Followers

Monday, October 25, 2010

அழகுக்குட்டி செல்லம் .






அழகுக்குட்டி செல்லம் 

.சென்ற வார  விடுமுறையில் என் அக்கா மகள் வீட்டுக்கு  சென்று இருந்தேன்..அவளுக்கு பெண  குழந்தை கிடைத்து பத்து மாதங்கள் ஆகின்றன. முதற்குழந்தை,  அவளது தாயார் தாயகத்தில். இடையில் நானும் அவளது ம ச்சாளும் (கணவனின் தங்கை) உதவியாய் இருந்தோம். . கணவன் காலயில் வேலைக்குபோயவிடுவார் நம்ம செல்லக் குட்டி எழும்பிவிடுவாள். காலையில் டாட்டா பாய் சொல்லி ..அப்பாவை அனுப்பி வைப்பாள். அக்கா மகள் தன்  வேலைகள் ஆரம்பிப்பாள் .அடிக்கடி நப்பி மாற்றுதல்,( diaper )தூங்க செய்தல் ...நேரத்துக்கு பாலூட்டுதல் என்று தனியாகவே எல்லாம் செய்வாள்.  கற்றுக் கொண்டுவிடாள். சில சமயம் வீட்டில்  எல்லோரும் தூங்கக் செல்லக்குட்டி மட்டும் கொட்ட கொட்ட விழித்துக் இருபாள். இதனால் தாயும் காலயில் சேர்ந்து  தூங்கி விடுவார் .

 நல்ல பண்பான் பொறுமை சாலி  மருமகன்.   தானே எழுத்து காலையில் காப்பி  காபிபோட்டு குடித்து தன் சாப்பாட்டு பெட்டி  ( குளிரூட்டியில் இருக்கும்) எடுத்துக் கொண்டு மனைவிக்கு காப்பியும்  வைத்து விட்டு செல்வார்.  மாலை ஆறு மணியாகியதும்....நம்ம கதாநாயகி வாயிலை பார்த்த படியே இருப்பாள். கதவில் திறப்பு போட்டு சத்தம் கேட்டதும் ......ப்பா ......ப்பா என்று தாவியோடுவாள். மீண்டும் தாயிடம் வ்ர கஷ படுவாள் பிகு பண்ணுவாள். .என என்  அக்கா மகள் சொல்வாள் . நானிவளை கழுவி துடைத்து உணவூட்டி தூங்க வைத்து பாலூட்டி எல்லாம் செய்கிறேன் . அழும்போது மட்டும் ம்மா மா என்கிறாள். மற்றும்படி ஒரே ப்பா ப்பா தான்.......கணவனுக்கு
( மருமகன்) தாயின் சுருளான கேசம், தனது  நிறத்தில் மகள் கிடைத்ததை இட்டு உள்ளூர பெருமை. பெண குழந்தை கள் தந்தையுடன் கூட ஓட்டுத்லாய் இருப்பார்கள் என்று சொல்வார்கள். கண்மணியான .செல்லத்துடன் ஒரு உயிரும் ஈருடலுமாய் தான் வாழ்கிறார்கள். .