிக் காரி படிப்பிலும்  ஊக்கமுடையவள்  தானும் படித்து தன் உடன் உறவுகளுக்கும் சொல்லிக் கொடுப்பாள்.  நான்காவது பெண  நல்ல சூட்டிகையான பெண அழகான் சுருள்  சுருள் ஆன கேசம் பார்பவர்களை கொள்ளை கொள்ளும் அழகு . 

மூத்தவள் பருவம் வந்ததும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு வாழ்க்கைப்  பட்டாள். இரண்டாவது பெண  லண்டனில் உள்ள ஒரு நிறுவன அதிகாரிக்கு திருமணம்பேசி அனுப்பினார்கள்.  மூன்றாவது சற்று கர்வமான பெண . ஆ சிரியையாக உள்ளூரில் பணியாற்றினாள். இவளுக்கு திருணம் பேசி வருமாறு அவ்வூர் புரோக்கரிடம் சொல்லி வைத்தார்கள். நான்காமவள் தனியார் கல்லூரியில் கணணிக் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி ( ஐந்தாவது பெண ) உயர்கல்வி கற்றுக் கொண்டு இருந்தாள். தாய் தந்தையும் கடைசி மூன்று பெண்களுமாக ஐந்து பேர் அவ்வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஐந்து பெண பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று ஊராரும் பேசிக் கொண்டனர். ஆனால் கந் தையாவின் ...கடின  உழைப்பும் பூமலர் அம்மாளின் சிக்கனமான வாழ்வு முறையும் இவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தியது . ஒரு நாள் அவ்வூரின் பள்ளி ஆசிரியர் இவர்கள் வீட்டுக்கு வந்து அவுஸ்திரேலியாவில் இருக்கும் மகனுக்கு நான்காவது பெண்ணை பெண கேட்டார். முதலில் தாய் தந்தை யோசித்து சொல்வதாக  சொன்னார்கள். ஆனாலும் நான்காவது மகளின் எதிர் காலத்தை தட்டிக் கழிக்க விரும்பவில்லை. அவளிடம்  சம்மதம் கேட்ட் போது அவளும் சம்மதம் தெரிவித்தாள். மூன்றாவது பெண்ணும் வரும் வரனைக்  கைவிடாமல் சகோதரிக்கு மண முடித்து  அனுப்புமாறு தன் எண்ணத்தை வெளியிட்டாள் .காலம் உருண்டோடியது . மூன்று பெண்களை கரை சேர்த்த திருப்தியில் தந்தை கந்தையா காலமாகி விட்டார்.

தாயாரும் இரு பெண்களும் வீட்டில்  இருந்தார்கள். தாயாருக்கு (கணவனின் )ஓய்வூதிய பணம் கை கொடுத்தது அவரும் சற்று தளர்ந்து போனார்.  கடைசி பெண நன்றாக  படித்தாள். அந்த ஆண்டு இறுதி தேர்வு எழுதியவள் பல்கலைக் கல்லூரிக்கு   தேர்ந்து எடுக்க பட்டாள் . முதலில் தாயார் விடுதிக்கு சென்று தங்கி படிக்க அனுமதி மறுத்தாலும் அவளது படிக்கும் ஆவலை தடை செய்யாமல் அனுமதித்தார்.மூன்றாவது பெண்ணுக்கு ஒரு திருமணமும் சரி வரவில்லை . பெண பார்க்க வருபவர்களும் முடிவு சொல்ல சாட்டுப் போக்கு சொன்னார்கள. நாளுக்கு நாள் மூன்றாவது  பெண சற்று மாறுதல் அடைந்தாள்.  ஒரு வித எரிச்சல் மன் விரக்தி தாயாருடன் எரிந்து விழுதல் போன்ற மேலும் தீய பழக்கங்கள் குடி கொண்டன. இக்காலத்தில் பல்கலை கல்லூரியில்  உள்ள பெண்ணை அங்கு இறுதியாண்டில் கற்கும் பையன் ஒருவன் விரும்பினான் .. தாய் தந்தைக்கு ஒரே மகனான அவனை தந்தை விரைவில் திருமணம் செய்து ...தன் நிறுவனத்தை பொறுப் பெடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு விரைவில் ஒரு இதய சத்திர சிகிச்சைக்கு  நாளை பார்த்து கொண்டு இருந்தனர் . சத்திரசிச்சை முடித்தாலும் விரைவில் பணியை  பொறுப்பேற்க  முடியாத நிலை காணப்படும்.  
எனவே இறுதி பரீட்சை எழுதி முடித்தும் திருமணம் செய்யுமாறு அவசரப்டுத்தினர்.  அவனின் பெற்றோர். மிகவும் வற்புறுத்தி கேட்டதற்கு தான் கல்லூரியில்  ஒரு பெண்ணை விரும்புவ்தாக  சொன்னான். இதனால் க டைசி பெண்ணின் தாயிடம் விரும்பகேட்டு வந்தனர். பூமலர் அம்மாளும் தன் இயலாத வயது , வரும் வாழ்க்கையை தள்ளிப் போடவிரும்பாது ...தொடர்ந்து படிக்க 
அனுமதியோடு சம்மதித்தாள். திருமணம் மும் அமைதியாக நிறைவேறியது. 

