Followers

Monday, August 9, 2010

தொடர் பதிவு.

வலையுலக் சக பதிவர் முனியாண்டி பெருமாள் ....அழைத்தமைக்கு ஏற்ப இதை தொடர்கிறேன்.


(1) வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
 
(2) அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா? இல்லை எனில் பதிவில் தோன்றும் பெயரை வைக்க காரணம் என்ன?

தோன்றும் பெயர் ....நிலாமதி (புனை பெயர் ).....பெயர் வைக்க காரணம்.

 தாயகத்தில் என் நண்பியின் பெயர்.


(3 ) நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி....

யாழ் களம் என்னும் வலைத்தளத்தில்  உறுபினராக் இருக்கிறேன். அங்கு தான் தமிழ் எழுத கற்றுக் கொண்டேன். பின்பு நிறையவே தமிளிஷ் இல் வாசிப்பேன் அந்த முயற்சி என்னை வலைப்பதிவு தொடங்கக் காரணமானது. .

(4) உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்ன வெல்லாம் செய்தீர்கள்.....
 
எதுவுமே செய்யவில்லை .  தமிளிஷ் இல் என் பதிவு வந்தது. அதிகம் தமிழ் நாட்டு நட்புகள்  கருத்து சொன்னார்கள்.

(5) வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா? ஆம் என்றால் ஏன்? அதன் விளைவு .என்ன? இல்லை  என்றால் ஏன்...........

பகிர்ந்து கொண்ட துண்டு.. என் வாழ்வே ஒரு பாடம். பெயர்களை மாற்றி கதைகளாக்  எழுதியுள்ளேன். மற்றும் நான் காணும் நண்பர்களின் வாழ்க்கை சம்பவங்களையும் எழுதினேன். ஒருவருக்கு ஏற்பட்ட் அனுபவங்களை பகிரும் போது மற்றவர்களுக்கு பாடமாக் அமையம் . என்  மனப்பாரம் சற்று குறையும்.

.(6) நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா..........

பதிவுகள் ஒருவகை ஆத்ம திருப்தி ...பொழுது போக்கு தான்.

(7) நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன.......

..ஒன்றே ஒன்று ...நிலாமதியின் பக்கங்கள். என்பது தான்.

(8) மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம் அல்லது பொறாமை ஏற்பட்டது உண்டா? ஆம் என்றால் .யார் அந்த பதிவர்.........

..யார் மீதும் கோபம் இல்லீங்க. பொறாமையும் இல்லீங்க.

(9) உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்? அவரைப் பற்றி, அந்த பாராட்டைப் பற்றி.....

சீமான் கனி ...ஈரோடு கதிர் ...சந்துரு.......என்பவார்கள் என் வளர்ச்சியை ஊக்குவிப்பவர்கள். சீமான் கனி ...பிழைகளை சுட்டிக் காட்டுவார். வேண்டுமென்று எழுத்துப் பிழை விடுவதில்லை கணனி சதி செய்வதுண்டு. மற்றும் அவசரம்..மீண்டும் வாசித்து திருத்துவதில்லை. பல நட்புகளை பெற்றுக் கொண்டேன். பாராடுக்களயும் பெற்றேன்.

(10) கடைசியாக...விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்...

புலம் பெயர்ந்து வாழும் ஈழத்துப் பெண. தாயகத்தை பிரிந்த வலி  இன்றும்  உண்டு. தாயகத்தில் வளமாக் வாழ்ந்தேன். பல சோதனைகள் சோகங்கள் உண்டு. என் இளமைக்கால் எழுத்து திறமைகள் இப்போது தான் ..வெளியிட களம் அமைந்தது .
இனிய ஒரு பொழுது போக்கு . கண்ணியில் சில  நுட்பங்க களை  தெரிந்தேன் இன்னும் நிறையவே அறியவேண்டும்.  என்னுடைய பதிவுக்கு பதில் கருத்து கூறி நட்பு பாராட்டும் அத்தனை உள்ளங்களுக்கும் நன்றி.

நான் யாரையும் வலிந்து அழைக்க வில்லை. இன்னும் யாராவது பதிவு ( தொடர் பதிவு ) போடாதவர்கள் இணைந்து கொள்ளுமாறு அழைக்கிறேன்.

Friday, August 6, 2010

பிரதி பலன் .......


பிரதி பலன்


     காலம் செய்த கோலம் . தாயகத்தில் இருந்து  அதிகம் பேர் உள நாட்டுக் குழப்பங்களால் அகதிகளாக் வெளி நாடு சென்றனர். ராஜ சுந்தரம்  குடும்பமும் விதி விலக்கல்ல . அவரும் குடும்பத்துடன் புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டிருந்தார். இரு மகன்களும் பள்ளியில் பயின்றனர் .பிள்ளைகளின் தேவைகளை சமாளிக்க் முடியாமலும் வாடகைப்பணம் அதிகமானதாலும் இரண்டு வேலைக்கு சென்றார்.  ராஜ சுந்தரம். . பகலில் ஒரு கார் கம்பனியிலும் மாலை  நேரங்களில் ஒரு உணவு விடுதியிலும். வேலை செய்து இரவு பத்து மணியாகும் வீடு வந்து சேர .அத்தோடு வெளி  நாட்டு வாழ்வுக்கே உரிய கால  நிலை மாற்றங்களும் அவருக்கு வாழ்வில் வெறுப்பை தந்தது. இருந்தாலும் மகன்களின் எதிர்கால் வாழ்வை எண்ணி

Wednesday, August 4, 2010

தாய்மை...அன்று ஒரு நாள்

 
தன் முதற் பேறாய் என்னைக்  கருவுற்ற வேளை
உமிழ் நீரால் வாய் நிறைந்திருந்த காலை
மாமியார் வீட்டு மாங்காய் ருசித்தது
பால் பழமும் கசந்தது ,புளியங்காய் சுவைத்தது

காலப்போக்கில் உதரம்(வயிறு) சற்றே பருத்து
அயலவர்க்கு அடையாளம் காட்டியது
முன் வீட்டு மாமியின் புளிக்கஞ்சி தேனானது
மாசம் ஆக புரண்டு படுக்க இடைஞ்சலானது

முருங்கைக் கீரை சத்துணவானது
எட்டி நடக்கையிலே இளைப்பு தோன்றியது
இளம் வெந்நீர்க் குளியலில்  உடல் சிலிர்க்கையில்
 குழந்தை நான் உள்ளிருந்து உதைத்த போது

என் தந்தை என்னே தாய்மை என்றார்
எண்ணி ஒன்பதாம் மாதம் முடிவில் 
நாட்கள் எண்ணும் வேளை தன்னில்
இடுப்பு வலியும் சேர்ந்து அடி வயிறு வலியெடுக்க 

அரசினர் வைத்திய சாலைக்கு அவசரமாய்
கார் பிடித்து ஓடினாள் .வேளை வந்ததென்று
மருத்துவிச்சி உதவியுடன் மகவு நான் வந்த போது
மட்டில்லா மகிழ்வு கொண்டு மகனாக் வந்துதித்தேன்

என் முகம் கண்ட பாட்டி ..என் குல விளக்கு என்றாள்
சாண் பிள்ளையானாலும்  ஆண்  பிள்ளை என்றார் அப்பா
உற்றாரும் உறவும் கூடி ஆராரோ பாடி ..
அம்மாவின் அமுதம் சுவைத்து

மெதுவாய் கண் விழித்து அம்மா மார் தடவ
அன்போடு ஊட்டினாள் ..தன் ரத்தம் பாலாக
ஒவ்வாத உணவுகளை விலக்கி வைத்தாள்
மாந்தம் வருமென்று மாம் பழம் விலக்கி

பாற் பல்லு  முளைத்தும் குறும்பன் நான்
குறும்பு செய்ய ..தடை போடாள் வேப்பென்னையுடன் .
.பல் வேறு உணவுகளும் பழக்கிய பின்
தவனம் தீரவில்லைஉறங்க  அணைக்கையிலே

பால் குடி மறக்க வைக்க பாட்டி  துணை வந்தாள் ...
அன்றைய என் தாய் எங்கே ...இன்றைய அவசர் உலகில்
நவீன நாகரிகத்தில் ...பால் புட்டி துணை வர
பாடுகிறது பாட்டுப்பெட்டி ஒரு தாலாட்டு பாடல் ....


குறிப்பு....

                 .மாந்தம் ..(ஒருவகை  வயிற் றோட்டம்)
                 மருத்துவிச்சி ....மருத்துவமாது ..(.இவரால்
                 முடியாவிடால் தான்  மருத்துவர் , வருவார். )
                
                  தவனம்....ஒருவகைத்தாகம் .

