Followers

Wednesday, September 2, 2009

ஈன்ற பொழுதில் .............

ஈன்ற பொழுதில் .............

       அன்று மாலை ராகவனும் மனைவி சாரதாவும் குட்டி பாப்பா , அனு என்கிற அனுஷ்காவும் அன்று மாலை நடக்க இருக்கும் ஒரு பிறந்த நாள் விழாவுக்காக ஆயத்தமாகி கொண்டு இருந்தனர். இங்கு அனுவை பற்றி சொல்லியே ஆகவேண்டும் . ராகவனுக்கு முதல் பெண் குழந்தை...அவன் அம்மாவுக்கு முதல் பெற்றது  பெண்ணாக இருந்ததில் சற்று வருத்தம் தான் . இருபினும் ராகவனுக்கு அதிலெல்லாம் , கவலையில்லை . வேலை முடிந்து வரும் அப்பாவை  காண  ஓடோடி வருவாள். காலில் சொக்ஸ் ( காலுறை) கழற்றுவது , அம்மாவின்  தேநீரை அவன் பருகி இடயில் ஒரு மிடறு பங்கு போட்டு கொள்வது என்று அவன் உலகமே அவள் தான் . நல்ல குறுகுறுப்பான பெண் குழந்தை . வேலையில் சற்று தாமதமானாலும் , அவள் இரவு படுக்கும் நேரமானாலும் தந்தையின் மோட்டார்  பைக் சத்தம் கேட்டால் துள்ளி ஓடி வாசலுக்கு வந்து விடுவாள் "அனுக்குட்டி "என்று அவன் அழைத்தால் அவன் வேலை களையெலாம் பறந்து விடும் ..

பாலர் வகுப்பு படித்து கொண்டிருந்தாள் . நான்கு வயது எட்ட இன்னும் சில மாதங்கலே இருந்ததன . பாடசாலயில் சொல்லிக்கொடுக்கும் சிறு பாட்டுக்களை அம்மா தூங்க வைக்கும் போது பாடிக்காட்டுவாள். அவர்கள் தாயாராகி விடவும் , அவர்களை அழைத்து செல் வாடகை வண்டி , வாயிலுக்கு வரவும் சரியாக இருந்தது. அங்கு சென்றதும் அனுஷ்காவுக்கு ஒரே கொண்டாடம் . சோடனைகள்... அவளை போலவே அம்மா அப்பாவுடன் குழந்தைகள். அன்று பிறந்தா நாள் கொண்டாட இருப்பவர் ஒரு பாட்டி தன எழுபதியிந்தாவது பிறந்த நாள். அவருக்கு விருப்பம் இல்லாமலே   பேரார்களால் ஆயத்தம் செய்ய பட்டது. சிற்றுண்டி பரிமாறபட்டது .சிந்தாமல் அழகாக்  சாப்பிட்டாள். ராகவன் விருந்தின் போது மருந்தாக் சில குடிவகை எடுப்பார். அதனால் தான் அவர்கள் வாடகை வண்டியில் வந்தனர்.மாயா ஜால வித்தைக்காரன் , வித்தை காடினான். கை கொட்டி ரசித்தாள்.  சங்கீத கதிரை போன்ற  , போட்டி விளையாட்டுக்களும் இருந்தன . பாட்டிக்கு கொள்ளை சந்தோசம். இறுதியாக இரவு உணவு உண்பதற்கு முன் ஒரு சிறு போட்டி .........சிறுவர்கள் பாட்டுப்பாடி மகிழ்விக்க வேண்டும்.  சிலர் பிகு பண்ணினார். சிலர் வெட்க பட்டனர். சிலரை இழுத்து வந்து பாட வைத்தனர். அவர் அமைந்துள்ள வரிசையில் ,  அனுஷ்காவின்  முறை வந்தது. தாய் சாரதா .........அவளை பாடிக்காட்டும்படி , கேட்க , கம்பீரமாக் எழுந்து சென்றாள்.  .எல்லோரும் அனுக்குட்டியை பார்த்து கைதட்டினார்கள்.  பாடினாள்.........

அப்பா வை  போல இவ்வுலகில்
 யாரோ உள்ளார் அன்புடையார் ...
காலும் கையும் சோராமல்
கருத்தாய் என்னை காத்திடுவார்
தட்டி தட்டி கொடுத்திடுவார்
தாலோ தாலோ தூங்கேன்பார். ...............

..சாரதாவுக்கு ஒரே ஆச்சரியம் . கடந்த முறை  பெற்றார் தினவிழாவுக்கு பாடிய  அம்மாவைப போல் என்ற பாடலை இவள் அப்பாவை போல் என்று பாடுகிறாளே என்று . ராகவன் சத்தம் கேட்டு ஓடோடி வந்து கட்டி அணைத்தான். குட்டி அனுஷ்கா எல்லோருடைய பாராட்ட யும் பெற்றாள். ........

.ஈன்ற  பொழுதில் பெரிதுவக்கும் தன மகளை .......
.பாடகி என் கேட்ட தந்தை. ..

Tuesday, September 1, 2009

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் .......

பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............

அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்ணையாராக தான் இருக்கவேண்டும் .அவ்வளவு அதிகாரங்களை  இந்த பெரிய பண்ணயார்கையில். அந்த ஊர் மக்கள் எல்லோரும் , அவரின் சொல்லுக்கு கட்டு பட்டு தான் நடப்பவர்கள். அவரின் வீடு அந்த ஊரின் மத்தியில் அமைந்து இருந்தது . அந்த வீதியின் எல்லயில் இருப்பது தான் முத்துவின் சிறு குடிசை.

பண்ணை  வீட்டுக்கு  போகும் பிரதான நீர் வழங்கல்  குழாயின் ஒரு சிறு பகுதி இணைப்பு அவரின் சுற்று மதில் வீட்டின் மூலையில் அமைந்து இருந்தது . முத்துவின் மனைவி மீனா , தன் கடைக்குட்டியை , நல்ல குடி தண்ணீர் பிடித்து வ்ரும் படி அனுப்பினாள். கடைக்குட்டி யும் தன் குடத்தை எழுத்து கொண்டு , போக அவன் வீடு  பெட்டை  நாய் ஈன்ற குட்டிகளில்  ஒன்று தானும் தானும் என்று , அவன் பின்னே துள்ளி யும் ஓடியும் சென்றது .அவ்வழியால் போவோருக்கு பண்ணை வீட்டு  காவல் நாய்களுக்கு பயம். அவைகளின் தோற்றமும் , கத்தும் (குரைக்கும்) தொனியும் திகிலூட்டும். அவைகளை   கூட்டை விட்டு இரவில் திறப்பார்கள் அதிகாலை  ஆறு மணிக்கெல்லாம் , அடைத்து வைப்பார்கள். யாரும் உள் செல்வதென்றால் காவலாளியிடம் நாய் கூடுக்குள் நிற்கிறதா என்று கேட்டு விட்டு தான் உட் செல்ல முடியும்.

கடைக்குட்டி குடத்தில் நீரை நிரப்பி , தான் தலை மீது வைக்கவும் , நாய்களின் குரைப்பு கேட்கவும் குடத்தை  கீழே போட்டு விட்டு ஓடத்தொடங்கினான். குட்டி நாயும் வேகமாக ஓடத்தொடங்கியது .அவர்களின் கஷ்ட காலம் அன்று நாய்கள் கூட்டுக்குள் அடைக்கவில்லை. ஒரே ஒரு கவ்வி உதறலுடன் குட்டி நாய் , கதறலுடன் இறந்து விட்டது .பெரிய நாய் தன் இனம் என்று கூட சிந்திக்கவில்லை.(ஐந்து அறிவு படைத்தஜீவ்ன் எங்கே அறிவு ) பின்னல் துரத்தி வந்த காவலாளி , அவைகளை கட்டுக்குள் கொண்டு வந்தான்.

கடைக்குட்டி வீட்டில்  போய் நடந்ததை சொன்னான். வலிமை படைத்தவனின் நாய் கூட , ஏழை களின் நாயை குதறி விட்டன.சில  நாடுகளின் அதிகாரவார்க்கம் , சிறுபான்மையினத்தை கொன்று ஒழிப்பது போல  பண்ணை வீட்டு நாய்க்கும் ஏழை வீட்டு நாய்க்கும் நடந்த கதை  .

 ஒரு  நாட்டில் பெரும் பான்மை இனம் சிறு பான்மை இனத்தை சில வலிமையானவர்களின் உதவியோடு ஒழித்து கட்டுவது என் நினைவுக்கு வருகிறது.

நாய்களுக்கே  இந்தகதி என்றால் மனிதர்களுக்கு .............(என்னை சிந்திக்க வைத்த நிகழ்வு )

யாரை நம்பி ..................

யாரை நம்பி ..............


.......கடந்த வாரம் ஒரு மரண வீடுக்கு சென்று இருந்தேன். ஒரு பெண்மணி எழுபது வயது இருக்கும் . ஊரில் பாலர் வகுப்பு ஆசிரியராக இருந்தவர் . காலம் தன் வேலையை செய்ய நானும் வளர்ந்து பெரியவளாகி என் படிமுறைகளை கடந்து இன்று ஒரு அம்மா வாக புலம் பெயர்ந்து உலகின் குளிர் iகூடிய நாட்டில்.


என் எண்ண aஅலைகள் மீளவும் தாயகம் நோக்கி ...........நான் பிறந்து வளர்ந்தது அமைதியான் ஒரு கிராமம் . அங்கு அந்தரீச் சர் தன் மூன்று ஆண் குழந்தைகளுடன் வாழ்ந்தார் .கணவன் ஒரு புடவைகடையில் வேலை பார்த்து வந்தார் . மூன்று ஆண் குழந்தைகள். வீட்டு வேலை , பாடசாலை வேலை என என்ன கஷ்ட பட்டு இருப்பார் அவர்களை வளர்க்க. மூத்தவன் , ஏ எல் (பன்னிரண்டாம் வகுப்பு )படித்து முடிய பல் கலை கழகம் செல்ல புள்ளிகள் போதவில்லை , ஒரு மாமன் முறையானவர் துணையுடன் , பிரித்தானியா அனுப்பி வைத்தார் . அங்கு அவன் படித்து பட்டம் , நல்ல உயர் தொழிலும் செய்வதாக ஊரில் பேசிக்கொள்வார்.

