Followers

Thursday, January 28, 2010

கேட்டு ரசித்தவை......

கேட்டு ரசித்தவை.....

மகன் : அம்மா ...எனக்கு ஒரு விண்ணப்பப் படிவம் நிரப்ப வேணும்......
.             உதவி      செய்யுங்கோ.
அம்மா: ...கொஞ்சம் பொறு அப்பா வார நேரம் ..அவரிடம் கேளு..
மகன்:     (அப்பா வாசல் படி ஏறு வதை கண்டதும்).....அப்பா உங்களிடம் ஒரு கேள்வி.....
அப்பா : கொஞ்சம் பொறு என் சொக்க்சை கழற்று கிறேன். .ராணி ......
              ரீ கொண்டு வாரும்.என்னடா கேட்ட நீ ?
மகன் ...அப்பா .sex............என்றால் என்னப்பா?
அப்பா:.....வந்து... :o வந்து .....(முழிக்கிறார்)
மகன் .........female ? male ? எதை போடுறது ...
அப்பா.......நீ பையன் . male என்று போடு........
                ( அப்ப்பாடா..நான் எதோ நினைச்சேன் )

மகன்  ......mother tongue .......என்றால் என்னப்பா.....
அப்பா:      அது உங்க அம்மா நாக்குடா.....ரொம்ப நீளம் என்று போடு....

*குறிப்பு .. mother tongue ....என்றால் தாய் மொழி .....ஹா .......ஹா.....

************************************************************

அப்பா : தம்பி காலாட்டி சாபிட்டு கொண்டிராமல் போய் படிடா.......
மகன்: ...படிச்சு என்னப்பா செய்கிறது...........
அப்பா: ..படிச்சு நல்ல உத்தியோகம் எடுத்து ? உழைத்து வைக்கலாம்.
               சேமிக்கலாம்.
மகன்:    சேமித்து     வைத்து எனப்பா செய்யலாம் ?
அப்பா:    பிற்காலத்தில் காலாடிக்கொண்டு இருந்து சாப்பிடலாம்....
மகன்:....அதை தானே அப்பா இப்போது செய்கிறேன்........
அப்பா:......... :mellow: :mellow: ...

Wednesday, January 27, 2010

வேண்டாம் ....கண்ணா

வேண்டாம் ....கண்ணா

பசும் பாலும் சுவைக்க் வில்லை
பாட்டியின் மடியும் இனிக்க வில்லை....
கண்டதும் தாவி வருகிறான்.
 உண்டாலும் பசியடங்கவில்லை
தாகமும் தவிப்பும் தீரவில்லை
வேம்பின் எண்ணெயும் கசக்கவில்லை
ஊர் அடங்கி உறங்க சென்றதும்
மெல்ல நுழைந்து இறுக்கி அணைத்து
சேலை விலக்கி நுழைந்து விடுவான்
" அம்மா பாப்பா (பால்) ..........என்று
அவள்  இரண்டு வயது கடைக்குட்டி ......

Wednesday, January 20, 2010

சித்திரம் பேசுதடி ........

சித்திரம்  பேசுதடி ........

வாழ்வின் எண்ணங்கள்  ..ஆசைகள் கரை புரண்டோடும் இளம் பருவம். நவீன கால தொழிநுட்ப வளர்ச்சியில் சில  வருடங்களுக்கு மேலாக் மிகவும் கொடிகட்டி ...வலம் வந்து கொண்டிருப்பது தான் இந்த கணணி யுகம் ...இப்போது அது இன்றியமையாத ஒன்றாகி விட்டது. அலுவலகம் முதல் பாலர் வகுப்பு வரை எல்லோரும பயனடையும் ஒரு பயனுள்ள பொருள் தான்  இந்த கணனி ....பாலர் நுழைய இலகுவாக் கணணி மயப்படுத்த் பட்ட விளையாட்டுக்கள் . இளையவர்களுக்கும்  அது தான் இன்றைய விளயாட்டு பொருள். . பொழுது போக்கும். இந்த விளையாட்டை விரும்பி விளையாடுவார்கள். அந்த விளையாட்டின்  ஈர்ப்பில் ஈடுபட்ட இரு உள்ளங்கள் தான் . சுகுமார் , மது மிதா ......அவர்களின் கதை இதோ.....


சுகுமார்.....ஒரு வர்த்தகவியல் பட்டாதாரி .பல் கலைக் கழகம்    முடிந்ததும் ....ஒரு வங்கியில் சேர்ந்து ....படிப்படியாக முன்னேறியவன். மாலை நேரங்களில் ...செய்தி தேடி வாசிகக் மிகவும் விரும்புவான். சில நட்பு  வட்டங்களும்  உண்டு. அவர்களுடன் அரட்டையில் ஈடுபடுவான் ...ஒரு சில பள்ளித் தோழிகளும்  உண்டு ....தோழியின் தோழியாக  ஒரு நாள் அறிமுகமானாள் .மது மிதா . ஒரு சில வார்த்தைகளுடன் விடை பெற்று சென்று விடுவாள். இவன் தேடித்  தேடிப்  பேசுவான்.....தோழியின் நட்பு குறைந்து ,மது மிதாவுடன் ....விரும்பிப்  பேசுவான்  காலப்போக்கில் அவளது பெயர் மது வாகி விட்டது ...அவர்களது படிப்பு ...........சொந்த இடம் .. புலம்பெயர்ந்து அவள் வாழும் இடம்..........குடும்ப் உறவுகள் ......போன்றவை பரிமாறப்பட்டன.   சுகுமாரும் ....தன்னை பற்றி  சொன்னான். ஆர்வமிகுதியால் ஒரு நாள் அவன் தன் நிழற்படத்தை  அனுப்பி வைத்தான்........இவளையும் , மிக மிக வேண்டிக்கேட்கவே அவளும் அனுப்பி வைத்தாள். பார்வைக்கு அழகான் பெண் ....வயதும் பொருந்தியது .......சாதி .....மதம்......சொந்த இடம் ......என்பன ஒத்துப்  போகவே .....சுகுமார் தான் விருப்பத்தை சொன்னாள். இவள் தனக்கு வேலை  கிடைக்க வில்லை என் றும் தேடிக்கொண்டிருப்பதாகவும்  சொல்லுவாள். முன்பு சில இடங்களில் தொண்டு அடிப்படையில் வேலை பார்த்த அனுபவமும் உண்டு என்பாள்.   இந்த காலம் மிகவும் ஒரு நெருக்கடிக்குள் இருப்பதால் .......வேலை  கிடைப்பது மிகவும் கஷ்டம் என்றும் ...முயற்சியை  தளரவிடாது ..........தொடரும்படியும் சொல்வான்....இவன் விருபத்தை சொன்ன போது ......அவள் இது நடக்க கூடியதல்ல்....... என்று மறுத்து வந்தாள்.இவனும் விடாமல் கேட்டு வந்தான்.ஒரு நாள் ஒரு முக்கியமான இடத்தில் சந்திக்கும்படி கேட்டு கொண்டான்.......பல வற்புறுத்தல் களுக்கு மத்தியில் ..சம்மதித் தாள்... அந்த நாளும் வந்தது .......என்ன நிற ஆடை என்பதில் இருந்து ....தொலை பேசி எண்கள்  வரை .......பேசி பரிமாறப்பட்டது.....சுகுமாருக்கு மிகுந்த ஆவல்......

அந்த வினாடிகள் நெருங்கவே .....அவன் நண்பனுடன்  ஒரு காபி ஆடர் பண்ணி விட்டு காத்திருந்தான் .   ஒரு சில நிமிடங்களின் .பின் ஒரு பிரத்தியேக வண்டியில்  வந்து சேர்ந்தாள்.......அவள் . அதே நிற ஆடை ..அதே நிற சுடிதார்...
ஆனால் ....

அவனது பேசும் சித்திரம்...சக்கர  வண்டியில் ...மோட்டார் பொருத்த பட்ட ஆளி (சுவிச் )மூலம் இயக்கும் வண்டி .சுகுமாருக்கு அதிர்ச்சியான், அதிர்ச்சி  ...சுதாகரித்துக்கொண்டான்....அவர்களது உரையாடல் தொடர்ந்தது .....விடைபெற்று சென்றனர் ....சுகுமார் மட்டும் ..........கனத்த மனதுடன். முடிவு.............?

சில கிறுக்கல்கள் சித்திரமாகும்....சில சித்திரங்கள் பேசும்..........சில ஓவியமாகும் ....சில காவியங்களை எடுத்துரைக்கும் .இந்த சித்திரம் எந்த வகை ...........

இது  கற்பனைஅல்ல .............நிஜத்தை வரும் நாட்களில் எழுதுவேன்..........

முடிவை நீங்களே யூகித்து  .. ....எனக்கு எழுதுங்கள்

.........முடிவு ............

சுகுமார் ..பின்பும் ஆவலுடன் தொடர்ந்து நட்பில் இருந்தான் அவள் நிலைக்காக கவலைப்பட்டான் . தொடர்ந்தும் அவள் மீது விருப்பு உண்டென்றும் பெற்றவர்களிடம் முடிவு கேட்கும்படியும் சொன்னான்.  அவர்கள் சம்மதிக்க வில்லை ..சீதனம் அழகு அந்தஸ்து பார்க்கும் உலகில் இப்படி ஒருவன் வருவானா? .என்று சந்தேகப்பட்டனர் .......அவள் திருமணம் செய்யலாம் ஆனால் கருத்த்ரிக்க  கூடாது என்று வைத்தியர் சொன்னார் ..தங்கினால் அவள் உடல் நிலை மேலும் சிக்கலாகும் என்றார். காலம் ஓடிக்கொண்டு இருக்கிறது . முடிவு எட்டப்ப்டாமலே .............

Tuesday, January 19, 2010

உனக்கான பெண்.......

உனக்கான பெண்.........

