Followers

Tuesday, March 23, 2021

ஊருக்கு உபதேசம்

 


ஒரு கிராமத்திலே சிறந்த  கல்விமான் இருந்தார். முக்கிய நிகழ்ச்சிகளுக்கு அவரை பேச அழைப்பது  வழக்கம் .இப்படியாக ஒரு நாள்  மாலை ஒரு கூட்ட்துக்கு அழைப்பு வந்தது அவரும் சென்று தனதுநேரம் வரும் போது  உரையாற்ற தொடங்கினார்.உரையின் இடையே  வாழ்க்கையிலே  உண்மை நேர்மையாக இருக்க வேண்டும் . பிறர் பொருளுக்கு ஆசைப்படக் கூடாது .  என  பல வாறு பேசினார்.  ஆகா என் கணவர்  நேர்மையானவர்.  தெரியாமல் அற்ப ஆசையில் பக்கத்து வீட்டு சேவலை பிடித்து அடைத்து   வைத்து விட்டார் என்று எண்ணி னார் .   

இந்தக் கூட்ட்த்துக்கு அவர் மனைவியும்  இவருக்கு தெரியாமல்  என்ன நடக்கிறது என  விடுப்பு பார்க்க போயிருந்தார். அவர் வீடு வருவதற்கு முன்பே  இவர் வந்து கூடைக்குள் ஒழித்து வைத்த பக்கத்து வீட்டு சேவலை  திறந்து   விட்டு  விடடார் ...சற்று இருள் தொடங்க இவர் கணவன்  வீட்டுக்கு வந்தார் . மனைவியை அழைத்து  வீட்டுக் வேலைக்கார பையனிடம் சொல்லி  அந்த சேவலை  உரித்து  சமைத்து வை  நான் குளித்துவிட்டு வருகிறேன் என்கிறார்.  மனைவியோ  அலங்க மலங்க விழித்தார் . அடி பேதைப்பெண்ணே ஏன் திருட்டு முழி  முழிக்கிறாய் என  ஏசினார்.  அவள் அழுகையுடன் நடந்ததை சொன்னாள். கல்விமானுக்கு கோபம்.குளிக்க சென்று  விடடார் .


  பின் இரவு உணவுக்ககாக மேசையில் அமர்ந்தவருக்கு சுடச்சுட   கோழிக்கறி உணவு பரிமாறினார். சாப்பிட்டு ஏப்பம் விடட படி   "எங்கே இருந்து கோழிக்கறி வந்தது" என கேடடார் . அயல் வீட்டு காரர் தமது  ஊர் மேயும் கோழி அடிக்கடி  காணாமல் போகிறது. . இன்று  மாலையில் எங்கிருந்தோ  வந்து விட்ட்து. மீண்டும் காணாமல் போக கூடாது என  எண்ணி  சமைத்து தாங்களும் உண்டு எங்களுக்கும் தந்தார்கள். என்றார். கோழிக் கறி  உண்ட களையுடன் உறங்க சென்று விடடார் . அடுத்த நாள் அவர் நல்ல மன நிலையில்  மனைவியிடம் ..".ஊருக்குத் தான் உபதேசம் உனக்கில்லையடி பெண்ணே " என்றார். மனைவி மெல்ல சிரித்தார். அயல் வீட்டுக்கு  பையனை அனுப்பி காசு கொடுத்து  ஒரு கோழியை  சமைத்து தரும் படி கேடட ரகசியம்  மனைவிக்கு மட்டுமே தெரியும்.

Wednesday, March 17, 2021

வாழ்க்கையின் திசைமாறல்கள்

 வாழ்க்கையின் திசைமாறல்கள்



அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த   பனிக்காலஇரவு அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது . நடுநிசிஎழுந்து பாத்ரூம்   போய்  விட்டு வந்து  தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க  முயற்சிக்கிறாள் ..அருகே இரு   குழந்தைகளும்  ஆழ்ந்த் நித்திரை.

முன்னைய  நாட்களேன்றால் அவரவர்  அறையில்  தனியேதூங்குவார்கள் . இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி   உள்வரவேண்டும் என்பது பாஸ்கரனின் கண்டிப் பான  கட்டளை.   இந்நாட்டு  வழக்கப்படி   ஆணுக்கு  ஒன்றும் பெண்ணுக்கு  ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை  அனுமதிப்பார்கள்.  சில வாரங்களாக அவர்கள் இவளோடு தூங்குகிறார்கள். இவளுக்கும் அது இதமாக் இருந்தது. அவர்களும் ஒரு ஆதரவாக உணர்ந்து   இருந்தார்கள்.