இரண்டாவது மகனும் படித்து நாட்டுப் பிரச்சினையால் மேற்படிப்பு படிக்க முடியாமல் ,ஜெர்மனிக்கு புறப்பட்டான். மூன்றாவது கடைக்குட்டி , குட்டி யானை போல. எந்நேரமும் தாயின் (கைக்குள் )சீலைக்கு பின் திரிவான். நம்ம ஊரில் ராணுவகக்கெடு பிடி . இளம் பையன்களை பிடிப்பதும் , ஆட்காட்டி முன் காட்டி கொடுப்பதுமாய் இருந்த காலம் . பல பிரச்சினைகளுக்கு மத்தியில் தற்போது நான் வசிக்கும் குளிர் நாட்டுக்கு அனுப்பி வைத்தார் . காலம் ஓடிக்கொண்டே இருந்தது , நானும் திருமணமாகி என ஊரில் வாழ்த்து கொண்டிருந்தேன். ஒரு நாள் ஒரு துயர செய்தி .அவரது மகன் மாரடைப்பால் காலமாகி விடார் என்று . அதை அங்கு வசிக்கும் வெள்ளைக்கார பெண் ஒருவர் தான் அறிவித்து இருந்தார். இவரும பல கஷ்டங்களுக்கு மத்தியில் , லண்டனுக்கு சென்று , மகனின் கிரிகைகளில்பங்கெடுத்தார் . . இறந்த அதிர்ச்சியுடன் மேலும் அதிர்ச்சி இவருக்கு அறிவித்த பெண் , வெள்ளைக்காரி, மருமகள் என்பது , அவனுக்கு ஆணும் பெண்ணுமாக் இரு வாரிசுகள் வேறு. என்ன செய்வது . இவர் தாயகம் திரும்பி விடார். இருப்பினும் அவள் இவருடன் தொடர்புகளை வைத்திருந்தார்.

பின் சில காலம் கணவனும் வலிப்பு நோய் காரணமாகஇறந்து விட்டார். இவர் தனித்து வாழும் காலத்தில் இரண்டாவது மகனுக்கு பெண் பேசி அனுப்பி விட்டார். அங்கு சென்றவள் அவனின் கோலத்தை பார்ர்த்து மணமுடிக்க மறுத்து விடாள், இவருக்கு துன்பத்தில் மேல் துன்பம் , இறுதியாக மூன்றாவது மகன் , பொறுபேற்று நான் வசிக்கும் குளிர் கூடிய நாடுக்கு வந்து விட்டார். சில காலம் இன்பமாய் வாழ்ந்தார். பின்பு மகன் இவரை கவனிப்பதில்லை . நேரத்துக்கு வீட்டுக்கு வருவதில்லை , இப்படியாக இருக்கும் காலத்தில் அவனுக்கும் ஒரு பெண் சிநேகிதியாம். அவள் சரித்திரம் அறிந்தால்........... ஏற்கனவே இரண்டு பிள்ளைகளை பெற்ற வளாம் .கணவன் கை விட்டு சென்று விடானாம் . இவருக்கு அவளுடனும் ஒத்து வரவில்லை . நம்ம ஊரவார்களை கண்டால் பேசமாடார்.


சோகத்தின் மேல் சோகம் , பின்பு தனியாக ஒரு இல்லிடம் எடுத்து வாழ்ந்து வந்தார். ஆசிரியரின் பிள்ளைகளே இப்படி செய்து விடார்கள் எனறு ஊரார் பேசிகொண்டார்கள் . பின்பு நோயும் மூப்பும் வாட்ட ஒரு பராமாரிப்பு நிலையத்தில் வாழ்ந்தார். இடையில் மகன் மட்டும் வந்து பார்த்து செல்வதாக கேள்வி பட்டோம். அந்தஆசிரியரின் வாழ்வை நினைக்கவே கண் கலங்கு கிறது. பெற்ற பிள்ளைகள் இப்படி செய்து விடார்கள்.

புலம் பெயார் நாடுகளில் என்ன வாழ்கை என்று வாழ்வே வெறுத்து போகிறது . இயந்திரங்களோடு இயந்திரமாக் வாழவேண்டிய வாழ்வு .

இந்த நேரம் என என நினைவில் நிழலாடும் பாடல்.........


..தென்னையை பெற்றால் இளநீரு ,
பிள்ளயை பெற்றால் கண்ணீரு ,
பெற்றவள் மனமோ பித்தம்மா ,
பிள்ளை மனமோ கல்லம்மா ...............

...இப்படி எத்தனை பிள்ளைகள் கல் மனமாய் வாழ்கின்றனரோ ?

Wednesday, August 26, 2009

பேனாவின் சிவத்த மை ....

பேனாவின் சிவத்த மை .........

அமைதியான அந்த கிராமத்தில் சுந்தரதாரின் கடைக்குட்டி சாதனா , பத்தாம் வகுப்பில் படித்து கொண்டிருந்தாள் . அக்காலம் மிக மிக சாதாரணமாகவே இருந்தது , கைதுகளும் குண்டுமழையும் ... இடப்பெயர்வுகளும் ...இல்லாத காலம் . தெளிந்த நீரோடை போன்று , மக்களும் ,வாழ்கையும் ஓடிக்கொண்டு இருந்தது . கோவில் ,பாடசாலை ,விளையாட்டு என்று சமுதாயம் அமைதியாக வாழும் காலத்தில் ,முதலாம் முறை ,பத்தாம் வகுப்பு கோட்டை விட்டதால் ஏனைய தோழிகளுடன் பதினோராம் வகுப்பு செல்ல முடியவில்லை .முக்கியமான கணிதபாடம் தவற விட்டு விட்டாள் , வீடிலும் நல்ல வசை மாரிகள் ,அதனால் இரண்டாம் வருடம் முழு மூச்சாக படித்து கொண்டிருந்தாள்.


போதாக்குறைக்கு பெரியண்ணாவின் கண்டிப்பு வேறு . பாடசாலையும் பிரத்தியேக (.tuition ..)வகுப்புமாய் ,இருந்தாள். வருட இறுதியும் வந்தது .
தனது திறமையெல்லாம் திரட்டி சோதனையில் வெற்றி பெற்று விட்டாள்.
நான்கு டீ தரத்திலும் நான்கு சி தரத்திலும் சித்தியடைந்து விட்டாள் . பெரியன்னாவுக்கும் ,பெரிய பட்டணத்துக்கு அம்மாவின் கடிதத்துடன்
அவளும் கடிதம் எழுதினாள் . அவளின் பெரியண்ணா மூணு
மாதமொருமுறை ,மூன்று நாள் விடுமுறை கிடைக்கும் போது
தான் வருவார்.

அண்ணாவின் பதிலுக்காக நாளும் பொழுதும் பார்த்து கொண்டு இருந்தாள். அடுத்த வகுப்பு க்கு அக்கிராமத்தில் வசதி குறைவு என்பதால் யாழ்பாணத்தில் இருந்து ப்டிக்க, ஒழுங்கு களை பெற்றவர் ஆயத்த படுத்திக்கொண்டு இருந்தனர் மூன்று வாரங்களால் ,பெரியண்ணாவின் கடிதம் அவள் பெயருக்கு ,
திருத்தி திருப்பி அனுப்பப்பட்டது . ஆங்கில எழுத்துகளை சுற்றி சிவப்பு வட்டங்களுடன்....... " கடிதம் ஒரு மொழியில் எழுதப்பட வேண்டும் " .....

இறுதியில் அடுத்த வாரம் போயா விடுமுறையுடன் ,ஊருக்கு வருவதாகவும் ,
மீதி நேரில் என்று . அந்த கடிதம் அவளுக்கு சம்மட்டி போன்று இருந்தது.
பரிசை எதிபார்த்து , சந்தோஷத்தில் துள்ளி குதித்த அந்த சிட்டின் மனம்
நொந்து விட்டது ஏமாற்றத்தால் . அந்த சொற்கள் (...Distintion, Credit, Bus, traveling,tuition fees ,......)போன்றவை . அவள் மனம் .....இவர் "பெரிய "....
சட்டம்பியார் போல ...என்று திட்டி கொண்டது .

அந்த நாளும் வந்தது , மாலைபொழுது இருளாகிய நேரம் வந்தார் பெரியண்ணா. வீடுக்கதைகள் ,பேசியபின் ,சாதனாசிட்டு ,பெரியண்ண வுடன் ,கோபமாகவே இருந்தது. மறுநாள் காலை ,அவள் ப்டிக்கும் மேசையில் , ஒரு நூறு ரூபா நோட்டு (தாள்) காற்றில் பறக்காமல் புத்தகத்தின் கீழ் இருந்தது. பிரபலமான கண்டோஸ் சொகோலேட் உடன் . .அண்ணா மீண்டும் பெரியபட்டண்ணம் சென்று விட்டார் .

நம்ம கதாநாயகி ,உயர் தரம் முடித்து ,கோப்பாய் பயிற்சி கூடம் முடித்து காலப்போக்கில் சர்வகாசாலையில் தமிழ் விரிவுரையாளர் ஆகினார் . .
சில வருடங்கள் உருண்டோடின ,பெரிய அண்ணாவும் குழந்தை குட்டிகளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார் . சாதனாவும் இயற்கை சக்கரத்தில் சுழன்று , தாயாகி தொடர்ந்தும் வேலையில் இருந்தாள் .