அந்த நகரத்தின் ...சற்று ஒதுக்கு புறமான அழகிய வீடு அதில் , வாழ்த்து வருபவள் தான்  சுஜித்தா  எனும் சுஜி, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தான்.....தன் தாயை கான்சர் வருத்தத்துக்கு பலி கொடுத்தாள். அழகிய அடக்கமான பெண் . சென்ற வருடம் தான் பட்ட படிப்பை முடித்திருந்தாள்.  அவள் தந்தை மிகவும் , நேசிக்கும் ஒருத்தி ..மொத்தத்தில் அவர் அவளுக்காகவே வாழ்கிறார்....அவரது நிருவனங்க் களை மேற்பார்வை செய்வதிலும்....அங்கு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதிலும் அவரது காலம் .... ஓடிக்கொண்டு இருந்தது....அன்று காலை தேநீரை கொடுத்தவள் அப்பா.....என்று இழுத்தாள். எத்தனை வேலையாட்கள் இருப்பினும் அம்மா நோயாளியாக இருக்கும் போது ......இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டவள். தந்தைக்கு விருப்பமான் தும் கூட . அவ்வேளைகளில் அன்றைய தன் வெளி அலுவல்களை பற்றியும்  கலந்து உரையாடிக் கொள்வார்கள் . இன்று அவள் அப்பா........என்பதில் எதோ தேவை இருப்பதாய் புரிந்து கொண்டார்.....என்னம்மா சுஜி ? .....வந்து எனக்கு போரடிக்குதுப்பா ...மகளிர் சங்க காரியாலயத்தில் ....பணிக்காக் கேட்கிறார்கள். போகலாமாப்பா ...? இங்க பாரும்மா ....உனக்கு தீவிரமாக் மாப்பிள்ளை பார்க்கும் பணியில் இறங்கியிருக்கேன்...வெளித்தொடர்பு ....காதல் அது இது எல்லாம் எனக்கு பிடிக்காத்தாம்மா ...நீ கவனமாய் இருப்பதாக , வாக்கு கொடுத்தால்...உன் ...நேரம் பயனுள்ளதாக இருக்குமானால் போய் வா என்றார். ,,,அவளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை....மானாக துள்ளி சென்றாள்.  காலம் யாருக்காகவும் ,காத்திராமல் ஓடிக்கொண்டிருந்தது....வீட்டில் இரண்டு கார் இருந்தும்...தன்  உந்துருளியிலே ...(.skooter )
போவாள். ஒரு நாள் ...இடையில் வண்டிக்கு ...ஒரு சிறு சிக்கல் வரவே ..வீதியில் நின்று செய்வதறியாது நின்றாள் .. அந்த வழியில் வந்தது ஒரு வண்டி.....அதிலே ராகுலன்  என்னும் அழகிய  இளைஞன் . , வண்டியை ...திருத்தும் இடத்துக்கு அனுப்பவும். அவளை காரியாலயம் செல்லவும் உதவினான். ......தொலைபேசி மூலம் இவர்களது நட்பும் நீடித்தது ......ஒரு நாள் அவளை தனிமையில் கண்டு பேச விரும்புவதாக சொன்னான். அந்த நாளும் வந்தது....இருவரும் ஒரு ....போது இடத்தில சந்தித்தார்கள்.....அவன் தன் விருப்பத்தை சொன்னான்.....மறு வாரம் சொல்வதாக சொல்லி இருவரும் விடை பெற்றனர்....மறு வாரத்தில் ஒரு நாள் அவன் அலுவலக முகவரிக்கு ஒரு மடல்........

நட்புடன் ராகுலனுக்கு.........என்னைக்கண்டதும் என் பால் ஈர்க்க பட்டதும் எனக்கும் புரியும . ஆனால் ....உங்களுக்கான பெண் நானல்ல .......இந்த உலகம் பூந்தோட்டம் ஆயிரம் பெண்களை சந்திக்கலாம் ஆனால் நான் என் தந்தையின் சொல்லை மீற முடியாதவளாக இருக்கிறேன்.....ஒரு வேளை நீங்கள் என் தந்தையிடம் பெண்கேட்டு வந்து அது நிறைவேறினாலும் ....நிறைவேறாவிடாலும்.....நான் உங்களை காதலித்தேன் என அறிந்தால்  என் தந்தை என்னை இருபத்து மூன்று வயதுவரை வளர்த்த ...பாசம்....சத்தியம்... இன்றும் இன்னொரு மனைவியை தேடாத வைராக்கியம் ,...என்பவற்றை சிதறடித்தவளாகி விடுவேன் .......ராகுலன் .....என்னை மன்னித்து விடவும்....இந்த எண்ணம் வரும் என, எண்ணியியிருந்தால்...உங்களிடம் நட்பை  வளர்த்திருக்க  மாட்டேன் .....சத்தியத்தை ..காப்பாற்ற மிகவும் போராடுபவள்....அப்பா எனக்கு விரைவில் திருமண பணத்தில் ஈடுபட வைக்க இருக்கிறார்..அவர் விருப்பமும் ஆசைகளும் ....எனக்கு மிகவும் முக்கியம்....உங்கள் , எண்ணத்தை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன்......இந்த எண்ணம் தொடர்ந்தும் உங்களுள்ளத்தில் இருக்குமானால் என்னை தொடர்பு கொள்ள , தொந்தரவு செய்ய , வேண்டாம்.......
நட்புடன் சுஜி .........

.மடல் கண்ட ராகுலனுக்கு.......அவன் ஏக்கத்துக்கு ஒரு இடி......இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா? ........இரண்டு வாரங்களாக ஒரு பதிலும் சொல்லாதிருந்தான்....மூன்றாம் வாரம்....

.நட்புடன் சுஜிக்கு......செல்வ செழிப்பிலும் ...உன் தந்தையின் ..வளர்ப்பிலும்..... உன் அழியாத பாசத்தை மெச்சுகிறேன்.....என விருப்பம்  உன்னிடம் ஒரு விண்ணப்பம் மட்டுமே .......உன் இன்பமான் மண வாழ்வுக்காக வாழ்த்தும் ராகுலன்.......

.மறு வாரமே அவளுக்கு நிச்சய தார்த்தங்களுக்கான  ஆயத்தங்கள் நடந்தது ......சுஜி யின் தூரத்து உறவு......அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சென்றவன்.......சுஜியையும் ஏற்று தந்தையின் ..தொழிலை  பொறுப்பெடுத்து பார்துக்கொள்வதாக் ஏற்றுக்கொண்டு ....வாக்கு சொன்னவன்.....பாலேந்திரன்........சுஜிக்கு மண மகனாக  ஏற்படுத்த பட்டான்.....

சில காதல் கனிந்து மணம் பரப்புவதுண்டு .....பல காதல்  மலராமலே போவதுண்டு.....ஒரு சில மலர்ந்து இடையில் வாடி விடுவதும் உண்டு........ராகுலனுக்கான் பெண்......அவள் அல்ல ..எங்கோ ஒருத்தி பிறந்திருப்பாள்.......

Thursday, January 14, 2010

தை மகளே வருக ...........

..
புதுப்பானையில் புத்த்ரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம்  கூட்டி
வரவேற்கிறோம் ,தை மகளே வா.
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா

பழையன கழிய வேண்டும்
புதியன புக வேண்டும்
காக்கைக்கு உணவளித்த கூட்டம்
கால் பருக்கைக்கு வழி யில்லை
புத்தர் சிலை சிந்தையில்  வழிபட்டு
ரத்தாபிஷகம்செய்யும்  பாதகர் கூட்டம்
குற்றம் உணர்ந்து உண்மைதெரிந்து
ஆவன செய்ய வேண்டும்  

கலப்பை மறந்த பூமியில்
உழவுத்தொழில் உதாசீனம்
மாதாவை மறந்தாலும்
மண் மாதாவை மறவோம்
கடைசி தமிழன் உள்ளவரை
பொங்கிடுவோம் தைப்பொங்கல்

Sunday, January 10, 2010

பொங்கல் வாழ்த்துக்கள்..............

பொங்கல் வாழ்த்துக்கள்..............

வலைத்தள  நட்புகள் .....வாசகர்கள் .அனைவருக்கும் என் இனிய தைபொங்கல் நல்வாழ்த்துக்கள். விசெடமாக் ஈழத்து மக்கள் வாழ்வில்  இன்பம் .....அமைதி வாழ்வு .......அன்றாட தேவைகள்  யாவும் கிட்டவேண்டும். இதனால் மகிழ்வும் எதிர்கால் நம்பிக்கையும் தேடி வரும். உள்ளம் உடைந்து போனவர்கள் மன அமைதிகிட்டி ........இல்லிடம் .....தொழில் துறை ....கிடைக்க பெற்று மனித நேயமுடன் மக்கள் வாழ்வு சிறக்க வேண்டும் ........மீண்டும் என் வலைத்தள நட்புகள் .....வாசகர்கள் .....நலன் விரும்பிகள் யாவருக்கும் இனிய வளமான வாழ்வு பொங்க வாழ்த்துகிறேன். .

Friday, January 8, 2010

தொலைந்து போனவைகள்.

 வணக்கம் என் வலைப்பதிவுலக நட்புகளுக்கு .........உங்கள் அன்பான் நலன் விசாரிப்புகள் பாராட்டுகள் ... புதுவருட வாழ்த்துகள்   கருத்துகள் என்னை மேலும் தென்பு கொள்ள வைத்து எழுத தூண்டுகின்றன. என்றும் உங்கள் அன்புக்கு நான் தலை சாய்த்து வணக்கமும் நன்றியும் சொல்லிக்கொள்கிறேன்.

தொலைந்து போனவைகள்.

போர் சூழலினால் வஞ்சிக்கபட்ட ஒரு  இளைஞனின்   கதை. அமைதியான அந்தக் கிராமத்துக்கு படையினர்  உட்புகு மட்டும் மக்கள் சாதாரண வாழ்வு தான் வாழ்ந்தார்கள். அதன்பின்பு தான் எல்லாமே தலை கீழாய் போனது. சீர் குலைந்து நிம்மதி இழந்தது.

பால பாஸ்கரன் அந்த கிராமத்தின் , ஊர்ச்சங்க தலைவரின் மகன். ஊர்பள்ளிக்கூடத்தின் உதவித் தலைமை ஆசிரியராய்  இருந்தான். காலாகாலத்தில் திருமணம் செய்து ....மனைவி கற்பமாய் இருந்த காலத்தில் தான் ராணுவத்தினர் கிராமத்துள் புகுந்தனர்  . சோதனை என்றும் சந்தேகம் என்றும் கைது செய்துகொண்டு சென்றுவிடுவார்கள். இதில் பாஸ்கரனும் விதிவிலக்கல்ல. பலமுறை கொண்டு சென்றாலும்.பாடசாலையை காரணம் காட்டி வெளிவந்து விடுவான். இவர்களது தொல்லை தாங்க முடியாமல்,
வேறு ஊருக்கு மாற்றல் வாங்கி சென்றான். பின்பும் ஊர் நோக்கி வரும் போது சோதனைக் கெடு  பிடிகள் அதிகரிக்கவே வெளிநாட்டு வேலை வாய்ப்பு தேடி
ஐரோப்பிய நாடொன்றுக்கு பயண மாக  முடிவெடுத்தான். இதன் போது
மனைவிக்கு பேறு காலம் வரவே அவள்அழகிய குழந்தையை பெற்று  எடுத்தாள், வைத்திய சாலையில்   குழந்தையை பார்த்து வந்த போது வெளிநாட்டு பயணம் சரிவந்த்தாக தகவல் வரவே ..மூன்றாம் நாள் மனைவி குழந்தையை  தன் தாய் தந்தையின் பாதுகாப்பில் விட்டு புறப்பட்டான். பல அலைச்சல் களுக்கும் போராட்டங்களுக்கும் மத்தியில் சுவிஸ் நாட்டுக்கு போய் சேர்ந்தான். காலம் ஓடிக்கொண்டே இருந்தது ஆனாலும் அவனுக்கு அந்நாட்டு வதிவிட் அனுமதி கிடைக்கவில்லை.......வருடங்கள் எழு உருண்டோடி விட்டன. .

தாயகத்தில் ..தாயும் சேயும் நலமே வளர்ந்து வரும் காலத்தில் .மேலும்மேலும் யுத்தம் .மும்முரமடையவே ...பாஸ்கரன் மனைவி திலகா .....குழந்தை யுடன் அவளது தம்பியின் ஆதரவுடன் ....கனடா நோக்கி புறப்பட்டாள்....சில தடங்கலுக்கு மத்தியில் ....அவளுக்கும மகனுக்கும் அகதி நிலை அங்கீகரிக்க பட்டது.....மகனின் குரல் கேட்க அடிக்கடி தொலை பேசி அழைப்பு வரும். ....இறுதியில் மகனும் தாயும் தந்தையை பார்க்க புறப்பட்டனர் . பிறந்த போது பார்த்த தன் மகனின் தோற்றங் கண்டு அப்பா   பாஸ்கரன் மலைத்து போனான் .மகன்  பாலகுமாரனும் ஆசை தீர தந்தைமடியில் விளையாடினான்.  அவனதுகுழந்தைப்ப் பருவம்  ....மழலை பருவம்...பேச்சு ப்பருவம் ..என்பவை எல்லாம்........இழந்து விட்ட சோகம் மட்டும் தந்தை உள்ளத்தினுள்ளே இருந்தது.   மூன்றுமாத விடுப்பில் சென்ற தாயும் மகனும் பிரிய மனமின்றி ..........பிரிந்து கனடா வந்து சேர்ந்தனர் .........

