Followers

Saturday, August 15, 2009

"போத்தலை தொடமாடேன் ".......

"போத்தலை தொடமாடேன் "........

அந்தக் காலை வேளையின் அமைதியை க லைத்தது ......சளீர் " என்ற சத்தம். என்னம்மா என்றபடி ராகவன் குசினியில் இருந்து வந்தான் . நிலாக்குட்டி ...யின் பால் போத்தல் தரையில் ...சிதறி பாலும் ...சிந்தி இருந்தது . வீரிட்டு அழுதாள். நிலாக்குட்டி . "இனி போத்தலில் குடிக்க மாடேன்."என்று மழலையில் ....கண்ணீர் வழிய நின்றாள். தந்தை ராகவன் அவளை தேற்றிய வாறு பிள்ளைக்கு வேறு போத்தல் மம்மி வாங்கி வருவா . என்று சொன்னாலும் திரும்ப திரும்ப "நான் போத்தலில் குடிக்க மாடேன்." என்றாள்


ஒரு வயதான நிலாக்குட்டிக்கு போத்தல் மறந்து " கப் " (கோப்பையில்)இல் குடிக்க முயற்சி எடுத்து கொண்டார்கள் ராகவனும் மதியும்.
இரவில் சிந்தாமல் குடிப்பாள் என்ற ஆதங்கத்தில் மதியும் அசட்டையாய் இருந்தாள். இன்று ராகவனுக்கு ஒரு நல்ல அனுபவம்

.மாமியார் காய்ச்சல் காரணமாக குழந்தையை பராமரிக்க முடியாததால் வேலைக்கு விடுமுறை (லீவு) எடுத்து இருந்தான் . மதியும் வருட இறுதி என்பதால் விடுமுறை எடுக்க முடியவில்லை. இருவரும்
கலந்து பேசி ராகவன இன்று வீடில் நின்றான..மாலை ஆகியது

மதி யின் வரவை மூவரும் எதிபார்த்தார்கள். ராகவன் நால்வருக்குமாக தேநீர்கலந்தான். மதியோ ...நிலாக்குட்டி கோப்பையில் தேநீர் பருகுவதை ...அதிசயமாக பார்த்தாள்.

அவளுக்கு புரியவில்லை . ராகவன் சொல்லும் வரை.

ஆதிர்ச்சி வைத்தியம் சில சமயம் தேவை படுகிறது ...............

குறிப்பு . "வேறு போத்தல் " என்று ஏமாந்தால் அத்ற்கு நான் பொறுப்பல்ல .....

நினைத்துப்பார்க்கிறேன் ....(..கவிதை )

நினைத்துப்பார்க்கிறேன் ..........

தாயின் கர்ப்பத்தில்
அந்த பத்துமாத பந்தம்
கவலையற்று ,இந்த
உலகம் மறந்து
நானும் அம்மாவுமாய்
உண்பதும் உறங்குவதுமாய்
பத்தாம் மாத முடிவில் "குவா"
என அழுகையும் திகைப்புமாய் ,
குதித்தபோது , எண்ணவில்லை ,
உலகம் இவ்வளவு பெரியது என்று ,
திகைத்து விடேன் நானும் தாயான போது

Friday, August 14, 2009

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்

ஒன்றே ஒன்று ........தாங்கோவன்


அன்று அதி காலை ஜானகி அம்மாள் வழமைக்கு மாறாக பர பரப்பாய் இருந்தாள். வேலைகள் எல்லாம் முடித்து மணியை பார்த்து அது இரண்டு என்று காட்டியது . ஆவல் மிகுதியால் முன் படலை வரை போய் வீதியை எட்டி பார்த்தாள் . இருமிக்கொண்ட ராமசாமியார் அவர்கள் வாற நேரம் வருவினம் தானே ஏன் அம்மா பறந்து கொண்டு இருகிறாய் என்று கூற அதை ஆமோதிப்பது போல வேப்பமர காகமும் மூன்று முறை பறந்த பறந்து கத்தியது .

ஒருவாறு இரண்டு மணி போல வாயிலில் டாக்ஸி (வாடகை வண்டி )வந்து நிற்கும் சத்தம் கேட்டது . ராகவனும் மனைவி ரம்யாவும் ,பேரபிள்ளைகள் அமுதினி , அமுதன் எல்லோரும் வந்து இறங்கினர் . வந்த களை தீர முற்றத்தில் நின்ற செவ்விளநீர் மரத்தில் சொக்கனை கொண்டு இறக்கி வைத்த இளநீர் தாகம் தீர்க்க , குளித்து விட்டு மத்திய சாப்பாடை முடித்தார்கள். ராகவன் அப்பாவுக்கென கொண்டு வந்த இளநீல சேர்ட் , அம்மாவுக்கு சாரி , ஒரு பை நியைய சொக்கிலேட்ஸ் என்று அன்பளிப்புகளை கொடுத்தான் .சொக்கனுக்கென்று மறக்காமல் வாங்கிய நீல சாரத்தை(லுங்கி ) அவன் பிள்ளைகள் ,வரும்போது கொடுக்கும் படி தாயிடம் கொடுத்தான் . ராகவனும் அப்பாவின் சாய்மனையில் இருந்தவாறே பதினாலு வருட கதைகளை சொல்லியவாறே அயர்ந்து விட்டான்

ரம்யா பிள்ளைகளுடன் பின் வளவில் ஆட்குட்டி பிடித்து ,விளையாட்டு காட்டி கொண்டு இருந்தாள் .ராமசாமியார் பின்னும் முன்னும் வந்து ஒன்றே ஒன்று தரமாடீரா என்று நச்சரித்து கொண்டு இருந்தார் " சும்மாபோங்கப்பா" பிள்ளைகள் படுத்த பின் தாரேன் என்று போக்கு காட்டினாள் . இரவும் வந்தது , சுடச்சுட அவித்த குழல் பிட்டும் பலாப் பழாமும் பேரப்பிள்ளைகள் சாப்பிடார்கள் .

இரவு ஒன்பது மணியாகியது . ராமசாமியார் குசினிக்குள் வந்து நான் கேட்டது தர மாடீரா என்றதும் சாபிட்டு முடியுங்கோ படுக்க முதல் தாரன் என்றாள். அவர் சாபிட்டதும் பேரபிள்ளைகள் தூங்கி விட்டார்கள் . ராகவனும் ரம்யாவும் வேப்பமரத்தின் கீழ் நிலவில் பேசிக்கொண்டு இருந்தார்கள். ராமசாமியாரின் ஏக்க பார்வை தீரவே இல்லை. ஒருவாறு பத்து மணியளவில் ஜானகியம்மாள் வந்து அவரிடம் இரண்டு சொக்கலேருக்ளை நீடினாள் . சக்கரை வருத்த காரன் வைச்சு வைச்சு சாபிடுங்கோ என்றாள். அது கிடைத்த சந்தோஷத்தில் அவர் ஜானகியை கட்டி முத்தம் கொடுக்க சீ....... போங்கோ என்று அவள் சினுக்க .....திடுக்கிட்டு எழுந்தாள் ..

ராமசாமி படத்தில் சிரித்து கொண்டிருந்தார் . அவளுக்கு எண்ணமெலாம் தாயகம் நோக்கி சென்றது அவர் இறந்தது , தான் மகனிடம் வந்தது , எல்லோரும் வேலைக்கும் பள்ளிகளுக்கும் போக நான்கு சுவர் நடுவே இருப்ப்து என்று

..........கழிவறை சென்று முகம் கழுவி காலை வழிபாடு செய்தபின் , இன்று வார விடுமுறையில் ராகவனிடம் அப்பாவின் கல்லறைக்கு போய் தரிசிக்க வேண்டும் என கேட்கவேண்டும் என நினைத்தவாறு .... காலண்டரை பார்த்தாள் .

கார்த்திகை ,இரண்டாம் நாள் ................., வந்து நினைவு படுத்தி போயிருக்கிறார் . இளமையில் கிறிஸ்தவ கலூரியில் படித்ததால் அன்டன் ராம சாமி என் பெயார் மாற்றம் செய்து தனது உடலை சேமக்காலையில் ல் அடக்கம் செய்யவேண்டும் என்று இறுதி ஆசையாக கேட்டு இருந்தார் என்பது நான் எழுதாத விடயம் .

Wednesday, August 12, 2009

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) ...

உறவும் வரும் பகையும் வரும் இதயம் ஒன்று தான் ( தொடர்ச்சி ) .......

நித்திலா என்ன செய்வாள் . ?.....அவள் இபோதெலாம் வகுப்புக்கு போவதில்லை ..பெற்றோர் தடுத்து விட்டனர்.கார்த்திகையும் வந்தது . மாமன் மகன் இடையில் வீட்டுக்கு வந்த போனான் . தலைநகரம் சென்று
கடவுசசீட்டு பெறுவதற்கான ஆயதங்களுடன், நிதிலாவை மாமன் மகனுடன் அனுப்பினர் , இது அவளுக்கு மனம் விட்டு கதைக்கும் ஓர் உறவாக இருந்தது . அவள் மனதை தொடக்கம் முதல் அழுகையுடன் சொல்லி முடித்தாள். சில நாட்களாக ஆதவனும் கடையில் தென் படுவதில்லை . அவனது தம்பி வியாபாரத்தை கவனித்தான். ஒரு வாரம் கழித்து நித்திலா கடவு சீட்டுடன் ஊர்வந்து சேர்ந்தாள் . வந்ததும் மாமன் மகன் தனக்கு கலியாண" பலன் "பார்த்ததாகவும் ...அடுத்த வருடம் தான் சரிவரும் என்றும் தெரிவித்து, மீண்டும் அவன் வெளிநாடு புறப்படான். ஒரு சில வாரங்களில் ஆதவனும் வெளிநாடு சென்று விட்டதாக கதை வந்தது நித்திலாவின் பெற்றார் நிம்மதியாக இருந்தனர்.