Tuesday, August 3, 2010

தாய்மை

தாய்மை

அந்த சிறு கிராமத்துக்கு ஆசிரியப்பணி நிமித்தம்  மாற்றலாகி வந்து ஒரு வாரம் இருக்கும். வசுமதி தன் கைக் குழந்தை சுதாகரனோடு  தன் தாயார் வீடு நோக்கி   பட்டணத்துக்கான   பஸ் வண்டியில் ஏறினாள். அது ஒரு இரு மணி நேர பயணம் சற்று  கூடலாம் அல்லது நேரத்துக்கு போய் சேரலாம். சரியான் ஜன நெரிசல். ஒருவாறு இருக்க இடம் கிடைத்து டிக்கட் எடுத்து குழந்தையை மடியில் வைத்து நித்திரையாக்கி னாள்.  ஒரு  மணி நேரத்துக்குபின  பஸ் வண்டியின் தாலாட்டில் உறங்கிய நம் சின்ன வாண்டுபயல்  எழுந்து விடான். அவள்  புட்டியில் இருந்த கொதித்தாறிய நீரை பருக கொடுத்தார் அதை  சப்பி குடித்தவனுக்கு அடங்க வில்லை. தாயின் அணைப்பு வேறு அவன் தாகத்தை தூண்டவே ..அடம்பிடித்து அழுதான். வண்டியில் இருந்தவர்கள் .... கொஞ்சம்காற்று  வரட்டும் "விலகுங்கப்பா " என்று சத்தமிட்டனர்.    அப்போதும் அவன் அழுகை அடங்க வில்லை ....Èபாலைக் கொடும்மா"  என்றனர் பெண்கள்ளில் பாட்டி  வயதானவர். முதற்குழந்தை அவள் வெட்கப்பட்டாள்.  ஆண்கள் வேறு உற்றுப் பார்த்துக்கொண்டிருந்தனர்...

இளம் தாய் ..மிகவும் சங்கடபட்டாள். . அவர் சாரியும் பிளவுசும் அணிந்து இருந்தார்....ஒருவாறு சுற்றும் முற்றும் பார்த்து விட்டு குழந்தையை மெல்ல  அணைத்து சேலைத் தலைப்பால் அவனை மூடி ..மெல்ல பிளவுஸின் கொக்கிகளை .....( hook ) தளர்த்தினாள். அவளையே குறு குறு என் பார்த்து கொண்டிருதவார்களின் கண்கள் மறு திசை நோக்கி பார்த்தன...ஒரு கையால் அணைத்து மறு கையால் தட்டி தட்டி உறிஞ்சத் தொடங்கினார். நம் கதா நாயகன். அழுகை ஓய்ந்த திருப்தியில் அத்தனை பயணிகளும்.  நிம்மதிப் பெரு  மூச்சு விட்டனர்.

அந்தக் காலத்தில் குழந்தைகள் தாயப்பாலையே  நம்பி வாழ்ந்தனர். இந்தகாலத்தில் பெண்களின் ஊட்ட சத்து குறைவோ என்ன காரணமோ பால் சுரப்பு சிலருக்கு போதியதாக் இருப்பதில்லை. பலருக்கு வேலைக்கு போகும் அவசரத்தில், புட்டிபால் கொடுகிறார்கள் சிலர் ....அது ஒரு நாகாரிகமாகவே கருதுகிறார்கள். தாய்பால் தான் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியுள்ளது . கண்டிப்பாக  ஆறு மாதங்களாவது கொடுக்க படவேண்டும். தாய்க்கும் குழந்தைக்குமான் பிணைப்பு கூடும். இயற்கையான கருக் கொள்ளுங்காலம் பின் போடப்பட்டு தாயும் சேயும் ஆரோக்கியமாக் இருப்பார்கள். தாயையும் தாய்மையையும் மதிப்போம்.

Saturday, July 24, 2010

வேதனை தான் வாழ்க்கையா?

தாயொருத்தி பெற்று விட்டாள் தலை மகனாக ..
துள்ளித்   திரிந்து பள்ளிப்படிப்பும் முடித்து .
கெட்டும் பட்டணம்  போ என ஆன்றோர் வாக்கு
சிரமேற்கொண்டு தொழில் தேடித் புறப்பட்டான்
ஓரளவு இருபாஷைகளின்  அறிவு இருந்ததலால்
தொழில் துறையும் கிடைத்தது. காலங்கள் கடந்து போக ..
 வாலைப்பருவமதில் வகையாக் வாழ்வதற்கே
மங்கை நல்லாள் வளைக் கரம் பிடித்தான் .
வஞ்சகமின்றி வாழ்கையில்  நான்கு கண்மணிகளை
 வகைக்கு இரண்டாக் . நலமுடன்  பெற்றான்
மங்கை நல்லாள் வளமுடனே வாழ்கையில்
 பணியிட  மாற்றம் பெற்று தொலை தூரம்  போக
இட்டனர் கட்டளை ,வகை தெரியாது கலங்கிய தலைவன்.
 கொண்ட பணி சிரமேற் கொண்டு .இடம் மாறிச் சென்று
 பணி புரியும் காலத்தில் வஞ்சகர் சேர்க்கையால்
பணியிடம் பதவி ..பறி போயிற்று ..

வாழ்வுக்கு வகையின்றி தள்ளாட
வாழ்க்கை  பெரும் பாறாங்கல்லாயிற்று
மங்கை நல்லாள் காணி பூமி நகை நட்டு கடன் பட்டு ...
வெளி நாடு அனுப்பி வைத்தாள். திரவியம் தேட
 புறப்பட்ட கப்பல் சூறாவளிக்குட்பட்டு ..திசை மாறி போனது..
சிலர் மாண்டனர் பலர் உயிர் கண்டனர்.
 புகலிடம் பெற்றனர் வெள்ளைக் கார  நாட்டிலே
அகதி அந்தஸ்தும் சிலருக்கு கிடைத்தது
பாவி இவன் வாழ்வு .பல் கேள்வி பதில் சொல்லி
பலனேதும்ற்று புகலிடக் கோரிக்கை  புறக்கணித்தாயிற்று
பணிபுரிய முடியவில்லை திரும்பி போக மனமில்லை .
 மங்கை நல்லாளும் மணியான் குழந்தைகள் நான்கும்
கடன் சுமையால் இருந்த வீடும் ஏலம் போனது.
வாடகை குடியிருப்பில் வாடினாள் பெண்ணவள்.

உற்றாரும் சக் உறவும் எது வ்ரை உதவுவார்
கொண்டவன் கோலமும  அலங்கோலமாய் ஆனது .
குடியும் மன நிலையும் குழம்பியது இறுதியில்
 சித்தம் கலங்கி தஞ்சமானான்  மருத்துவ மனை .
.வழியேதும் இன்றி வாடுகிறான். தனிமையில்
 தனிமை ஒருபுறம் பிரிவு மறு புறம் ...
மாறுமா வாழ்க்கை வராதா ஒரு வாழ்வு ............

குறிப்பு ": புலம் பெயர்ந்த் ஒரு ஈழத்தவனின்  வாழ்வு....(கேட்ட கதை )
 .கதையா ?கவிதையா...?...நீங்கள் தான் சொல்லணும். ...

Wednesday, July 21, 2010

எனக்குமொரு சைக்கிள் வண்டி ...........



சென்ற வார இறுதியில் ...என் உறவினர் வீட்டுக்கு சென்று இருந்தேன். அவர்களுக்கு ஆறு  வயதில் ஒருசிறுவனும் ..எழு மாதத்தில் பெண் குழந்தையுமாக் நால்வரும் வாழ்கிறார்கள். தந்தை மனோகரன் .. குழந்தைகளில் மிகவும்நேசம் மிக்கவர். என்ன குறும்பு செய்தாலும் பொறுத்துக் கொள்வார். தாயார் சற்று கண்டிப்பானவர். ஏதும் தப்பு  செய்தால் ஒரு மூலையில் இருத்தி விடுவார். அவ்வபோது அகப்பை காம்பு ..காட்டப் படும்  ஆனால் அடிக்க மாட்டார். அமைதியாக் இருக்க தண்டனை கொடுப்பார். இப்போது கோடை காலம் ..தந்தை வேலை முடிந்து வீடு வந்ததும்..வெளியில் பார்க்கில் உலாவ செல்வார்கள்.( என் செல்லம்) மாதுளனுக்கு..( எனக்கு குழந்தைகள் கொள்ளை ஆசை.. நானும் குழந்தையாக மாறி விடுவேன் ) மற்றும் சிறுவர்களை போல சைக்கிள்  ஓட்ட விருப்பம் . ஒரு சில தடவை  தனக்கும் வாங்கி தரும்படி கேட்டு இருக்கிறான்.  பார்க்கலாம் என தந்தை சொல்லியிருகிறார்.

நாங்கள் சென்ற போது மாதுளன் மாடி அறையில் தொலைக் காட்சியில்
மும்முரமாக  இருந்தவர் .... கவனிக்க் வில்லை  போலும். பார்த்துக்கொண்டிருந்தவன், நாங்கள் தேநீர் அருந்தி ...விடைபெற சற்று  முன் ஓடிவந்து என் கை பிடித்து அழைத்து சென்றான் அவர்கள் கார் தரிப்பிடத்துக்கு ( garage )  வாங்கோ அன்ரி வாங்கோ .....உங்களுக்கு ஒன்று காட்ட வேண்டும்( I want டு ஷோ யு something )  என்று ஆங்கிலமும் தமிழும் கலந்து ..சம்பாஷனை போகிறது. அங்கு சென்று .. பார்த்தபோது அவருக்கு ஒரு சிறிய சைக்கிள் வண்டி ..(.training wheel ) உதவிச் சக்கரத்துடன் வாங்கி வந்திருக்கிறார் தந்தை. காலப்போக்கில் அவன் நன்றாக  பழகிய பின் அதைக் கழற்றி விடலாம். தான் பழகிய் பின் தன் தங்கையையும்   ஏற்றிச் செல்வானாம் ....அவனது எண்ணங்கள  கற்பனை உலகில் கொடிகட்டி பறக்கிறது ..."எனக்கு அப்பா வாங்கி தந்தது. நாங்கள் பார்க்கில் ஓடிப் பழக போகிறோம்."  அந்த பிஞ்சு மனத்தில் பெருகிய உற்சாகத்துக்கு அளவே இல்லை.