.பாஸ்கரன் மனைவி .........கணவனை பொறுப்பெடுக்க முடிவு செய்தாள். இங்கு வேலையும் குழந்தையும் காலநிலையும் அவளுக்கு இலகுவாக் இருக்கவில்லை .  அங்குசுவிசில  வைத்து குடும்ப இணைவு  முறையில் செய்ய முடியாததால் அவன் ஒரு சமாதானகால ஒப்பந்தம் வரவே   மீண்டும் தாய்நாட்டுக்கு சென்றான். ஒருவாறு  குடும்ப இணைவு முறையில் ...சட்ட திட்டங்களுக்கு ஏற்ப அவன் நாலு வருடத்தில் ..........வந்து சேர்ந்தான். மகனுக்கு வயது பதினைந்து ....ஆசைக்கும் அருமைக்கும் ஒரே யொரு  குழந்தை .புலம் பெயர் வாழ்வுகள் தந்த சோகம் ...இழப்பு .........வீணாகிய இளமை ........கண்ணீரில் தொலைத்த  காலங்கள். மது மயக்கத்தில் தூங்கிய இரவுகள் ....தனிமை..........மாடாய் உழைத்து ஓடாய் தேய்ந்த கரங்கள். ..உறவுகளின் ஒத்துழையாமை.  யுத்தம் . அதன் கோரத்தாண்டவம் அழிவு ......எந்த ஒரு இனத்துக்கும் வேண்டவே வேண்டாம். இது ஒரு சிறு கதை மட்டுமே ....

புலம் பெயரும் போது சந்திக்கும் இடர்கள் சோதனைகள்  ....அவை எழுத ஒரு ....சரித்திரபுத்தகம் வேண்டும்.   எழுத்தில் வடிக்க கூடியவை ஒரு சில.   எழுதாத பல உள்ளத்துக்குள் வாழ்ந்து கொண்டு தான் இருக்கின்றன.

Wednesday, January 6, 2010

அன்று அவர் இல்லை என்றால்.............

அன்று அவர் ... இல்லை என்றால்.............

புது வருடம் பிறந்தும் ஆறு நாட்களாகி விட்டது . ஒரு பதிவு போட முயல்கிறேன் இடையில் சிறிது சுகவீனமும் கூட வாட்டி விட்டது . இருப்பினும் ,உங்களை எல்லாம் வலைத்ததள மூடாக   காண்பதில் மிக மிக மகிழ்ச்சி. .....அண்மையில் என் வீடில் உறவுகளும் நட்புகளும் கூடினார்கள் . கலகலப்பாக இருந்தது. பழையசம்பவங்கள் , ஊர் நினைவுகள்....பள்ளி வாழ்க்கை ..... சிலதும் நிழலாடியது . அதில் இருந்து  ஒரு சிறு கதை. ......

அப்போது பாஸ்கரனுக்கு பதின் மூன்று வயது இருக்கும். துள்ளித்திரியும் பருவம். அவசரமும் ஆர்வமும் எட்டிபார்க்கும்.வயசு.......... இவனது தாயார் ........அதே வீதியில் பிரதான சந்திக்கு அண்மையில் உள்ள சித்தியின் வீட்டில் கொடுக்கும்படியாக , சிறிது பணத்தை இவன் இடம் கொடுத்தனுப்பி இருந்தார். பணத்தை கொடுத்தபின் அங்கு சித்தியின் வீட்டுக்குச்  சென்றதும் அவரது குழந்தைகளுடன் விளயாடி விட்டு , வீடு திரும்புவதாக் சொன்னவன் சித்தி வறுத்துக்கொண்டு இருந்த அரிசிமாவில் வரும் சிறு கட்டிகளை சுவைக்க ஒரு ஆர்வம் வந்தது ..மாவறுக்கும் போது அதில் சில கட்டிகள் தோன்றும் அதை சுவைப்பதில் சிலருக்கு இன்பம். சில கட்டிகளை எடுத்து மாவுடன் சேர்த்து வாய்க்குள் போட்டு விட்டு ....புறபட்டான்

. சில....நிமிடங்கள் நடந்தவனுக்கு தொண்டைக்குள் சிக்கி விட்டது. சத்தம் போட்டு உதவி கேட்கவும் முடியவில்லை.......அவனுடைய .நல்ல காலம் அவ்வீதியின் அருகாமையில் ஒரு முதியவர் ,கிணற்றில் தண்ணீர் அள்ளிக்கொண்டு இருந்தார். இவன் சைகைகாட்ட ...அவர்  தண்ணீர் வாளியுடன் ஓடி வந்தார்.   இவனுக்கு விழி  பிதுங்கி ...மூச்சடங்கி .....மயங்கும் நிலையில் விழுந்துவிடான். கால் கைகளை அடித்தவாறு.........உடனே அவர் கொண்டுவந்த தண்ணீரால் முகத்தில் அடித்து ,  பின் பிட்ரிபக்கம் சற்று தட்டிக்கொடுத்து . குடிக்க கொடுத்து ...ஒருவாறு விழிப்படைய  செய்து விடார்.  பின் அவனை  ஆசுவாசபடுத்தி....வீடுக்கு அனுப்பி வைத்தார் .........இன்று  அந்த சிறுவன், இளைஞ்சனாகி இருகுழந்தைகளுக்கு தந்தை .........அந்த முதியவர் எனது,   தாத்தா....( அம்மப்பா) ........ உங்கள் தாத்தா..அன்று இல்லையென்றால் இன்று இங்கு இருந்திருக்க மாட்டேன்.   என்று கண்ணீர் மல்க கூறினார்.

எனக்கும் என் ஊர் நினைவுகளுடன் .....பல இளம் பராய நினைவுகளும் ....அலையலையாய் வந்து போயின. பெருநாள் விடுமுறையும் ........புது வருட ஆரம்பமும் இனிதே கழிந்தன. ..கடந்து போன வாழ்வை  அசைபோட்டுப் பார்ப்பதிலே
தான் எத்தனை சுகம். .

.பழைய கால் நினைவுகளை மீட்டிப் பார்ப்பதே ஒரு தனி சுகம். .........புலம்பெயர் வாழ்வில் இத்தகைய சுகங்கள் எமது குழந்தைகளுக்கு கிடைக்குமா?  என்பதே கேள்விக்குறியாக உள்ளது .ஒவ்வொருவரும் தனித்தனி தீவாக் வாழ்கிறார்கள். ஊர் .....உறவு ...சொந்தங்கள் என்பனவற்றை நிலைநாட்டுவார்களா என்பது சந்தேகமே. .

Tuesday, December 29, 2009

இன்னொரு அம்மா

இன்னொரு அம்மா

மாலதி அதிகாலை  விழித்து விட்டாள் .எழுந்து காலைக்கடனை முடித்தவள் , அடுப்பை பற்ற வைத்து  , தேநீருக்கான ஆயத்தங்கள் செய்தாள். அப்போது மாமியார் பசுக்களில் பால் எடுத்துக்கொண்டு பாற்செம்புடன் வந்தாள். அவர் வாடிக்கை காரர் இருவருக்கு போத்தலில் பாலை நிரப்பி மீதியை மாலதியுடம கொடுக்க அவள் அவற்றை காய்ச்சி குழந்தைகளுக்கும் மாமனாருக்கும் தேநீர் தயாரித்து கொடுத்தாள். தன் மாமியார் பங்கை கொடுக்கவும் அதை வாங்கி ....பருகிக்கொண்டே " மாலதி ...இன்று பட்டணம் போக வேணும் என்று சொன்னனீர். எத்தனை மணிக்குபோகவேனும்.  ......வரும்போது ..இவருக்கு ஒரு சாரமும்( லுங்கி) ..மறக்காமல் வாங்கி வாரும். என்றாள்.

நாலு வயது ரோகிணியும் இரண்டு வயது ரோஷானும் ..இவளது குழந்தைகள். .அவர்களுக்கே உரிய துடுக்கு தனம் உடையவர்கள். மாமனார் பால் போத்தல்களுடன் விநியோகிப்பதற்காக புறபட்டார். காலை உணவை எல்லோருக்கும் கொடுத்து தனது பங்கையும்  முடித்து கொண்டவள் ...ஒன்பது மணி பஸ்சுக்காக புறப்படும் போது பிள்ளிகளையும் எச்சரித்து , அமைதிபடுத்தி விளையாட்டு பொருட்கள்  வாங்கி வர வேணும் அம்மா என்றும் ...வழியனுப்புதலோடு பஸ் தரிப்பு நோக்கி புறப்பட்டாள் . வஸ் வண்டியும் நேரத்துடன் வரவே ...அதில் ஏறி உட்கார்ந்தாள். பற்றுச்சீ ட்டை பெற்று கொண்டவள் எண்ணம் கடந்த காலத்தை நோக்கி சிறகடித்தது.................

தன் பெற்றவரை  மீறி மகேந்திரனை கைப்பிடித்துக் கொண்டவள் தான் மாலதி........இவள் பிறந்த வீட்டில் வசதி வாய்ப்புகளை கொண்டவள் . சற்று வசதியானவள் மகேந்திரனை காதலித்தபோது ...அந்தஸ்த்து காரணமாய் மறுக்கவே ஒருநாள் ஓடிபோய் திருமணம் செய்து கொண்டாள். அதே ஊரில் இருந்தாலும் இவளது பெற்றோரும் சகோதரார்களும் இவளை சேர்ப்பதில்லை . கைப்பிடித்த  நாள் முதல் மகேந்திரனும் இவளை கண்கலங்காமல் பாதுகாத்தான். மகேந்திரன் , சாதரண விவசாயக்  குடிமகன். தாய் தந்தைக்கு ஒரே பிள்ளை . சற்று வசதி வாய்புகள் குறைவு என்பதால் ஓலை வீட்டிலேயே வாழ்ந்தார்கள். இதனால் தான் மாலதி வீட்டுக் காரர்  இந்த திருமணத்தை விரும்பவில்லை. தங்கள் அந்தஸ்துக்கு ஏற்ற மாதிரியில்லை என்பதால். மண முடித்து இரு குழந்தைகளும் பிறந்த பின் , தன் வாழ்வுக்காகவும் குழந்தைகளின் எதிர்காலத்துக்காகவும் ....பலத்த முயற்சியின்  பின் வெளி நாட்டுக்கு புறப்பட்டான் .

வாழ்வில் அவன் தாய் தந்தையை பிரிந்த துயரம் ...வேலையின் கடின உழைப்பு துயரை தந்தாலும் எதிர்காலத்துக்காக தாங்கி கொண்டான். இவள் மாலதி அவன் அனுப்பிய காசு வங்கியில் பெற்றுக்கொள்வதற்காக  தான் பட்டணம் செல்கிறாள். புது வருடம் பிறக்க போகிறது மூத்தவள் ரோகினியை பாடசாலயில் சேர்க்க வேண்டும் ......மாமனார் ..மாமியார் ருக்கு துணிமணிகள் எடுக்கவேண்டும். மகன் ரோஷன் ...ஒரு மூன்று சில்லு சைக்கிள் வண்டி கேட்டுக்கொண்டிருந்தான்...........அத்தோடு இந்த பணத்தில் மகேந்திரன் போவதற்காக் பட்ட கடனுக்கும்  கொஞ்சம் கட்டவேண்டும்.........