ஒரு நாள் வாயிலில் கடித்க்காரனின் மணிஒலி கேட்க சின்னையர் போய் வெளிநாட்டு கடிதம் மகள் பெயருக்கு வந்திருக்க இதை படித்து சொல் மகளே என் மருமகன் என்னவாம் என்றார். நித்திலா அழுகைகிடையில் ..விக்கி விக்கி அது ஆதவனுடையது என்றும், தாங்கள் கொழும்பில் பதிவு திருமணம் செய்ததென்றும், மாமன் மகனே சாட்சி என்றும் வீட்டில் பிரச்சனை வந்தால் தன்.....பெற்றோருடன் போய் வசிக்கும் படியும் எழுதியிருந்தார் . சின்னையரும் மனைவியும் ..குய்யோ....முறையோ, வெளிக்கிடு வீட்டை விட்டு
என்று ....ஏசினர் ...விடயம் ஊரில் பரவ ...ஆதவனின் சித்தி தன்வீட்டில் கூட்டிச்சென்று ..வைத்திருந்தார் .

வருடங்கள் இரண்டு உருண்டு ஓடின . ஆதவன் வந்து ஊரறிய ..அவ்வூர் கோவிலில் தாலி காட்டி , அழைத்து வந்தான் தன் வீட்டுக்கு . நித்திலாவின் பெற்றவர்கள் வரவே இல்லை. ... கால ஓட்டத்தில் அவள் ஒரு ஆண் மகவை பெற்று , தந்தைக்கு தெரியாமல் தாயை சென்று பார்த்து வருவாள் . காலப்போக்கில் ஊரில் படையினரின் ஆக்கிரமிப்பால் அவளும் பிள்ளையுடன் புலம் பெயர்ந்துவிட்டாள் ..

கொழும்பில் உள்ள தாய் தந்தையர் அவளுக்கு கடிதம் மேல் கடிதம் .
..ஏழு வயது பெயரனை பார்க்கவேண்டும் என்று .... நித்திலாவின் மனம் என்றும் அவன் வாழும் ஆலயமாக, தன் மனதுக்கு துரோகம் செய்யாத, புனிதவதியாக வாழ்ந்து கொண்டு இருக்கிறாள்

( கதை எப்படி உண்மை கலந்த கற்பனை .)


வாசகர் பின்வரும் கேள்விக்கு விடை சிந்தியுங்கள் .....

மாமன் மகன் செய்தது சரியா?
நித்திலா செய்தது சரியா ?
ஆதவன் செய்தது சரியா ?

நித்திலாவின் தாய் தந்தை செய்தது சரியா ,கலியாணத்தின் போது ?







Tuesday, August 11, 2009

அவளுக்கு ஒரு "வாரிசு " .......

அவளுக்கு ஒரு "வாரிசு " ..........

அமைதியான அந்த கிராமத்தின் ....இளங்கதிரவன் மெல்ல ஒளி பரப்ப் தொடங்கிய அந்த காலை வேளையில் குயிலினமும் பறவைகளின் ஆர்ப்பரிப்புகளுடனும் பொழுது புலர்ந்தது . காலை பஸ் பயணத்துக்கு மகனை எழுப்ப தேநீர்க்குவளையுடன் செல்லம்மா .அவன் கணேசு அண்மையில் உள்ள நகரத்தில் மரக்கறி வியாபாரம் செய்பவன். எழுந்து காலை க்கடனை முடித்து தேநீரை குடித்து தாயிடம் விடைபெற்றான். அவள் தானும் தேநீர் பருகி ,கூட்டு மாறு எடுத்து முன் முற்றத்தை நீர் தெளித்து கூட்டுகையில் அவள் நினைவு ...கடந்த காலம் நோக்கி சென்றது .

செல்லம்மா , ஆசைப்பிள்ளை தங்கம்மா தம்பதியருக்கு மூத்த பெண் . இரண்டாவது பெண்ணியே எல்லோரும் திருமணதுக்காய் கேட்டனர் .
ஏன் எனில் இவள் செல்லம்மா மூத்தவள் பிறவி ஊமை . இரண்டாவது மகளின் கணவர் தலை நகரில் வேலை பார்த்து கொண்டிருந்தார். செல்லம்மா முழு வேலையும் செய்யும் . தந்தை ஆசை பிள்ளையாருக்கு மூத்தவள் இருக்க இரண்டாவது மகளை கட்டி கொடுக்க விருப்பமில்லை இருபினும் அவளுக்கும் வயது வந்து விட்டது . தங்கையின் கணவர் பயணத்தால் வரும் பொது கிணற்றில் தண்ணீர் அள்ளி கொண்டு இருந்தாலும் ஓடி வந்து தங்கைஇடம் மீசையை முறுக்கி காட்டி ,கையில் பயணப்பையை காட்டி சேதி சொல்வாள் தங்கைக்கு .

கால ஓட்டத்தில் அவர்களது தோட்ட வேலைக்கு வரும் செல்லக்கண்டு இவளின் உற்ற நண்பனானான் . ஊராரும் பேசிக்கொண்டனர்.அவனும் இவளுடன் சைகையிலே ஆயிரம் கதை பேசிக்கொள்வர்.இப்படியாக் தொடர்ந்த நட்பு ஒரு நாள் எல்லை மீறி சென்று விட்டது.சில நாட்களாக செல்ல கண்டு தோட்டத்துக்கு வருவதும் நின்றது . அவன் தலை நகரம் போய் விடதாக சொன்னார்கள். ஒருநாள் அவள் காலை வேளை...வாந்தி எடுக்கவே தாய் தங்கம்மா திகைத்து விடாள். வற்புறுத்தி கேட்ட பின் அதற்கு காரணம் செல்லக்கண்டு என்று சொனாள்.

காலம் தான் யாருக்காகவும் காத்திருபதிலையே . பத்தாம் மாதம் ஆண் குழந்தையை பெற்று எடுததாள். ஊராரின் வசை பேச்சுகள் தாங்காமல்..
ஒருவர் பின் ஒருவராக ஆசைப்பிள்ளையும் ..தங்கம்மாவும் போய் சேர்ந்து விட்டனர். தங்கையும் கணவருடன் தலை நகரம் சென்று விடாள். செல்லக்கண்டு ஊருக்கு வரவே இல்லை. தலை நகர் சென்ற ஊரவர்கள் சிலர் அவனை ஒரு ஆட்டோ சாரதியாக கண்டனர். சிறுவன் கனேசுவும் , சாதாரணமாய் பள்ளி சென்றான். சில கர்வம் பிடித்த சிறுவர்கள் அவனை எள்ளி நகையாடினர். இதனால் பத்தாம் வகுப்புடன் பாடசாலையை விடான்.


பின்ப வீட்டில் வரும் காய் கறி களை விற்க தொடங்கியவன் , சற்று பணம் சேரவே , தாய்க்கு தேவையானவைகளை வாங்கி கொடுப்பான். செல்லம்மாவும் சிக்கனமாய் சேமித்து , ஒரு பெரிய தொகையை ,வங்கியில் மரக்கறி கடை வைத்திருக்கும் ஊர் பெரியவர் , இவனின் பண்புகளை கண்டு , தன்னுடன் சேர்த்து கொண்டார். இடையில் தன் தந்தையை பற்றி கேட்க மனம் வந்தாலும் தாயின் நிலை கண்டு , மனதுக்குள் வரும் கேள்வியை , அடக்கி கொள்வான்.

முற்றத்தை கூட்டி முடித்தவள் ,காலை உணவை முடித்து மதிய உணவுக்காக தயாரானாள். வாசலில் தபாறகாரனின் மணிச்சத்தம் கேட்க , சென்று பார்த்தவளுக்கு அதர்ச்சி ........ஒரு தந்தி அவள் பெயருக்கு வந்து இருந்தது . செல்லக்கண்டு விபத்து ஒன்றில் காலமாகி விடான் என்று அந்த ஊர் வாசி ஒருவர் அறிவித்து இருந்தார். இருந்த போதும் தன்னை கவனிக்க வராதவன் . இறந்தென்ன இருந்தென்ன . கிணரடிக்கு சென்றவள் தலையில் நான்கு வாளி நீரை அள்ளிக்கொட்டியவள் , மாலையில் வர இருக்கும் தன் வாரிசுக்காக,மகனுக்காக சமைக்க தொடங்கினா. இனி எல்லாமுமே அவன் தான்.

தன் தள்ளாத காலத்திலும் , தன்னை தாங்குவான் என்ற மன உறுதியுடன் , விரைவாக செயல் படாள். தான் பிறவி ஊமையாய் இருந்தாலும் ...தன்னை திருமணம் செய்ய யாரும் முன் வராத போதும்....தனக்கு கிடைத்த வாரிசு .....தன்னை காப்பான் என்ற நிம்மதியில் அவன் வரும் பாதை நோக்கி ,பஸ் வண்டி வரும் வேளை நோக்கி ....

காத்து கொண்டிருக்கிறாள். .

Sunday, August 2, 2009

இதயத்தில் ஆறாத ரணம்.

இதயத்தில் ஆறாத ரணம்.


அந்த வானுயர்ந்த மாடிக்கட்டத்தில் வசிக்கும் ராஜி ,ஆறு மணி அலாரச்சதம் கேட்டு எழுந்து தேநீருக்காக கேத்தலை தட்டிவிடு , கணவன் ராகுலனை வேலைக்கு அனுப்பும் ஆயத்தங்களை தொடங்கினான். அவனும் பாத்ரூமில் முகம் கழுவும் சத்தம் கேட்டது. தேநீரை பருகியவாறே அவனும் ஆயத்தமானான் .இவள் காலை உணவுக்காக இரண்டு சான்விச் ,மதியம் ஒரு பிடி சாதம் மரக்கறியுடன்,ஏதும் பழவகை, போத்தலில் தண்ணீர் என்று அவனை அனுப்பி வைத்தாள். பின் தான் தேனிரை முடித்தவாறு கண்மணிகளை எழுப்பி பாடசாலைக்கு தயார்படுத்தி நடந்து சென்று பாடசாலை வாயிலில் விட்டு வந்து வீட்டை ஒழுங்கு படுத்தியவாறே வானொலியை தட்டி விட்டாள். .