வரலாறு மீண்டும் எழுதப்படும் என்பது போல , பெரிய அண்ணாவின் மகனும் பல்கலை கழகம் வந்தான் , ஒரு நாள் அவனது குறிப்புகள் திருத்தும் போது அவனின் புத்தகத்தில் பிழைகளை சுற்றி வட்டம் போடும் போது ,எங்கோ சென்றுவிட்ட , பழைய நினைவுகள் ,மீட்ட பட , நொந்த அவள் இதயத்தில்
இருந்து கண்ணீர் துளிகளாய் .... இரண்டு சொட்டுகள் அவன் புத்தகத்தில் விழுந்தன . அவளது திருப்பி அனுப்ப பட்ட கடிதம் நன்றாக மனத்தை பாதித்து இருந்தது . . .

(அண்ணா சட்டம்பியாராக இல்லாமல் , பாசத்துடன் சொல்லி திருத்தி இருக்கலாம் தானே .அன்று மனம் நோகாதிருந்தால் .......இன்று நான் எழுதியிருக்க மாட்டேன் )

யார் சொன்னது இது கற்பனை .............என்று

Tuesday, August 25, 2009

தெளிவு பிறந்தது .............

தெளிவு பிறந்தது .................

அன்றைய பொழுது ராகவனுக்கு எதோ கசந்து போய் இருந்தது ,காலையில் ...........அலுவலகம் வந்தான். எல்லாமே எதோ வழமைக்கு மாறானது போல ஒரு உணர்வு ........அலுவலக டைபிஸ்ட் , வந்து வழமை போல அன்றைய கடிதங்களுக்கு குறிப்பு எடுத்து சென்று விடாள். ஒரு சிகரட் பற்ற வைப்பதற்காக வெளியில் வந்தான். இரவு நிம்மதியான நித்திரை இல்லை. கடைக் குட்டி மாதுளனும் காய்ச்சலுடன் , முனகி கொண்டிருந்தான். அவனுக்கு அம்மாவின் அணைப்பு வேணுமாம். எனக்கு மட்டும் என்னவாம். அவனது பத்து வருட திருமண வாழ்வில் , கண் மணியான் இரு பையன்கள் ஒன்பது வயதிலும் நான்கு வயதிலும் . கடைக்குட்டி மாதுளன் அம்மா செல்லம். மனோஜனும் மாதுளனும் தனியே படுக்க பழகி இருந்தார்கள். ஆனால் நேற்று இரவு காய்ச்சலின் கடுமையால் தாயின் அருகாமையயை விட்டு விலகவே இல்லை . பள்ளி விடுமுறை வேறு . எங்காவது கூடி போங்கள் என்று சாருமதி கேட்டு இருந்தாள். மாதக் கடைசி விடுப்பு எடுக்க முடியாது அடுத்த வாரம் பார்க்கலாம் என்று சொல்லியிருந்தான்.

அலுவலகத்தில் டைபிஸ்டு இந்திரா , சற்று ஒரு மாதிரியானவள் என்று கேள்வி பட்டு இருந்தான் . ஆனால் அவனுடன் எந்த விதமான் , செயல்களுக்கும் இடம் கொடுபவளாக் காட்டிக் கொடுக்க வில்லை. . ராகவன் தன் தேநீர் இடைவேளை முடிந்து , மீண்டும் தன் இருக்கையை அடைந்தான். எதோ சந்தேகம் கேட்க வந்தவள் , சார் இன்று , ஏதும் சுகவீனமா ? ஏதும் பிரசினியா ? வீடுக்கு போகும் போது நம்ம வீடு பக்கம் வந்து போங்க சார் என்று ........சூசகமாக சொன்னாள்.

ராகவன் மனம் கிடந்து அல்லாடியது. இரவு மனைவியின் அணைப்பு கிடைக்க வில்லை எதோ ஒன்றுக்காக மனம் ஏங்கியது. அவனது வாழ்வில் என்றுமே அப்படியான இடங்களுக்கு போனதில்லை. வாலிபத்திலும் சரி இப்போதும் சரி , "அப்படியான " கதைகளை நண்பர்களுடன் பேசி கொள்ளவதுடன் சரி . அந்த இடத்திலே அந்த நினைப்பை விட்டு விடுவான். இன்று ஏனோ ஒரு தடுமாற்றம். கிணற்று நீரை வெள்ளமா கொண்டு போய் விடும் என்று ..... என்று மனம், அமைதி அடைய வில்லை.

எதோ ஒரு தவிப்பு ........ஒரு தடவை போய் தான் பார்ப்போமே....என்று மனம் ஏங்க , வேலை முடிந்ததும் தன் வாகனத்தை ,அவள் வீடு நோக்கி ஓட்டினான். வீட்டை அண்மித்தும் சற்று தூரத்தில் நிறுத்தினான். கை கால் எல்லாம் ஒரு வெட வெடப்பு . மனதுள் தைரியத்தை வரவழைத்தான். களவு மாங்காய் ருசிக்கும் என்பார்கள். அவள் வீட்டை அண்மித்தான் சுற்றும் முற்றும் பார்த்தான். அழைப்ப்பு மணியை , அழுத்த கையை உயர்த்தியவன் , வாயிலில் இருக்கும் ஆண்களின் காலணிகளை பார்த்தும் திடுக்கிட்டான். யாரோ உள்ளிருக்கிறார்கள். சம்மட்டியால் தலையில் அடித்தது போன்ற உணர்வு . விறு விறு என்று , தன் காரை நோக்கி நடந்தான். வேகமாக் வீடு நோக்கி சென்றான். வீட்டை அடைந்ததும் , சாருமதி , ஏனுங்க இவ்வளவு லேட்டு , மாதுளனை டாக்டரிடம் அழைத்து போனேன் , மாத்திரைகள் தந்தார், நன்றாக் வேர்த்து காய்ச்சல் , குறைந்து விட்டது. சமர்த்தாக் தூங்குகிறான் என்றாள்.

குளித்து இரவு உணவை முடித்தவன் .........சற்று நேர தொலைக்காட்சி பார்த்தவன், நித்திரைக்கு சென்றான். சமையலறை வேலை முடித்து வந்தவள் , மாதுளனுக்கு இரவு மருந்தை புகட்டி விட்டு , நன்றாக் போர்வையை இழுத்தி போர்த்து விட்டு , படுக்க சென்றாள். ராகவன சலனமற்று காத்திருந்தான். என்னங்க தூங்கிடீங்க்களா? நேற்று மாதுளனுக்கு ,முடியலைங்க , அது தான் அவனுடன் படுக்க வேண்டியதாயிற்று என்றாள். . அடியே என் ராசாத்தி கிணற்று நீரை ஆற்று வெள்ளமா கொண்டு போய் விடும். ஒரு சின்ன் அஜச்த்மேண்டு (adjustment )...இது கூடவா முடியாது ? என்று அவளை இறுக அணைத்தான். விடிந்ததும் நல்ல பொழுதாக் விடிந்தது , . வேலைக்கு போகும் வழியில் அட சீ .....இப்படி ஒரு , சபலமா ? அநியாயமாக் ஒரு சாக்கடையில் விழ இருந்தேன். ஜென்மம் முழுது ம ஒரு கறையை தேட இருந்தேன். அப்படி போய் இருந்தால் மனம் அமைதியடையுமா? சாருவுடன் , இணயும் போது குற்ற உணர்வால் அல்லவா கூனி குறுகி இருப்பேன். என் சாருவுக்கு துரோகம் செய்ய இருந்தேனே. கடவுளே என்னை மன்னித்து விடு ...........இனி மேலும் தடுமாற விடாதே என்று மனதுள் கும்பிடான். அலுவலகம் சென்றவன், அமைதியாக தன் வேலையில் ஈடு படான். டைபிச்டுவை கூபிட்டு ..........தான் ஒரு வாரம் குடும்பத்துடன் விடுமுறை செல்வதாகவும் அந்த வாரதுக்கான் வேலையை குறிபெடுக்க் வரச் சொல்ல அழைப்புமணியை யை அழுத்தினான்.

மறு நாள் ராகவன் சாரு , குழந்தைகள் மாதுளன் , மனோஜனுடன் விடுமுறை விடுதி ..........நோக்கி பயணமாயினர்.

குறிப்பு .....நான் இப்படி யான கதை எழுவது இது தான் முதல் தடவை .
குறை நிறை சொல்லுங்க.

Monday, August 24, 2009

பருவத்தே செய்யும் பயிர் ............

பருவத்தே செய்யும் பயிர் ..............

அன்று ஞாயிறுமாலை, ஆதவன் கடற்கரையோரமாய் அமர்ந்திருந்தான் .
எண்ண அலைகள் தாயகம் நோக்கி செல்ல தொடங்கியது. கல்வியின் உயர் தரம் முடித்து பெறுபேறுகளுக்காக காத்திருந்த நேரம் .ராணுவஅட்டகாசங்கள் கட்டு மீறி செல்ல தொடங்கியிருந்தது .. ஆதவனின் அப்பாவும் அம்மாவும் இவனை லண்டனுக்கு அனுப்ப முடிவு செய்தனர் .அதற்கான ஒழுங்குகள் ஏற்கனவே அங்கு இருந்த மாமாவால் செய்யபட்டு ,காணி பூமி ,அக்கா கெளசலா திருமணத்திற்கென வைத்திருந்த உடமை எல்லாம் பணமாகி ,அவன்
லண்டனை அடைந்தான் . மூன்று மாதங்கள் மாமாவீடின் சுகம் பிரிவை
கொஞ்சம் தணித்து மெல்ல மெல்ல வேறிடம் பார்கவேண்டியதேவை ,
மாமா உணர்த்த ,அவன் இடம் மாறினான் .