வங்கிக்கு சென்று பணத்தை பெற்றவள் பெரும் பகுதியை ஒரு இறுக்கிய இணைப்பு கொண்ட கைப் பையினுள் மறைத்து வைத்தாள் . மீதியில்  தேவையான பொருட்களை வாங்கினாள் .இரண்டு கையிலும் பொருட்களின் சுமை . மனதில் வீடு நோக்கிய அன்புச்சுமை ...........அன்று ஏனோ வஸ் வண்டி மிகவும் ஊர்ந்து செல்வது போல் இருந்தது.........வீட்டில் மாமியார் மதிய உணவை பேரப் பிள்ளைகளுக்கு ஊட்டி விட்டு ..தான் உண்ணாமல் இவளுக்காக காத்திருப்பார்.............அம்மா என்று அழைத்துக்கொண்டு என் மருமகள் ( மறு.........மகள்) வருவாள் என்று வாசலை பார்த்து கொண்டிருப் பார் என்பது ...மனதை மெல்ல நெருடிக்கொண்டு இருந்தது .

ஆம் இவள் தன் மாமியாரை " அம்மா " என்று தான் அழைப்பாள். அவரும் தனக்கு பெண் குழந்தை இல்லயே என்ற கவலை  தீர்க்க வந்த மகள் ....மறு( இன்னொரு)  மகள் என்று தான் உறவு பாராட்டுகிறார்கள்  அவர்கள் வாழ்வில் ஸ்டவ் வெடிப்பதில்லை , ......மண்ணெண்ணெய் குளிப்பு இல்லய் ...........மாலதிக்கு அவர் இன்னொரு அம்மா......

.அவளுக்கும் ஒரு காலம் வரும் .......நல்ல வாழ்வு வரும் . வாழ்வு வந்தால் இழந்த சொந்தங்கள் தேடி வரும். ..

Monday, December 21, 2009

வாழ்த்துகள்.

வாழ்த்துகள்.

வாழ்த்து ....க்கள்..............வாழ்த்துகள்.

வாழ்த்துகள் என்பது தான் சரியானது . எழுத்து ...  பேச்சு வழக்கிலும்  வாழ்த்துக்கள் ஆகி விட்டது. 

வலைத்தள பதிவர்கள்........வாசகர்கள் அனைவருக்கும் எனது நத்தார் ........புதுவருட வாழ்த்துகள் உரித்தாகுக. உலகம் முழுக்க விழாக்கோலம் பூண்டு கிறீஸ்த்து  பிறப்பைக்கொண்டாடும்  இந்த வேளை. என் உளமார்ந்த வாழ்த்துகள். இது பண்டிகைக்காலம். வர்த்தக நிலையங்கள். வீடுகள் மின் விளக்குகளால் அலங்க்கரிக்க பட்டு பண்டிகை விடுமுறையை , கொண்டாடும் இவ்வேளை ஈழத்து உறவுகளையும் நினைகின்றேன். பிறக்க இருக்கும் புது வருடம் ,மகிழ்ச்சியும்  சுபீட்சமும்  நிறைந்ததாகவும், தங்கள்சொந்த இருப்பிடங்களை அடைந்து , புதிய வாழ்வை தொடங்கி அன்றாட நிலையில் வாழக் கிடைக்கக் வேண்டுமென்று பிராத்திப்போம். மீண்டும் விடுமுறை கழித்து மறு வருடம்  முதல் வாரத்தில் சந்திப்போம். புது வருடம் அனைத்து பதிவுல நட்புகளுக்கும் புதிய நல்ல மாற்றங்களையும் , சந்தோஷத்தையும் தருவதாக அமையட்டும். வாழ்த்துக்கள் நண்பர்களே .........உறவுகளே.

நட்புடன்  நிலாமதி

Thursday, December 17, 2009

செருப்...........பூ ...

செருப்பூ ...(காலணி )..

மனிதனுக்கு அன்றாடம் தேவையான பொருட்களில் ஒன்று.  இதன் பலன்கள் பெருமை பல கோடி.........காலுக்கு பாதுகாப்பு ........மழை ....குளிர் ...வெப்பம்.... முட்கள் ...அழுக்குகள் என்று .........ஆனால் இதற்கு மதிப்பு என்னவோ ?........இத்தனைக்கும் சுமை  தாங்கியாய் உற்ற தோழனாய் நம்மோடு தொடர்ந்து வருகிறது. இந்த பாதணி. ஆரம்ப காலத்தில் மிதியடிக்கட்டை என்றும்...செருப்பு என்றும் காலணி..... பாத அணி ......என்றும் அழைக்க பட்டது. இதன் அமைப்பு  ..வண்ணவண்ணமாய் ...நிறங்களாய் ..ரகங்க்களாய்...இதன் அலங்காரம் சொல்லி முடியாது. காலத்தின் தேவைக்கேற்ப மாறு படும். சில சமயம் புதுசாய் இருக்கையில்  காலையே   ( கடித்து  )வலிக்க செய்து விடும். இன்டர்  வியூ சமயத்தில் சங்கடம் தந்த சமயங்களும் உண்டு. இந்த காலணி பற்றி நினைக்கையில் , இந்த செருப்பு ஒரு காதலுக்கு தூது போன கதை சொல்லவா? ..........இதோ

அந்த கிராமத்தில் சற்று வசதியானது ராஜரத்தினம் குடும்பம். இவர்களுக்கு ஒரு தியேட்டர் (சினிமா கொட்டகை) இருந்தது .நகரில். இவரது செல்ல பெண் தான் ஜீவா எனும் ஜீவராணி. வழக்கம்போல பள்ளி மாணவி,  சிறுவயதில்  தாயை இழந்த ஒரே ஒரு செல்லப்பெண். நிறைய நண்பிகளும் இருந்தார்கள். பள்ளி வாழ்வும் கேலிகளும்  கிண்டல்களுமாய் இனிய பொழுது இவர்களுக்கு.வாழ்க்கை வண்ண வண்ண பட்டாம் பூச்சியாய் சிறகடித்து பறந்து கொண்டிருந்தது.

அவ்வூரின் வாத்தியார் மகன்  அருணாகிரி என்னும் அருணா .இவனுக்கும் நட்பு வட்டம் உண்டு. அருணாவுக்கு ஜீவாமீது ஒரு ஈர்ப்பு இருந்தது . மாணவியர் கூட்டம் எங்கு சென்றாலும் இவர்களும் செல்வார்கள். ஒரு நாள் தன் தோழன் மூலம் தூது விடான் அருணா. அவள் ஜீவா கண்டு கொள்வதாயில்லை. சில சமயம் தனி மையில் சந்திக்க நேர்ந்தால் என்னை  சுற்றி சுற்றி வராதே என்பாள்.   ஒரு முறை இவன் கொடுத்தனுப்பிய கடிதத்தை  அவன் முன்னே கிழித்தெறிந்து விட்டாள். இருந்தாலும் அருணாவின் மனசு அவளை சுற்றி சுற்றியே வந்தது . ஒரு முறை மாணவிகள் எல்லோரும் நகரில் உள்ள தியேட்டருக்கு படம் பார்க்க சென்றார்கள். மாணவர்கள் காதிலும் இந்த சேதி எட்டி விட்டது. அருணா கூட்டமும் தியேட்டர் நோக்கி படையெடுத்தது. படம் முடிந்ததும் ....அருணா கூட்டம்  பஸ்தரிப்பிடத்தில் , காத்திருந்தார்கள். ஜீவா தன் வீட்டுக காரில் தோழியர் களையும் ஏற்றிக் கொண்டு புறப்பட தயாராகும்போது .., தாம் படம் பார்க்க வரும்போது இவர்கள் ஏன் வந்தார்கள் என்று மாணவர்களுடன் கார சாரமான விவாதம் நடந்தது . வாய்ச்சண்டை முற்றி ...... நண்பிகள் தடுத்தும் கேட்காமல் .ஜீவராணி அருணாவுக்கு செருப்பால் அறைந்து விடாள்.  . அருணா சற்றும் எதிர் பாராமல் நிலை குலைந்து விட்டான் . இவர்கள் வீடு சேர்ந்ததும் அவ்வூர்  முழுக்க் "தியேட்டர் காரன் மகள் செருப்பால் அறைந்து விடாள்"  என்று .........கதை பரவி விட்டது. ஜீவாவுக்கு அவமானமாக் போய் விட்டது. நண்பிகள் மறு நாள் மன்னிப்பு கேட்கும் படி சொன்னார்கள். ஜீவா தன் தந்தைக்கு இந்த சேதி போகாமல் பார்த்துக்கொண்டாள். வாத்தியார் , பணக்காரன் ராஜரத்னாதுடன் மோத விரும்பாமல் ,மகனுக்கு மாற்றல் வாங்கி வேறு நகர் பள்ளியில் சேர்த்து விடார்..  ஊரார் இவளை திமிர் பிடித்தவள் என்று  திட்டி  தீர்த்தனர். அதன் பின் ஜீவா .......அதிகம் வீட்டை விட்டு  வெளியே வருவதில்லை பள்ள்ளிக்கு வந்தாலும் கலகலப்பாக  இருபதில்லை  அவளது நட்பு வட்டமும் குறைந்து விட்டது. காலம் யாருக்கும் காத்திராமல் ஆண்டு இறுதி தேர்வும் வந்தது........எல்லோரும் தேர்வு எழுதி முடியவும்,  விடுமுறைக்காக பள்ளி மூடபட்டது. 

தேர்வின் முடிவு பார்க்க இரண்டு மாதங்களின் பின் வந்தவள்  அருனாவை சந்தித்தாள். அவன் முகம் கொடுத்து பேச விரும்பவில்லை. அவனுக்கு நல்ல பெறு பேறுகள் கிடைத்திருந்தன. தந்தையார் தலை நகரத்துக்கு அனுப்பி .உயர் கல்வி படிப்பித்தார். காலம் தன் பாட்டில் போய் கொண்டு இருந்தது. இறுதியில் ஒரு பெரிய கம்பனியில் , முதன்மைப்பதவி பெற்றான்.  ராஜரத்தினம் ஐயாவும் தன் மகளுக்கு திருமண பேச்சை எடுத்தார். தாயில்லாப் பிள்ளை நேரகாலத்துடன்  கலியாணம் செய்து கொடுக்க வேண்டும் என்ற எண்ணத்துடன். அவள் எதற்கும் சம்மதிக்க வில்லை. வெளியூரில் இருந்து உயர் பதவியில் இருக்கும் இளைஞ்சர்களின் பெற்றார்கள்  , இவாகளின் உறவுக்காக , நடபுக்காக  ( பணத்துக்காக ) போட்டி போட்டனர் இறுதியாக  இவள் தனக்கு இப்பொழுது  திருமணம் வேண்டாமென்று  சொல்லி விட்டாள்.