இளவயது ஞாபகம் என்றும் நெஞ்சில் நிறைந்து அழியாத கோலங் களாக இருக்கும். என் அப்பா .... வாங்கியது ..என் அம்மா தந்தது ... என்று பள்ளியிலும் பெருமையாக் சொல்லிக்கொள்வார்கள். அவனுக்கு வரும் ஐந்தாம் திகதி பிறந்த நாள் வருகிறது ..இப்போதே பரிசு வாங்கியாகி விட்டது. மிகவும் அன்பானவர்கள் கொடுக்கும் பரிசு ..பெறுமதி இல்லாதது . என் சின்ன வயதில் என் மாமா வாங்கித்தந்த அழகான் எல்லா வண்ணங்களும் உள்ள குடை என் கண் முன் நிழலாக் விரிந்தது ....குழந்தையின்  மகிழ்ச்சியை அசை போட்ட் வண்ணம் வீடு வந்து சேர்ந்தேன்.

Thursday, July 15, 2010

இடைவெளிகள்......

.இடைவெளிகள்

அந்த பிரமாண்டமான் விமான நிலையத்தில் இருந்து விமானம் புறப்பட்டது ..பல் கற்பனைகள் கடந்த கால நினைவுகளோடு  புஷ்பாவும் இரு குழந்தைகள் அருண் அர்ச்சனாவும் விடுமுறைக்கு புறப்படுகிறார்கள். . கனடாவில் இருக்கும் தங்கள் சகோதரியை , பெரியம்மாவை பார்பதற்காக. புஷ்பாவின் எண்ணங்கள் சில கணம் தாய் நாட்டின் கிராமத்து வாழ்வை  நோக்கி அசை போடுகிறது. தாய்  தந்தைக்கு எழு குழந்தைகள் அரச பணியகத்தில் வரும் அளவான் வருமானத்தில்  வளமாக் தான் தாயார் மீனாட்சி குடும்பம்  நடத்தினாள். நானு பெண்களும் மூன்று ஆண்க்களுமாக் எழு குழந்தைகள். நான்காவதாக் இந்த  பாமா  என்னும்  கனடாவில் இருப்பவர்  பிறந்தார். ஐந்தாவ்தாக் புஷ்பா . வாழ்வு தான் காலச்சக்கரத்தில் .. சுழன்று கொண்டே இருந்தது . கடைசி மூவரும் தங்களுக்குள் கொப்பி( நோட் புக்)  புத்தகம் பேனா பென்சில் என  சண்டை சச்சரவுகள் வந்து கொண்டே இருக்கும். புஷ்பா சற்று பயந்த சுபாவம். பாமா சற்று துடினம். அந்தக் காலத்தில் ஒரு புத்தகம் வாங்கினால் அது பரம்பரை சொத்து போல அண்ணா ... தங்கை தம்பி ...என இரு வருடங்களுக்கு இடைவெளியில் பிறந்த குழந்தைகள் பாவித்து கொள்வார்கள்.


மூத்தவள பெண ..காலா காலத்தில் கலியாணம் செய்து போய் விட்டாள். அதன் பின் ஆண்கள் இருவரும்  பட்டினத்தில் வேலைக்கு சேர்ந்து விட்டார்கள் கடைசி மூவரும் தங்களுக்குள்  சண்டை சச்சரவுகளை வளர்த்து கொண்டே இருந்தார்கள். பாமா திருமண் வயதை அடைத்தும் தான் விருப்பிய ஒருவனை.பிடிவாதமாய் திருமணம் செய்து கொண்டாள். இதனால் அடுத்தவள் புஷ்பாவுக்கு ....வரும் வரங்கள் சற்று தாமதமாயின . இறுதியாக ஒரு வெளி நாட்டு மாப்பிள்ளை . அவர் பிரான்சு தேசத்தில் வாழ்ந்து  வந்தார் . கலியாணம் முற்றாக்கி ..புஷ்பா பிரான்சு நாட்டுக்கு  சென்றாள். காலபோக்கில் அவளும் மூன்று குழந்தைகளுக்கு தாயானாள். கால சுழற்சியில் ..அக்கிராமத்தில் படை நடவடிக்கை தொடங்கியதும் எல்லோரும் .புலம் பெயர்ந்தார்கள். பாமா புஷ்பா குடும்பத்தினரும் பெரும் நிர்பந்தத்தின் பேரில்....வெளி நாடு போய் விட்டனர்.  அவர்களது தாய் தந்தையரும் .ஒருவர் பின்னொருவராக  இறந்து விட்டனர் . எழு பேரும் ஜெர்மனியில் இருவர் ...பிரான்சில் இருவர் ....இத்தாலியில் ஒருவர் ...கனடாவில் ஒருவர். இலங்கையில் தலை நகரில் ஒருவராக  கூடு கலைந்த பறவைகள் போல .....வாழ்க்கை ஓடிக் கொண்டிருந்தது .

குழந்தைகளுக்கு  அந்த நாட்டு மொழி கற்க   வேண்டிய நிர்ப்பந்தம் கற்றுக்கொண்டனர் . தாய் மொழி தமிழ் மட்டும் ஒரு இணைப்பு பாலமாக் இருந்தது. காலபோக்கில் ..கல்வி படிப்பு ..வேலை என்று இயற்கையின் நியதி ஒருவரோடு ஒருவருக்கு  இருந்த  தொலைத்தொடர்பும்    குறைந்து போனது....வருடமொரு முறை வரும் திரு நாட்களின் போது எடுத்து தொலைபேசியில்,பேசிக் கொள்வார்கள்.   அவர்களின்,குழந்தைகளுக்கிடையிலான தொடர்பு  குறைந்து அற்று போனது...........அந்நாட்டு மொழியில் மிகவும் தேர்ச்சி பெற்றார்கள். தமிழ் மொழியின் வளம் குறைந்து போனது. பல வருடங்க்களின் பின் ...இப்போது சகோதரியை ....பெரியம்மாவை பார்க்க போகிறார்கள்.. அவர்கள் எப்படி இருப்பார்கள் ...தன் குழந்தைகளை அணைத்துக் கொள்வார்களா? . குழந்தைகள் வேறுபாடு காட்டிக் கொள்வார்களா?...இவ்வளவு இடைவேளையில் பின் பல கதைகள் பேச வேண்டும் ஊர் நினைவு  மீட்ட  படவேண்டும். பல் சிந்தனைகளுடன் தூங்கி போனவளை மகன் அருண் தட்டி எழுப்பினான் . தாங்கள் வந்த விமானம் தரையிறங்கக் போகிறது ஆயத்தமாகுங்கள் என்று .....தன்னை ஆசுவாசபடுத்தி தயாரானாள் புஷ்பா.

கனடாவின் டொரோண்டோ மாநகரத்தில் பியசொன் ....(pearson )..விமான நிலையத்தை இவர்களை சுமந்து  வந்த விமானம் அடைந்தது. குடிவரவு குடியகல்வு சோதனைகளை முடித்துக்கொண்டு ....இவ்ர்களுகாக் வாகனத்தில் காத்திருக்கும் பெரியப்பா பெரியம்மாவை நோக்கி ஓடுகிறார்கள். அருணும் அர்ச்சனாவும். . அறிமுகம் ( இதுவரை படத்தில் தான்பார்த்துண்டு ) முடித்து ..பெரியம்மாவின் பிள்ளைகள் சுபாங்கன் சுமுதாவை காண ஆவலோடு ...அவர்கள் பயணம் தொடர்கிறது ...ஈழத்து புலப்பெயர்வில் இழந்தவைகள் ஏராளம்.  அதில் குடும்ப் உறவு ... சக் உறவுகளின் நெருக்கம் ...உறவுப்பாலம் ..சக உறவுகளின் பிள்ளைகளின்  நெருக்கம் ....நட்பு.....தொலைந்தது உண்மை . வருங்காலத்தில் கட்டிஎழுப்ப  பட வேண்டும்...இடைவெளிகள் இட்டு நிரப்ப படலாம். இழந்தவைகள் மீளுமா? .

.

Thursday, July 8, 2010

படிக்கற்கள். ...........