அதில்"நித்தம் நித்தம் மாறு கின்ற எத்தனயோ ?
நெஞ்சில் நினைத்திலே நடந்தது தான் எத்தனையோ ?
பாடல் அவளை தாயக நினைவுகளிற்குஅழைத்து சென்றது .

அந்த சிறிய கிராமத்திலே கெலிகளும்,கிபீரும் ஆரவாரம் செய்ய அரக்கர்கள் தேடி அழித்து கொண்டு இருந்த காலம்.ராஜியும் தன் இரு குழந்தைகளுடன் மாமா மாமி மைத்துனி ஆகியோருடன் அவசரமாக எடுத்த பால்மா பிஸ்கற் முக்கிய ஒரு சில பொருட்களுடன் அயல் கிராமத்தில் இடம் பெயர்ந்தாள். மேலும் மேலும் நெருக்கடி வரவே மேலும் இடம் பெயர்ந்து ,ஒரு வள்ளத்தில் பயணம் செய்து , ஒரு கிறீஸ்தவ தேவாலயத்தில் தஞ்சம் புகுந்தாள் அங்கும் சில மாதங்கள் கழிந்ததும் ,ஒருவாறு படையினரின் கட்டுப்பாட்டுப் பகுதிக்கு வந்து,ஒரு லாரியில் அடைபட்டு , வவனியா வந்து சேர்ந்தாள். இத்தனைக்கும் ராகுலன் அந்நிய தேசத்தில்,ஏங்கியபட,காத்திருந்தான்.அவளும் குழந்தைகளும் பட்ட துயரம் சொல்ல முடியாது. வங்கியில் பணமும் எடுக்க முடியாமல் பட்ட துயரம் கொஞ்சமல்ல. ஒருவாறு தலைநகரில் ஒரு தூரத்து உறவினருக்கு காசு அனுப்பி அவர்களை எடுப்பித்தான்.

இடமும் புதிது ,பாசையும் புதிது நுளம்புக்கடி என்பவற்றுடன் போராடி வாழ்ந்து கொண்டு இருக்கும் காலத்தில் .......

தலை நகரில் இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வரும் காலத்தில்,ஒரு நாள் அவளையும் குழந்தைகளையும் முகவர் மூலம் எடுக்க இருப்பதாக சொன்னான்.
ஊரவரின் வக்கனை கதைகளுக்கு மத்தியில் வாழ்வதை விடவும்,அப்பாவிடம்
போய் சேரும் ஆர்வத்தில் நாளை எண்ணி காத்திருந்தார்கள். நாளும் வந்தது,
முகவருடன் விமான நிலையம் சென்ற போது ,அதிகாரிகளின் கேள்விகளுக்கு முகம் கொடுக்க முடியாமல் திருப்பி அனுப்பபட்டு விட்டார்கள். ராஜிக்கு ஏமாற்றமும் மேலும் தலையிடியும் ஆகியது, மீண்டும் முகவர் காசை தர மறுப்பதாகவும் அவளை தன் தாய் தந்தையுடன் குழந்தைகளை விட்டு வர சொல்லி ராகுலன் சொல்லவே ராஜி மறுத்து விட்டாள்.

பல வித மனப்போராடங்களுக்கு மத்தியில்,பயணத்தை தொடர்ந்தாள். விமான நிலையங்களில் முகவரின் மனைவியாக நாடகமாடிய போது அவனின் அருகாமைமுள்ளின் மேல் நிற்பது போல் இருந்தது. ஒருவாறு கணவனிடம் வந்து ேர்ந்து வசதிகள் குறைந்த நில கீழ் குடியிருப்பில் அவள் வாழ்க்கை தொடங்கியது.

கடின உழைப்பாளி ராகுலனும் இரண்டு மூன்று வேலை செய்து,தன் குடும்ப செலவுடன் குழந்தைகள்,நாட்டில் பெற்றோர் சகோதரி வாழ்கையும் பார்த்து கொண்டான்.காலங்கள் உருண்டோடி,ராகுலனின் சகோதரிக்கும் திருமணம் ஆகியது.

ராஜியின் ஆறு வயது மகள் முத்து முத்தாக கடிதம் மேல்,கடிதம் எழுதுவாள்.புது மாமா வந்தபின் அத்தை நன்றாக கவனிப்பதில்லை என்றும்,நன்றாக குடிப்பார் என்றும் ,தம்பி நீலன் "அம்மா,அப்பா டண்டா (கனடா) போய் "என்று காணும் விமானம் எல்லாம் பார்த்து சொல்கிறான் என்றும், நீலு அப்பப்பாவிடம் பாடம் கேட்டு படிப்பதாகவும் எழுதுவாள்.


கடிதம் கண்டால் அன்று முழுவதும் கண்ணீரோடு இருப்பாள். காலபோக்கில்
ராஜி தன் அகதி நிலை அங்கீகரிக்க அந்நாட்டு எம் பீ.உதவியுடன் குழந்தைகள் இனைவுக்காக போராடி பத்து மாதங்களில் வெற்றியும் பெற்றாள் எண்ணி பதினோராம் மாதம் தாய் நாடு சென்ற சித்தப்பாவுடன் ஆறு வயது நீலுவும்
மூன்று வயது நீலனும் வந்து சேர்ந்தார்கள்.

ராகுலன் குடும்பத்துக்கு மகிழ்ச்சி பிடிபட வில்லை. குழந்தைகள் , நன்றாக வளர்ந்தார்கள்.

இன்றும் நீலு கேட்பாள்," அம்மா ஏன் எங்களை விட்டு வந்தாய"
ராஜி பட்ட துயர் அவளுக்கு எங்கே விளங்க போகிறது,

அந்த பிஞ்சு மனத்தின் ஆறாத ஆழமான ரணம் இன்றும் நினைவாக உள்ளது. ஒரு போதும் குழந்தைகள் சிறு வயதில் தாய் தந்தையை பிரிந்து தாய்ப்பாசத்துக்கு ஏங்க கூடாது .


அது இதயத்தில் ஆழமான ரணம்.

Saturday, August 1, 2009

மனிதன் ....இறைவன் ஆகலாம். .

மனிதன்.....மிருகமாகலாம். அவன் மனிதன் ஆகலாம். அந்த மனிதன் இறைவன் ஆகலாம்.

நாற்புறமும் கடலால் சூழபட்ட அந்த தீவினிலே ஒரு ஒதுக்கு புறமான சிறு கிராமம் காலத்தின் கோலம்,அரக்கர் ஆட்சியில் ,அக்கிராமத்தில் இருந்தவர் எல்லோரும் வெளியேறி விட்டார்கள். ஒரு விறகு வெட்டியும் அவன் குடும்பத்தினரும் மட்டும் அங்கு வாழ்ந்தார்கள். கிராமத்தவர் எல்லாம் போய்விட ,அவனுக்கு போக்கிடமும் இல்லை.

அருகிலிருந்த சிறு கொட்டிலில் அமைக்க பட்ட வைரவர் சிலைக்கு தினமும் பூசை செய்து வருவதால் அதை விட்டு போகவும் மனமில்லை,கடவுள் காப்பாறுவார் என்ற அசைக்காத நம்பிக்கை அவன் எங்கும் போகவில்லை .

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,ஒருநாள் அவர்கள் வீட்டு நாய் ,சிறுசல சலப்பு கண்டு குரைக்க தொடங்கியது .இரவானதால்..... அவன் இரு சிறு குழந்தைகளுடன் ,வெளியில் செல்ல அஞ்சி ,பயத்துடன் இருந்தான் . விடிய எழும்பி பார்த்த பொது சில சப்பாத்து கால் தடயங்கள் தெரிந்தன .மறுநாள் வழக்கம் போல அவன் விறகு வெட்ட சென்றான்.

மனைவியும் ,தன் வீட்டு வேளையில் இருந்தாள். சிறுசுகள் இரண்டில்,ஒன்று ஏணையில் ( தொட்டிலில்) மற்றையது முற்றத்து மணலில் விளையாடிக்கொண்டு இருந்தது. மீண்டும் நாய் குரை்கவே அவள் எட்டி பார்த்தாள், இரு படை வீரர், நின்றனர். தண்ணீர் கேட்டனர் அவள உள் செல்லவே தொடர்ந்து சென்று , வீட்டில் யாரும் இல்லையா ? கணவன் எங்கே என்று கேட்டு ,வீடின் அறைக்கதவை திறக்க சொனார்கள் . அவள் திறந்ததும் , ஒருவன் அவள் வாயை துணியால் அடைத்தான் மற்றவன் அவளை சீரழித்தான், இப்படியே அவர்கள் வெறி தீர்ந்தும் ,யாருக்கும் சொல்ல கூடாதென எச்சரித்து சென்று விட்டனர்

சற்று நேரத்தில் விறகு வெட்டி வந்த போது சில அடையாளங்களை கண்டு ,மனைவியை கூப்பிடான் ,அவள் அழுதுகொண்டு ,கலைந்த தலையும் ,கிழிந்த ஆடைகளுடனும் விசும்பிக்கொண்டு இருந்தாள் ,அவனுக்கு விளங்கி விட்டது .அவளை தர தரவென்று இழுத்து சென்று வீட்டின் எல்லையிலுள்ள கிணற்றில்,நீரை அள்ளி கொட்டினான் .
நடந்ததை மறந்துவிடு,அரக்கர்கள் ஆட்சி செய்தால்,மனிதம் வாழாது என்று கூறி,வீட்டு சாமி படத்தின் குங்குமத்தை நெற்றியில் இட்டான் .இந்த கடவுள் கூட காப்பாற்ற வில்லையே என்று வீடின் முகட்டை வெறித்த படியே இருந்தான் .