சிலமாதங்கள் ஆக பெற்றவரிடமிருந்து இருந்து கடன் பத்திரத்தை மீட்க பணம் அனுப்பும் படி கடிதம் வந்தது . இவ்வாறு அவன் அனுப்பும் செலவை மீத படுத்த மூன்று மாத காசை ஒரே தடவையில் அனுப்பினான் .காசை எப்படி உழைத்தான் என்பது வேறுகதை ,படிப்பில் ஆர்வமுள்ள அவன கஷ்டத்தின் மத்தியிலும் படித்தான் , இரவில் வேலையும் , பகலில் படிப்பும் ,ஆகி ,நித்திரை குறைய
உடல் சோர தொடங்கியது ,இதற்கிடையில் கெளசலா வின் கலியாணம் நடந்து முடிந்தது , தம்பியின் காசில் கோலாகலமாக் கலியாணம் . மாறிய கடன் கட்ட இரண்டாவது வேலை தொடங்கினான் . காலம் தான் எவ்வளவு வேகமாக ஓடியது

தகப்பனும் இளைப்பாறி ,தாயக கெடுபிடியால் அவர்கள் மருமகனின் துணையுடன் கொழும்புக்கு இடம் மாறினார்கள். அதற்கும் ஒரு பெரிய தொகை நண்பர்களிடமும் ,முதலாளியிடமும் உருட்டி பிரட்டி அனுப்பி வைத்தான் , காலம் தன் கடமையை செய்ய அவனும் முப்பது வயதானான் . தந்தையின் ஓய்வு ஊதியப் பணம் போதாது என்றும் மாதம் மாதம் அனுப்பும் படியும் கடிதம் மேல் கடிதம் வரும் சிலசமயம் மேசையில் உள்ள கடிதம் திறக்க படாமலே இருக்கும் கெள சலாவும் இரு பெண் குழந்தைகளுக்கு தாயாகி ,வாழும் காலத்தில் , ஆதவனை பற்றி , அவன் உணர்வுகளை பற்றி சிறிதும் எண்ணவில்லை ,தந்தையாரும் காலமானார் .

பதின் மூன்று வருடங்காளாகின.... ஒரு நாள் அதிகாலை , டெலிபோன் (தொல்லை பேசி ) சிணுங்கியது ,உடன் தங்களுக்கு அழைக்கும் படி .... சேதி இது தான் ............ அக்கா மகள் பெரியவளாகி விடாள் . ஆதவன் மனம் வேதனையால் துடித்தது. இவர்களுக்கு எந்நேரமும் காசு .....காசு என்று , நான் என்ன காசு காய்க்கும் மரமா ? கோடியில் வெட்டி அள்ளியா காசு வரும் . எதோ கடமைக்காக அனுப்பி வைத்தான். மறு மாத மடலில் அவனது ,முகம் தெரியா மருமகளின்
வித விதமான் போட்டோக்கள் (நிழல்படம் ) அன்றைய தபாலில் வந்திருந்தன . இன்னும் காலம் கடமையை செய்யா ,அவன் வந்து பதினாறு வருடங்கள்
ஆயின . வயதும் முப்பதியாறானது . இப்போதெலாம் சாராசரி வாழ்கை காலம் அறுபது என்பார்கள் .அதில் முப்பத்தி ஐந்தில் மாரடைப்பு வருவது ,விதி விலக்கு வாழ்கையின் மூன்றில் இரண்டு பகுதியை , இழந்து விட்டான் .அக்காவோ அம்மாவோ அவனை பற்றி சிந்திபதாயில்லை . உறவினர் கேட்டாலும் ,
கடன் பிரச்சனை என்று சமாளித்து விடுவான் .

காலம் கரைந்து கொண்டேயிருந்தது . கடற்கரை இருள் சூழ்ந்து கொண்டது .
தாயக சேதிகளை கேட்கும் அவன், மீண்டும் தாயகத்தில் , தனது அயல வீட்டு நண்பனை ....,இரண்டு மாதங்களுக்கு முன் மாவீரனான கேசவனை, நினைத்து கொண்டது .அவர்களின் குடும்பம் தற்போது வவனியாவில் .இருந்தனர்.

தன்வீடு நோக்கி செல்லும் அவனின் எண்ணத்தில் ,கேசவனின் அக்காவையும் குடும்பத்தினரையும் , இந்தியாவுக்கு வரும்படி தொலை பேசியில் அழைத்து சொல்லவேண்டும் ........,கேசவனின் அக்காவுக்கு வாழ்கை கொடுக்கவேண்டும் என்று சிந்தித்தவாறு வீட்டு தொலை பேசியை சுழற்றினான் .

காலம் இனிதாக கை கொடுக்க இன்று அவன் ஒரு வழி காட்டியாக ......................

Saturday, August 22, 2009

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை..

என் வாழ்வில் கிடைத்த தந்தை பற்றி ஒரு சிறு கதை...

நீதிராஜா பெற்ற பஞ்ச பாண்டவரிகளில் 5 வது பெண் குட்டி கடைக்குட்டி , நான் அன்புக்கு பஞ்சம் இல்லை . பெரிய பட்டண த்தில் கந்தோர் வேலை. மூன்று மாதமொருமுறை வருவார் ...இனிப்பு , முறுக்கு பழவகை எல்லாம் ...கொண்டு வருவார் ..என்னை தூங்கவைக்க பாட்டு பாடும் அப்பா .. நெஞ்சிலே தாலாட்டி நடிப்புடன் கதை சொல்லி .(.மூன்றாம்பிறையில் வந்தது போல் ..முந்தி ..ஒரு..காலத்திலேயே முருகமலை காட்டுiகுள்ளே தந்திரம் மிகுந்த நரி வாழ்ந்து வந்தது ...என்ன செய்திச்சு ...வா வா வாழ்ந்து வந்திச்சு..) என்று தொடரும் ..

.பயணம் போகும் போது அழுவேன் ..பயண காசு ..தருவார் ..இப்படி எல்லாம் வாழ்ந்தேன் . நானும் புலம் பெயர்ந்து , நானும் அம்மாவாகி , புலப்பெயர்வில் ..காலம் போக ..ஒரு தடவை கேட்டேன் அப்பா அந்த பாட்டு ...

தொலை பேசி யில் கை நடுங்க ..படித்து காட்டினர் ..நீங்க என் நாட்டுக்கு வாங்க என்றால் " அந்த குளிர் இந்த உடல் தாங்காது ...என்பார் ..கடைசியில் .

பென்சனியர் , அம்மவும் காலமாகி விட்டா. நாங்களும் போக முடியாத நிலை . எங்கள் வீட்டு சொக்கன் (தோட்ட வேலை செய்தவர் ) பெற்ற பிள்ளையுடன் இருந்து காலமாகி விட்டார். கடைசி வரை அப்பா என்னுடன் இருக்க கொடுத்து வைக்கவில்லை ..இன்று அதி காலை கனவு கண்டேன் . எனக்கு உறக்கம் இல்லை ...ஒரே பழைய கால சிந்தனையாகவே இருக்கிறது. அவர் விரும்பி பாடும் பாடல் இது தான் ..........

நான் பெற்ற நவமான செல்வம்,.... தேன் மொழி பேசும் சிங்கார ச்செல்வம் நீ...அன்பே இல்லா மானிடரால் ..... அன்னை யை இழந்தாய் இளவயதில் ...
பண்பே இல்லா பாதகர்கள் வாழுகின்ற பூமி இது .............நீ நான் பெற்ற செல்வம்.

Thursday, August 20, 2009

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ....

பட்டுச்சட்டையும் பழைய சாதமும் ..........

அந்த நகரத்தின் எல்லையில் ஊரில் அமைந்து இருந்தது ஒரு கன்னியர் மட விடுதி. அங்கு தான் நம்ம கதா நாயகியை சந்திச்சேன். பெயர் தனேஸ்வரி ....அநேகமாக் ஈஸ்வரி என்று தான் அழைக்க படுவாள். நகர கட்டிட மேற்பார்வையாளர் கனகாம்பரதுக்கும் மனைவி கோமதிக்கும் பத்து வருட தாம்பத்திய வாழ்வுக்கு பின் தவமிருந்து பெற்ற பிள்ளைதான்
ஈஸ்வரி ..ஆரம்பத்தில் அவள் சாதாரண குழந்தையாகவே இருந்தாள்.
காலம் தான் யாருக்காகவும் காத்திருப்பதில்லையே

சில நாளாக அவள் மந்த புத்தி உள்ளவளாக பாடசாலை போகமனம் அற்றவளாக எதையும் விளங்கி கொள்ளாத தோற்றம் உள்ளவளாக விளங்கினாள். அழைத்து சென்று காடாத வைத்தியரில்லை . . நீண்ட நாட்களின் பின்பு தந்த பிள்ளை பாக்கியமும், இப்படியா போகவேண்டும். கவலையில் ஓவசியர் கனகாம்பரமும் கண் மூடி விடார். மனைவி கோமதி அவர் மீதம் வைத்த சொத்தை கொண்டு காலம் ஓட்டினாள் . பின் வருவதை உணர்ந்தோ என்னவோ தன் வீட்டை மகள் பெயருக்கு உயில் எழுதி வைத்தாள். குமரிப்பருவத்தை யடைந்த ஈஸ்வரி சிறு பையன் களுடன் விளையாடுவாள். ஏனைய பருவ பெண் போல இருக்கமாடாள். உடல் வளர்ச்சி இருப்பினும் , புத்தி மந்த நிலையிலே இருந்தது

காலம் தான் பங்குக்கு ஓடிக்கொண்டே இருந்தது . கனகாம்பரம் செத்த பின் கோமதியின் உறவுகள் ஒட்டிக் கொண்டனர். தான் இல்லாத காலத்தில் தன் மகளை யார் கவனிப்பார் என்ற கவலையும் அவளை ஆட்கொண்டது . தன் இளைய தம்பி மாணிக்கத்தை மட்டும் நம்பி எல்லாக் காரியத்தையும் செய்வாள். ஆனால் அவன் மனைவி மரகதம் மிகவும் கொடியவள் . ஈஸ்வரியின் கஷ்ட காலம் தாய் கோமதி , தந்தை இறந்த மூணு வருடத்தில் தானும் போய் சேர்ந்து விடாள். இந்த தருணத்துக்காக காத்திருந்தவள் போல மரகதம் கணவனை நச்சரிக்க தொடங்கினாள். ஈஸ்வரியின் கையெழுத்துடன் வீட்டை தான் பெயருக்கு மாற்றும் படி , கணவன் மாணிக்கமும் அவள் சொல்கேட்டு மனைவி பெயருக்கு மாற்றினான். ஒரு நாள் காலை ஈஸ்வரிக்கு அழகான் பட்டுச்சட்டை போட்டு , காலையில் அவளுக்கு விரும்பிய பழைய சாதமும் கொடுத்து , பெருவிரலிலே மை பூசி பத்திரங்களிலே கை நாட்டு (கையெழுத்து ) பெற்று பின் ஊர்சுற்றி பார்க்கவென அழைத்து சென்றனர். அவளுக்கு தெரியாது அந்த இடம் தான் தான் வாழ் நாள் அஸ்தமிக்கும் இடம் என்று .