ஒரு நாள் பேச்சு வாக்கில் இந்த சேதி ராஜரத்தினம் ஐயாவுக்கு எட்டியது மகளை விசாரித்தார். அவளும் உண்மையை ஒப்புக்கொண்டாள். அருணாவுக்கு செய்யும் பரிகாரம் அவனையே  திருமணம் செய்ய இருப்பதாக தன் முடிவை சொன்னாள். அவருக்கு என்ன செய்வதன்று தெரியவில்லை. இவளின் பிடிவாதமும்  தெரியும் .தன் மகளுக்காக் தன் நிலையிறங்கி வாத்தியாருடன் , சமாதானம் செய்ய புறபட்டார். முதலில் வாத்தியார் விரும்பவில்லை என்றாலும் மகனின் விருப்பமே பெரிது என்றார். அந்த வருட ஊர் திருவிழாவின் போது . அருணா ஊருக்கு வந்திருந்தான். முதலில் மறுத்தவன் , ஜீவா நேரில் சென்று கதைத்து மன்னிப்பு கேட்ட பின் , அந்த அடி தன் திமிர் தனத்துக்கு கிடைத்த பெரும்  தண்டனை என்றாள். ஒருவாறு இரங்கினான். அந்த சம்பவத்தின் பின் ....அதன் பின் அவள் நிறைய மாறி இருந்தாள் . பணத்திமிர் தனம் இல்லை. அகங்காரம் இல்லை சாது போன்று இருந்தாள். திருமணம் இனிதே நிறைவேறியது. பொறுமையின் இருப்பிடமான அந்த செருப்பு (செருப்படி) அவர்களுக்கு காதல் தூது ஆனது.

குறிப்பு ": இக்கதை பல வருடங்களுக்கு முன் என் பாட்டி சொன்ன கதையின்   சாராம்சம் .காலணி பற்றி எழுதும்போது கதையாக் வந்தது . என்பாட்டி காலமாகி முப்பதுக்கு மேற்பட்ட வருடங்கள். செருப்புகளின் சேவை பலவிதம். கலியாணப் புரோக்கர்களின் காலம் தொட்டு இன்று வரை..........

Thursday, December 10, 2009

கிறிஸ்மஸ் பரிசு .................

 கிறிஸ்மஸ் பரிசு .................

யாழ்  நகரத்தின் மையப் பகுதியில் இருந்து சற்று தொலைவில் அமைந்து இருந்தது . அந்தக்   கன்னியர் மடம்.  அங்கு இருபகுதிகளாக் பிரிக்க பட்டு பலகால்மாக இயங்கி வந்தது. இருப்பினும் சில ஆண்டு களுக்கு முன் படையினரின் அட்டகாசங்கள் குண்டு மழை போன்றவரால் சீர் குலைந்து . ஒரு சில மாதங்கள் தான் அது புனரமைக்க் பட அனுமதி பெற்று , ஆரம்பிக்க பட்டது . கடந்த கால் நடவடிக்கையில் குண்டுவீச்சுக்கும் கூரை சிதைவுகளுக்கும். கன்னியர்  மடங்கள் தேவாலயங்களும்விதிவிலக்காகவில்லை.


அந்த மடத்தில் , இப்போது தான் , சில புண்ணியவான்களின் நன் கொடையினாலும் தொண்டு ஸ்தாபனங்ளின்  உதவியாலும் சிறுக சிறுக கட்ட பட்டு கொண்டு இருக்கிறது.அண்மையில் பல வயதிலும் பெண் சிறுமிகள் சேர்க்க பட்டார்கள். ஆண்களுக்காக இதற்கு அடுத்த தெருவில் , மிக சிறு அளவில் சேர்ந்த பிள்ளைகளுடன் ஏற்கனவே இருந்த நிலையம் புனரமைக்க  படப் போகிறது. இந்த சிறுமிகளில் பலர் தாயையும் தந்தையையும் இழந்தவர்கள் ஒரு சிலர் தாயை இழந்தவர்கள் சிலர் உறவுகளால் சேர்க்க பட்டவர்கள். அவர்களுக்கான அடிப்படை உதவியுடன் முதலில் இங்கும் பின்பு அதனுடன் தொடர்பு பட்ட கல்விக்கூடத்திலும் வயதுக்கேற்ப சேர்க்க படுவார்கள். பல குழந்தைகள் போரின் அதிர்வில்  இருந்து முற்றாக  மீளவில்லை. ஆகக்குறைந்தது மூன்று வயதும் , கூடியது பதினெட்டு வயதுக்கும் உட்பட்டவர்கள். கன்னியர் மடத் தலைவி....அவர்களுக்கு கீழே ஒவ்வொரு பிரிவுக்கும் ஒவ்வொருவர் நியமிக்க பட்டிருப்பார்கள். சமையல் பகுதி ,படுக்கையறை . படிப்பறை ....போன்றவை.
இவர்களது அன்றாட பணிகள் திட்ட மிட்டு நேர ஒழுங்குக்கு அமைய வடிவமைக்க பட்டிருக்கும். காலை 5.45 க்கு துயிலெழுப்பி , காலைகடன் , காலை ஜெப வழிபாடு காலை உணவு அதன் பின் மிக சிறிய பணி .........உதாரணமாக் முன் முற்றம் கூடுதல் , சக நோயாள சிறுமிக்கு உதவி , காலை உணவு பின் பாடசாலை இவ்வாறே மாலையில் நாலுமணிக்கு பள்ளி விட்டதும் ,மீதி தொடரும். இடையில் மத்திய உணவுக்கு வந்து போவர்கள்.  வார விடுமுறையில் நேர அட்டவணை மாறும். மூன்று நாள் விடுப்பு வரும் போது சிலர் உறவினர் வீடுக்குபோவார்கள். சிலர் வந்து பார்ப்பார்கள். இவை போர்க்காலத்துக்கு முன் ஒழுங்காக நடக்கும்போது இருந்தவை. இப்பொது சற்று மாற்றங்களுடன் நடக்கின்றது.


அண்மையில் இந்த நிலையத்துக்கு சேர்க்க பட்ட மிக சிறுவய்துடைய சிறுமிகள்  தான் சூட்டி , சுதா . சுதாவுக்கு வயது ஐந்து சுட்டிக்கு மூன்று. இருவரும் தாய் தந்தையரை இழந்தவர்கள்.  அவர்களை ஆறு தல் படுத்தவே மிகப்பெரிய பாடாய் இருந்தது. சில வாரங்களே ஆகியிருந்தன. . இன்று உலகெங்கும் கொண்டாடப்படும் மார்கழி திருவிழாவை எதிர்பார்க்கும் , சிந்தனை.  ஆம் அங்கும் குழந்தை இயேசுவின் பிறப்பை எதிர்பார்கிறார்கள். மீட்பர் பிறக்க வேண்டும் மக்களுக்கு அமைதி  வாழ்வு கிட்ட வேண்டும். குண்டு மழை ....அழுகை ....இறப்பு ....அவலம் போன்ற வாழ்வில் இருந்து ம அதனால் ஏற்பட்ட தாக்கங்களில் இருந்தும்  விடுதலை வேண்டி நிற்கிறார்கள். அன்றைய தினம் , சிறுமிகளின் , தலைமை  கன்னி யாஸ்திரி (சிஸ்டர் )மரியா ..........சிறுமிகளை அழைத்து  படிப்பறையில் அமர செய்தார். பிறக்க இருக்கும் குழந்தை ஏசு தினத்தில் எல்லோருக்கும்பரிசு வழங்க படும் உங்களுக்கு தேவையானவற்றை எழுதவும் என்று சொல்லியிருந்தார்.  சிலர் எழுத்து பிழைகளுடன் தங்கள் விருப்பங்க்களை எழுதினார்கள். ( ஈழத்தில் பள்ளி க்கு போகும் நிலை இழந்ததால் கல்வி சீர் குலைந்து இருந்தது , போதிய உணவு பற்றாக்குறை பள்ளியில் மயக்கம போடும் நிலை , இப்படி பல பிரச்சினைக்கு மத்தியில் உயி ரைக்காக ஓடிக்கொண்டு இருந்தார்கள் )

சிஸ்டர் மரியா .........ஒவ்வொருவருடையவும் தாள்களை பார்த்தார்.எனக்கு பட்டுச்சட்டை வேண்டும்..........சுவிங்கம் வேண்டும்.  சயிக்கில் வேண்டும்  என் வீடுக்கு போகவேண்டும். அம்மாவை பார்க்க வேண்டும் ......இப்படி பல விருப்பங்கள் இருந்தன .  சூட்டி சுதாவின் முறை வந்தது. சுதா ...விடுபட்ட சில எழுத்துக்களுடன் ..........."எங்களுக்கு  அம்மாவும் அப்பாவும் மீளவும் வேண்டும்"   என் பொருள் பட எழுதியிருந் தாள் .  சிஸ்டர் மரியாவின் கண்கள். பனித்தன . எந்த பொருளையும் கடையில் வாங்கலாம். செல் தாக்குதலில் காலமாகி விட்ட அவர்கள் பெற்றாரை எங்கே வாங்கு வார்.............அந்த கன்னியர்கள் தாயாகவும் தந்தையாகவும் இருந்து முடிந்தவரை யில்  வளர்கிறார்கள். ஆனாலும் ......................

ஆசைபட்ட எல்லாத்தயும் காசு இருந்தால் வாங்கலாம் ..........அம்மாவை வாங்க முடியுமா? . என்ற பாடல் தான் நினைவுக்கு வருகிறது .

Thursday, December 3, 2009

குழைத்த சாதம் .......

குழைத்த சாதம் .........

ராசம்மா அன்றுமிகவும் பரபரப்பாக   இருந்தாள். மகன் வரப்போகிறான் என்று விதம் விதமாக் சமைத்தாள். ஆம் அவள் மகன்" ராசன் .....மத்திய கிழக்கு நாடொன்றிலிருந்து ஐந்து வருடங்களிற்கு பின் வருகிறான். அவளது நினைவலைகள் ஐந்து வருடங்கள் பின்னோக்கி  சென்றன.  அவனுக்கு வயது இருபத்தொன்று , அப்போது தான் படிப்பை முடித்தவன் . கிழக்கு மாகாண படையினரின் கெடு பிடிகளுக்கு  மத்தியில் வாழ முடியாதென்று  முடிவெடுத்து . வீட்டையும்  நிலத்தையும் அடகு வைத்து .மத்திய கிழக்கு நாட்டிற்கு சென்றான். அவனுக்கு மேலும் படித்து பல்கலைக் கழகம்  செல்லும் ஆவல் இருந்தாலும் ஊரின் நிலை அதற்கு இடங் கொடுக்க வில்லை . இராணுவத்தினரின் அட்டகாசம் அதிகரிக்க தொடங்கிய வேளை .அங்கு சென்றவனுக்கு அதிகம் படித்திராததால் ஒருகந்தோரில் எடு பிடி வேலை தான் கிடைத்தது . அதுவும் அவனுக்கு நல்ல காலம் இருந்ததால் தொடார்ந்து ஐந்து வருடங்கள் வேலை செய்ய கிடைத்தது அவனது அதிஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.  வேலை.யில் மிகவும் சுறு சுறுப்பாகவும் , பண்பாகவும் நடந்ததால் எல்லோருக்கும் பிடித்து போனது. மெல்ல மெல்ல வீட்டுக் கடனையும் அடைத்தான் .அவனுக்கு இப்போது வயது இருபத்தியாறு .

அவனுக்கு இரண்டு தங்கை மார். மூத்தவள் கலியாணத்துக்காக  காத்திருந்தாள். அவன் வீட்டையடைந்ததும் , உற்சாகமான வரவேற்பு காத்திருந்தது. ஊர்க்கதைகளில் இருந்து அவனது பள்ளி தோழர் சிலர் காணாமல் போயிருந்தனர். வேலை கிடைத்த பின் திருமணம் செய்வேன் என்று சத்தியம் செய்த காதலி ....இரண்டு குழந்தைகளுக்கு தாயாகி இருந்தாள். ஏற்கனவே ஒழுங்காக்கி  இருந்த மாப்பிள்ளைக்கு திருமணத்துக்காக தங்கைக்கு நாள் பார்க்க பட்டது. எல்லாம் சுபமே முடிந்தது. அவன் அதிகம் வெளியில் செல்ல விரும்பவில்லை  ஊர் மாலை  ஆறு மணி ஆகியதும் அடங்கி விடும். இன்னும் அவர்களின் அட்ட காசம் இருந்தது.