அந்தக்கிராமத்தில் வீரசிங்கதுக்கும், பாரியார் கண்மணியம்மாவுக்கும்  நீண்ட காலமாக் குழந்தைப் பாக்கியம் இல்லை. அவர் ஒரு காணிப்பதிவுக் கந்தோரில்   எழுதுவினை ஞர்  பதவியில் இருந்தார். ஊர் மக்களின் அறிவுரைக்கேற்ப ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்தார்கள். அவளும் கல்வியிற் சிறந்து ..விளங்கினாள்.  ..உய்ர்கல்வி பெற்றதும் ..கண்மணிம்மவுக்கு பேரப்பிள்ளைகளை கொஞ்சி மகிழ் ஆர்வம் வந்தது .காலா காலத்தில் ..புரோக்கர் மூலம் திருமணம் நிச்சயமானது ..அந்த வருடம் வந்த ஒரு நல்ல நாளில் மங்கை கலைவாணியும் ஆசிரியர் செல்வதாயாளனும் இனிதே திருமண் பந்தத்தில் இணைந்தனர் ....காலம் யாருக்காகவும் காத்திராமல் ...உரிய வேளையில் ..கலைவாணி எனும் வாணி  ஒருபெண் குழந்தைக்கு தாயானாள். ....வீரசிங்கம் குடும்பத்துக்கு அளவில்லாத மகிழ்ச்சி ...தயாளன் வாணி வாழ்க்கை இனிதே சென்று கொண்டிருந்தது . இரண்டு வருடங்களின் பின் .ஆசிரியர் தாயாலனுக்கு ....ஒரு ஒதுக்கு புறமான் ஒரு கிராமத்துக்கு மாற்றல் கிடைத்து. .அங்கு மின்சார வசதி கூட இல்லை. மாணவர்களும்  மிகவும் வறுமை பட்ட் குடும்பத்திலிருந்து வந்தவர்களாய் இருந்தார்கள். சிலருக்கு சாராயம் காய்ச்சுவதே தொழிலாய் இருந்தது.அவ்வூர்  கிராம் அதிகாரி ...மற்றும் ஊர்காவலார்கள் கண்டும் காணாமல் கையூட்டு வாங்கி ....அத்தொழில் வளர்சியடைந்த்து .....ஆசிரியரும் ..தனிமை ..கவலையை  போக்க ...இவர்களுடன் கூட்டுச சேர்ந்து குடிவகை பாவிக்கக் பழகினார். வருட விடுமுறை வந்த போது ...இவரிடம் மனைவி சில மாற்றங்களை கண்டு கொண்டாள். அவர்களது ஊரிலும் குடிவகை விற்கும் இடங்களை தேடிப் போனார். வருடங்கள் செல்ல செல்ல ...ஒவ்வொரு குழந்தையாகக் பிறந்து ...அவர்கள் குடும்பம் தாய் தந்தையுடன் எண்ணிக்கையில் பதினொன்றாகியது...( ஒன்பது குழந்தைகள்) ..ஆசிரியரின் மாத வருமானமும் குறைந்தது..வீரசிங்கம் நோய் வாய்பட்டார்....மூன்றாம் மாதம் காலமாகி விடார்.

வாணிக்கு குடும்பகஷ்டம் ..போதிய வருமான மின்மை குழந்தை செல்வங்களின் சிரமங்களால் வேதனைபட்டாள். ஆனால் எல்லோருக்கும் கல்வியறிவில் மிகுந்த நாட்டம் காட்டினாள் . . ஒருவாறு பெரிய அதிகாரிகளை கண்டு கணவனுக்கு ஊருக்கு மாற்றம் வாங்கினாள். தாயார் கண்மணி அம்மாளும் வயோதிபத்தால் ...தளர்ந்து போனார். தாயின் ஓய்வூதிய பணம் , கணவனின் மாத வருமானதுடனும் குடும்பம் மிகவும் கஷ்ட பட்டது.... அப்போதும் ஆசிரியர் தாயாளன்  குடிப்பழக்கத்தை விடுவதாயில்லை. பகலில் ஓரளவு நிதானமாய் இருந்தாலும் பாடசாலை  விட்டதும  நேரே குடிக்க போய் விடுவார் . ஒரு வழிகாட்டியாக் இருக்க வேண்டிய ஆசிரியரே இப்படி என்றால் .என்று ஊர் மக்கள் பேசிக்கொண்டனர். வீரசிங்கதாருக்கு  இருந்த மதிப்பும் மரியாதையும் இவரால் ..இவர்கள் குடும்பத்துக்கு,  ஊரவர்கள் மத்தியில் குறைந்து போயிற்று. பிள்ளைகளும்  தந்தை மீது பற்று இன்றி ... நடந்து கொண்டனர்..........ஒரு நாள் ..மாலை...தெருவிளக்கு இல்லாத நிலையில் ..ஆசிரியர் வரும் போது ...ஒரு லாரி யினால் மோதிக் கொல்ல பட்டார்..அப்போ தும் ....அவள் பத்தாவது ... குழந்தையை மூன்று மாதமாக் சுமந்து  கொண்டு இருந்தாள். வாணி மிகவும் கஷ்ட பட்டாள்.  அன்றாட உணவுச்..செலவுக்கே போதியதாக இல்லை. மூத்தவள் காயத்திரி ....பத்தாம் வகுப்பு படித்து கொண்டிருந்தாள்.

இரண்டு வருடங்கள் சென்றது ....வாணி விழித்துக் கொண்டாள். தான் கற்ற கல்வி கை கொடுக்க ஆசிரிய பயிற்சிக்கு விண்ணப்பித்து ..அவ்வூரில் வேலை கிடைத்தது. மேலும் பயிற்சிக்கு ஆசிரிய ..பயிற்சிக் கலாசாலைக்குக்கு செல்ல வேண்டியிருந்தது. குழந்தைகளை தாயின் கவனிப்பில் விட்டு விட்டு அங்கு சென்றாள். மாலையில்  பஸ் வண்டியால் ...வீடு வரும் போது அத்தனை குழந்தைகளும் அம்மாவுக்காக . காத்திருப்பார்கள். மூத்தவள் .. இருக்கும் உணவை பகிர்ந்து எல்லோருக்கும் கொடுப்பாள். வந்த களையுடன் இரவு உணவு சமைத்து ......குளித்து ...தன் வீட்டுப்  பாடங்கள் செய்து ....தூங்க செல்ல நள்ளிரவு தாண்டி விடும்...தான் ஒரே ஒரு மகளாக் வாழ்ந்து தனக்கு ... இறைவன் இவ்வளவு குழந்தை செல்வங்களை தந்தும் அவர்களை நல்ல படியாக் வாழ் வைக்க வேண்டுமென்று திட சங்கற்பம் கொண்டாள்.

சில காலம் செல்ல தாயார் கண்மணிம்மாலும் காலமாகி விடார்கள். அவர்கள் வாழ்ந்த நாட்டில் இனக்கலவரம் தொடங்கியது .வீட்டை விற்று .......ஒவ்வொரு  பிள்ளைகளாக  மேற்படிப்புக்கு   வெளி நாடு அனுப்பி வைத்தாள். அவர்களும் மிகுந்த சகோதர பற்று உடையவர்கள். ஒருவர் ஒருவருக்கு உதவியாக எல்லோரும் வெளி நாட்டு க்கு சென்று விட்டனர் .. இறுதியாக் அவர்களது ஊரில் இருக்க முடியாத் நிலை வரவே  ..அவளை தலை நகரில் இருக்க வழி செய்தனர். அப்போது கடைசி இரண்டு பிள்ளைகளும் இவளுடன் வாழ்ந்து கொண்டிருந்தார்கள். மூத்தவள் வெளி நாட்டுக்கு சென்று திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயானாள். படிப்படியாக் ..எல்லோரும் வெளி நாடுவந்த பின் ..தாயாரையும் கடைசி மகள் அழைத்துக்கொண் டாள் . மூவர் லண்டன் மா நகரிலும் ..இருவர் பிரான்சு நாட்டிலும் ....மூவர் கன்டா நாட்டிலும்  ..இன்னும் இருவர் திருமணமாகாமல் தாயுடனும் அவுஸ்திரேலியா நாட்டில்  வாழ்கின்றனர்.

 எல்லோரும் மாறி மாறி தாயை தங்கள்நாட்டுக்கு அழைத்து கவனிப்பார்கள். இப்பொது அவருக்கு சற்று வயது முதிர்ச்சி ....இருப்பினும் பழைய கதைகளை சொல்லுவார். அத்தனை சோதனைகள் மத்தியிலும் அந்த தாய் எடுத்த முயற்சி ..பிள்ளைகளுடனும்  காத்த் பொறுமை ...சகோதர பாசம் ....தாயின் கஷ்டம் உணர்ந்து வாழ்ந்த வாழ்க்கை .....இன்று அவர்களை நல்ல நிலைமையில் வைத்து இருக்கிறது.

ஒவ்வொருவருடைய வாழ்வும் ஒரு சோதனைக்களம் . அதில் வரும் சவால்களை சந்தித்து ..முன்னேறினால் வாழ்வு பிற்காலத்தில் வசந்தம் ஆகும். இவரது வாழ்வு ஒரு வழிகாட்டியாக பலருக்கு அமைந்தது என்பதால் இதை உங்களுடன் பகிர்கிறேன். ..வாழ்வில் ஆயிரம் தடைக்கற்கள் வந்தாலும் அதை  படிக்கல்லாக்குவது   ஒவ்வொருவருடைய முயற்சியிலும் இருக்கிறது . .

கதை உண்மை பெயர்கள் கற்பனை ......


Tuesday, July 6, 2010

ஏழையின் சிரிப்பில் இறைவன் .



ஐரோப்பிய நாடொன்றில் ...அந்த வதிவிடத்தின் மாடியில் ஒரு அறையில் அந்த முதியவர் வாழ்ந்து கொண்டு இருந்தார் ..இளைப்பாற்று ( பென்ஷன்)  சம்பளம் எடுப்பவர் போலும்........அவரது அறையின்  ஜன்னல் அருகே கதிரையில் உட்கார்ந்த படி போவோர் வருவோரை பார்த்துக் கொண்டிருப்பது .. பிடித்தமான  பொழுது போக்கு. மாதத்தில் ஒரு தடவை வங்கி போன்ற இடங்களுக்கு செல்லும்போது தனக்கு தேவையான் சமையல் பொருட்களை வாங்கி வருவார். தினசரி பத்திரிகை படிப்பார்.  அவை அவரது குடியிருப்பின் வாயிலுக்கு வந்து விழும். ........இப்பொது பனி கொட்டும் காலம். குடிமனைச்சொந்தகாரர் தான் அவர்களது நடை பாதையை சுத்தம் செய்ய வேண்டும். சிலர் தாங்களாகவே செய்வார்கள் சிலர் வாடகைக்கு கூலியாட்களை அமர்த்தி செய்வார்கள். அந்த வேலையை செய்யும் கூலியாள்  தினமும் வந்து பனி ( சினோ) தள்ளுவான். வீசுகின்ற காற்று குளிர் நிலையை மேலும் கூட்டும். அவனை கண்டவர் அவன் சினோ தள்ளி முடிய தன் அறைக்கு வரும்படி செய்து சூடான் தேநீர் பரிமாறினார். அந்த கூலியாளின் மலர்ச்சி.....மன மகிழ்வு , இவரை .மகிழ்வித்தது. விடைபெற்று சென்று விடான்.