பாஸ் கரனுடன் அமைதியாக  சென்ற குடும்ப வாழ்க்கை இப்படி புயலாக  மாறும்  என  அவள்  எண்ணவே  இல்லை. சில மாதங்களுக்கு முன் நாங்கள்  சற்று பெரியவீடுவாங்குவோம்  ஆலோசனை கூறி  ..அவர்களிருந்த  வீடு விற்பனைக்கானது . பின்பு ஒரு மூன்று அறைகள் கொண்ட தொடர்மாடிக்கு  இடம்  மாறியபோது தான்  அனித்தா விழித்துக்  கொண்டாள் .

சில  மாதங்களாக அவன் இரண்டு நாள் வேலை,.தூர இடத்தில் வேலை  எனசாட்டு சொல்லி அங்கு  தங்குவதாக  சொல்வான். வீட் டிலும் எந்நேரமும் சிந்தனை வயப்பட்டவனாக இருப்பான். பிள்ளைகள்  எங்காவது வெளியில் கூட்டிப் போவதற்காக  இருந்தாலும் தாமதமாக் வந்து அந்த நாளை சோகத்தில் ஆழ்ந்துவான். மகளுக்கு பன்னிருவயதாகிறது அவளில்  மிகுந்த நேசம் உள்ளவன். தன தாயின் சாயல் என்று சொல்வான். படிக்கும் காலத்திலேயே காதலித்துகைப்  பிடித்தவன். இவளும் தந்தையை இழந்த்தவள் . கனடா நாட்டில் கடின உழைப்பால்  முன்னுக்கு வந்தவர்கள். ஒரே ஒரு தங்கை அவளும் மணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்வாய்  வாழ்கிறாள். கோடை விடுமுறையில் மகனுடன் சேர்ந்து பந்துவிளையாடுவான்.  அமைதியான  வாழ்வில்  ஏன்  இப்படி ஒரு சுழல் காற்று ?


 சில மாதங்களுக்கு  முன்பு ,அவள் அவனது செல் போனை ஆராய்ந்த போது தான் ஒரு பெண்ணின் பெயர் பல தடவை பதிவாகி இருந்தது. அதுபற்றிக்  கேட்டதும்  முதலில் சாட்டு போக்கு சொன்னான் .பின் பிரச்சினையாகி ஒரு பூகம்பமே வெடித்து,  சென்ற வாரம் தனது  உடுப்புக்களை எடுத்துக்கொண்டு தன்  ஒன்றுவிட்ட  சகோதரனின்  வீட் டுக்கு  செல்லுமளவுக்கு வந்து விட்டது .. மறுநாள் அவனது  சகோதரன் வந்திருந்தார். தன் தம்பிக்கு சில  வருடங்களாக  ஒரு பெண்ணின் சிநேகிதம் இருந்தது என்றும் அவளுடன்  வாழப்போவதாக சொல்லி விட் டாராம்.  அவளும் மன்றாட்டமாய் கேட்டாள் . பிள்ளைகளை   எண்ணி தன்னுடன் சேர்த்து வைக்ககேட்டு கெஞ்சினாள் .அவரோ இது குடும்ப விடயம் என  நழுவி விட்டார்.  

 அவன் மனம் மாறுவான் என  காத்திருந்தாள் .  அப்போது தான் அவள்  கடந்தகால அவனது நடவடிக்கைகளை அசைபோட்டாள். சில் மாதங்களாகவே திட்டமிட்டு வீட்டையும் விற்க பண்ணி அதில் வந்த தொகையில் சிறுபகுதியில் இந்த மூன்று  அறைகொண்ட தொடர் மாடியை வங்கி விட்டு  மீதிப் பணத்தை தன் வசப் படுத்தி விட்டான்  என்று.

இனி என்ன செய்வாள் தன் னோடு   வாழப்பிடிக்காதவனை ?  விவாகரத்து மிகவும் மலிந்த பொருளாகி விட்டது .பதின் மூன்றுவருட இல்வாழ்க்கை சலித்து விட்டது. ஒரு  கணமாவது  பெற்ற பிள்ளைகளை எண்ணி பார்த்தானா? மகள் மிகவும் சோகமாய் இருக்கிறாள். எப்படி விளங்கப்படுத்துவேன் அவனது அயோக்கியத்தனத்தை? 