ஒரு கன்னியர் நடத்தும் விடுதிக்கு அழைத்து சென்று , இவளை பாரம் கொடுத்தனர். மாதாமாதம் பணம் அனுப்புவதாகவும். உறுதி கூறினார். இப்படியே ஒரு வருடம் நடந்தது முன்பு மாதம் ஒரு முறை வந்து பார்ப்பவர்கள் வருடத்து கொரு முறை வந்து ஈல்வரியை பார்த்தனர். பின் பு முற்றாகவே நின்று விட்டது. அந்த கன்னியர் மட நிர்வாகம்விசாரித்த போது அவர்கள் வீட்டை விற்று வேறு நாடுக்கு சென்று விட்டதாக ஊரார் பேசிக்கொண்டனர். அன்று தொட்டு அங்கு அவள் அனாதையானாள். ஆனால் கன்னியர் அவளை கவனமாக் கண்காணித்தனர்.

எனது ஆரம்ப வேலை யாக சிறுவர் பராமரிப்பு பள்ளியில் துணை ஆசிரியராக கிடைத்து . அங்கு சில காலம் விடுதியிலும் இருந்தேன். ஈஸ்வரியை முற்றாக உணரக் கிடைத்து. விசேட காலங்களில் ஒன்று கூடல் நடக்கும் அப்போது சிறார்கள் கலை நிகழ்ச்சி நடக்கும் . இறுதியில் இவளை போன்றவர்களின் நிகழ்வும் நடக்கும் இவளை போல உடல் நல குறை பாடு உள்ளவர்கள் பலர் இருந்தார்கள் அந்த கன்னியர் விடுதியில். . இவளது முறை வரும் போது எழுந்து நின்று "அமுதை பொழியும் நிலவே " என வானத்தை சுட்டு விரலால் காட்டி அபிநயம் செய்வாள் .

பெயரில் உள்ள தன ஈஸ்வரிக்கு ......தனம் சம்பத்து இல்லாவிடாலும் ..பாது காப்பான இல்லிடமாவது கிடைத்தது .......

.உலகம் இப்படித்தான்

Wednesday, August 19, 2009

(தொடர்ச்சி )...பட்டமும் பெறப்பட்ட வேளை

(தொடர்ச்சி )...........பட்டமும் பெறப்பட்ட வேளை .

இடி போல வந்த செய்தி எனை அதிர வைத்தது
இரக்கம் சிறிதும் இல்லாத வான் குண்டு
என் தாயை சிதைத்தது என்று

விம்மி வெடித்தேன் விழுந்து புரண்டேன்
காலனே உனக்கு கண் இல்லையா
அயல் உறவு ஊரோடு புலம் பெயர
என் தாயை ஏன் மண் மூடியது

மாறாது மாறாது மனதில் உள்ள பாரம்
மண் கொண்டு சென்றாலும்
மலர் தூவ நான் வருவேன் ........


.என் தாயின் இறப்பு நாள் அண்மிக்கிறது
தினமும் நினைக்கும் கவிதைகளில் ஒன்று

மலர் கொண்டு வருவேன் .........

மலர் கொண்டு வருவேன் ..........

புலம் பெயர் நாட்டிலே என் தாய்க்கு
ஒரு நினைவலை தாலாட்டு
பத்து மாதம் சுமந்து பெற்று பண்புமிகு
பாசமுடன் பேறு எடுத்த பெட்டை நான்
பாலுட்டி தாலாட்டி பண்புடன் நல்ல பழக்கமுடன்

பாங்காய் அணைத்து வளர்த்திடாள்
பள்ளி சென்று நானும்படிகையிலே
பக்குவமாய் பாடங்கள் பலதும்
சொல்லித்தந்த வழிகாட்டி
கடை குட்டி என் மீது கூடிய கரிசனம்
கண்ணன் மணி போல காத்து

கல்லூரிக்கு அனுப்பி விடுதி விட்டு
வீடு க்கு விடுமுறை வந்தால்
விசேடமாய் சாப்பாடு விதவிதமாய்
பல்கலைக்கு காலடி நான் வைத்த போது
கண் கான தேசம் கவனமடி கண்மணியே

கருத்தாக படித்து பட்டமும் பெறப்பட்ட போது ................

Tuesday, August 18, 2009

சில ஞாபகம் தாலாட்டும் ..........

சில ஞாபகம் தாலாட்டும் ..........

அம்மா கை பிடித்து நான் நடந்தது ஞாபகம்
அப்பா முதுகில் செய்த சவாரி  ஞாபகம்
படுக்கையில் சிறுநீர் கழித்த மறு நாள்
என்னையும் படுக்கை போர்வையும்
துவைத்து காலில் செல்ல அடி ஞாபகம்,
 ,அப்பம்மா,பாட்டி , விலக்கு பிடித்த ஞாபகம்.
அம்மாவின்  செருப்பும், குடையும் பிடித்து
முற்றத்து ,வெய்யிலில் உலா வந்த ஞாபகம்
அயல் வீட்டு தம்பியை காட்டி எனக்கும
ஒரு தம்பி வேணுமென்று அடம் பிடித்த ஞாபகம்
மூணு வயதிலே புத்தக பையை சுமந்து காட்டிய ஞாபகம்
பாலர் பள்ளிக்கு தாத்தாவுடன் சவாரி சென்ற ஞாபகம்
முற்றத்து மாமரத்தில் பழமும் காயும் சுவைத்த ஞாபகம்.
கோமதியின் (பசு) பாலுக்காய் , இரவில் விழித்த ஞாபகம்
கோவில் விழாவில் , அப்பா மடியில் கச்சான் ( நிலக்கடலை )
கடலை கொறித்து தின்ற ஞாபகம் .
பக்கத்து வீடு பாமாவுடன் டூ ........விட்டு நான் வென்ற ஞாபகம்.
தொட்டித் தண்ணீரில் நீச்சல் போட்ட ஞாபகம் .
தூங்கும்  பாப்பாவை விளையாட கூப்பிட்ட  ஞாபகம் ...
வளர்ந்ததும் அவனுடன் சண்டை போட்ட ஞாபகம் .
அவன் புளியங்காய்க்கு எறிந்த கல் என் தலையில் பட
என்னை கட்டி அணைத்து , கண்ணீர் துடைத்து
"சொல்லாதே" என சத்தியம் வாங்கிய ஞாபகம் .........

இத்தனை ஞாபகங்களை என் தாயகத்தில்
விட்டு வந்த ஞாபகமாய் .......என் செல்ல மகள்
என் பிறந்த நாளுக்கு எழுதிய பதிவுகளாய் .....

..உங்களுடன் நான். .

ஒரே ஒரு கணம் ..........

ஒரே ஒரு கணம் ..........

நகரத்தின் ஒதுக்கு புரமான் தொரு கிராமத்தில் , ஆச்சி யம்மாள் தன் நான்கு குழந்தைகளுடன் வாழ்ந்து வந்தாள். அவளது நான்கு பிள்ளைகளில் கோவாலு தான் ஆண் மகன். கணவன் ஒரு பிரச்சினை காரணமாக் ஊருக்கு வருவதே இல்லை. கிட்ட தட்ட கைம்பெண் நிலையிலே இருந்தாள் ஆச்சியம்மாள்.

காலம் கடந்து போக பிள்ளைகளும் வளர்ந்து விட்டனர். மூத்தவள் காயத்திரி ...மணப்பருவம் எய்தினாள் . ஆச்சியம்மாள் வாயை கட்டி வயிற்றைகட்டி சேமித்த பணத்தை எண்ணி சரிபார்த்து விட்டு . ஒரு கலியாண தரகரை பார்க்க போனாள். மறுவாரமே கலியாணமும் சரி வந்தது ........மாபிள்ளை ...பெண் பார்த்தபின் அடிக்கடி வரதொடங்கினார். வரும் கார்த்திகை மாதம் கலியாணம் என நிச்சயமாகியது . மணப் பெண்ணும் மாப்பிள்ளையும் சந்தோஷமாகவே இருந்தனர். இவர்கள் ஒரு சிறு காணியை குத்தகைக்கு எடுத்து அதில் வரும் விலை பொருட்களை விபதன் மூலம் கிடைக்கும் வருமானத்தில் ஐந்து ஜீவன்களும் காலத்தை ஓட்டினார்கள்.