பின்பு அவன் வைரவ சாமிக்கு பூசை செய்வதே இல்லை .அவள் யோசித்தாள்.உயிரை மாய்த்து கொள்ள நினைத்தாள். தான் அவமானத்தால் இறந்தால் பிஞ்சுகள் ,ஏங்கி விடுவார்கள் ,அவன் நடைபிணமாகி விடுவான் பிள்ளைகளை வளர்க்க கஷ்டபடுவான் . ஒரு தாய் வளர்ப்பது போல வருமா?அவனை எப்படி தேற்றுவது என்று எண்ணியவாறு கண்னயர்ந்தவள், தூரத்தே சேவலின் கூவல் கேட்டு ,இயற்கையுடன் போராட,அன்றாட கடமைகள் செய்ய புறப்படாள் . ...

பிஞ்சுகளுக்கும் அவனுக்கும்,காலை தேநீர் வைக்க ....

அவன் தான் இறைவன்(கடவுள் )அவளுக்கு


அவள் ?.......... .

Thursday, July 30, 2009

அப்பா வருவாரா?

அப்பா வருவாரா?

வாழ்க்கையின் இன்னுமொருநாள் மெல்ல உதயமாயிற்று , நித்திலா எழுந்ந்து ,காலைக்கடன் முடித்து , அடுப்பை பற்றவைத்து ,பிள்ளைகளுக்கு ,தேனிர் தயாரிக்க ஆயத்தமானாள் .. நிகிலாவும் நித்தியனுமாக இரு பிள்ளைகளுடன் , புலம் பெயர்ந்து யாழ் நகரத்துக்கு வந்து இரண்டே மாதங்கள் . நிதிலாவும் கணவன் ராகவனும் ,பிழைப்பு தேடி ,ஈழத்தின் ஒரு தீவிலிருந்து வந்திருந்தார்கள்.

ராகவன் எற்கானவே ஆட்களை வைத்து கடற்தொழில் செய்தவன், காரைநகர் நேவியின் அட்டகாசத்தால் ,தொழில் செய்யமுடியாத நிலையால் ெட்டும் பட்டணம் போ என்பதற்கிணங்க இரு மாதங்களுக்கு முன் தான் வந்திருந்தனர்.

யாழ் கத்தோலிக்க தேவாலயம் அருகே ஒரு குடிசை கிடைத்து ,பிள்ளைகளையும் அருகிலிருக்கும் கன்னியர் மட பாடசலையில் சேர்த்துவிட்டு ,கணவன் மனைவி இருவரும் வேலை தேடி ,புறப்பட்டார் கள் . கடைசியாக ஒரு முதியவர் இரங்கி ,ஒரு சைக்கில் கடையில் திருத்துனராக் ,வேலை கிடைத்தது. ராகவன் பள்ளி காலத்தில் ்வீட்டுக்கு அருகாமையில் இருந்த மணியம் சையிக்கில் கடையில் தனது ஓய்வு நேரத்தை செலவிட்டமை ,இப்பொது கை கொடுத்தது, கடந்த இரு வாரங்களாக அவன் வேலைக்கு செல்கிறான் , வீட்டிலும் ஏதோ குடுமபத்துக்கு ,அரை வயிறு உணவாவது கிடைக்கிறது போதும் என்ற மனம் கொண்ட அவர்கள் வாழ்வு இனிதே ஓடிக்கொண்டு இருந்தது.

அதிகாலை ஆறு மணிக்கே ,வேலைக்கு செல்லும் அவன் போய்விட்டதும் எட்டு மணிக்கு பிள்ளைகளை அனுப்பிவிட்டு , அருகில் இருந்த வயதான மூதாட்டிக்கு ஏதும் சரீர உ தவி செய்து கொடுப்பாள்,அவவும் சமையலுக்கு தேவையான் பொருட்கள், சிறு பண மும் கொடுப்பார். இது அவர்ளது படிப்பு செலவுக்கு உதவியது.

சிலசமயம் கடையில் அன்றாட தேவைக்கு பொருட்கள் கிடைக்கும் சிலசமயம் பொருட்கள் யானை விலை விற்கும் அன்றாடம் காய்ச்சியான அவர்கள் வாழ்வு, ஓரளவு ஓடிக்கொண்டு இருந்தது. ஒன்பது வயதேயான நிகிலாவும் ஆறுவயது நித்தியனும் நன்றாக படிப்பார்கள். வானில் வட்டமிடும் எதிரி வல்லூருகலுக்கும் , படையினரின் கெடுபிடிக்கும் மத்தியில் எங்கே விளையாட்டும்,பொழுது போக்கும். அருகில் உள்ள கன்னியர்மட கோவிலுக்கு சென்று வழிபாடுகளில் கலந்துகொள்வர், ஒரு நாள் ஒரு துறவி இவர்கள் துன்பத்தை கேட்டு பிள்ளைகளுக்கு வீட்டு பாடத்தில் உதவி செய்வதாக் சொன்னார் ,நிகிலா அமைதியானவள், நித்தியன் சற்று துடினம் சித்திரையில் பிறந்த உத்தம புத்திரன். அவனுக்கு எதிலும் வேகம், பிடிக்கும், ஒருநாள் சைக்கில் பழகி,விழுந்து காலில் காயப்படான், வைத்திய சாலைக்கு போகமுடியாத நிலையில்,கன்னியர் மடத்தில் காயத்துக்கு கட்டு போட்டு,முதலுதவி செய்தனர்.

இப்படியான ஒரு காலை பொழுதில் அவர்களது குடும்ப அமைதியை குழப்ப ஒரு சம்பவம் நடந்தது , வழக்கம் போல ராகவன் வேலைக்கு செல்லும் போது ,வெள்ளை வான் காரர், மறித்து விட்டனர் , தீவிலிருந்து ஏன் இங்கு வந்ததென்றும்,சந்தேகம் இருப்பதாக கூட்டி சென்றவர்கள் விடவே இல்லை .

கடைக்கார முதியவரும் அன்று மதியம் வேலைக்கு வரவில்லை ,விரைவில் முடித்து கொடுக்கவேண்டிய வேலை உள்ளது என்று வீடு தேடி வந்த பின் தான் தெரிந்தது நித்திலாவுக்கு ,ராகவன் பிடிபட்டவிடயம். அவளும் எல்லா இடமும் தேடி அலைந்து ,வேண்டியவர்களுக்கு விண்ணப்பமும் கொடுத்து விடாள் . இன்னும் ராகவன் வரவேயில்லை. நித்தியனும் தந்தையின் அருகாமையில் படுப்பவன் ,அப்பா
எப்ப வருவார் ? என்று கேட்டு ,களைத்து ,இப்போதெலாம் அப்பா வருவாரா? என்கிறான். ஊரவர்களும் பல கதைகளை சொல்லி அவள்மனம் ,வேதனையில் ,துடிக்கிறது, அவன் வருவானா? எங்கேயிருக்கிறான். ஏதும் , உடலம் கிடப்பதாக கேள்விப்பட்டால் ,
சென்று பார்க்கிறாள் அது அவனாக இருக்ககூடாதென்று. அவன் வருவானா ?

அப்பாவருவாரா ? ......எல்லாம் தெரிந்த அந்த ஆண்டவனுக்கு தான் புரியும். .

Wednesday, July 29, 2009

இலவம் பஞ்சு ........

.. இலவம் பஞ்சு ......

நகரிலே பிரபமான ஒரு கலாசாலை , ஆண்டு விழா தமிழ் தேசீய முறைப்படி உயர் வகுப்பு ஆண்கள் பட்டு வேட்டி உடுத்து ,பெண்கள் சேலை கட்டி ,பொட்டும் பூவுமாக அந்த மண்டபம் கலகலபாக இருந்தது .விழா நாயகன அதிபர் ,ஊர் பெரியவர் எல்லோரும் உரை ஆற்றி முடிய , நிகழ்ச்சிகள் தொடங்கின .

நடனம் ,நாடகம், வில்லுப்பாட்டு என்று ஒரே கொண்டாட்டம் , ராகவனுக்கு இருப்பு கொள்ளவில்லை மீனாலக்ஸ்மி எனும் மீனு குட்டி இடம் தன எண்ணத்தை சொல்ல .....மீனு ஆழகானவள் பண்பானவள் ,வசதி படைத்தவள் என்றாலும் கர்வமர்றவள்
எல்லாராலும் விரும்பபட்டவள். படிப்பிலும் கெட்டிக்காரி .

ராகவன் உள்ளம் தன் மீனுக்குட்டியிடம் எப்படியாவது பேசி தன் உள்ளதை சொல்லிவிட வேண்டுமென்பது. அவனும் நல்ல பிள்ளை ,உதவும் மனம் கொண்டவன் ,உயிர் நண்பன் வாசு வுக்கும் தெரியும் ,ராகவன் மனதில் மீனு இருப்பது. விழா முடிவில் ,உயர் வகுப்பினருக்கான விருந்துபசாரம் நடந்தது . எல்லோரும் ஆண் பெண் என்று மாறி மாறி அமர வேண்டும் .மீனுவுக்கு பக்கத்தில் இடம் கிடைத்த வாசு ,ராகவனுக்காக விட்டு கொடுத்தான் .

ராகவனும் மீனுவும் அருகருகே. உணவு பரிமாற்ற பட்டது . வாசு கண்ணை காட்ட , அவன் தயங்கி தயங்கி ...தொடங்கினான் ,

மீனு நீங்க ,தொடர்ந்து என்ன செய்ய உத்தேசம், ...அப்பா என்ன சொல்லியிருக்கிறார் ? என்று ....பிறகு .அதன பிறகு என்று ........நேர காலத்துடன் ஒருவனை அப்பா பார்த்து கட்டி வைப்பார் ? .. ஏன் கேட்கிறீங்க ? அந்த ஒருவன் ஏன் நானாக இருக்க கூடாது ? ........


நீண்ட அமைதிக்கு பின் .....

தனது முறை பையன அமரிக்காவில் டாக்டருக்கு படிப்பதாகவும் ,அவருக்கு தான் தன்னை கொடுக்க போகிறார் என்றும் சொன்ன போது ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..

ராகவனுக்கு தாங்க முடியவில்லை . ..


தொடர்ந்து சாப்பிட முடியவில்லை ..சாப்பாடு எங்கே உள்ளே போனது
...அவள் வாயில் என்ன பதில் என்று அல்லவா பார்த்து இருந்தான் . ....