சென்ற வாரம் அம்மாவும் தங்கை குடும்பமும் வந்துபார்த்து விட்டுபோனார்கள்.ஒரு விழாவுக்கு சென்றால்'ஊரவர்  உறவினர் என்ன எண்ணுவார்கள்.  பெண்கள்  கூடிக் கதைப்பார்கள் . இப்படியும் ஒரு துரோகமா?... இரண்டு பிள்ளைகளுக்கு  தந்தையானவனை எப்படி தான்  வளைத்து பிடித்தாளோ?  இன்று சில ஆசைகளுக்காக  என்னை விட்டு செல் கிறவன் நாளைக்கு அவளையும் விட்டு செல்லமாட்டான் என்பது என்ன நிச்சயம் .மின்னுவதெல்லாம்  பொன்னென்று  எண்ணி ..இவனது மதி கெ ட்ட  தனத்தால் வரும் விளைவு/?

என் பிள்ளைகள்   என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை தாயும் தந்தையுமாக் கவனித்து வளர்க்கக் வேண்டும்.இப்படியானவர்கள் எப்போது குடும்பத்தின் அருமை பெருமை,பெறுமதியினை,உணரபோகிரார்கள்..?..கட்டியவளைக் கைவிட்டு,  , காசுபண மேலாம் சுருட்ட ..கூட  வந்து  ஓட்டியவளும் கைவிட்டு,  நோய் வாய்பட்டு வைத்திய சாலை யில் ..பார்க்க ஒருவருமில்லாமல் கடந்த காலத்தை  நினைத்து கடைக்  கண்ணால்  நீர் வழிய ஒரு காலம்  அவனுக்கு  வந்தால் ?.அப்போது காலம் கடந்து விடும். .இவ்வாறு எண்ணியவள் நன்றாக  அயர்ந்து போனாள் .

 திடீரென விழித்தவள்  நேரத்தை பார்த்தும் ..ஒ இன்று சனிக் கிழமை சற் று அவர்கள் தூங்கட்டும் என்று  எண்ணி சத்தமிடாமல் எழுந்து சென்று காலைக் கடன் களை முடித்து காலை  உணவுக்கு தயாரானாள் .என்ன கஷ்ட் துன்பம் வந்தாலும் என்  பிள்ளைகளை  வளர்த்து ஆளாக்குவேன் என்று எண்ணிய வாறு பிள்ளைகளை .தற்காப்புக் கலை (.கராட்டி) வகுப்புக்கு அழைத்து  செல்ல  தயாரானாள் ஒருபுதுமை பெண்ணாக ...

கதை கற்பனை அல்ல.பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தன்னம்பிகையுடன் வாழ  வேண்டும் எனும் நல்  நோக்கத்துக்காக 
எழுதபட்ட குட்டிக் கதை . .

Tuesday, April 17, 2012

கடந்து போன காலம் .

கடந்து போன காலம் .

அந்தக் குடும்பத்தில் ஐந்துபேருமே பெண குழந்தைகளாக பிறந்து விட்டனர் .பூமலர் கந்தையா தம்பதிகளுக்கு . கந்தையா கடின  உழைப்பாளி பயிற்செய்கை (விவசாய மேற்பார்வை)உத்தியோகத்தராக பணி புரிந்தார். மூத்தவள் நல்லகெட்டிக் காரி படிப்பிலும்  ஊக்கமுடையவள்  தானும் படித்து தன் உடன் உறவுகளுக்கும் சொல்லிக் கொடுப்பாள்.  நான்காவது பெண  நல்ல சூட்டிகையான பெண அழகான் சுருள்  சுருள் ஆன கேசம் பார்பவர்களை கொள்ளை கொள்ளும் அழகு . 

மூத்தவள் பருவம் வந்ததும் ஒரு பள்ளி ஆசிரியருக்கு வாழ்க்கைப்  பட்டாள். இரண்டாவது பெண  லண்டனில் உள்ள ஒரு நிறுவன அதிகாரிக்கு திருமணம்பேசி அனுப்பினார்கள்.  மூன்றாவது சற்று கர்வமான பெண . ஆ சிரியையாக உள்ளூரில் பணியாற்றினாள். இவளுக்கு திருணம் பேசி வருமாறு அவ்வூர் புரோக்கரிடம் சொல்லி வைத்தார்கள். நான்காமவள் தனியார் கல்லூரியில் கணணிக் கல்வி கற்றுக் கொண்டிருந்தாள். கடைக்குட்டி ( ஐந்தாவது பெண ) உயர்கல்வி கற்றுக் கொண்டு இருந்தாள். தாய் தந்தையும் கடைசி மூன்று பெண்களுமாக ஐந்து பேர் அவ்வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