ஒரு நாள் இவன் திண்ணையில்  சாய்ந்து அன்றைய நாளிதழை புரட்டி கொண்டு இருந்த போது ....அம்மா  தேநீர் கோப்பையுடன் வந்தார். மெல்ல கதையை தொடங்கினார் . உனக்கு வெளிநாட்டுக்கு  போக உதவி செய்த , கொழும்பு மாமா தன்  மகளுக்கு உன்னை கேட்கிறார் என்றாள்.   இப்போது அதெல்லாம்   வேண்டாமம்மா . எனக்கு இருபத்தியாறு தானே .  அடுத்த தடவை வரும் போது பார்க்கலாம். இளையவளின் திருமணம் முடியட்டும் என்றான். அந்த வாரத்தில் வந்த ஞாயிறு சந்தையில் முன்னைய காதலி சுபாங்கியை சந்தித்தான் . முதலில் , ராசன் எப்படி இருகிறாய் .....என்றவள் , தான் சோக கதையை சொன்னாள் .அவன் வெளி நாடுக்கு சென்ற பின்  ராணுவ அட்டகாசம் தலைதூக்கி எல்லோர் வீடுகளிலும் , சோதனை என்றும் , விசாரணை என்றும் பெண்களை பிடித்து சென்றார்கள். தாய் தந்தைக்கு ஒரே மகளான அவளை அவர்கள் இழக்க விரும்பவில்லை என்பதால் , அவ்வூரின் கிராம சேவகருக்கு வாழ்க்கை பட்டாள். இரண்டாவது குழந்தை பிறந்த பின் , ஒரு நாள் விசாரணைக்கு அழைத்து சென்றவர்கள் இன்னும்அவரை விடுதலை  செய்ய வில்லை என்றாள். அவளது சோகம் அவனையும் தொற்றி கொண்டது.

அவனது தந்தை மீன் பிடி வள்ளங்களை   வாடகைக்கு விட்டு தொழில் செய்து வந்தார். கடலில் , கடற்படையினரின் , தொல்லைகளால் , மீனவர்களும் தொழிலுக்கு செல்வதில்லை . பலர் கடலில் மீன் பிடித்து  கொண்டு  இருந்த  போது காணாமல் போயினர். சில சமயம் வலைகளையும்  அறுத்து , பிடித்த  மீன்களையும் பறித்து சென்றனர். தமிழராய் பிறந்தமையினால் அவர்கள்  பட்ட் துன்பம் எழுத்தில்  எழுத முடியாது. அவன் மீண்டும் பயணமாகும் நாளும் வந்தது . மிகவும் சோகத்துடனும் , ஒருகடமை முடித்த திருப்தியுடனும் இருந்தான். மதியம் தாய் வகை வகையான் உணவு வகைகள் செய்தாள். தாயார் சாப்பிட அழைத்த போது , அவற்றை குழைத்து தரும் படி கேடான். வெளி நாட்டில் கிடைக்காதது  இது தானம்மா என்றான். அந்த குழையலில் இருப்பது அத்தாயின் உணவு மட்டு மல்ல உள்ளம். அன்பும் பாசமும் சேர்ந்து  குழைக்க பட்ட உணவு .........விடை பெறும் வேளை ..வீட்டு  வாயிலில் சுபாங்கி .........ஒரு சிறு பார்சலுடன் சின்னவனை இடுப்பில் இருத்தியவாறு ..............அவனுக்கு மிகவும் பிடித்த வளைய முறுக்கு செய்து  கொண்டு வந்திருந்தாள். எல்லோருடனும் விடை பெற்று புறப்பட்டான் . அவனுக்காக் அவனது உறவுகள் காத்திருக்கின்றன. இன்னொரு சேமமான வருகைக்காய் ........

வெளி நாட்டில்  தொழில் நிமித்தமாய் வாழும் .இளையவர்கள் , தனிமையிலும் பணி நிமித்தமாய் கஷ்டப்படாலும் .காத்திருப்பது .....சகித்து வாழ்ந்து கொண்டிருப்பது ....ஊரில் தனக்காக் வாழும் உறவுகளுக்காய்.   எனக்கு தெரிந்த மத்திய கிழக்கில் வாழும் சில நட்புகள் நினைவாய் எழுதியது .........உள்ளத்தை  தொட்டு சென்றால் ஒரு வரி எழுதுங்கள். .............

Monday, November 30, 2009

நம்பிக்கை ......

நம்பிக்கை  .........

குழந்தைகள் என்றாலே எனக்கு நல்ல விருப்பம் .நேற்று மாலை எனது கணவரின் மூத்த சகோதரி என் வீடுக்கு வைத்திருந்தார்.அவருக்கு மூன்று மக்கள். மூத்தவள் பெண் மற்றைய  இருவரும் ஆண் குழந்தைகள் மூத்தவன் யுனியிலும். இரண்டாமவன் கல்லூரியிலும் படிக்கிரார்கள் . அவருடைய மகள் வழி பேரன் மூன்று வயது .இவருடன் வாழ்கிறான். இவனது தாய் விரைவில் குழந்தை கிடைக்கக் இருக்கிறாள். பேரனும் இவரும் நல்ல நெருக்கம். கிழமை நாட்களில் பகுதி நேர  பள்ளிக்கு செல்வான். பின் பு அம்மம்மாவுடன்   ஒரே கொண்டாட்டம்.

அன்று காலையில் இவனை பள்ளிக்கு அனுப்பும் அலுவலில் இருந்திருக்கிறார் . இவன் காலயில்  டி வீ  யில் சிறுவர் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டிருகிறான். சிறிது நேரத்தில் டி வீ தடைபடவே . அம்மம்மா .........My T.V is not working ...........கொஞ்ச நேரம் காத்திரு என்று இவர் சொல்லி இருக்கிறார். மீண்டும் நஞ்சரித்து இருக்கிறான் . வழக்கமாக் "தடங்கலுக்கு வருந்து கிறோம் " என்று ஆங்கிலத்தில் போடுவார்கள் ஆனால் அன்று போடவில்லை. குழந்தை எழு நிமிடமாக் காத்திருந்து விட்டு .........மீண்டும் அம்ம்மாம்மா ..............வொர்க் பண்ணவில்லை என்று சொல்லியிருக்கிறான். அவரும் வேலையாக் இருந்தவர  ஜீசஸ் இடம்கேளு என்று சொல்லியிருகிறார். சில நிமிடங்கள் சத்தத்தை  காணவில்லை...........

அவர் வீட்டில்  இருந்த பூஜை  அறையில் இவன்.....கண்களை மூடியவாறே .......jesus give my t.v. back ........jesus give my t.v back ..இருகரங்க்கூப்பியவாறே ......திடீரென டி வீ வேலை செய்ய தொடங்கி விட்டது .......அம்மம்மா .............my t.v is back.........அம்மம்மாவுக்கு சிரிப்பு தாங்க வில்லை. அவனது நம்பிக்கையும் வீண் போகவில்லை...........

...இவன் வீடில் தமிழ் கதைத்தாலும் அங்குள்ள் பெரியவர்களுக்கு ஆங்கிலம் புரியும் என தெரியும் ஆங்கிலத்திலே தான் உரையாடுவான். சில சமயம் அரைத்  தமிழும் ஆங்கிலமும் கலந்து பேசுவான். . எப்டியாவது தனக்கு தேவையானதை பேசி சாதித்து கொள்வான்.  அம்மம்மாவும் தாயின் கவலை ....வரக்கூடாது என்பதால் அணைத்து இரு மொழியிலும் பேசுவார். சிலசமயம் தாய் வேண்டுமென்று அடம் பிடித்தால் யாரையாவது வரச்சொல்லி அத்தாயிடம் அனுப்பி விடுவார். இளம் வயதிலே கடவுள்  தருவார் என்ற நம்பிக்கை அவன் பிஞ்சு மனதிலே முளை விடும் என்பதில் ஏது வித ஐயமும் இல்லய். வருகிறது கிறிஸ்மஸ் பண்டிகை , இப்பவே ஆயத்தங்கள் ...........எதிர் பார்ப்புகள் பரிசுக்காக.

சின்ன சின்ன சந்தோஷங்கள் என்னையும் தொற்றி கொள்ள உங்களுடன் நானும்  பகிந்து கொள்கிறேன் . சந்தோஷத்துடன்...............


Sunday, November 29, 2009

நித்திலா .....தாயாகிறாள்

நித்திலா .....தாயாகிறாள் .

மானிட வாழ்வில் ஒரு பெண் ,திருமணமாகி தாய்மையடைவது இயற்கை தான். இதில் நித்திலா .....என் கதாநாயகி , அப்படி என்ன சாதித்து விடாள் என்று பார்க்கிறீர்களா ? அது தான் கதை ........கதையை வாசிக்க என்னுடன் தொடர்ந்து வாருங்கள்.

அழகான அமைதியான அந்த சிறு கிராமத்தில் ஒரே ஒரு செல்லமாக வளர்ந்தவள் தான் நித்திலா .....தாய் ...தலைமை ஆசிரியரான தந்தை இவர்களுக்கு குழந்தையாக சிறுமியாக ..செல்லமாக வளர்ந்தவள் தான் இந்த நித்திலா.....காலத்தின் கட்டளையோ , விதிவசமோ , கிராமத்தில் இருந்து ... இடம் பெயர்க்க பட்டு இலங்கையின் கொழும்பு மா நகரின் , ஒரு தொடர் மாடியில் வாழ்வை அமைத்து கொண்டார்கள். யாழ் இளம்பெண் கால ஓட்டத்தில் கல்வியில் தேர்ச்சி பெற்று ,வரு நாள் திருமண வயதை அடைந்ததும் அவளை தையல் சமையல் என்று அத்தனை கலைகளையும் பயிற்று வித்து அவளின் எதிர் காலம் வளமாக் அமைய காத்து இருந்தனர். பெற்றார். ஒரு நாள் மூவரும் கோவில் வழி பட்டு கொண்டு இருக்கையில் மகனுக்கு பெண் பார்த்து கொண்டு இருந்த ராஜ ரத்னம் தம்பதிகள் இவளைக்கண்டதும் இவளே தமக்கு மூத்தமருமகள் என தீர்மானித்தனர் .அவளது தன்னடக்கம் பணிவு அழகான் தோற்றம் அவர்களை கவர்ந்தது ஒரு நாள் பழக்கம் வீட்டுக்கு அழைப்பது வரையில் போனது . இரு குடும்பமும் பேசி கலந்துரையாடி உறவுகளை வளர்த்து கொண்டனர். மூத்த மகனுக்கு நித்திலா நிச்சயம ஆனாள் அவனும் வந்து பெண் பிடித்து போகவே கலியாணம் கோலாகலமாக நடந்து .....அவன் கனடாவின் மொன்ரியல் பகுதிக்கு வதிவிட உரிமை பெற்று அழைத்து கொண்டான்.