கோவாலு ஆண் மகன் தான் அதிக பிரயாசை எடுத்து கொள்வான். சகோதரிகளும் களை பிடுங்குதல் நீர் இறைக்க் உதவுதல் என்று கை கொடுப்பார்கள். திருமணம் முடித்து எண்ணி எட்டாம் மாதமுடிவில் , மணப்பெண் காயத்திரி அழகான் ஆண் குழந்தையை பெற்று எடுத்தாள். டாக்டார் கூற்று படி குழந்தை நிறைமாதம் எனவே குறிப்பிடார் . காலம் தன் வேலையை செய்ய ....ஒரு வருடத்தால் மீண்டும் கருத்தரித்தாள். மாபிள்ளை தன் தாய் வீட்டுக்கு போகிறவன் அங்கேய சில நாட்கள் தங்கி விடுவான் . இவள் காயத்திரியும் போய் கூபிடாள் இவளுக்காக வருவான். இப்படியாக காலம் செல்ல செல்ல மாபிள்ளை சில சமயம் சீறி சினத்து விழுவான். தோட்டத்தில் உள்ளதை விற்க சென்றால் காசு கணக்கும் குறைவாகவே காட்டுவான் . காயத்திரியும் எதுவுமே கேட்பதில்லை. இதனால் கோவாலு மிகவும் மனமுடைந்து போனான் . தோட்டத்தை கவனிப்பதுமில்லை .நன்றாக் குடிக்க தொடங்கினான். சாதாரண நிலையிலும் அமைதி அற்றவனாகவே காணப்பட்டான். .

ஒரு நாள் மாப்பிள்ளை தாய் வீடு போனவன் வரவே இல்லை. ஊரார் பலவாறு கதைக்க தொடங்கினர். வேறு பெண்ணுடன் தொடர்பு என்றும் பேசிக்கொண்டனர். கோவாலு ,வருவான் மாபிள்ளை என பார்த்து கொண்டு இருந்தவன் இரு வாரங்களாகியும் வரவேயில்லை..........அவனை பார்த்து வரும்படி ஆச்சியம்மாள் கோவாலுவை அனுப்பினான். அங்கு மாபிள்ளை ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான்.

விறகு வெட்டும் வேலைக்கு போயிருப்பான் போலும் . அருகில் கிடந்த கோடரியை எடுத்து "சதக் " என ஒரே வெட்டு . கழுத்தில் பட்ட வெட்டினால் மாப்பிள்ளை துடி துடித்து இறந்தான். அன்று மாலையிலே அவன் கோவாலு பொலிஸாரால் கைது செய்ய படான் . வழக்கும் நடந்தது தீர்ப்பாகும் நாள் , ஊரிலே மிகத்திறமையான் சட்ட தரணியை கொண்டு வழக்கு பேசினார்கள் முடிவு .................அவன் ஒரு மன நோயாளிஎன்றும் . அந்த நாள் பூரணை நாள் என்பதால் அதன் தாக்கம் அதிகமாய் இருக்குமென்றும் ...நோய் காரணமாகவும் அதிகம் உணர்ச்சி வசபாட்டதாலும்அவன் அந்த கொலையை செய்தான் என்று தீர்ப்பாகியது .........

.சகோதரி விதவை ஆனாள். இரு குழந்தைகளுக்கு தாயானாள். கணவனை..என்ன இருந்தாலும் சகோதரன், தன் வாழ்வை அழித்து விட்டான் என்று கோப படாள் . கோவாலுவின் ஆத்திரம் ஒரு உயிரை காவு கொண்டது .....ஒரு தாயை விதவை ஆக்கியது ...........அவனுக்கு ஆயுள் தண்டனை விதிக்க பட்டது ...........

நாட்டின் சில விழா காலத்தில் கைதிகளை மன்னிப்பு பெற்று விடுதலையாவார்கள். . அப்படியான ஒரு காலத்தில் கோவாலுவும் விடுதலையானான். சில நாட்கள் ஊரார் கண்களுக்கு தென்படாது இருந்தான் அந்த ஊர் மக்களும் ஆச்சியமாள் குடும்பத்துடன் உறவு வைக்க , தயங்கினர். அந்த மாதத்தின் பெளர்ணமி இரவொன்றில் .....கோவாலு தூங்கி இறந்து கிடந்தான். ஆத்திரமும் அவசரமும் அவன் கண்களை குருடாக்கி அவன் சகோதாரி வாழ்வையும் பறித்து ...........தன்னையும் மாய்த்து கொண்டான்.


அவன் ஒரே ஒரு கணம் சித்தித்து இருந்தால் ...................

Monday, August 17, 2009

போதை தந்த பாடம் ...

எனது நீண்ட நாள் மனப்பதிவிலிருந்து ஒரு சிறு நிகழ்வு

அமைதி யான அந்த கிராமத்திலே , மார்கழி மாதத்தில் ஒரு நாள் .. பாலன் பிறப்புக்கு முதல் நாள் மக்கள் பெருநாள் பொருட்கள் வாங்குவதற்காக ,சிறு நகரத்தில் கூடி இருந்தார்கள் . பாவிலு பெரிய பட்டணத்தில் இருந்து ..விடுமுறைக்காக ஊருக்கு வந்திருந்தான் .அவனும் னும் பொருட்கள் வாங்கிய பின் கள்ளுக்கடை பக்கம் போய்.... ஆசை மிகுதியில் ..நன்றாக "குடித்து " வீடு திரும்பும் வழியில் ... நேரம் செல்ல ... செல்ல மப்பு கூடி விட்டது ..

பாடத்தொடங்கினான் ...நாளை முதல் குடிக்க மாட்டேன் ...சத்தியமடி .
..தங்கம் ...என்று . வீதியில் போவோர் வருவோர் எல்லாரும் சிரிக்க தொடங்கிவிடார்கள். .அவனது துவீ வண்டி(சைக்கிள்) வேறு ..இடம் வலமாக ஆட்டம் போட தொடங்கி விட்டது ....பொது ஜனங்களுக்கும் இடை யுராக இருந்தான்.

இப்படியாக போய்கொண்டு இருக்கையில் ... வழியில் ஒரு மது வரி இலாகா இருந்தது .. சட்ட விரோத கள்ளு இறக்குதல் ,...வரிபணம் கட்டாமை ,...போன்ற தவறுகளுக்கு , பணம் அறவிடுவார்கள் . சிலரை மறியலிலும் வைப்பார்கள். ..பாவிலுவை கண்டதும் ..துரத்த ஆரம்பித்தார்கள்.

அவன் சைகிளையும் விட்டு விட்டு ..ஓடத்தொடங்கினான் . எட்டி பிடித்தபோது... சாரமும் (லுங்கி) கழண்டு விழ... உள் ஆடையுடன் ஒரே ஓட்டமாக ....எங்கள்... வீடுக்கு அருகாமையில் வந்து,".

அக்கா ............. நான் முடியப்போகிறேன் ....என்று ... பயம் காரணமாக ...எங்கள் வீடுவீட்டு மாட்டுக்கொட்டகையில் புகுந்து கொண்டான் .பின் அவர்கள் சென்று விட்டார்கள்.துரத்தீ வந்தவர்கள்....


. வெறி(போதை) தெளிந்ததும் அவனுக்கு வெட்கமாகி விட்டது .. மனைவி வந்து கூட்டி சென்றாள் . அந்த வெட்கத்தில் போனவர் தான்.. பின் அந்த கிராமத்துக்கு வரவே இல்லை .பின்பு மனைவி ... பிள்ளைகளை ..பெரிய பட்டணத்துக்கு அழைத்துவிட்டார்.

குடியும் விட்டு சில கடைகளுக்கு முதலாளி என்று கேள்விப்படேன். ஒரு நிகழ்வு அவன் வாழ்கை பாதையையே திசை மாற்றி விட்டது .

...இது எப்படி இருக்கு ....

Saturday, August 15, 2009

"போத்தலை தொடமாடேன் ".......

"போத்தலை தொடமாடேன் "........

அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றாள்


ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும்.
இரவில் சிந்தாமல் குடிப்பாள் என்ற ஆதங்கத்தில் மதியும் அசட்டையாய் இருந்தாள். இன்று ராகவனுக்கு ஒரு நல்ல அனுபவம்

.மாமியார் காய்ச்சல் காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாததால் வேலைக்கு விடுமுறை (லீவு) எடுத்து இருந்தான் . மதியும் வருட இறுதி என்பதால் விடுமுறை எடுக்க முடியவில்லை. இருவரும்
கலந்து பேசி ராகவன இன்று வீடில் நின்றான..மாலை ஆகியது

மதி யின் வரவை மூவரும் எதிபார்த்தார்கள். ராகவன் நால்வருக்குமாக தேநீர்கலந்தான். மதியோ ...நிலாக்குட்டி கோப்பையில் தேநீர் பருகுவதை ...அதிசயமாக பார்த்தாள்.

அவளுக்கு புரியவில்லை . ராகவன் சொல்லும் வரை.

ஆதிர்ச்சி வைத்தியம் சில சமயம் தேவை படுகிறது ...............

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

நினைத்துப்பார்க்கிறேன் ....(..கவிதை )

நினைத்துப்பார்க்கிறேன் ..........

தாயின் கர்ப்பத்தில்
அந்த பத்துமாத பந்தம்
கவலையற்று ,இந்த
உலகம் மறந்து
நானும் அம்மாவுமாய்
உண்பதும் உறங்குவதுமாய்
பத்தாம் மாத முடிவில் "குவா"
என அழுகையும் திகைப்புமாய் ,
குதித்தபோது , எண்ணவில்லை ,
உலகம் இவ்வளவு பெரியது என்று ,
திகைத்து விடேன் நானும் தாயான போது

Friday, August 14, 2009

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்


அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது .

ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளநீர் தாகம் தீர்க்க , குளித்து விட்டு மத்திய சாப்பாடை முடித்தார்கள். ராகவன் அப்பாவுக்கென கொண்டு வந்த இளநீல சேர்ட் , அம்மாவுக்கு சாரி , ஒரு பை நியைய சொக்கிலேட்ஸ் என்று அன்பளிப்புகளை கொடுத்தான் .சொக்கனுக்கென்று மறக்காமல் வாங்கிய நீல சாரத்தை(லுங்கி ) அவன் பிள்ளைகள் ,வரும்போது கொடுக்கும் படி தாயிடம் கொடுத்தான் . ராகவனும் அப்பாவின் சாய்மனையில் இருந்தவாறே பதினாலு வருட கதைகளை சொல்லியவாறே அயர்ந்து விட்டான்

ரம்யா பிள்ளைகளுடன் பின் வளவில் ஆட்குட்டி பிடித்து ,விளையாட்டு காட்டி கொண்டு இருந்தாள் .ராமசாமியார் பின்னும் முன்னும் வந்து ஒன்றே ஒன்று தரமாடீரா என்று நச்சரித்து கொண்டு இருந்தார் " சும்மாபோங்கப்பா" பிள்ளைகள் படுத்த பின் தாரேன் என்று போக்கு காட்டினாள் . இரவும் வந்தது , சுடச்சுட அவித்த குழல் பிட்டும் பலாப் பழாமும் பேரப்பிள்ளைகள் சாப்பிடார்கள் .