மீண்டுமொரு நாள் ..அந்த நடை பாதையில் ஒரு கிழவி பழங்களை கடை பரப்பி வியாபாரம் செய்து கொண்டிருந்தாள். கூடை கூடையாக் வைத்திருப்பாள். அந்த வழியால் வந்த சிறுவன் ...அந்த கூடையில் இருந்து ஒரு ஆரஞ்சு  பழத்தை திருடி தின்றான் .. இதை அவள் கண்டு விட்டு அவனை பிடித்த்துநன்றாக்  அடித்தாள். இதைக்கண்ட முதியவர் கீழே  வந்து இன்னொரு ஆரஞ்சு ் பழத்தை எடுத்து அந்த சிறுவனை சாப்பிட சொன்னார்  இரு பழங்க்களுக்குமான் காசை தானே கொடுத்தார். சிறுவன் நன்றியோடு ... பெற்றுக்கொண்டான். சரியான் பசி போலும். கையில் காசு இல்லை திருடி இருக்கிறான்..........சந்தர்ப்பங்கள் தான் குற்றம் செய்ய வைக்கின்றன.

இன்னொரு முறை ...துணிகளை சலவை செய்பவள். இவரது வீடுக்கு வந்து ..சலவைத்துணிகளை எடுத்து சென்றாள். ...மீண்டும் மூன்றாம் நாள் கொண்டு வந்து கொடுத்து பணத்தை பெற்றாள். தான்  பட்டாதாரித்தரம்  வரையில் ..படித்திருப்பதாகவும் தனக்கு பொருத்தமான் வேலை கிடைக்கக் வில்லை  என்றும் ..கஷ்டத்தின் நிமித்தம் இந்த வேலையை செய்வதாகவும் சொன்னாள். அவள் கதையை கேட்டவர் ...வாரம் ஒரு முறை வந்து துணி எடுத்து செல்லும்படி சொன்னார். அவளுக்கு  வாடிக்கையாளர் கிடைத்த்தை எண்ணி ...மகிழ்ந்தாள்.

முதியவர் நன்றாக் புத்தங்கள் படிப்பார். அருகே இருந்த்  சமய சஞ்சிகையை ..திறந்த போது ...".ஏழையின் சிரிப்பில் இறைவனைக்காண்பாய்."............குளிரால் விறைத்த மனிதனுக்கு சூடான் தேநீர்.........பசியால் வாடிய சிறுவனுக்கு ஆரஞ்சு ....வேலையற்று சீவியம் நடத்தத் கக்ஷ்டபட்ட்வளுக்கு வேலை .....இவர்களின் சிரிப்பு  அவர் மனத்தில் நிழலாடியது ..... ..மறு நாள்  பேப்பர் காரன் கதவு தட்டியபோது ..கதவு தானாகவே திறந்து கொண்டது ....நெஞ்சில் பைபிள் புத்தகம் ...தரையில் மூக்கு  கண்ணாடி ...கைகளை விரித்தபடி ....மீளாத உறக்கத்தில்........போகும் வழிக்கு தேடிக்கொண்ட புண்ணியம். அவரது உடல் வேண்டியவர்களுக்கு அறிவிகக்பட்டு கிறிஸதவ  முறைப்படி அடக்கம் செய்ய பட்டது. ..இறுதி நாளில்  அவஸ்தை இல்லாத மரணம்.

ஒரு மனிதனின் வாழ்வு பற்றி கேள்விபட்ட் ஒரு கதை ...நீ மரணிக்கும்போது உன்னுடன் கூட வருவது வாழ்வில் நீ செய்யும் நல்ல செயல்களால் வரும் ,மன அமைதி.........

முற்றும். ..

Wednesday, June 30, 2010

பெற்றவர்கள் பட்ட கடன் ........

அந்த  தொடர் மாடிக்கட்டத்தின் நான்காம் மாடியில் அமைந்து இருந்தது  அவர்களது குடியிருப்பு. தாய் மாலதி .தந்தை வாகீசன் மகன்கள் சுபன் .சுதாகரன் ஆகிய நால்வரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் நாட்டுப்பிரச்சினை  காரணமாக் தந்தை வாகீசன் தான் குடிபெயர்ந்து இருந்தார். மனைவி மாலதி அவனது தூரத்து உறவு தான் . அப்போது  சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . திருமணமாகி இரு குழந்தைகள் பிறக்கும் வரை  ஒழுங்காக் தான் இருந்தான். ஒரு தடவை விடுப்பில் வந்தவன் நாட்டு பிரச்சினை காரணமாக  மீண்டும் போக முடியாது போனது. மதுவகை பாவிக்க் தொடங்கினான். மாலதி இருந்த நகை நட்டு எல்லாம் விற்று சகோதரர்களிடமும் கடன் வாங்கி ஒரு பாடசாலை வாகனம் எடுத்து கொடுத்தாள் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி வரும்  பணியில் இருந்தான். கையில் காசு புரளவே மீண்டும் குடிக்க தொடங்கினான் முன்பு நட்புகளோடு சேர்ந்து குடித்தவன் இப்பொது தானே வீடில் வைத்து குடிக்க தொடங்கினான். ஒரு நாள் போதையில் வாகனத்தை ஓட்டிசெல்கையில் ..திடீரென வாகனம் பற்றி எரிந்தது . அதிக வெப்பமாகி விட்டது முறையாக கவனிக்கப்படவில்லை.

 மாலதி குடும்பத்தை  கொண்டு செல்ல மிகவும் கஷ்ட பட்டாள். தன் பிரச்சினைகள் எதுவுமே தன் சகோதரர்களிடம் சொல்வதில்லி. ஒரு நாள் வெளி நாடில் இருக்குமஇளைய சகோதரனுக்கு செய்தி எட்டவே நீண்ட கடிதம்  ஒன்று எழுதினார். கொழும்புக்கு வந்து ....நிற்கும் படியும் அவரை தங்களிடம் கூப்பிடுவதாகவும் ஆறுதல் சொன்னார் சகோதரன் மனைவியின்  பிராத்தனையோ தெரியாது ...வசீகரன் கனடா நாடுக்கு வந்து சேர்ந்தார். ஒருவாறு மிகுந்த சிரமமப்ட்டு ...காலக்கிரமத்தில்  மனைவி பிள்ளைகளை குடும்ப இணைவில்  அழைத்துக்கொண்டார். அவர்களும் வந்து பாடசாலயில் சேர்ந்து ....நனறாக் கல்வி கற்றார்கள் .  மாலதி வசீகரன் வாழ்வில் கடன்கள் தீர்ந்து  வசந்தம் வீசியது.
ஒரு நாள் பால்ய நண்பன் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார் . அவரது சிநேகம் தொடரவே மீண்டும் குடிவகை தொடங்கினார் .  இத்துடன் புகைத்தலும் சேர்ந்து கொண்டது மீண்டும் மாலதி  வாழ்வு சீர்குலைந்த்து . குடித்துவிட்டு பணியிடம் ( வேலைக்கு )செல்ல தொடங்கினார் . பொய் புளுகு ...அவரை  ஆட்கொண்டது மனைவிக்கு  உண்மை சொல்ல மாட்டார். மனைவியை அடித்து துன்புறுத்த  தொடங்கினார். இதனால் பணியிடத்தில் வேலையில்  இருந்து விலக்கப்பட்டார் . மாலதியின் சகோதரன் வேலைபார்க்கும் பணிஇடத்தில் தான் இவரது வேலை . மாலதியின் சகோதரனுக்கும் இதனால் மிகவும் மதிப்பின்மை ஏற்பட்டது. வேலையுமில்லை .ஒரு நாள் மதுபோதையில் வாகனம் செலுத்தி .அகப்ப்டார் .. சாரதி அனுமதி தடை செய்யப்பட்டது எச்ச்ரிக்கையுடன் மீண்டும் கொடுத்தார்கள். ஒரு தடவை வாகனத்தில் திறந்த மதுப்போத்தல் இருக்க பிடிபட்டார் .. இதனால் ஆறு வருடங்கள் வாகன சாரதி பத்திரம் ரத்து செய்யப் பட்டது.
 கடுங்குளிரில் மாலதி மிகவும் போக்கு வரத்துக்கு கஷ்ட பட்டாள். இதற்கிடையில் அவர்களது மூத்த புதல்வன் வாகன சாரதி .ஓட்டுனர் பத்திரம் .பெற்றுக்கொண்டான். தந்தையின் அனுமதி ரத்து செய்ய பட்ட் நிலையில் ..அவன் வாகனம் செலுத்தத்  பெருந்தொகை காப்புறுதிப்பணம் மாதம் கட்ட் வேண்டியுள்ளது . தந்தைக்கு அனுமதியிருப்பின்  அவரது உதவி ஓட்டுனர் என குறைந்த காப்புறுதியில் வாகனம் செலுத்தத் அனுமதி கிடைக்கும்.  புதல்வனுக்கு பயிற்சிக் காலம்  அதிகமாகும். அனுமதிப் பத்திரம் காலம் செல்லச்செல்ல பெறுமதி கூடும் சிறந்த ஒரு அடையாளமாக் ( identification ) வெளி நாட்டில்  கணிப்பர் . மகன் சுபன் வாகனம் ஓட்டுவதானால் காப்புறுதிப்ப்  பணமாக பெருந்தொகை  கட்ட் வேண்டியிருக்கும்  .மகனுக்கு தடையாக் இருப்பது தந்தையின் பொறுப்பற்ற செயல். புதல்வன் இப்பொது வாகனம் செலுத்தி பயிற்சி பெற்றுக் கொண்டால் இன்னும் இரு வருடங்களில் பெருந் தெருக்களுக்கான அனுமதி கிடைக்கும். மகனின் எதிர்காலம் தந்தையின் செயலில்..
இப்படிப்பட்ட  தந்தை  மீது எப்படி அன்பு வரும் ..............

