Followers

Monday, March 28, 2011

ஏதோ ஒரு ஏக்கம்





ஏதோ ஒரு ஏக்கம்  

ஓடும் அந்த தொடரூந்து வண்டியில் (  ரெயின் )ஒரு ஓரமாக் உட்காந்திருந்தான் அந்த இளைஞ்சன் . வண்டியின் அசை வாட்ட துக்கு ஏற்ப ஆடிக் கொண்டிருந்தான். மறு பக்கத்தில் நானும் என் சின்ன மகனும் அமர்ந்திருந்தோம். பார்க்க என் நாட்டவன் போல் இருந்ததால் சற்று சின்ன புன் முறுவலுடன் , நீங்க தமிழா என் ஆரம்பித்தேன். ஆம் அன்ரி ...என்றவன் நம் நாடு, சூழல் இருப்பிடம் ,  போர் என் தகவல் களைப பரிமாறிக்கொண்டோம்.   நகரத்திலுள்ள  ஒரு யுனிவெர்சிடியில் , கலைத்துறையில் இரண்டாம் ஆண்டுபடித்துக் கொண்டிருக்கிறான். மாணவ விசாவில் இந் நாட்டுக்கு வந்திருகிறான். அவனது கதையைகேளுங்கள்.  கமலா காண்டீபன் தம்பதிகளுக்கு இரு ஆண் குழந்தைகள் . தந்தை காண்டீபன் தலை நகரில்ளொரு களஞ்சியத்துக்கு  பொறுப்பாளராக  பணி புரிந்து இருகிறார்.திடீர் சோதனியின் போது ...பொருட்கள் கணக்கெடுப்பில் பெரும் எண்ணிக்கை குறைவு வரவே பணியிலிருந்து நீக்கி விடார்கள். அவர் ஊருக்கு வந்து விட்டார் . . மூன்று மாதமொரு முறை வருமப்பா நீண்டநாட்கள் தங்கியிருக்கவே மகன்கள் அருணோ அபிஷேக்  இற்கு பெருமகிழ்ச்சி .சைக்கிளில் சவாரி ,வேண்டிய இனிப்பு வகைகள் என்று  ஆரவாரமாய் ஆறுமாதங்கள் ஆயின சில நாட்களில் ...