இவ்வளவு காலம் காத்து, அவள் ப்டிப்பு வீணாக போய்விட கூடாது, குழம்பி போய்விட கூடாது ..என்று காத்து காத்து இருந்து கடைசியில் ...........
கடைசியில் ...........

வாசு பாடினான் .....மச்சான்....

.." என்ன தான் நடக்கும் நடக்கட்டுமே ....காதலில் தோல்வி வந்தாலும் .


.....தன்னாலே இன்னொன்று கிடைத்துவிடும். கடவுள் இருக்கிறான் மனம் ,தளராதே

........கடவுள் இருக்கிறான் மனம் தளராதே.

அவன் மனம் படும் பாடு அவனுக்கு தான் தெரியும்.

Tuesday, July 28, 2009

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ...

படிக்க வேண்டும் வாழ்கை பாடம் ........

என் வாழ்கை பயணத்தில் ஒரு நாள் ........உங்களையும் அழைத்து செல்கிறேன் . அரச படைகளின் ஆக்கிரமிப்புக்கு சற்று முந்திய காலம் ..நானும் என் மாமா மாமியும் ,மைத்துனி ,மச்சான் ,என் இரண்டு குழந்தைகளுமாக மன்னார் பகுதிக்கு அண்ண்மையில் உள்ள திரு தலத்துக்கு புனித யாத்திரை பயணமானோம் . அக்கால மினி வசு வண்டி ,கிட்ட தட்ட இருபத்தி ஐந்து பேர் கொள்ள கூடியது. யாழ் பட்டணத்தில் ஆரம்பமாகியது நம் பயணம் கடைசி நேரத்தில் ஒரு முதியவர் ஓட வருகிறார் .

சரி என்று அவரை முன் இருக்கையில் அமர்த்தி பயணம் புறப்பட " சளீர் " என்று ஒரு சத்தம் . எட்டி பார்த்த போது அப்போது பிரபலமான ஆணைகோட்டை நல்லெண்ணெய் போத்தல் . பயணம் புறப்பட்ட மாதிரி தான் . பின்னால் சில புறு புறுபுறுப்பு .சரி ,கண்டக்டர் (நடத்துனர் ) பெடியனும் ,சாரதியுமாக மீண்டும் அண்மையில் உள்ள கோவிலில் தீப தூப ஆராதனை காட்டி , புறப்பட்டோம் .

பயணம் இனிமையாக இருந்தது. பிரபலமான சினிமா பாடல்களுடன் .தூர பயணமென்பதால் அதிக இறக்க ஏற்றம் இல்லை . என் வண்டுகள் இடையிடை பசி என்பதால் மச்சாள் உதவியுடன் ,சுடுநீர் போத்தல் பால் தயாரிப்பதும் ,அவர்கள் நித்திரை கொள்வதுமாக இருந்தார்கள் . இடையில் எனக்கு அண்மையில் நடத்துனர் பெடியன் வந்து இருந்து உடையாடிக்கொண்டு ,தேவையான் போது தாக சாந்தி ......வடை டீ போன்ற தரிப்புகளில் நிறுத்தி ஒரு உறவினர் போல பயணித்தோம் .

எமது பயணத்தில் முக்கால் பகுதி முடிந்து விட்ட நிலையில் சக்கரம் (சில்லு ) காற்று போய்விட மாற்றி புறப்படோம் ஒரு ஒருமணி நேர ஓட்டத்தின் பின் " படீர் என்ற சத்தம் " திடுகிட்டு விட்டோம் . ரயர் வெடித்து விட்டது . அதுகிட்ட தட்ட ஒரு காட்டு பிரதேசம் . எலோரும் சரியாக களைத்து விடோம் . காலை ஆறு மணிக்கு வெளிகிட்ட பயணம் பொழுது மங்கும் நேரம் ஏழு மணிக்கு கிட்ட இருக்கும். எலோரும் வாகனத்தை விட்டு இறங்கி விட்டோம். அரை மணி முக்கால் மணி ஆகியது .அந்த பெடியன் (சுந்தரம் ) ஓடி ஓடி தன்னால் ஆனா முயற்சி செய்து கொண்டு இருந்தான்


எங்கள் வயதான மாமனார் .வேறு வாகனத்தில் போவோமா ?.....என்று ஆலோசனை சொல்லிக்கொண்டு இருந்தார் ,நானும் என் குட்டி வண்டுகளின் பிரச்சனையால் (சுடு நீர் தீர்ந்து விட்டது ,)ஆமோதித்தேன். கிட்ட தட்ட ஒரு மணி நேரத்தில் மீண்டும் ஆயத்தமாகியது.என் மாமனாரின் பேச்சு (அவர் ஒரு சுடுதண்ணி) பயனக்களை வேறு . அவனின் காதில் எங்கள் "ஐடியா" எட்டி விட்டது போலும் ,இறங்கும் வரை
அவன் எங்கள் பக்கம் வந்து கதைக்கவே இல்லை . மீண்டும் ஒன்றரை மணி ஓட்டத்தில் அந்த தளத்தை அடைந்து விட்டோம். இறங்கியதும் அந்த பையன் வந்து "அக்கா உங்களுடன் ஒரு கதை" ....என்றான் .

" .காலையில் ஆறு மணிக்கு ஏறினீங்க அண்ணளவாக ஒரு பத்து மணி நேரம் உங்கள் உயிர் எங்கள் கையில் ......நம்பி தானே ஏறினீங்க .கொண்டு போய் சேர்ப்போம் என்று . பிறகேன்? வாகனம் மாற நினைதீங்க .......நடு வழியில் இப்படி செய்ய இருந்தீங்களே ....என்று தன் நெற்றிக்கண்ணை திறந்தான் . ......"

.எனக்கும் மனம் வேதனையாக போய்விட்டது ,மன்னிப்பு கேட்டேன் .தம்பி என் மாமனார் சற்று கோப காரர் ,என்று சமாளித்தேன் அவன் மனம் ஆறவே இல்லை . அக்கா முதல் தடவை அதை மாற்றி பயணம் தொடங்கினோம் தானே ....,இரண்டாம் முறையும் வெடிக்கும் என்று யார் கண்டார் ,எனக்கு புறப்படும் போதே விளங்கி .....விட்டது அக்கா . இனி மேல் இப்படி செய்யாதீங்க ....அப்போது தான் என் மனதில் உறைத்தது .

புத்தக ப்டிப்பு மட்டும் வாழ்கை அல்ல . அனுபவமும் தான் வாழ்கை என்று .


இதனால் தான் பயணத்தில் எண்ணை கொண்டு போக கூடாது என்று

சொல்வார்களோ ?..........

வசந்த கால கோலங்கள் .....

வசந்த கால கோலங்கள் .........

அந்த அமைதியான் கிராமத்தின் மைய பகுதியில் அமைந்து இருந்தது அந்த கலாசாலை மாணவர்களும் மாணவிகளும் ,எந்நேரமும் கல கலப்பாக இருக்கும் . பொழுதினிலே பாடசாலை தொடங்கும் சமையத்தில் சிறு இறைவழிபாடுடன் ஆரம்பித்து அன்றைய காலை செய்தியுடன் ,அறிவித்தால் ஏதும் இருப்பின் அவற்றுடனும் அதிபர் விடைபெறுவார்

உயர்வகுப்பில்தாவாரவியல் வகுப்புக்கு சில மாதங்களாக ஆசிரியர் தற்காலிக அடிப்படையில் வந்து போனார்கள். இந்நிலையில் அதிபரின் அன்றைய செய்தி ,தாவரவியல் படிக்கும் மாணவருக்கு எதிர்பார்ப்புடன் கூடிய இனிப்பாக இருந்தது. அவர் ஒரு பெண்மணி என்றும,அயலிலுள்ள நகரத்தில் இருந்து வருபவர் என்றும் அறிவிக்க பட்டது .


மறு வாரம் திங்கள் கிழமை ,அவர் வந்தார் அமைதியான் ,அழகான் டீச்சர் செல்வி ,சாதனா ஷன்முகராஜா (கற்பனைபெயர் ).அந்த நாளின் மூன்றாவது பாடம் தாவரவியல் .மிஸ் சாதனவுக்கு வணக்கம் செலுத்திய பின் மாணவ அறிமுகம், பின் அவர்களது ஆய்வு கூடம்,பற்றிய விளக்கம் , இவை முடிய ,வகுப்பு பூக்களின் மகரந்த சேர்கை . பூவினங்கள் ,வகை என்ற தலைப்பில் ஆரம்பிக்க பட்டது.

காலமும் ஓடிக்கொண்டு இருந்தது ,மாணவார்களும் ஆர்வமாக படித்தனர் பாடசாலை முடிய அவர் பஸ் (பேரூந்து) வண்டியில் காத்திருந்து வீடு செல்வார். தினமும் அவர் வரவை அந்த வகுப்பு எதிர் பார்த்திருக்கும் , அந்த பாடசாலையின் ஆசிரிய குழாமின் இளம் வயது டீச்சர் அவதான் . தினம் ஒரு கலர் ,அதே நிற பாதணி (செருப்பு) குடை என்று நன்றாகவே அவதானித்தார்கள் .


அந்த வகுப்பில வாசன் எனும் சீனிவாசனுக்கு மட்டும் தனி விருப்பு அந்த டீச்சரில் பஸ் வண்டி வரும் வரை சில சமயம் அவருக்கு துணையாக ,பஸ் தரிப்பில் நிற்பான் ,தேர்வில் இரண்டாம் இடத்தில் அதிக புள்ளிகள் பெறுவான் . ஊக்கமானவன் ,பாட சந்தேகங்களும் கேட்டு தெரிந்து கொள்வான்.