வாழுகின்ற மக்களுக்கு,வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட் கடன், பிள்ளைகளை சேருமடி
சேர்த்து வைச்ச புண்ணியந்தான், சந்ததியை காக்குமடி...

 என்னை இப்பதிவு எழுத தூண்டியது உண்மைச்சம்பவம்.

.

Monday, June 28, 2010

என் இனியவளே .............

என் இனியவளே ................

பொங்கும் என் உள்ளத்துக்கு அணை போட யாருமில்லை,
மடலிலே வந்த சேதி மனதுக்கு மகிழ்வாச்சு ..
என் இனியவளே . கிடைக்கும் என் எண்ணியிருந்தேன்
இவ்வளவு சீக்கிரமாய் இனிய செய்தி எழுதுவாய்
என்று கனவிலும் எண்ணவில்லை ...

என் உயிர் உன் கருவில் வளர்வதை எண்ணி
உலக மகா உவகை கொண்டேன். என்னவளே
உறுதி செய்த மருத்துவருக்கு என் நன்றியை சொல்.
நாம கண்ட இன்பத்துக்கு  இவ்வளவு சீக்கிரம் பலனா?
உன்னை தூக்கி மகிழ் அருகில் இல்லையே

கண்மணியே ஒன்பதாம் மாதம் வரை பொறுத்திரு
எப்படியும் வந்து விடுவேன் என் உயிரைக் காண
ஊட்டச்சத்துக்கள் முறையாக் எடுத்துக்கொள்.
என் தாயே மீண்டும் வந்து பிறக்கவேண்டும்
நீ விரும்பினால் அடுத்த  வாரிசு.ஆணாக் இருக்கட்டும்.

ஆசிரிய பணி  மகத்தானது உன்னால் முடித்தவரை
பள்ளிக்கூடம் செல் முடியாத போது விடுப்பு எடுத்துக்கொள்
ஒவ்வொரு வாரமும் மடல் வரைக  ....மறந்து விடாமல்.
என் உடல் மட்டும் தான் இங்கே என் உயிர் உன்னிடம  .
மகப்பேறு மகளிருக்கு மறு பிறப்பாம் குறையேதும் இன்றி
படைத்தவன் காப்பான் ...கண்மணியே என்னவளே

கடமை எனை அழைத்தது...கடல் கடந்து வந்து விடேன்
காளையர்கள் பொருள் தேட கடல் கடக்கும் காலமென்பேன்
மறு மடல் காணும் வரை  மறக்காம்ல் என் முத்தங்கள்.
மற்றொன்றும  சொல்ல வேண்டும் ..என் மாமா மாமியார்
குட்டி மைத்துனி மற்றும் அயலவரிடம் நலம் கேட்டதாக் சொல்.

உடலும் உள்ளமும்   நலமே வாழ்க
நாம இருவரல்ல  மூவர் என்னும நினைவே என்
நினைவில்  நிலைத்திருக்கும். என்றும் உன் இனியவன் .

Thursday, June 24, 2010

ஒரு சில துளிகள்.

கவிதைக்கான ஒரு சின்ன முயற்சி ....


ஏக்கம் ....
மலர் ஒன்று காத்திருந்தது
தென்றலின் தொடுகைக்காய்
தென்றல் திசை மாறியதும்
வாடியது தன் தோற்றத்தில்

உற்சாகம் ...
புது வருகைகளினால்
மனம் துள்ளுகிறது
வருகை தரும் களிப்பு
கானம் பாட வைக்கிறது

சோகம்  ....

குயிலொன்று தன் துணையின்
 வரவுக்காய் கூவியழைத்தது
எதிர்பாட்டு கேளாமல்
சோகத்தின் கலவரத்தில்

சுமை .........

இதயங்களின் பாரம்
அழுகையில் குறையும்
அழுகையின் துளிகள்
அன்புள்ளத்தை சேரும்

எதிர்பார்ப்பு ......

தேக்கி வைத்த சோகம்
சொல்லி அழ ஏக்கம்
எதிர்பார்த்திருக்கும் நாளில்
மெளனமாய் வெடிக்கும். 

காத்திருப்பு .....

வழி மீது விழி வைத்து
உன் வரவுக்காய் காத்திருப்பு
மெளனமாய் பேசின் கண்கள்
ஆயிரம் அர்த்தங்களில்


Thursday, June 17, 2010

வஞ்சகரின் உலகம்.

வஞ்சகரின் உலகம்.

அமைதியான அந்தக்குடும்பத்தில் நட்பாக் வந்து இணைந்தாள் . பாமினி என்னும் பெண் . கையில் ஒரு கைக்குழந்தை . கணவன் கார் கம்பனியில் வேலை . அந்த தொடர் மாடிக்கு குடிவந்தார்கள். வந்து அயல வீடு என்பதால் கோமதியின் குடும்பத்துடன் உறவு கொண்டாடி .நட்பை வளர்த்துக்கொண்டாள்.   கோமதி அந்த நாட்டு க்கு வந்து ஐந்து வருடமிருக்கும்.  பாமினியும் அவளது நாட்டை சேர்ந்தவள் அவள் மொழி பேசுபவள் என்பதால் ...இரக்கத்துடன் அணைத்து கொண்டாள் கோமதி ....கோமதிக்கு இரு மகன் கள் ஆறு வயதிலும் மூன்று வயதிலும். குழந்தைகளை  கவனிக்க் வேண்டியிருபதால் அவள் வேலைக்கு செல்வதில்லை . கோமதி மூத்தவனை பாடசாலை பஸ்ஸில் பள்ளிக்கு அனுப்பி மதியம் சின்ன்வனுடன் காத்திருந்து மகனைக்  கூட்டி வருவாள்.  பாமினி ... ஒரு மாலை நேரவேலையில் சேர்ந்து கொண்டாள். நன்றாக் கார் ஓடுவாள். கோமதி பாமினியின் கணவனை காண்பதேயில்லை .இரவில் வந்து அதிகாலையில் சென்று விடுவான் . அவனுடன் பேசியதும் கிடையாது . ஒரு நாள் அவர்கள் ஒரு திருமண் வீடுக்கு செல்லும் போது தூரத்தில் அவன் தோற்றம் கண்டாள். கோமதி ....

பாமினி மாலையில் வேலைக்கு செல்லும் போது குழந்தை ( பாமினியின் ) கோமதி வீட்டில் தங்குவாள். இரவு ஒன்பது மணியளவில் குழந்தயை எடுக்க வருவாள். இப்படியே இவர்களது நட்பு வளர்ந்தது. ஒரு நாள் கோமதியின் குழந்தைகளும் பாமினியும் குழந்தையுடன் ஒரு கடைத்தொகுதிக்கு சென்று வந்தார்கள். வீடுக்கு வந்ததும் கோமதி கணக்கு பார்க்க தனது கைபையை தேடினாள். காணவில்லை . ஓடிசென்று ....பாமினியிடம் கேட்க அவள் தானும் காணவில்லை  எனறாள்.கார் தரிப்பிடத்துக்கு சென்று அங்கு காரை திறந்து பார்த்த போது ...அங்கு இருந்தது இருக்கையின் அடியில் . கைப்பையின் ..திறக்கும் இடம் ( சிப்பர் )....திறந்தே இருந்தது . யாரோ ..எதையோ தேடியமாதிரி ....கோமதி ...எல்லாம் இருக்கிறதா என் மீண்டும் ..பரிசோதித்து ...எடுத்துக்கொண்டாள். பணமும் அதிகம் இருக்க்வில்லை ....கைப்பை கிடைத்த மகிழ்வில்.... அதை பற்றி பாமினியிடம் அவள் எதுவுமே கேட்கவில்லை. கோமதி கணவனிடம் சொன்ன போது .....முன் பின் தெரியாதவர்களிம் அவதானமாக இருக்கும்படி எச்சரித்தான். ....காலம் உருண்டோடியது .....பாமின் குடும்பம் அவர்கள் கட்ட தொகுதிக்கு குடிவந்து ...ஆறு மாதமாகியது .....