இரவு ஒன்பது மணியாகியது . ராமசாமியார் குசினிக்குள் வந்து நான் கேட்டது தர மாடீரா என்றதும் சாபிட்டு முடியுங்கோ படுக்க முதல் தாரன் என்றாள். அவர் சாபிட்டதும் பேரபிள்ளைகள் தூங்கி விட்டார்கள் . ராகவனும் ரம்யாவும் வேப்பமரத்தின் கீழ் நிலவில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ராமசாமியாரின் ஏக்க பார்வை தீரவே இல்லை. ஒருவாறு பத்து மணியளவில் ஜானகியம்மாள் வந்து அவரிடம் இரண்டு சொக்கலேருக்ளை நீடினாள் . சக்கரை வருத்த காரன் வைச்சு வைச்சு சாபிடுங்கோ என்றாள். அது கிடைத்த சந்தோஷத்தில் அவர் ஜானகியை கட்டி முத்தம் கொடுக்க சீ....... போங்கோ என்று அவள் சினுக்க .....திடுக்கிட்டு எழுந்தாள் ..

ராமசாமி படத்தில் சிரித்து கொண்டிருந்தார் . அவளுக்கு எண்ணமெலாம் தாயகம் நோக்கி சென்றது அவர் இறந்தது , தான் மகனிடம் வந்தது , எல்லோரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் போக நான்கு சுவர் நடுவே இருப்ப்து என்று

..........கழிவறை சென்று முகம் கழுவி காலை வழிபாடு செய்தபின் , இன்று வார விடுமுறையில் ராகவனிடம் அப்பாவின் கல்லறைக்கு போய் தரிசிக்க வேண்டும் என கேட்கவேண்டும் என நினைத்தவாறு .... காலண்டரை பார்த்தாள் .

கார்த்திகை ,இரண்டாம் நாள் ................., வந்து நினைவு படுத்தி போயிருக்கிறார் . இளமையில் கிறிஸ்தவ கலூரியில் படித்ததால் அன்டன் ராம சாமி என் பெயார் மாற்றம் செய்து தனது உடலை சேமக்காலையில் ல் அடக்கம் செய்யவேண்டும் என்று இறுதி ஆசையாக கேட்டு இருந்தார் என்பது நான் எழுதாத விடயம் .

Wednesday, August 12, 2009

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) ...

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) .......

நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர்.கார்த்திகையும் வந்தது . மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் . தலைநகரம் சென்று
கடவுசசீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன், நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பினர் , இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது . அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள். சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான். ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் . வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து, மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான். ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது நித்திலாவின் பெற்றார் நிம்மதியாக இருந்தனர்.

ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார். நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும், தாங்கள் கொழும்பில் பதிவு திருமணம் செய்ததென்றும், மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன்.....பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ....முறையோ, வெளிக்கிடு வீட்டை விட்டு
என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன்வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் .

வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள் வரவே இல்லை. ... கால ஓட்டத்தில் அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல் தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்துவிட்டாள் ..

கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் .
..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் அவன் வாழும் ஆலயமாக, தன் மனதுக்கு துரோகம் செய்யாத, புனிதவதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்

( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)


வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் .....

மாமன் மகன் செய்தது சரியா?
நித்திலா செய்தது சரியா ?
ஆதவன் செய்தது சரியா ?

நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?







Tuesday, August 11, 2009

அவளுக்கு ஒரு "வாரிசு " .......

அவளுக்கு ஒரு "வாரிசு " ..........

அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல்ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவைகளின் ஆர்ப்பரிப்புகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நகரத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது .

செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் .
ஏன் எனில் இவள் செல்லம்மா மூத்தவள் பிறவி ஊமை . இரண்டாவது மகளின் கணவர் தலை நகரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். செல்லம்மா முழு வேலையும் செய்யும் . தந்தை ஆசை பிள்ளையாருக்கு மூத்தவள் இருக்க இரண்டாவது மகளை கட்டி கொடுக்க விருப்பமில்லை இருபினும் அவளுக்கும் வயது வந்து விட்டது . தங்கையின் கணவர் பயணத்தால் வரும் பொது கிணற்றில் தண்ணீர் அள்ளி கொண்டு இருந்தாலும் ஓடி வந்து தங்கைஇடம் மீசையை முறுக்கி காட்டி ,கையில் பயணப்பையை காட்டி சேதி சொல்வாள் தங்கைக்கு .

கால ஓட்டத்தில் அவர்களது தோட்ட வேலைக்கு வரும் செல்லக்கண்டு இவளின் உற்ற நண்பனானான் . ஊராரும் பேசிக்கொண்டனர்.அவனும் இவளுடன் சைகையிலே ஆயிரம் கதை பேசிக்கொள்வர்.இப்படியாக் தொடர்ந்த நட்பு ஒரு நாள் எல்லை மீறி சென்று விட்டது.சில நாட்களாக செல்ல கண்டு தோட்டத்துக்கு வருவதும் நின்றது . அவன் தலை நகரம் போய் விடதாக சொன்னார்கள். ஒருநாள் அவள் காலை வேளை...வாந்தி எடுக்கவே தாய் தங்கம்மா திகைத்து விடாள். வற்புறுத்தி கேட்ட பின் அதற்கு காரணம் செல்லக்கண்டு என்று சொனாள்.

காலம் தான் யாருக்காகவும் காத்திருபதிலையே . பத்தாம் மாதம் ஆண் குழந்தையை பெற்று எடுததாள். ஊராரின் வசை பேச்சுகள் தாங்காமல்..
ஒருவர் பின் ஒருவராக ஆசைப்பிள்ளையும் ..தங்கம்மாவும் போய் சேர்ந்து விட்டனர். தங்கையும் கணவருடன் தலை நகரம் சென்று விடாள். செல்லக்கண்டு ஊருக்கு வரவே இல்லை. தலை நகர் சென்ற ஊரவர்கள் சிலர் அவனை ஒரு ஆட்டோ சாரதியாக கண்டனர். சிறுவன் கனேசுவும் , சாதாரணமாய் பள்ளி சென்றான். சில கர்வம் பிடித்த சிறுவர்கள் அவனை எள்ளி நகையாடினர். இதனால் பத்தாம் வகுப்புடன் பாடசாலையை விடான்.


பின்ப வீட்டில் வரும் காய் கறி களை விற்க தொடங்கியவன் , சற்று பணம் சேரவே , தாய்க்கு தேவையானவைகளை வாங்கி கொடுப்பான். செல்லம்மாவும் சிக்கனமாய் சேமித்து , ஒரு பெரிய தொகையை ,வங்கியில் மரக்கறி கடை வைத்திருக்கும் ஊர் பெரியவர் , இவனின் பண்புகளை கண்டு , தன்னுடன் சேர்த்து கொண்டார். இடையில் தன் தந்தையை பற்றி கேட்க மனம் வந்தாலும் தாயின் நிலை கண்டு , மனதுக்குள் வரும் கேள்வியை , அடக்கி கொள்வான்.

முற்றத்தை கூட்டி முடித்தவள் ,காலை உணவை முடித்து மதிய உணவுக்காக தயாரானாள். வாசலில் தபாறகாரனின் மணிச்சத்தம் கேட்க , சென்று பார்த்தவளுக்கு அதர்ச்சி ........ஒரு தந்தி அவள் பெயருக்கு வந்து இருந்தது . செல்லக்கண்டு விபத்து ஒன்றில் காலமாகி விடான் என்று அந்த ஊர் வாசி ஒருவர் அறிவித்து இருந்தார். இருந்த போதும் தன்னை கவனிக்க வராதவன் . இறந்தென்ன இருந்தென்ன . கிணரடிக்கு சென்றவள் தலையில் நான்கு வாளி நீரை அள்ளிக்கொட்டியவள் , மாலையில் வர இருக்கும் தன் வாரிசுக்காக,மகனுக்காக சமைக்க தொடங்கினா. இனி எல்லாமுமே அவன் தான்.

தன் தள்ளாத காலத்திலும் , தன்னை தாங்குவான் என்ற மன உறுதியுடன் , விரைவாக செயல் படாள். தான் பிறவி ஊமையாய் இருந்தாலும் ...தன்னை திருமணம் செய்ய யாரும் முன் வராத போதும்....தனக்கு கிடைத்த வாரிசு .....தன்னை காப்பான் என்ற நிம்மதியில் அவன் வரும் பாதை நோக்கி ,பஸ் வண்டி வரும் வேளை நோக்கி ....

காத்து கொண்டிருக்கிறாள். .

Sunday, August 2, 2009

இதயத்தில் ஆறாத ரணம்.

இதயத்தில் ஆறாத ரணம்.


அந்த வானுயர்ந்த மாடிக்கட்டத்தில் வசிக்கும் ராஜி ,ஆறு மணி அலாரச்சதம் கேட்டு எழுந்து தேநீருக்காக கேத்தலை தட்டிவிடு , கணவன் ராகுலனை வேலைக்கு அனுப்பும் ஆயத்தங்களை தொடங்கினான். அவனும் பாத்ரூமில் முகம் கழுவும் சத்தம் கேட்டது. தேநீரை பருகியவாறே அவனும் ஆயத்தமானான் .இவள் காலை உணவுக்காக இரண்டு சான்விச் ,மதியம் ஒரு பிடி சாதம் மரக்கறியுடன்,ஏதும் பழவகை, போத்தலில் தண்ணீர் என்று அவனை அனுப்பி வைத்தாள். பின் தான் தேனிரை முடித்தவாறு கண்மணிகளை எழுப்பி பாடசாலைக்கு தயார்படுத்தி நடந்து சென்று பாடசாலை வாயிலில் விட்டு வந்து வீட்டை ஒழுங்கு படுத்தியவாறே வானொலியை தட்டி விட்டாள். .