வருட இறுதி பாட சாலை விடுமுறையும் விடப்போகிறது . அன்று வழக்கம் போல வாசன் பஸ் தரிப்பிடத்தில் நின்றான் . திடீரென ... டீச்சருக்கு அவவின் குடை ஆசிரியர் கூடும் இடத்தில் (..staff room .. ) விட்ட நினைவு வரவே ,அவனை எடுத்து வர சொன்னார் . அவன் ஓட்டமும் நடையுமாக எடுத்து வந்தான் ,அதை கொடுக்கும் போது அவவின் கையை பிடித்து , நீண்ட நாள் கனவான

டீச்சர் "" ஐ லவ் யு " என்று கூறி விட்டு ...


அவிடம் அகன்று விடான் . அவர் திகைத்து விட்டார் .பஸ் வண்டியின் நடத்துனர் ,பட்டணத்தின் பெயரை சொல்லி ஏறும்படி குரல் கேட்கவே , நினைவு திரும்பியவராய்.... தனது இருக்கையில் ஏறி அமர்ந்தார்.


அவர் எண்ணமெல்லாம் இந்த பையன் இப்படி கூறி விட்டான் ? இதற்கு நான் காரணமா ....இந்த சின்ன வயசில் ஏன் இந்த சலனம் . அழகான பெண்கள் வகுப்பில் இருக்க ஏன் இந்த பையன் .....இப்படி ? பருவ கோளாறா ? என் இளமையா ? .....மறு நாள் பாடசாலைக்கு அவன் வரவே இல்லை .....அதிபரிடம் சேதி போய்விடும் என்ற பயமோ ? இப்படியே விட்டால் ......அவன் மன நிலை குழம்பி வருட இறுதி பரீட்சை ..தவற விட்டுவிடுவானோ ? மூன்றாம் நாள் ...வந்தான் வாசன் . மத்திய இடை வேளை வாசனை கூப்பிட்டு அனுப்பினார் டீச்சர்

...வாசன் .....அவனும் குற்ற உணர்வுடன் தயங்கி தயங்கி வரவே அவனை அன்போடு அணைத்து ....கவனமாக கேள் .வருட இறுதி சோதனை வருகிறது. கவனமாக படித்து முன்னேற வேண்டும். மனதை அலை பாயவிடாதே ...தாய் இல்லாத உனக்கு ....

...நான் .....அம்மாவாக வர இருக்கிறேன் ..... என்றார் .

அப்போது தான் அவனுக்கு உறைத்தது .அவன் அப்பா பட்டணத்தில் வேலை பார்ப்பதும் வாரமொருமுறை வருவதும், அப்பம்மாவுடன் வாழ்வதும், அப்பாவை எவ்வளவு வற்புறுத்தியும் இரண்டாம் தாரம் செய்யாமல் இருப்பது. ......ஆமாம் ,

அவள் அவன் அப்பாவின் இரண்டாம் மனைவியாக , வரவிருந்தாள். ..

அவளது தனிப்பட்ட வாழ்வில் , பதிவு திருமணம் முடிந்த இரண்டாம் வாரம் ...
கணவனை மோட்டார் வண்டி விபத்தில் பறி கொடுத்து இருந்தாள் என்பது யாருக்கும் தெரியாத ...தனிபட்ட கதை.

Monday, July 27, 2009

அமைதிக்கு பெயர் தான் சாந்தா ....

அமைதிக்கு பெயர் தான் சாந்தா .....

அமைதியும் ,இயற்கை எழிலும் ..கொண்ட அந்த கிராமத்திலே ,மகிழ்ச்சியான
இரு குடும்பங்கள். .செல்லமணி ,தியாகு இருவரும் சகோதரங்கள்.ஆணும்
பெணுமாக இருவருக்கும் இரண்டு பிள்ளைகள் குடும்பமும் குழந்தைகளுமாக
வாழ்ந்து வரும் காலத்தில் ,பிள்ளைகள் படித்து பட்டம் பெற்று
உயர் பதவிபெற்று வாழ்ந்து வரும் காலத்தில் செல்லமனியின் மகள் சாந்தா
வங்கியில் பணியில் சேர்ந்தாள்.

தியாகரின் மகன் ராகவன் ,பல்கலை கலகதிலே ,விரிவுரையாளராக பதவி பெற்றான்.
காலம் உருண்டு ஓடியது .சாந்தாவின் தம்பி சுரேஷ் கலாசாலைகில் படித்து கொண்டு இருந்தான்.


ராகவனின் தங்கை ஆசிரியர் பணியில் சேர்ந்தாள். ராகவனுக்கு பெண்
கேட்டு தியாகர் செல்லமனியிடம் வந்தார்.தம்பி இதை எல்லாம்
நீ கேட்க வீண்டுமா?பிறந்த பொழுதே நிச்சயமானது தானே

எதற்கும் ஒரு வார்த்தை பிள்ளைகளிடமும் கணவரிடமும் கேட்டு சொள்கிறான் என்றாள்.ஆரம்பம், ....ஆயத்தங்கள்... எல்லாம் முடிந்தது. அமைதியாக
வாழும் காலத்தில் ,தாய் நாட்டின்.அவலம் அவர்களை புலம் பெயர
வைத்து விட்டது


மணம் முடித்து மூன்று மாதத்திலே பயணமாகவேண்டி வந்தது. வந்ததும்
ஆண்டு ஒன்று கழிந்ததும் அவர்களிடையே பிரச்சனை.... வீட்டுக்கு வராமை..
...ஒன்றாக செல்லாமை ...,பெரிய பிரிவாகி விட்டது . ராகவனும் மனித

பலவீனத்தில ஒரு வேறு இனத்தை சேர்ந்த பெண் துணைதேடி
ஒரு மகனையும் பெற்றான்

செயதி தொலைபேசியில் நாளாந்தம் அலை அலையாக பறந்தது.


இரு வீடாரும் பெரும்.. பகையை எதிர் கொண்டார்கள். அவர்கள் வாழ்வு இப்படியா
போக வேண்டும் .. இது யார் செய்த தவறு?.... புலம் பெயர் தவறா?..


சாந்தாவின் விட்டுகொடாமையா? ராவனின் புரிந்து கொள்ளாமையா?..

.அவன் செய்த துரோகமா?......

சாந்தா இன்னும் காத்து இருக்கிறாள். எத்தனையோ திருமணம் பேசியும்

..மறுத்து விட்டாள.



..வாழ்கை என்றால் ஒருவனுடன் தான்...........ஒருமுறைதான்...என்று .....

Thursday, July 23, 2009

மனங்களிலே பல ....நிறம் ..கண்டேன்

மனங்களிலே பல ...நிறம் ..கண்டேன்

உதிரத்தை பால் ஆக்கி வளர்த்தது ஒரு உள்ளம்
தோல் மீது போட்டு ,மார்பிலே அனைத்து
உயர் கல்வி தந்தது ஒரு உள்ளம்
முன்னும் பின்னும் காவலுக்கு ஒரு உள்ளம்.

அழகாய் அணிவித்து பார்த்து ஒரு உள்ளம் ...
விழியில் நுழைந்தது ..உயிரில் கலந்தது ஒரு உள்ளம் .
மழலை சிரிப்பால் உள்ளம் கவர்ந்தது ஒரு உள்ளம் ,
நடுக்கடலில் மூழ்கடித்தது ஒரு கல் நெஞ்சம் .

புண் ஆக்கி வெந்நீர் ஊற்றி கண்ணீர் பார்த்து
ஒரு தலை கவிழ்த்தது ஒரு உறவு ....
இத்தனைக்கும் மத்தியில் போராடும் ஒரு உள்ளம்
அது கண்ணீரில் நீராடி கரையாமல் காப்பது ஒரு மனது .

போராடி போரராடி ...மண்ணடி சேர்வது எப்போது .

பூவே........... பூச் சூட வா

பூவே..... பூச் சூட வா ...

மலர்களிலே பல நிறம் கண்டேன்
மாலையாகும் திறன் கண்டேன்
பூஜைக்கு போகும் சில ,கண்டேன்
மலர் வளையமாகும் சில கண்டேன்

த்ண்ணீரில் மிதக்கும் சில கண்டேன்
மாடியில் வாடும் சில கண்டேன்
மாலையில் மலரும் சில கண்டேன்
காலையில் மலரும் பல கண்டேன்


நிறம் உள்ளவை பல கண்டேன் ,
முட்களின் நடுவே சில கண்டேன்
நறு மணம் உள்ளவை பல கண்டேன்
பால்போன்ற வெண்மையும் கண்டேன்

வண்டு மொய்க்கும் சில தேன் உள்ளவை .
மொட்டாகி மலராகி கருக்கூட்டி காயாகி
கனிந்து பழமாகி ,பலன் கொடுத்ததும்
மீண்டும் விதையாகி பூமிக்கு செல்லும்.

மலர்களிலே இத்தனை வகை என்றால்
மனிதமலர் கள் எத்தனை வகை ?....
மலர்கள் பல வகை மலர்ந்து சிரிக்கிறது
மனிதனும் பலவகை மலர்ந்து அழுகிறது...

.இன்பம் எங்கே .....இன்பம் எங்கே.....