மூன்றாவது  பெண்ணுக்கு மேலும் சினம் உண்டானது . அவள் போக்கு முற்றிலுமாய் மாறியது. புரோக்கர் பேசி வந்த  திருமணங்களையும் மறுத்து விட்டாள்.  தயார் மிகவும் கவலைபட்டாள்.  தன்னை தனித்து துன்பப்பட விட்டு கணவர் சென்று விடாரே என்று எண்ணி கவலைப் பட்டாள்.  மூன்றாவது பெண மிகவும் பிடிவாதமாய் பேசும் திரு மண ங்களைஎல்லாம் தவிர்த்து விட்டாள். அவளது கர்வம் மேலும் மேலும் அவளை பீடித்தது. மாற்றிய பெண்களைப்போல் உறவினர்களுடனும் நன்றாக் பேச மாட்டாள். இந்தக் கவலையால் தாயார் நோய் வாய்ப்பட்டாள். தான் இல்லாத காலத்தில் தனித்து விடுவாளே என்று எண்ணிக் கண்ணீர் உகுத்தாள். அடிக்கடி  வைத்திய சாலைக்கு  சென்று அங்கு தாங்கினாள் இறுதியில் மரணித்து விட்டாள் ...........  எல்லா  பெண்களும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். 
இறுதி சடங்கு முடிந்ததும் அடுத்தது என்ன என்ற கேள்வி எல்லோருக்கும் வந்தது. மூத்தவள் தன்னுடன் வந்து தங்கியிருக்கும்படி கேட்டாள். இரண்டாவது தன்னுடன் லண்டனுக்கு வர கேட்டாள்.  கடைசி சகோதரி தன்னுடன் வரும்படி கேட்டாள். எல்லோருக்கும் மறுத்து விடாள் . தான் தனியே அந்த வீட்டில் இருக்க போவதாகவும். உதவிக்கு அவ்வூரில்  உள்ள ஒரு வயதான் வரை (அவுட் கவுசில் ) வளவின் எல்லயில் உள்ள கொட்டகையில்  தங்கியிருக்க் அனுமதிப்பதாகவும் சொல்லி விட்டாள். எல்லோரும் தங்கள் ஊருக்கும் வீட்டுக்கும் சென்று  விட்டனர்.