அதில்"நித்தம் நித்தம் மாறு கின்ற எத்தனயோ ?
நெஞ்சில் நினைத்திலே நடந்தது தான் எத்தனையோ ?
பாடல் அவளை தாயக நினைவுகளிற்குஅழைத்து சென்றது .

அந்த சிறிய கிராமத்திலே கெலிகளும்,கிபீரும் ஆரவாரம் செய்ய அரக்கர்கள் தேடி அழித்து கொண்டு இருந்த காலம்.ராஜியும் தன் இரு குழந்தைகளுடன் மாமா மாமி மைத்துனி ஆகியோருடன் அவசரமாக எடுத்த பால்மா பிஸ்கற் முக்கிய ஒரு சில பொருட்களுடன் அயல் கிராமத்தில் இடம் பெயர்ந்தாள். மேலும் மேலும் நெருக்கடி வரவே மேலும் இடம் பெயர்ந்து ,ஒரு வள்ளத்தில் பயணம் செய்து , ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தாள் அங்கும் சில மாதங்கள் கழிந்ததும் ,ஒருவாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து,ஒரு லாரியில் அடைபட்டு , வவனியா வந்து சேர்ந்தாள். இத்தனைக்கும் ராகுலன் அந்நிய தேசத்தில்,ஏங்கியபட,காத்திருந்தான்.அவளும் குழந்தைகளும் பட்ட துயரம் சொல்ல முடியாது. வங்கியில் பணமும் எடுக்க முடியாமல் பட்ட துயரம் கொஞ்சமல்ல. ஒருவாறு தலைநகரில் ஒரு தூரத்து உறவினருக்கு காசு அனுப்பி அவர்களை எடுப்பித்தான்.

இடமும் புதிது ,பாசையும் புதிது நுளம்புக்கடி என்பவற்றுடன் போராடி வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் .......

தலை நகரில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் காலத்தில்,ஒரு நாள் அவளையும் குழந்தைகளையும் முகவர் மூலம் எடுக்க இருப்பதாக சொன்னான்.
ஊரவரின் வக்கனை கதைகளுக்கு மத்தியில் வாழ்வதை விடவும்,அப்பாவிடம்
போய் சேரும் ஆர்வத்தில் நாளை எண்ணி காத்திருந்தார்கள். நாளும் வந்தது,
முகவருடன் விமான நிலையம் சென்ற போது ,அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்பபட்டு விட்டார்கள். ராஜிக்கு ஏமாற்றமும் மேலும் தலையிடியும் ஆகியது, மீண்டும் முகவர் காசை தர மறுப்பதாகவும் அவளை தன் தாய் தந்தையுடன் குழந்தைகளை விட்டு வர சொல்லி ராகுலன் சொல்லவே ராஜி மறுத்து விட்டாள்.

பல வித மனப்போராடங்களுக்கு மத்தியில்,பயணத்தை தொடர்ந்தாள். விமான நிலையங்களில் முகவரின் மனைவியாக நாடகமாடிய போது அவனின் அருகாமைமுள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. ஒருவாறு கணவனிடம் வந்து ேர்ந்து வசதிகள் குறைந்த நில கீழ் குடியிருப்பில் அவள் வாழ்க்கை தொடங்கியது.

கடின உழைப்பாளி ராகுலனும் இரண்டு மூன்று வேலை செய்து,தன் குடும்ப செலவுடன் குழந்தைகள்,நாட்டில் பெற்றோர் சகோதரி வாழ்கையும் பார்த்து கொண்டான்.காலங்கள் உருண்டோடி,ராகுலனின் சகோதரிக்கும் திருமணம் ஆகியது.

ராஜியின் ஆறு வயது மகள் முத்து முத்தாக கடிதம் மேல்,கடிதம் எழுதுவாள்.புது மாமா வந்தபின் அத்தை நன்றாக கவனிப்பதில்லை என்றும்,நன்றாக குடிப்பார் என்றும் ,தம்பி நீலன் "அம்மா,அப்பா டண்டா (கனடா) போய் "என்று காணும் விமானம் எல்லாம் பார்த்து சொல்கிறான் என்றும், நீலு அப்பப்பாவிடம் பாடம் கேட்டு படிப்பதாகவும் எழுதுவாள்.


கடிதம் கண்டால் அன்று முழுவதும் கண்ணீரோடு இருப்பாள். காலபோக்கில்
ராஜி தன் அகதி நிலை அங்கீகரிக்க அந்நாட்டு எம் பீ.உதவியுடன் குழந்தைகள் இனைவுக்காக போராடி பத்து மாதங்களில் வெற்றியும் பெற்றாள் எண்ணி பதினோராம் மாதம் தாய் நாடு சென்ற சித்தப்பாவுடன் ஆறு வயது நீலுவும்
மூன்று வயது நீலனும் வந்து சேர்ந்தார்கள்.

ராகுலன் குடும்பத்துக்கு மகிழ்ச்சி பிடிபட வில்லை. குழந்தைகள் , நன்றாக வளர்ந்தார்கள்.

இன்றும் நீலு கேட்பாள்," அம்மா ஏன் எங்களை விட்டு வந்தாய"
ராஜி பட்ட துயர் அவளுக்கு எங்கே விளங்க போகிறது,

அந்த பிஞ்சு மனத்தின் ஆறாத ஆழமான ரணம் இன்றும் நினைவாக உள்ளது. ஒரு போதும் குழந்தைகள் சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்து தாய்ப்பாசத்துக்கு ஏங்க கூடாது .


அது இதயத்தில் ஆழமான ரணம்.

Saturday, August 1, 2009

மனிதன் ....இறைவன் ஆகலாம். .

மனிதன்.....மிருகமாகலாம். அவன் மனிதன் ஆகலாம். அந்த மனிதன் இறைவன் ஆகலாம்.

நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே ஒரு ஒதுக்கு புறமான சிறு கிராமம் காலத்தின் கோலம்,அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். ஒரு விறகு வெட்டியும் அவன் குடும்பத்தினரும் மட்டும் அங்கு வாழ்ந்தார்கள். கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போக்கிடமும் இல்லை.

அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை,கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை அவன் எங்கும் போகவில்லை .

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல அஞ்சி ,பயத்துடன் இருந்தான் . விடிய எழும்பி பார்த்த பொது சில சப்பாத்து கால் தடயங்கள் தெரிந்தன .மறுநாள் வழக்கம் போல அவன் விறகு வெட்ட சென்றான்.

மனைவியும் ,தன் வீட்டு வேளையில் இருந்தாள். சிறுசுகள் இரண்டில்,ஒன்று ஏணையில் ( தொட்டிலில்) மற்றையது முற்றத்து மணலில் விளையாடிக்கொண்டு இருந்தது. மீண்டும் நாய் குரை்கவே அவள் எட்டி பார்த்தாள், இரு படை வீரர், நின்றனர். தண்ணீர் கேட்டனர் அவள உள் செல்லவே தொடர்ந்து சென்று , வீட்டில் யாரும் இல்லையா ? கணவன் எங்கே என்று கேட்டு ,வீடின் அறைக்கதவை திறக்க சொனார்கள் . அவள் திறந்ததும் , ஒருவன் அவள் வாயை துணியால் அடைத்தான் மற்றவன் அவளை சீரழித்தான், இப்படியே அவர்கள் வெறி தீர்ந்தும் ,யாருக்கும் சொல்ல கூடாதென எச்சரித்து சென்று விட்டனர்

சற்று நேரத்தில் விறகு வெட்டி வந்த போது சில அடையாளங்களை கண்டு ,மனைவியை கூப்பிடான் ,அவள் அழுதுகொண்டு ,கலைந்த தலையும் ,கிழிந்த ஆடைகளுடனும் விசும்பிக்கொண்டு இருந்தாள் ,அவனுக்கு விளங்கி விட்டது .அவளை தர தரவென்று இழுத்து சென்று வீட்டின் எல்லையிலுள்ள கிணற்றில்,நீரை அள்ளி கொட்டினான் .
நடந்ததை மறந்துவிடு,அரக்கர்கள் ஆட்சி செய்தால்,மனிதம் வாழாது என்று கூறி,வீட்டு சாமி படத்தின் குங்குமத்தை நெற்றியில் இட்டான் .இந்த கடவுள் கூட காப்பாற்ற வில்லையே என்று வீடின் முகட்டை வெறித்த படியே இருந்தான் .

பின்பு அவன் வைரவ சாமிக்கு பூசை செய்வதே இல்லை .அவள் யோசித்தாள்.உயிரை மாய்த்து கொள்ள நினைத்தாள். தான் அவமானத்தால் இறந்தால் பிஞ்சுகள் ,ஏங்கி விடுவார்கள் ,அவன் நடைபிணமாகி விடுவான் பிள்ளைகளை வளர்க்க கஷ்டபடுவான் . ஒரு தாய் வளர்ப்பது போல வருமா?அவனை எப்படி தேற்றுவது என்று எண்ணியவாறு கண்னயர்ந்தவள், தூரத்தே சேவலின் கூவல் கேட்டு ,இயற்கையுடன் போராட,அன்றாட கடமைகள் செய்ய புறப்படாள் . ...

பிஞ்சுகளுக்கும் அவனுக்கும்,காலை தேநீர் வைக்க ....

அவன் தான் இறைவன்(கடவுள் )அவளுக்கு


அவள் ?.......... .