இன்பம் எங்கே.....இன்பம் எங்கே

மழலைக்கு தாயின் பால்முட்டி இன்பம்
சிறுமிக்கு பொம்மை மீது இன்பம்
மாணவருக்கு நல்ல பரீட்சை முடிவில் இன்பம்
பல்கலை மாணவருக்கு ராகிங் இன்பம்

மனம் கொண்ட மனையாளுக்கு பூவும் பொட்டும்
பட்டு சீலையும் நகை நட்டும் இன்பம்
கணவனுக்கு /காதலனுக்கு மனிவியின் /காதலியின்
(******** ) விரும்பியதை போட்டு வாசிக்க

தந்தைக்கு மக்கள் சான்றோர் எனக் கேட்பது இன்பம்
தாய்க்கு மக்களின் நல்ல எதிர்காலம் இன்பம்
பேரர்களுக்கு பேரப்பிள்ளைகள் இன்பம்
வயோதிபத்தில் வாலிபத்தை அசை போட இன்பம்

தமிழ் பேசும் மக்களுக்கு தமிழ் ஈழ தாயகம் இன்பம்
களத்தில் எனக்கு பதில் வருவது இன்பம்
மனிதருக்கு இன்பத்தை தேடி தொலைக்கும் வாழ்வு
பாடையில் போனபின் நித்திய இன்பம்

Wednesday, July 22, 2009

சின்ன சின்ன ......ஆசை

சின்ன சின்ன ......ஆசை

வானத்து நிலவை பிடித்துவிட ஆசை
பஞ்சு முகில் மீது சவாரி செய்ய ஆசை
பூங் காற்று போல உலகம் சுத்தும் ஆசை
மழைத்துளியை மாறி தாகம் தீர்க்க ஆசை

சின்ன சின்ன ஆசை சிறகடிக்கும் ஆசை
தமிழ் ஈழ மண்ணில் பிறந்து விட ஆசை
வானத்தில் சிட்டாய் பறந்துவர ஆசை
அன்னையின் மடியில் தூங்கி விட ஆசை

முற்றத்து மண்ணில் விளையாட ஆசை
துள்ளிவரும் மானை பிடித்து விட ஆசை
சவர்க்கார குமிழி பிடித்து வர ஆசை
நீலக்கடல் நீரில் நீந்தி குளிக்க ஆசை

படித்த பள்ளி எண்ணி நினனவு மீட்க ஆசை
பனைமர நுங்கும் ,பழமும் தின்ன ஆசை
மாமரம் ஏறி காய் பறிக்க ஆசை
முக்கனியும் சுவைக்க மீளவும் ஆசை ....

பாடி திரிந்த் பறவைகள் ......

பாடி திரிந்த் பறவைகள் .......


அது ஒரு பாடசாலை பருவம் ...பல்கலை புகு முக வகுப்பின் இறுதி வருடம் .
வழக்கமாக இளயோர் ஒன்று கூடல் (get together )நடத்துவார்கள் .அருகிலிருக்கும் சகோதர பாடசாலையிலும் இருந்து 5 பேரை எடுப்பார்கள். அதன் படி நானும் போய இருந்தேன் . அதில் பெண்கள் சாரியிலும் ஆண்கள்,ஆங்கில கலாசார உடை ( கோட் சூட் )யிலும் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிவதில்லை .உங்களுக்கும்  விளங்கும் தானே .

அதில் ஒரு நிகழ்ச்சியில் பொதி மாருகை ( parcel passing ) போது அதில் எழுதி
இருப்பதை செய்து காட்ட வேண்டும். என் நண்பிக்கு "ஆண் என்றால் பெண்ணுடனுடனும் பெண் என்றால் ஆணுடனும் கை கோர்த்து வலம்வரவும் .எல்லோரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

அவள் எழுந்து அதிபரின் (ஆண் ) கை பிடித்து உலா வந்தாள் ...புத்திசாலி ....60 வயது அதிபருக்கு இனம் புரியாதா சந்தோசம் ...பக்கத்தில் அவர் மனைவி ...ஆச்சரியத்துடன் ...என்று பார்த்தார் . சக வயதினரை சேர்த்து நடந்தால் மறுநாள் ஊரில் தலை காட்ட முடியுமா?....அப்படி .. ஒரு நிகழ்ச்சி....

அது ஒரு பாடி பறந்த ... பருவம் . இது ஒரு பசுமை நிறைந்த நினைவு ...

......நன்றியுடன் நிலாமதி

Monday, July 20, 2009

சிட்டுகுருவி. .....முத்தம் கொடுத்து

சிட்டுகுருவி. ..முத்தம் கொடுத்து ....

மாலை வெயில் இரவை நோக்கி சென்று கொண்டு இறந்தது ...என் வீட்டு முற்றத்தில்
அழகான இரு குருவிகள் அருகில் அமர்ந்து .ஒன்றை ஒன்று பார்த்து கொண்டு இருந்தன
மரக்கிளை காட்டில் ஆட அவையும் ஆடிய படியே .....சற்று செல்ல ...
ஒன்றையொன்று உதடுகளால் உரசிகொன்டனே ...ஒன்று சற்று பெரிதாக இருந்தது .
கழுத்லே கருமையாக ...,மத்தது ..சிறிதாக சிறு புள்ளிகளுடன் ....சிறிது நேரம் செல்ல
..ஒன்று சிறு குச்சிகளை ஒவொன்றாக கொண்டு வந்து சேர்த்து
..மற்றயது அருகிலிருந்த காய்ந்த இல்லை சருகுகளை கொண்டு வந்தது.
நானும் ஜன்னலோரம் பார்த்து கொண்டு இருந்தேன் ...........

மாலை பசுக்கள் வந்து மாட்டு கொட்டில் அடைவதற்காக அழும் சத்தம் கேட்டு சென்று விட்டன்.என் வேலையில் மும்முரமாக இருந்ததில் மறந்து விட்டேன் ஒரு வாரம் சென்று விட்டது
ஒரு நாள் குருவி நினைவு வர ...ஒரு ஏணி வைத்து எட்டி பார்த்தேன் சின்னஞ்சிறு ... மூன்று முட்டைகள் இருந்தன ..
எனக்கு மகிழ்ச்சி தாங்கமுடியவில்லை சுற்றும் முற்றும் பார்த்து கையில் எடுத்து பார்த்து
விட்டு வைத்து விட்டேன் ...

ஆண் குருவி கண்டால் அவ்வளவு தான் கொத்தி.... குட்டி விடும் ... ...சில வாரங்கள் சென்று விட்டன.நானும் எனது வேலையில் ....ஒரு நாள் மரத்தை பார்த்த பொது கீச் ...கீச் என்ற சத்தம் ..
தாய் குருவி குஞ்சு களுக்கு உணவு கொடுத்து கொண்டு இருந்தது ...எவ்வளவு இனிமையான வாழ்கை ...
..ஆண் பெண் குருவிகளிடியே.. உள்ள பாசம் ...ஒற்றுமை ...இரண்டும் சேர்ந்து பராமரிப்பு .

இப்படி மனிதர்கள் வாழ்கிறார்களா/.....

சிட்டு குருவி முத்தம்கொடுத்து... சேர்ந்திடக் கண்டேனே .

செவ்வானம் கடலினிலே கலந்திடக் கண்டேனே ...

மொட்டு விரிந்த மலர்களிலே வண்டு மோதிடக் கண்டேனே ....

Friday, July 17, 2009

என்னவளே .....அடி என்னவளே

என்னவளே .....அடி என்னவளே .


அதிகாலை ஐந்து மணிக்கு எழுந்து , கணவனை வேலைக்கு அனுப்பி விட்டு ..சற்று கண் அயரலாம் என்று படுக்கையில் சரிந்தவளுக்கு ....தொலை பேசியின் கிணு கிணுப்பு .விழித்து எழ வைத்தது ,சுதா எடுத்து கலோ ..........என்றவள் .மறு முனையில் சற்று பழக்கமிலாத குரல் ஆனாலும் எங்கோ கேட்டது போன்று ஒரு உணர்வு ....கலோ ..நீங்க யார் என்று தெரியவில்லையே .....பெயரை சொன்னான் . பின் நீண்ட மெளனம்.

அவன் சுந்தர மூர்த்தி எனும் சுந்தர் .........சுதா என்னை மறந்து விடாயா ?நீண்ட மெளனம் ...அவளை தாயக நினைவுக்கு இட்டு சென்றது . பாடசாலைக்காலத்தில் ....அதே கலூரியில் படித்தவன். அவள் பினால் சுற்றி திரிந்தவன் ......நீண்ட காலத்தின் பின் மனம் மாறி அவனை விரும்பியவள். இவள் பத்தாம் வகுப்பு இறுதி சோதனை செய்யும் போது அவன் பல்கலை கழகம் நுழைய இருந்தவன். ரண்டு வயது இவளை விட கூடியவன். ஒரு நாள் இவள் ... பஸ் தரிப்பில் கண்டதும ஓடி வந்து தான் நாட்டு நிலைமை காரணமாக் வெளி நாடு செல்ல இருப்பதாக வந்து சொன்னவன் ......"..காத்திரு வருவேன் " என்றவன். கொழும்பில் நின்று இரண்டு மடல்கள் நண்பன் மூலம் கொடுத்து விடிருந்தான். பின் இரண்டு வருடங்களாக எதுவுமே இல்லை. இவை எதுவுமே சுதாவின் பெற்றாருக்கோ சுந்தரின் பெற்றாருக்கோ தெரியாது . காலம் யாருக்காகவும் காத்திராமல் உருண்டு ஓடியது .......

இடப்பெயர்வுகள். ...கெடுபிடிகள். குண்டு சத்தங்கள் ....என்று ஐந்து வருடங்கள்.
ஓடி விட்டன . எல்லோரைய்ம போலவே சுதாவும் இடம் பெயர்ந்து வவனியாவந்து பின் கொழும்பில் உள்ள ஒரு மாமா வீட்டுக்கு வந்து சிலகாலம் தங்கி இருந்தார்கள். பின் சுதாவின் பெரிய மாமாவின் உதவியுடன் ஒரு வீடின் ஒரு பகுதியை வாடகைக்கு எடுத்து கொண்டார்கள். ஒரே ஒரு பிள்ளையான சுதாவை ஒரு நல்லவன் கையில் பிடித்து கொடுக்கவேண்டும் என்று பெற்றவர்கள். பேசிக்கொண்டனர். சுதாவின் தந்தையும் ஊரில் செய்த தரகு வேலை இல்லாததால் புடவை கடை ஒன்றில் சிறு பணியை தேடிக்கொண்டார். அவர்கள் வாழ்வு அமைதியாகவே போனது .....சுந்தரின் எது வித தொடர்பும் இல்லாததால் சுதாவும் எதுவும் பெற்றவருக்கு சொல்லவில்லை.காலம் தான் யாருக்கும் காத்திருப்பதி ல்லையே . சுதாவுக்கு திருமணம் முற்றாகி ...வெளிநாடு மாப்பிள்ளைக்கு மனைவியானாள். ஆறு மாதமாக் வதிவிட விசாவுக்காக காத்திருந்தவள் , மூன்று மாதமுன்பு தான் கனடாவந்து சேர்ந்தாள். தன கதையை சொல்லி முடித்தவள் மறு முனையில் ...சுந்தரின் கதையை கேடும் அழுதே விடாள். சுந்தர் கொழும்பில் இருந்து வெளிக்கிட்டு ..மலாசியா வந்ததும் ...ரண்டு முறை திருப்பி அனுப பட்டதும் , பின் மூன்றாம் முறையில் அமெரிக்க வந்து .....கடந்த மூன்று வருடமாக் கனடாவில் இருப்பதாய் அறிந்து கொண்டாள். இவளை பற்றி விசாரித்த போது இவள் வவனியாவில் இருப்பதாக் தான் கேள்வி பட்ட்தாக் சொனார்கள்.

