Followers

Wednesday, March 9, 2011

தோள் கொடுப்பான் தோழன் ........

தோள் கொடுப்பான் தோழன் ..........

ராஜேந்திரன் வழக்கமாக் நண்பர்கள் கூடும் அந்த மதகின் மேல் உட்கார்ந்து யோசனையில் ஆழந்து இருந்தான். மாலை  எழு மணியாகியும் சூரியன் மறைய நேரம் இருந்தது. சூரிய  கதிர்கள் சற்று கண்களை கூச்ச மடைய  செய்யவே அருகில் இருந்த தேநீர்க்கடையில் சென்று தேநீருக்கு சொல்லிவிட்டு கடைக் காரப் பையன் வரவுக்காய் காத்திருந்தான். 

தாயார் கமலா அம்மாள் மாலை உணவு வேளையாகியும் மகன் வரவுக்காய்   காத்திருந்தாள். கணவன் அப்போது  தான் வேலை முடிந்து வந்து கை கால் கழுவும் ஒசைக்கேட்டுகொண்டு இருந்தது. மாலதி சாமி விளக்கு ஏற்றி வழிபட்டுக்கொண்டு இருந்தாள். .கடவுளே இந்த வரனாவது கை கூடவேண்டும். பாடசாலை யிலும் சக ஆசிரியைகளின் ஏளனப் பார்வை . வயது முப்பதாக் போகிற எனக்கு ஒரு வழி காட்டு . என் வேண்டிக்கொண்டு , தந்தையின் சாப்பாட்டு பெட்டியை கழுவி வர ஆயத்தமானாள். சேகரம் ஐயா கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் மிகவும் கட்டுபாடானவ்ர்.  மது புகை போன்ற எந்த  கெட்ட பழக்கங்களும் இல்லாதவர் .