அன்பான நட்பான் தம்பதிகளாக் வாழ்ந்து வந்தனர். சில நெருங்கிய உறவுகளின் விசேடங்களில் காண்பதுண்டு . எல்லோரும் எதிர்பார்த்து போலவே அவர்களும் எதிர் பார்த்தார்கள். மாதங்கள் வருடங்களாக ஓடிக்கொண்டு இருந்தது .அவளுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவே இல்லை .அதுவே அவர்கள் வாழ்வில் பெரு ஏமாற்றமாக இருந்தது .வைத்திய உதவிகளும் நாடினார்கள். விசேடங்களில் கலந்து கொள்ளும் உறவுகளும் கேட்க தொடங்கி விடார்கள். இது நம்மவர் பழக்கமாச்சே . இதனாலோ என்னவோ . அவர்கள் விசேட நிகழ்வுகளில் கலந்து கொள்வதில் தயக்கம் காட்டினார்கள். அவர்களுள் ஒரு தாழ்வு மனப்பான்மை குடிகொண்டது .
என்ன குறையோ யார் குறையோ இதை நான் துருவி கேட்கவோ ஆராயவோ விரும்பவில்லை நீங்களும் கேட்க மாடீர்கள் தானே. அது அழகில்லை. அவனவனுக்கு ஆயிரம் பிரச்சினை. எல்லாவித வைத்திய உதவியையும் நாடியது உண்மை. சில சந்தர்பங்களில் ராஜ்குமார் நெருங்கிய உறவுகளிடம் "நான் அவளுக்கு குழந்தை அவள் எனக்கு குழந்தை என்பான் " ஆனாலு மனவருத்தம் அவர்களுக்கு இல்லாமலா இருக்கும் . இருவரின் பெறறா்களுக்கும் கவலை தான். சாடை மாடையாக கேட்டும் பார்த்தார்கள். இறுதியில் புரிந்தது கொண்டார்கள்.

இருவரும் தீர்மானித்தார்கள் கடந்த இரு வருடங்களுக்கு முன் முடிவெடுத்தார்கள் .அது தான் என்ன.....? கொழும்பில் ஒரு கிறிஸ்டியன் துறவிகள் நடத்தும் கைவிடப்பட்ட குழந்தைகளை நடத்தும் ஒரு நிறுவனமூலம் குழந்தை ஒன்றை தத்தெடுக்க ஆயத்தமானார்கள். சட்ட ஒழுங்குகள் ,அடிக்கடி கொழும்பு பயணம் என்று போய் வந்தார்கள். நான் கடைசியாக கண்டபொது ராஜ்குமாரின் தம்பி சொன்னான் "உங்களுக்கு ஒரு நல்ல சேதி எங்கள் குடும்பத்திலிருந்து வரும் " என்று உனக்கு கலியாணமா என்றேன் ...சிரித்து மழுப்பி விடான்.

எதிர் பாராமல் இரு வாரங்களுக்கு முன் வார விடுமுறையில் மொன்ரியல் புனித யோசெப் பேராலயத்துக்கு குடும்பத்துடன் போய் இருந்தேன். ஆலய வழிபாடின் போது ஒரு சிறு பெண் குழந்தையின் சிணுங்கல் என்னை திரும்பி பார்க்க வைத்தது . வழி பாடு நடந்து கொண்டு இருந்தது . இருந்தும் திரும்பி பார்த்து விடேன். அது ராஜ்குமார் .அவன் தோளில் ஒரு சிறு குழந்தை அருகில் நித்திலா பால் போத்தலை புகட்ட ஆயத்தமாகி கொண்டு இருந்தாள். வழி பாடு முடிய நேரில் கதைத்து உரையாடினோம் வரும்போது அவர்கள் வீடுக்கும் சென்று வந்தோம். எட்டு மாத குழந்தை ....என் மக்களுடனும் சேர்ந்து கொண்டது ...ராஜ் குமார் முகத்தில் மிகவும் மகிழ்வு காணப்பட்டது . நித்திலா எப்போதும் குழந்தையின் சிந்தனையாகவே இருந்தாள். கொடுத்து வைத்த குழந்தை நீரஜா ..........வரும் மார்கழி  முதல் வாரம் வீட்டில் பிறந்த நாள் வைக்க இருப்பதாகவும் , நித்திலா அவளது தனியார் பாடசாலையில் இருந்து மகப்பேற்று விடுமுறையில் இருப்பதாகவும் சொன்னாள்.  அது ஒரு யாழ்ப்பாணத்து தமிழ் தாயின் ஆறாவது குழந்தை எனவும் ,குடும்ப வறுமை காரணமாக் ,வட பகுதி கன்னியர் மட உதவி கேட்டு அக்குழந்தையை பெற்று கொண்டதாகவும்  .அக்குழந்தையின் நல்வாழ்வுக்கும் . குழந்தையற்ற தம்பதியரின் மகிழ்வுக்குமாக ...என்ற நல் நோக்கத்துக்கான முடிவு என்றும் சொனார்கள்.

இளம் பெற்றாருக்கு " இல்லை ஓர் பிள்ளை " என்ற குறை தீர்ந்தது . பெற்றால் தான் பிள்ளையா ? .அன்போடும்  பண்போடும் நல மனதோடும் பாசத்தை கொட்டி வளர்ப்பவளும் " தாய் " தான்......

கதை உண்மை. பெயர்கள் கற்பனை .............
-

Monday, November 23, 2009

தாயக கனவுடன் சாவினை தழுவிய ....

தாயக கனவுடன் சாவினை தழுவிய .....
..
கார்த்திகை இருபத்தியேழு  மாவீரர் தினம்.
மெளனமாய் அஞ்சலிப்போம்.....

முப்பது வருடங்களுக்கு மேலாக
எம்மை நாமே ஆளவேண்டும்
சகல உரிமையுடன் வாழ் வேண்டும்
என்னும் உன்னத நோக்கதுகாய்
"தமிழர் தாயகம் தமிழ் ஈழம்"
என்னும் தாரக மந்திரத  தோடு
சாவினை தழுவிய மா வீரர்களே

இறுதி போரிலே , கந்தக குண்டுகளின்
குண்டு மழையிலே சிதறுண்ட மக்களே
குற்றுயிரும் ..குறை உயிருமாய்
புதைக்க பட்டவ ர்களே ...நீங்கள்
மண்ணுக்காய் விதைக்க பட்டவார்கள்
விழி நீர் மழை சொரிய ,  நினைக்கின்றேன்
எத்தனை கனவுகள் ஆசைகள்
விருப்பங்கள் என்பவற்றை
மண்ணுக்காய் துறந்த மாவீரர்களே.
தாயாய் தந்தையாய் சகோதரியாய்
மனைவியாய்  மகளாய் மகனாய்
விதைபட்டவர்களே ஆறாது எம் துன்பம் ,

நீவிர் இலட்சியதுகாய் இறந்தவர்கள்
வல்லரசுகளின் உதவியாலும் வான் மீது
குண்டுகளாலும்அயல உறவு
குள்ள நரிகளின் தந்திரத்தாலும்
இலட்சியம் திசை மாற்ற பட்டாலும்
வீழாது ஒரு போதும் ஈழத்தமிழனின் உறுதி
காலங்கள் மாறும் காட்சிகளும் மாறும்
என்றோ ஒரு நாள் தோன்றும் தமிழ் ஈழம்
இது  மாவீரரின் ரத்தப் பழி .ஈழ மக்களின்
இலட்சிய கனவுகளின் கோட்டை
நிறைவாகும் ஒரு நாள் சத்தியம் உமது  கல்லறை மீது

Tuesday, November 17, 2009

பிடித்தவர்கள் ..........பிடிக்காதவர்கள் பற்றிய தொடர் பதிவு ..........

பிடித்தவர்கள் ..........பிடிக்காதவர்கள் பற்றிய தொடர் பதிவு .........

கிட்ட தட்ட இரு வாரங்களுக்கு முன்  பதிவுலக நண்பர் ராஜ ராஜன் என்னையும் ஒரு பதிவு போடும் படி அழைத்து இருந்தார்.........எனக்கு உடல் நலமுமில்லை . எழுதும் மன நிலையும் இல்லை இருபினும் இன்னும் காலம் தாழ்தல் ஆகாது என்பதினால் இன்றாவது ஒரு பதிவு போடுவோம் என உடகாந்தேன்.

தொடர் பதிவின் விதி முறைகள்.

  • (1)தமிழக பிரபலங்களாக இருத்தல் வேண்டும் 

  • (2)இரண்டு முதல் ஐந்து பதிவரை அழைத்தல் வேண்டும். 

  • (3)எழு முதல் பத்து கேள்விகளுக்கு விடையாக   இருத்தல் வேண்டும். 

அரசியல் வாதிகள். 

பிடித்தவர் .........இதுவரையில்லை
பிடிக்காதவர் ....கலைஞ்சர் ( ஈழ தமிழ் மக்கள் விடயத்தில் , எவ்வளவோ
எதிர்பார்த்தோம் )
நடிகர்கள் 

பிடித்தவர் .........கமல் ....விக்ரம் ...பாரத ....சூர்யா ( சில நல்ல படங்களுக்காக)
பிடிக்காதவர்கள். ..........சொல்லும்படியாக இல்லை
கவிஞ்சர் .......

பிடித்தவர் ........பாரதி
பிடிக்காதவர் .........அதிகம் தெரியாது.
 இயக்குனர் .........

பிடித்தவர் ....பாரதிராஜா ,,,,,,,,கே.எஸ் .பாலசந்தர் ( சில் படங்களுக்காக)
பிடிக்காதவர் .....அறியப்படவில்லை
நடிகை 

பிடித்தவர் .........மனோ ரமா
பிடிக்காதவர் .... ஒவ்வொருவரும் ஒரு வகையில் பிடிக்கும்

இசையமைப்பாளர் 

பிடித்தவர் ..........நம்ம பிரபலம் எ ஆர் ரகுமான்
பிடிக்காதவர் ........சொல்ல தெரியவில்லை.
எழுத்தாளர் 

பிடித்தவர் ..........இப்போது வாசிக்க நேரம் வாய்ப்பு இல்லை. 
பிடிக்காதவர் .......குறிப்பிட்டு சொல்ல தெரியவில்லை

நான் அழைப்பது ...........நேரமும் எழுதும் திறனும் இதை தொடர விரும்பும் பதிவுலக நண்பர்களை . நன்றியுடன் நிலாமதி

Tuesday, November 10, 2009

கடைசி வரை யாரோ ?

  நாட்டின்   தலை  நகரில் ஒரு பிரபல் மருத்துவமனை . அந்த மருத்துவ மனைக்குரிய தோற்று நீக்கி நெடி ......மருத்துவமனையின் நடை பாதையில் மனிதர்களின் நடமாட்டம். ..எல்லோரும் பரப்பரபாக் ஓடிக்கொண்டும் நடந்து கொண்டும் இருந்தனர் ....வைத்தியர்கள் .. தாதியர்கள். நோயாளர் காவு வண்டிகள். சக்கர நாற்காலியில் சிலர். ..நோயாளரைக் காண வரும் உறவுகள் பலர் . பார்வையாளர் நேரத்தில் வரும்  சிலரை வேடிக்கை பார்த்த வண்ணம் அவர் இருந்தார். .ஞானரட்ணம் ஐயாவுக்கு மட்டும் யாரும் பார்க்க வருவதாயில்லை .