விதியே நம்மை சேர்த்து வைக்கவில்லை. என் மன ஆதங்கம் தீர தான் உன்னை தேடி தொடர்பு கொண்டேன் . திருமண விடயமும் கேள்வி படேன் . நீ எனக்கு இல்லய் என்றதும் எவ்வளவு கவலை படேன். நம்ம விதி அவ்வளவு தான் சந்தோஷமாக் இரு . நான் உன்னை தொடர்பு கொண்டத்தை கணவனுக்கு சொல்லாதே வீண் சந்தேகங்களும் பிரச்சினைகளும் வரும் .என் சுதா சந்தோசமாக் இருக்கிறாள் என்ற மன அமைதியில் வாழ்ந்து விடுவேன். எப்போதாவது என்னை கண்டால் ... பழைய மாணவன் என்று அறிமுகப்படுத்தி ஒரு வார்த்தை கதைத்து விடு .எனக்கு மேலும் யுனி வரை படிக்கவில்லை என்ற கவலை தான் நாடுக்கு வந்த காசுபிரசினை தீர்க்க வேலை செய்யவெளிக்கிட்டு ...கடன் கட்டியது தான் மிச்சம் . ஒரு காலத்தில் என் பிள்ளையும் உன் பெண்ணும் கல்லூரியில் படித்தால் ....சேர்த்து வைப்போம். இனி மேல் உன்னுடன் தொடர்பு கொள்ள மாடேன். சந்தோசமாயிரு . எந்த விதத்திலும் உன்னை தொல்லை படுத்த மாடேன் இது தான் முதலும் கடைசியுமான அழைப்பு . என்னை நம்பு சுதா .

சுதா கண்ணீருடன் கட்டிலில் விழுந்தாள் .சுந்தர் இங்கு இருக்கிறான் என்று தெரிந்தால் நான் கலியாணத்துக்கு சம்மதம் சொல்லியிருக்க மாடேன். எந்த நம்பிக்கையை வைத்து நான் காத்திருபது ...புயல் வீசியது போல இருந்த உரையாடல் .

எழுந்து சென்று குளித்து விட்டு தன் ஆங்கில வகுப்புக்கு போக ஆயத்தமாகி பஸ் தரிப்பில் நின்றாள்.

நிறை வேறாத ஆயிரம் ஆயிரம் காதலில் அவளது காதலும் சேர்ந்து கொண்டது .

Sunday, July 12, 2009

பரிசு ..............

பரிசு ..............

அந்த சிறு கிராமத்தில் . வாழ வந்தவள் தான் , சாவித்திரி . தபாற்காரன் சோமுவுக்கு மனிவியாக , இனிதே இல்லறம் நடத்தி வந்தாள் . மூத் தவள் , .சோபனா , சுதா ..இருவரும் படிப்பில் கெட்டிகாரி கள். . கணவனின் வருமானத்துக்கேற்ப செலவு செய்து . தானும் தன பாடுமாக வாழ்ந்து வந்தாள் . சோமுவும் கம்பீரமான தோற்றம் கொண்டவள். அந்த ஊர் மக்களால் மிகவும் விரும்ப பட்டவன் . காதலர்களுக்கு தெய்வமானவன். வழியில் மறித்து தபாலை பெற்று கொள்ளவதில் அந்த ஊர் இளையவர்கள் பலே கிலாடிகள். வீடில் வந்து எதுவுமே சொல்லமாட்டான்.அந்த ஊரில் தபால் அதிபர் , இருவருடதுக்கு ஒரு முறை மாற்றம் பெறுவார்கள். இடையில் அவர்களது குடும்பத்துக்கு மளிகை பொருட்கள் வாங்கவும் அனுப்ப படுவான் . காலையில் , காக்கி சட்டையுடன் புறப்படும் அவன் . மாலையில் சிலசமயம் மதியமே வீடு வந்து விடுவான். ரயில் வர தாமதமாகும் நாட்களில் அவனும் வீடு திரும்ப நேரமாகும் . தபால் கந்தோருக்கு வரும் பென்சன் காரருக்கும் மிக நட்பானவன். அந்த ஊரில் பதின் நான்குக்கும் பதின் ஆறுக்கும் இடையில் வரும் ஒரு வேலை நாளில் ஓய்வூதியம் கொடுப்பார்கள் . வாசிக்க சாலை பெரியவர்கள் இவனை கண்டால் " சோமு எப்பவாம் இந்த முறை பென்சன் " என்பார்கள். அவனுக்கு தெரிந்தால் அந்த நாளை சொல்வான்.

அந்த ஊரில் விசில் சத்தம் வீட்டு காரரை வாயிலுக்கு அழைக்கும். கடிதம் விநியோகத்துக்காக . இனிமையாக போய் கொண்டிருந்த அவர்கள் வாழ்வு ஒரு நாள் இருண்டு விட்டது ...ஒரு நாள் சோமு கடித பரிமாறல் செய்து கொண்டிருக்கும் ஒழுங்கையால் வந்து திரும்பும் போது , எதிரே வந்த லாரி யை ( கன ஊர்தி ,கன ரக வாகனம் )) கவனிக்க வில்லை இவன் மீது மோதி விட்டது சைக்கிள் (மிதி வண்டி ) ஒரு புறம் ....சிதறிய தபால் பொதிகள் ஒரு புறம் ரத்தவெள்ளத்தில் கிடந்தான் . பின்பு அம்புலன்சு ......பொலிசு ( நகர் காவலர் ) ......விசாரணை என்று எல்லாம் முடிய அவனது உயிரற்ற உடல் வீட்டுக்கு கொண்டு வரப்பட்டது .......ஊரவர்கள் எல்லோரும் கண்ணீர் மல்க விடை பெற்றான் இரு பெண்குழந்தைகள் பத்து ..ஒன்பது அனாதைகளாக விடப்பட்டனர். கையில் இருந்தவற்றை கொண்டு காலத்தை ஓட்டினாள்.எல்லாம் முடிய அவனது பென்சன் , பணத்துக்காய் பார்த்து கொண்டு இருந்தாள் ....அது வர மிக தாமதமாகியது ....கூலி வேலைக்கும் சென்றாள். ,,,,பிள்ளைகளும் வளர்ந்து மூத்தவள் பெரியவ ஆனாள் .அத்தோடு ....அவள் பாடசாலை இடை நிறுத்தபடார். இளையவள் ...சிலகாலம் படித்தும் ...முடியவில்லை. ..அவளுக்கு ஆங்கில அறிவும் குறைவு . தபால் அதிபர் ...மேலதிகாரிகள் என்று எல்லாரிடமும் பேசி பார்த்தாள். இவள் கோலத்தை கண்டு யாரும் மதிக்கவில்லை. ...கையூட்டு கேட்பவராக் இருந்தனர். இதன் போது தான் அந்த ஊர் " கந்தோர் கந்தசாமி "....அறிமுகமானார். இவள் தன பிரச்சினையை சொல்லி கேட்டால் ஆங்கிலத்தில் கடிதம் எழுத அடிக்கடி இவள் வீடுக்கு வருவார். பெஞ்சனியராக் இருந்தாலும் கம்பீரமான இருப்பார் . இரு மகன் கள் பெரியவர்கள் ....வெளி நாடில் இருந்தார்கள். மனைவி சாரதாம்பாள் எந்நேரமும் கோவில் குளம் என்று திரிவாள். பணியாட்களை கொண்டு பூக்களை கட்டி கோவிலுக்கு ..சிலைகளுக்கு அணிவிப்பாள் . ,விரதம் இருப்பது என்று . எந்நேரமும் சமய அலுவல் செய்வாள். கந்தோர் கந்தசாமியார் சாவித்திரி வீட்டுக்கு போய் வருவது ...ஊரவர்களால் தப்பாக பேசபட்டது இது சாரதாம்பாளுக்கும் காதில் எட்டவே கணவனை கண்டித்தாள். சிலர் மாலை மங்கும் நேரங்களிலும் போய் வருவதாக சொன்னார்கள். ..

.இப்படி பல மாதங்கள் சென்றன. ஒரு நாள் ....அந்த ஊரில் உள்ள ஒருவருக்கு ரண்டாந்தாரமாக் மூத்த பெண்ணை கேட்டனர். அயல் ஊரில் இருந்தவர்கள். மகளுக்கு சிறியவயது என்று தட்டிக்களித்து விடாள்.ஒரு நாள் ....வழமையாக கூலி வேலைக்கு செல்லும் அவள் வேலைக்கு வராததால் .....அந்த ஊர் பெரியவர் ஒருகூலி ஆளை அனுப்பி சென்று கூப்பிடு பார்த்த போது . அவள் இல்லை. ...பிள்ளைகள் இரண்டும் . தூரத்து கிணற்றுக்கு தண்ணீர் எடுக்க சென்று விடார்கள் வந்து பார்த்தபோது .........சாவித்திரி ...வீட்டின் முகட்டின்

சீலை இல் தொங்கி கொண்டு இருந்தாள் .........பாவம் அந்த சாவித்திரி க்கு ஊர் கொடுத்த் பரிசு .......நடத்தை. கெட்டவள். i

விலைமாதர் ...........விபச்சாரிகள் ....நடத்தை கெட்டவர்கள்.... அவர்களாக பிறப்பதில்லை .......உருவாக படுகிறார்கள்.

This post has been edited by நிலாமதி: Yesterday, 11:09 PM