 பாமினி குடும்பம் ....விடுமுறைக்காக ஐரோப்பா சென்றார்கள்.  பின்பு வந்து ...கணவனின் உறவினர் வீடுக்கு மாடிப்பகுதி காலியாக் இருப்பதால் அங்கு குறைந்த வாடகை செலுத்தி அங்கு குடிபோக போவதாக் சொன்னாள்.அடுத்த வாரமே இடம் மாறி விட்டனர்.
ஒரு நாள் அந்த நாட்டு தொலை பேசி கம்பனியில்  இருந்து கோமதிக்கு அழைப் பு ...வந்தது . பாமதி யுடன் பேச வேண்டும் என்று ...அப்படி எவரும் தன் வீடில் இல்லையென்று சொல்லி விட்டாள். மீண்டும் ஒரு நாள் அழைப்பு ....இவர்கள் தொலைபேசிக்கு.. பின்பு இவளது பிறந்த திகதி ....மற்றும் தன்ன்றிமுக விபரங்களை கேட்ட போது அது கோமதியின்தாக் இருந்தது .... பெயரின் முதல் எழுத்துக்கள் மட்டும் மாற்றம் செய்யபட்டு ....பெற்று  ...அவளது சுய விபரங்களைக்க் கொடுத்து .தொலைபேசி ...டி வீ அனுமதி ....என்பன் பெறப்பட்டு  இருந்தது ....கட்டணமாக் ஆயிரத்து இருநூறு ....(1200dollers) ..செலுத்தத் படவேண்டும் என் கம்பனி கேட்டுக்கொண்டது ......கோமதி அதிர்ந்து போனாள். தன் வீட்டு  தொலைபேசிக்கட்டனம் தனது கணவன் பெயரில் இருக்கிறது ... தனக்கு இன்னோர் இணைப்பு எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அது யாரோ சதி காரர் செயதவேலை என்றும் வாதாடினாள். கம்பனி நம்ப வில்லை . கோமதியின் நிலை ........மிகவும் சங்கடமாகியது . கணவனும் நான் அப்போதே சொன்னேன் கேடாயா?
பாம்புக்கு பால்  வார்த்த கதையாகி விட்டது ..எந்த புற்றில் என்னவகை பாம்புகளோ ?   .கோமதி கணவனின் வருமானத்தில் மிகவும் சிக்கனமாகவே வாழ்ந்தார்கள் இவ்வளவு தொகைக்கு என்ன செய்வாள்......பணத்தைக்கட்டாவிடால் இவளது கிரெடிட் ( நம்பகத்தன்மை ) பழுதாகி விடும் . ..சிறுக் சிறுக் கட்டலாம் என் தீர்மானித்து இருக்கிறாள். கோமதி ....என்ன செய்யலாம் ......? ...

பாமினி ..குடும்பத்தின் மீதே சந்தேகம் வந்தது.  அவளை எங்கே தேடுவது அவள் பெயர் தவிர எதுவும் தெரியாது ......இந்த உலகில் இப்படியும் சில மனிதர்கள்.கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும் . வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ..நாம தான் அவதானமாக் இருக்கணும் . யாரைத்தான் நம்புவதோ ...

குறிப்பு ...ஒரு சம்பவத்தை அடிப்படியாக் வைத்து எழுதியது ..
.கதை உண்மை பெயர் கற்பனை ..

Tuesday, June 15, 2010

மண்ணில் வந்த மலர்களே

  .

தவமாய் தவமிருந்து
தாய்  உன்னை பெற்றவள் ,
மகிழ்வுற்ற காலத்தில்
என் இல்லம் தேடி வந்து
என்னையும் மகிழ்வித்த மலர்களே

என் விரல்கள்  பஞ்சு போன்ற
 உங்கள் பிஞ்சு விரல்கள் தீண்டுகையில்
என் உள்ளம் மகிழ்வால் மிஞ்சி விடும்
பூவொன்று மலர்ந்தது போல்
 கன்னங் குழிய சிரிக்கையில்
கவலை எல்லாம் மறைந்து விடும்

ஒன்றுக்கு இரண்டாய் பெண்
புஷ்பங்களை கொடுத்த
அந்த இறைவனின் கருணையை ,
என்ன வென்பேன் மனம் நிறைய
வாழ்த்துகிறேன் பிஞ்சுகளை  

நோய் நொடியின்றி சிறப்போடும்  
வளமோடும் நலமோடும் வாழ்க.
பல்லாண்டு,பாரிலே புகழ் பெற்று
ஈன்ற தாய்க்கும் ,  உறவினர்க்கும்
என்றும் மகிழ்ச்சி தங்குக.

குறிப்பு :    என் வீடில் உறவினர் வருகை ...
அந்த மகிழ்வால் எழுந்த கவி தா வரிகள்.

Monday, June 14, 2010

விரைவில் வருவேன்......

விரைவில் வருவேன்..............

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. சித்திரை 23 க்குப்பின் எந்த பதிவும் போடவில்லை அவசரமாய் ஓடிவந்துபார்த்து  போவதுடன் சரி . என் வீடில் விருந்தினர்கள் வந்து இருக்கிறார்கள் .சிறு குழந்தைகளுடன் காலம் இனிதாய் போகிறது .அவர்கள் வீடில் திருத்தவேலை. எங்களுடன் தங்கியிருகிறார்கள். நலம் விசாரிக்கும்  அன்பு உள்ளங்களுக்கு நன்றி . என் வலைப் பக்கத்திலும் ஒரு சிறுமாறுதல். மீண்டும் ஒரு இனிய பதிவில் உங்களுடன் இணைந்து கொள்வேன். நட்புடன் நிலாமதி

Friday, April 23, 2010

கடவுளைக்கண்டேன் .......

....

பத்து மாதம் பத்தியமிருந்து காத்து 
கோவில் என்னும் கருவறையில் சுமந்து
கண் விழித்து வேதனையுற்று
உடல் வலி தந்து பட்டினியிருந்து
கை காலுதைத்து வெளிவந்த பின்பு
கடவுள் உன்னைக்  கண்டேன்.

பயணத்தின் போது தோளில் பை
பால் பவுடர் நாப்கின் மாற்றுத்துணியோடு
இன்பச்சுமை  என்னையும் சுமப்பவளே
தாய் என்னும் கோவிலே கருவறைத்தெய்வமே
கடவுளை கண் கொண்டு பார்க்க முடியாது
இதனால் தானோ?  தாய் உன்னை படைத்தான்.

Wednesday, April 14, 2010

வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்.

வரவேண்டும் வாழ்க்கையில் வசந்தம்........

வந்தது வசந்த காலம்
சித்திரைப்புதுவருடம் ..மலர்ந்து
துன்ப துயர் விலகும் காலம்
வாழ்வின் எதிர்பார்ப்பின் காலம்

துளிர்க்கும் காலம்
பருவநிலை மாறும் காலம்
விடுமுறை தொடங்கும் காலம்
நீயும் நானும் வாழும் காலம்

உன்னையும் என்னயும்
வாழ வைக்கும் காலம்
மகிழ்வாய் எதிர் கொள் காலம்
வெல்லும் காலம்

எல்லோருக்கும் வெல்லும் காலம் (வரும்)
வெற்றி... சுபம் ...ஜெயம்..கொள்ளும் .காலம் (வரும )


எல்லோருக்கும் ஜெயிக்கின்ற காலம் வரும்
.(பாடல் நினைவு  வருகின்றதா ...?)

Wednesday, April 7, 2010

திரு நிறைச் செல்வி .....


வீடு ....உறவினர்களின்  கூட்டமாய் நிறைந்து காணப்பட்டது  .....மாடியிலும் ...நடை பாதை ..வழிகளிலும் ஓரங்களிலும் மங்கல பொருட்களால்  நிறைந்து இருந்தது. .சேரன் என்னும் சேரலாதன் எப்போது உறங்கினான் என்று, அவனுக்கே தெரியாது. ...........விடிந்தால் திருமணம் . உறவுகளும் ..பெரியவர்களுமாய் வீடு நிறைந்திருக்கிறது...தன் தங்கைகளை எண்ணும் போது அவனுக்கு பெருமிதமாய் இருக்கிறது....தாயாய் தந்தையாய் வளர்த்தவன் அவன் அல்லவா.... அவனது குடும்பமும் ....மற்றவர்களை போல தாய் தந்தை ஆசைக்கு ஒரு தங்கை என்று அமைதியாக் தான் போய் கொண்டு இருந்தது. மூன்றாவதாய்  ஒரு தங்கை வருமட்டும்.

அவள் பிறந்த வீடிலே தாயார் ...காலமாகி விடார். வைத்தியர்களின் கவன மின்மையோ .. தங்கை சுஜிதாவின் கெட்ட பலனோ ..........சேரனுக்கு ஆறு வயது ...மங்கை எனும் மங்கையர்க்கரசிக்கு மூன்று வயது.....அம்மாவின்  மரண வீடிற்கு ....இவனை ...சமய சடங்குகள்  முடித்து கொள்ளி வைக்க அழைத்து சென்றதாக் ஞாபகம்.. சரியாக் இல்லை...பின்பு கொஞ்சக்காலம் அம்மம்மாவுடன் வாழ்ந்தார்கள்... காலப்போக்கில் அவர்களும் காலமாகி விட ....பெரியப்பாவின் வீடில் அவரது இருகுழந்தைகளுடன் இவர்களும் தஞ்சமானார்கள் .  அப்பா பெரிய பட்டணத்தில் வேலைக்கு போனவர்தான்..ஆரம்பத்தில் பெரியப்பாவுக்கு செலவுக்கு பணம் அனுப்புவார்....
பின்பு அதுவும் நின்று விட்டது... பெரியப்பா தான் இவர்களை தாங்கினார்..அப்பா வேறு திருமணம் செய்தார் என்று ஊரவர்கள் சொன்னார்கள். சிலர் வெளி நாடு போய் விடார் என்றும் சொன்னார்கள். ஆனால் பெரியப்பா தான் இவர்களுக்கு எல்லாமும் ஆனார்..............