அவரது நினைவலைகள் பின்னோக்கி சென்றன. அவர் தலை  நகரில் ஆடை தைத்து கொடுக்கும் ஒரு நிறுவன் மேர்பார்வையாளராக் இருந்தார். காலக்கிரமத்தில் அவர்க்கும் திருமணம் நடந்தது . மனைவி இரு குழந்தைகள். இவர் விடுப்பு கிடைக்கும் போதெல்லாம்  வந்து ஊரில் இருக்கும் மனைவி பிள்ளைகளை பார்த்து செல்வார். ஏனோ சில் காலமாக் அவர் வரவு குறைந்தது .......கணவன் மனைவிகிடையில் பிரச்சினை என்று பேசிக்கொண்டார்கள். இருவரும் ஆண் குழந்தைகள். அவர்கள் கல்வியிலும்  சிறந்து விளங்கினார்கள். மனைவியே தாயாகவும் தந்தையாகவும் இருந்து வளர்த்தெடுத்தாள்.

அவர் வரவு இல்லாவிடாலும் மாதாந்தம் அவள் பெயருக்கு காசோலை வரும் . சில பள்ளி விழாக்களில் , அறிவு தெளிந்த மூத்தவன் கவலைப்படுவான் மற்ற் பையன் களுக்கு அப்பா வருகிறார் . எனக்கு அப்பா  வருவ தில்லையே   என்று . ஊராரும் கேட்டு களைத்து விடார்கள். அவருக்கு வேறு பெண் இருப்பதாகவும் பேசிக் கொண்டார்கள். ஆரம்ப கல்வி முடிந்ததும் பெரியவன் மேற்படிப்புக்காக் அயலிலுள்ள , நகரத்துக்கு படிக்க சென்றான். அவன் அங்கேயே தங்கி படிப்பதால் , மேலதிக செலவை தகப்பனிடம் கடிதம் மூலம் கேட்டு வாங்கினான். வருட இறுதி , நீண்ட நாள் விடுமுறை வரும் போது , தம்பியையும் அழைத்து கொண்டு தலை  நகருக்கு தந்தையிடம் போய் விடுவான். ஒருவாறு , மேற்படிப்பும் முடிந்து ,தலைநகரில்  ஒரு வேலையும் பெற்றான். இப்படி இருக்கும் காலத்தில் அவன் நண்பர்கள் வெளி நாடு சென்றனர். அதற்கும் , தந்தையிடம் கேட்டு , பணம் பெற்று , வெளி நாடு சென்று விடான்.

அண்ணவை தொடர்ந்து தம்பியும் சென்று விடவே .ஊரில் தாயார் தனித்து விடபட்டார்.  காலகிரமத்தில் அண்ண தான் விரும்பிய் பெண்ணயும் கலியாணம் செய்து குடியும்  குடிதனமும் ஆனான். இளையவன் தாய் மீது மிகுந்தா  பாசம் உள்ளவன்.  காலக்கிரமத்தில் இளையவன்  பல சிரமத்துக்கு மத்தியில் தாயாரை தன்னுடன் அழைத்து கொண்டான். எல்லோரும்  வாழ்க்கையில் , வளமாகவும் நலமாகவும் வாழ்ந்தனர். சில வருடங்கள் செல்ல தந்தை நோய் வாய் பட்டார். அவரது சேமிப்பு செலவழிந்தது . இப்போது பிரச்சினை தலை  தூக்கியது.  நோய் வாய்ப்பட்ட  தந்தையை யார் கவனிப்பது. ? இதற்கிடையில் , இளையவன் தன் குடும்பத்துடன் தந்தையை பார்க்க சென்ற போது . அவருக்கு சொந்தமாக் இருக்கும் தலைநகரத்து வீட்டை  தன் பெயருக்கு எழுதி கொண்டான். அண்ணா தம்பியருக்கிடையில் பிரச்சினை .யார் தந்தையை பார்ப்பது என்று. தாயை நான் பார்க்கிறேன் நீ தந்தையை பார் என்று தம்பியும்..........உனக்கு தான் வீடு தந்தார் நீ தான் பார்க்க வேண்டுமென்று அண்ணாவும் சண்டை........ஒருவாறு , உறவினர்கள்  சமாதானம் செய்து இருவரும் தந்தையை ஒரு தூரத்து உறவினர் உதவியுடன்,  சிறிது பணம் அனுப்பி ........ஒரு  நோயாளர் பராமரிப்பு இல்லத்தில் சேர்த்து விட்டனர்.

ஐயா ஞானரட்ணம் , பார்த்து கொண்டிருக்கிறார். தன் தள்ளாத  வயதிலும் மூத்தவன் வரானா? இளையவன் வரானா? என்று ......பெற்ற  தந்தையை , பிள்ளைகள்  படுத்தும் பாடு .......வெளி நாட்டு வாழ்க்கை .....அன்பு இல்லாத மனைவி .......முதியோர் இல்லங்களில் , பெற்றவர் வாடுவது நோய் துன்பத்தால் மட்டும்  மல்ல அன்பு அற்ற  , பாசம இல்லாத  பிள்ளிகளின் மனப் போக்காலும் தான் ...இவர்கள் முதுமை அடையும் போது ( பிள்ளைகளாய் இருந்தர்வர்கள் ) இவர்கள் நிலை என்னவோ ?.........வீடு வரை உறவு  ...வீதி வரை மனைவி ....காடு வரை பிள்ளை ....கடைசி வரை யாரோ ? ..

Wednesday, November 4, 2009

நெஞ்சு நிறைந்த சோகமும் ,நிம்மதியற்ற வாழ்வும்.........

கால ஓட்டத்தில் பிறந்தது கார்த்திகை .........
மழைக்கால ஆரம்பம் ,மண்   மீது தூறல்கள்
ஒவ்வொரு இதயத்திலும்  இனம் தெரியாத சோகங்கள்.
மத நம்பிக்கையில் கார்த்திகை மறைந்தவர்களுக்கானது
ஈழத்து மக்களின் , வீர வேங்கை களின் நினைவுகளும்
பிறந்த தினமும் ஒரு சேர  மகிழ் வுற்றா ஒரு பொழுதும்
மண் ண்ணில் விதைத்த  மா வீரருக்காய் ,
என்  இதய மெளனங்கள் கண்ணீர் சிந்தும் ஒரு நொடி.

எத்தனை  எதிர் பார்ப்புக்களுடன் மண் சென்ற வீரர் ...
கார்த்திகை தோறும்  கல்லறைத் தீபங்கள்.
மலர்களுடன் , கண்ணீர் அஞ்சலிகள்
இறுதிப் போரிலே , மண் சென்ற மக்களே
சிந்திய  குருதியாறே..சீறிப் பாய்ந்த கந்தக குண்டுகளே ....
சிந்துகின்றோம் கண்ணீர் , சிந்தையிலே துன்பங்கொண்டு
மண்ணுக்காய் மரணித்த  மக்களிற்கு நித்திய  சாந்தி கொடு ........

 ஐயோ என்ற அவலைககுரலை ஐ நாவும் கேட்கவில்லை
ஆறுதலும் தரவில்லை , அயவலன் கூட அடக்க ஆள் அணி
கொடுத்தானே ஒழிய யாருமே ஏனென்று கேட்கவில்லை ..
எங்களை வைத்து அரசியலா? அனாதையாய்  போனதா தமிழ் இனம்.
நெஞ்சு நிறைந்த சோகமும் ,நிம்மதியற்ற  வாழ்வும்
சமூக சீரழிவும் , அகதி வாழ்வும் தான் எஞ்சியதோ ?
மீளுமா தமிழ் இனம் , தளிர்க்குமா எம் இனம்?


வாழ நினைத்தால் .வாழலாம்

வாழ நினைத்தால் .வாழலாம்

.வாழ்க்கை ....(..வா +..வாழ் .+..வாகை ...)

வாழ்க்கை  ........என்ற சொல்லை நினைக்கும் போது முதலில் வா என்கிறது .பின் வாழ் ....என்கிறது.அதற்கும் பின் வாகை அதாவது வெற்றி வாகை சூடி நீயும் வாழு என்கிறது.என்ன அழகான தத்துவமுத்துக்கள்.அவனும் வாழ தான் நினைத்தான்.

ராகவனுக்கு வயது நாற்பது ,வைத்திய சாலைக்கு   உரியஅந்த நெடி ...அவனுக்கு பழக்கமாகி இருந்தது, முழங்கால் சத்திர சிகிச்சைக்காக படுத்து இருந்தான்,அவன் மனம் பலவாறு சிந்தித்தது .தனிமையும் அமைதியும் மனதின் ஆழத்தை ஆராய சிறந்த இடம் என்பார்கள். அன்பான மனைவியும் மகனும் வீடில் , அவள் வர மாலை ஐந்து மணியாகும்.இவனுக்கு மறுபக்கத்தில் உள்ள கட்டிலில் நேற்று இரவு ஒரு விபத்துசம் பவதுக்காக் அவனைஅனுமதித்து இருந்தார்கள் .அவனது மறைப்பு போடப்பட்டு இருந்த தாலும்,அதிக நேரம் அவன்தூங்கியதாலும் அவனை தொடர்பு கொள்ள முடியவில்லை . நாளை காலையில் விசாரிக்கலாம்என்று இருந்து விட்டான்,ராகவன்.

சில மாதங்களாக அவனது வலது முழங்கால் மிகவும் வலி கொடுத்ததால் வைத்தியரிடம் போய்வருவதே அவன் முதல் வேலையாக இருந்தது. இறுதியாக எதற்கும் குணமாகாமல் ஒரு சத்திரசிகிச்சை செய்ய வேணும் என்று டாக்டர் சொல்லியிருந்த தால்  இன்று அவன் வைத்திய  சாலைக்கட்டிலில் ..நாளை மறு நாள் சத்திர சிகிச்சை . அவன் வாழ்கையே வெறுத்த ஒரு நிலைக்குபோய் இருந்தான். காரணம் அவனுக்கு சர்க்கரை வியாதியும் இருந்தது. புண் ஆறுமா ,தொற்றினால் (infection) அவதி பட வேண்டுமா என்று எண்ணிய படியே நித்திரையாகி விட்டான்.

மறு நாள் விடிந்தது .மனைவி மாலா பழங்களும் .மாற்று துணி களும் கொண்டுவந்து வைத்து விட்டு போயிருக்கிறாள்.தாதி மார் வந்து அன்றாட கடமைகளைசெய்து விட்டுபோயிருந்தனர் .அயலில் உள்ள கட்டிலில் பேச்சு குரல் கேட்கவே அவன் அவனது உதவி ஆள் மூலம் அறிந்ததில் இருந்து ....பக்கத்துக் கட்டில் .நோயாளி இருபதுவயதானவன் என்றும் விபத்தினால் இடது முழங்க்காலோடு அகற்ற பட வேண்டும் என்றும்அறிந்து கொண்டான்.

அப்போது தான் அவன் நினைத்தான் நான் நாற்பது வயது வரை வாழ்ந்துவிட்டேன்இவன் இன்னும் வாழ்கையின் இன்பங்களை காணாத வயது.... இவனை யார் மணமுடிப்பர்கள் ?கால் இழந்த ஒருவனை ?  வாழ்வின் இன்பங்களை இளமையின் சந்தோஷங்களை , இழந்து விட போகிறான் என்று.பலவாறாக சிந்தைகளை ஒடவிடான்.  எனக்கோ காலில் சத்திர சிகிச்சைஅவனுக்கோ.... இடது காலையே   எடுக்க போகிறார்கள். இறைவா என்ன சோதனை ...

கடவுள் தந்த அழகிய வாழ்வை , வாழ எவ்வளவு எதிர் நீச்சல் போட வேண்டியிருக்கிறது. அப்போது வான் அலையில்ஒலிக்கிறது .......

வாழ நினைத்தால் வாழலாம் ..
.வழியா இல்லை பூமியில் ..
ஆழக் கடலும்சோலையாகும்

ஆசை இருந்தால் நீந்தி ....வா.........