அவளுக்கு எல்லாம் இருக்கிறது.  வீடு,  பணம் வசதி ஆனாலும் ஒரு வெறுமை. தனிமை
சிலசமயம் தன் கர்வத்தை  எண்ணி கவலைப் படுவாள்.கடந்து போகும் இளமை .மனப்பாரங்களை  பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை . மனச்சுமை  போன்ற உணர்வு ....வீணாகி விட்ட வாழ்க்கை இப்படியாக எண்ணிக கவலைப்படுவாள்    குடும்ப வாழ்க்கை தாம்பத்தியம் மட்டுமல்ல . ஒரு வித பிணைப்பு . தாய் தந்தை குழந்தைககள் என்ற  ஒரு வலைபின்னல். ஒருவர்  மற்றவருக்காக  வாழும் விட்டுக் கொடுப்பு .தியாகம் பரிவு ..ஒரு வித பாச பந்தம். இத்தனயும் இழந்து விட்டாள். தன் கர்வம் மன இறுக்கம் என்பவற்றால்.. 

கடந்து போன காலம் மீண்டும் வரவா போகிறது ?. பருவத்தே செய்யும் பயிர் போன்றது வாழ்க்கை .மனிதன் ஒரு சமுதாய பிராணி.  இயற்கை வட்டத்தின் படியே வாழவேண்டும். இல்லாவிடால் எதிர்கால மற்று ஒரு போலியான் வாழ்வை , வட்டத்துக்குள் வாழவேண்டியிருக்கும். பல வருடங்களுக்கு முன்னைய  கதையாய் இருப்பினும், ஒரு வேளை இது படிப்பவர்களுக்கு பாடமாக அமையலாம் என்பதால் பகிரப்படுகிறது .

Friday, April 13, 2012

எண்ணிய யாவும் பெற்று இன்புற்று வாழ்க

மிகவும் நீண்ட  நாட்களின் பின் உங்களுடன் .............

எல்லோரும் நலமா ? இன்று  சித்திரைப் புத்தாண்டு  வலையுலக  உறவுகள் யாவரும் நலமோடும் வளமோடும் எண்ணிய யாவும் பெற்று இன்புற்று  வாழ்க என வாழ்த்துகிறேன் . குடும்ப நிலை என்னை வலை  உலக பங்களிப்பில் இருந்து  தூர வைத்து விட்டது . இனித் தொடர முயற்சிக்கிறேன் . நேரமும் காலமும்  கை கூடும்  போ து ... மீண்டும் சந்திப்போம். நண்பர்களே .

Tuesday, January 17, 2012

தாயும் நீயே தந்தை நீயே ..........

தாயும் நீயே தந்தை நீயே ..............

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில்  இருந்து புறபட்ட   விமானம் பலரோடு லதாங்க்கினி  யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட   பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின்  பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால   சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி  கொடுத்த பின் எரியூட்ட   பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி  இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து  ஒரு விடுதிக் நிர்வாக காப்பாளர் மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார் ......அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும்  கவனித்து கொண்டார் ........

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில்  விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை  நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே  என்ற மனக்கவலையிலும்  அக்காவுக்கு விடை  கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால   நோக்கம் கல்வியின்  முன்னுரிமை என உணர்ந்த  இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட  ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா   லதாவுக்கு இனம்புரியாத   பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு  மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு  இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது.  இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது.  தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை     எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .
இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள்    முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா "  என கட்டியணைக்க   வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு  பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள் 


Monday, January 16, 2012

தை மகளே வா


புதுப்பானையில் புத்தரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம் கொண்டு
வரவேற்கிறோம் ,தை மகளே வா.

பழையன கழிய வேண்டும்
புதியன பல புக வேண்டும்
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா

பசித்தவனுக்கு  உணவளித்த கூட்டம்
பசிப்பிணியால் வாடுகிறது
ஆட்சி பீடத்தில் போலி வாக்குறுதி
 கால இழுத்தடிப்புக்களும்   தாராளம்

வெளிநாட்டு உதவியில் உண்டு
கொழுக்கிறது  பெரும்பான்மையினம்
உதவிக்கரங்கள் உரியவ்ரகளை
உரிய வேளையில்  போய்  சேர்வதில்லை

கலப்பை மறந்த பூமியில்
காலத்தின் தேவை கருதி
காலமெல்லாம்  சிறக்க
உழவுத்தொழில் மலர வேண்டும்