சின்னவள் சுஜி .........வளர்ந்து பாலர் பாடசாலைக்கு போனாள். .காலயில் வீடு பெருக்கி கொண்டு நிற்பவர்கள் இவள் முகத்தில் விழித்தால் அன்று ...விளங்காது என்று இவளுக்கு முன்னாலேயே பேசுவார்கள் . அண்ணாவாக  அவனும் அக்காவாக மங்கையும் பொறுத்து கொள்வார்கள்.பெரியம்மாவும் அன்பானவர் தான் ஆனால் தன் பிள்ளைகளில் விசேட கவனம் செலுத்துவது போல இருக்கும்..இவனுக்கு பதினெட்டு வயதான் போது ....மேற்படிப்புக்காக் பட்டணத்தில் சேர்த்து விட்டார்கள.  .விடுதியில் அவன் வாழ்வு தொடர்ந்தது.......விடுமுறைக்கு வந்தால் பெரியவள் கதை கதையாக் சொல்வாள். இவன் விடுதிக்கு போக முன் பெரியவள் பெரிய பெண்ணாகி  விட்டாள் ....   அன்று அழகிய மணமகள் கோலத்தில் பார்த்தவன் ..இவளை ஒருவன் கையில் கொடுக்கும் வரை நான் பொறுப்புடன் இருக்க வேண்டும் நன்றாக் படிக்க வேண்டும் .  உயர் உத்தியோகம் பார்க்க வேண்டும் என மனக்கோட்டைகளைக் கட்டி ஆசைகளை வளர்த்துக் கொண்டான்... அதற்கேற்ப வாழ்ந்தும் காட்டினான் ....

இன்று மெக்கானிக்கல் இஞ்சினியரிங் ...படிப்பு முடித்து அவன் ஒரு தொலைத்தொடர்பு கம்பனிக்கு உயர் அதிகாரியாக் இருக்கிறான்...மங்கை ஊரில் பட்ட படிப்பு முடித்து  உள்ள பள்ளியில் .ஆசிரியையாக் இருக்கிறாள். சின்னவள் பட்டணத்தில்  மருத்துவ படிப்பில் இரண்டாம் ஆண்டு.மூத்தவள் மங்கையை ....பெண் கேட்டு வந்தனர்...பெரியம்மாவின் உறவுக்காரர்கள்.பெண் பிடித்துப்  போகவே,நிச்சயதார்த்தம்,நாளை,திருமணம்...இதற்கிடையில் அவனுக்கும் பெண் கொடுக்க தயாராக இருந்தனர் ஊரவர்கள். ஆனால் தங்கைகளைக்காட்டி அவன் மறுத்து விட்டான் ........பெரியப்பா மட்டும் இல்லையென்றால்.....இவர்கள் வாழ்வு.........இந்தக்க்ளையான நேரத்திலும் பெரியம்ம்மா  இவனை எழுப்பினார் மேலும் ஆக  வேண்டிய வேலைகளை கவனிக்க் சொல்லி.. நண்பர்கள் இரவிரவாக் சோடனைகளில் ஈடு பட்டு இருந்தனர்.......அவர்களை போய் காலைகடன் முடித்து உடுத்தி வரும்படி அனுப்பி விட்டான் .  எல்லாம் நல்ல படியாய்  அமைந்துள்ளதா  என் மேலோட்டம் விட்டான் ..........

தம்பி..... நாதஸ்வரகாரர்கள் வந்து விட்டார்கள்  ....இன்னும் ரெடியாக வில்லை யோ ?என்று  பெரியப்பா வந்தார்............குளியலறையில் ....சென்று தாளிட்டு கொண்டவன்....யாரிந்த தேவதை ....யார் இந்த தேவதை ....என்ற பாடல் சத்தம் கேட்டதும்..........தனக்கான ..தேவதை எங்கு பிறந்த இருப்பாளோ என் ...மனம் துள்ளியது.......எல்லாம் ஒருபடியாய் சுபமே நடந்தேறியது.....தாலிகட்டியபின் பெரியப்பாவின் காலில் விழுந்து வணங்கும் போது....அருகில் நின்ற  இவனின் காலையும் தொட்டு   வணங்கினாள். ...........புல்லரித்து போனான்...

"திரு நிறைச்செல்வி ....மங்கையர்க்கரசி ....திருமணம்
கொண்டாள் இனிதாக ...

நாட்கள் வாரங்களாகி ..இரண்டு வாரங்கள் விடுப்பில் வந்தவன்...........விடுமுறை முடிவதை உணர்ந்தவன்....தன்க்கான் பயணத்துக்கு டிக்கட் ஒழுங்கு  செய்ய புறப்பட்டான். மனசு இலேசாக் கனத்தது ...பூ மழை  தூவி வசந்தங்கள் வாழ்த்த
ஊர்வலம் நடந்தது ...............என் தங்கையில் நெற்றியில் மங்கல் குங்கும சிரித்தது.
.....என் இனியவளே எங்கிருந்தாலும் வாழ்க. .

ஒரு பக்க கதைகான் ஒரு சிறு முயற்சி........எப்படி இருகிறது?   ............

Monday, April 5, 2010

சின்ன சின்ன முத்துக்கள் .......

இதுவும் சிறு கவிதையாக இருக்கலாம் .
...நீங்கள் தான் சொல்லணும்

தாய் மனசு ..........

விடுமுறையில் வந்த மகனுக்கு
பக்குவமாய் சமைத்து கொடுத்தாள்
இடைவெளியை இட்டு நிரப்ப .

நட்பின் வலிமை

ஆபத்தில் தெரியும்
கைம்மாறு
கருதாத
உதவும் கரங்கள்

பிரிவு ....

தொலை தூரம் சென்றாலும்
மடலில் அன்பு  தெரியும் போது
துள்ளிக்குதிக்கிறது மனசு

பசி ...

அம்மா உன் மதிய சாப்பாடு ..
அமுதமாய் இருந்தது  .
ஆறி இருந்தாலும் 

Saturday, April 3, 2010

சின்னச் சின்னக் கண்ணம்மா

 சின்னச் சின்னக் கண்ணம்மா

வாழ்க்கையின் சுழற்சியில் ...துன்பங்களை கண்டு துவள்வதும் இன்பங்களை கண்டு மகிழ்வில் துள்ளுவதும் இயற்கை. கடந்த இரு மாதங்களாக் ...நோய் துன்பமும் நெருங்கிய உறவின் இழப்பும். என்னை பாடாய் படுத்தி விட்டன. வலி கண்ட பின் வழி பிறக்கும் என்பார்கள். உடலுமுள்ள்மும் சற்று தெளிந்த நிலயில் .. ஒரு நீண்ட விடு முறையின் பின்... உங்களுடன் ..நானும். ...

இன்று நீண்ட காலத்தின்பின் என் உறவுக்கார பெண் வீட்டுக்கு  போய் இருந்தேன். அவளுக்கு முதலில் ஆறு வயதில் ஒரு ஆண் குழந்தை .  இப்போது இரண்டாம் முறையில் இரு அழகான் பெண் குழந்தைகள். கர்ப்பம் தங்கிய நாளில் இருந்து ...பட்ட  அவஸ்தைகள் சொல்லில் எழுத முடியாது . மிகுந்த அவதிப்ப ட்டாள் உன்னுவதேல்லாம் வாந்தியாக் எடுத்தாள் ..அதற்கு மருந்து எடுத்தும் நிற்கவில்லை .  அடிக்கடி வைத்தியசால யில் அனுமதிக்க்ப்பட்டாள். மிகவும் பலவீனமாய் இருந்தாள் .  இந்த குழந்தைகளை பெற்றுக்கொள்ள முழு நேர கவனிப்பில் இருந்தாள். .மார்கழி பதினெட்டு அந்த சுப நாள். இரு குழந்தைகளும் சேமமாக் வெளி வந்தனர் சிசேரியன் முறை மூலம். எங்கள் உறவுக்குள் இது தான் முதற்தடவை ....இரட்டைக்குழந்தைகள். .அவளின் பூட்டி ( அம்மம்மாவின் தாய் )  க்கு இரட்டை குழந்தைகள் இறந்து  பிறந்ததாக  சொன்னார்கள் )

இரட்டைக்குழந்தைகள். ....அவளது தாயாரும் அருகில் இல்லை ..தாயின் சகோதரி முறையான் ஒருவரும் ... நானும் இடையில் பார்த்து வந்தோம்....கடந்த சில வாரங்களாக  எனக்கும் போக முடியாத் நிலை.....என் வீட்டிலும் அவருக்கு  சுகவீனம். வைத்திய சாலைக்கு  போவது ....என் வீட்டு வேலைகள் ...என்று .....இப்போது தான் சற்று... தெளிந்த  பின் இன்று  போய் வந்தேன்...

காலத்தின் ...விளையாட்டு அவர்கள் நன்றாக் வளர்ந்து  விடார்கள் முகம் பார்த்து சிரிக்கிறார்கள்.   எமிக்கா ......எலனா என்ற அழகான் தேவதைகள். ..மிகவும் ஆச்சரிய பட்டு போனேன்..........அவள் பட்ட வலிகளின் பரிசா...இறைவனின் திருவிளையாடலா?  வேதனையின் பின்  ஒரு சுகம் என்பார்களே அதுவா? .என்னே இறைவனின் கருணை.............

சின்ன சின்னக் கண்ணம்மா ...பேசும் மொழி என்னம்மா ..
தாய் மனம் பூத்திருக்கு ......