ஐந்து பெண பெற்றால் அரசனும் ஆண்டியாவான் என்று ஊராரும் பேசிக் கொண்டனர். ஆனால் கந் தையாவின் ...கடின  உழைப்பும் பூமலர் அம்மாளின் சிக்கனமான வாழ்வு முறையும் இவர்களை நல்ல நிலைக்கு உயர்த்தியது . ஒரு நாள் அவ்வூரின் பள்ளி ஆசிரியர் இவர்கள் வீட்டுக்கு வந்து அவுஸ்திரேலியாவில் இருக்கும் மகனுக்கு நான்காவது பெண்ணை பெண கேட்டார். முதலில் தாய் தந்தை யோசித்து சொல்வதாக  சொன்னார்கள். ஆனாலும் நான்காவது மகளின் எதிர் காலத்தை தட்டிக் கழிக்க விரும்பவில்லை. அவளிடம்  சம்மதம் கேட்ட் போது அவளும் சம்மதம் தெரிவித்தாள். மூன்றாவது பெண்ணும் வரும் வரனைக்  கைவிடாமல் சகோதரிக்கு மண முடித்து  அனுப்புமாறு தன் எண்ணத்தை வெளியிட்டாள் .காலம் உருண்டோடியது . மூன்று பெண்களை கரை சேர்த்த திருப்தியில் தந்தை கந்தையா காலமாகி விட்டார்.

தாயாரும் இரு பெண்களும் வீட்டில்  இருந்தார்கள். தாயாருக்கு (கணவனின் )ஓய்வூதிய பணம் கை கொடுத்தது அவரும் சற்று தளர்ந்து போனார்.  கடைசி பெண நன்றாக  படித்தாள். அந்த ஆண்டு இறுதி தேர்வு எழுதியவள் பல்கலைக் கல்லூரிக்கு   தேர்ந்து எடுக்க பட்டாள் . முதலில் தாயார் விடுதிக்கு சென்று தங்கி படிக்க அனுமதி மறுத்தாலும் அவளது படிக்கும் ஆவலை தடை செய்யாமல் அனுமதித்தார்.மூன்றாவது பெண்ணுக்கு ஒரு திருமணமும் சரி வரவில்லை . பெண பார்க்க வருபவர்களும் முடிவு சொல்ல சாட்டுப் போக்கு சொன்னார்கள. நாளுக்கு நாள் மூன்றாவது  பெண சற்று மாறுதல் அடைந்தாள்.  ஒரு வித எரிச்சல் மன் விரக்தி தாயாருடன் எரிந்து விழுதல் போன்ற மேலும் தீய பழக்கங்கள் குடி கொண்டன. இக்காலத்தில் பல்கலை கல்லூரியில்  உள்ள பெண்ணை அங்கு இறுதியாண்டில் கற்கும் பையன் ஒருவன் விரும்பினான் .. தாய் தந்தைக்கு ஒரே மகனான அவனை தந்தை விரைவில் திருமணம் செய்து ...தன் நிறுவனத்தை பொறுப் பெடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தார். அவருக்கு விரைவில் ஒரு இதய சத்திர சிகிச்சைக்கு  நாளை பார்த்து கொண்டு இருந்தனர் . சத்திரசிச்சை முடித்தாலும் விரைவில் பணியை  பொறுப்பேற்க  முடியாத நிலை காணப்படும்.  
எனவே இறுதி பரீட்சை எழுதி முடித்தும் திருமணம் செய்யுமாறு அவசரப்டுத்தினர்.  அவனின் பெற்றோர். மிகவும் வற்புறுத்தி கேட்டதற்கு தான் கல்லூரியில்  ஒரு பெண்ணை விரும்புவ்தாக  சொன்னான். இதனால் க டைசி பெண்ணின் தாயிடம் விரும்பகேட்டு வந்தனர். பூமலர் அம்மாளும் தன் இயலாத வயது , வரும் வாழ்க்கையை தள்ளிப் போடவிரும்பாது ...தொடர்ந்து படிக்க 
அனுமதியோடு சம்மதித்தாள். திருமணம் மும் அமைதியாக நிறைவேறியது. 

மூன்றாவது  பெண்ணுக்கு மேலும் சினம் உண்டானது . அவள் போக்கு முற்றிலுமாய் மாறியது. புரோக்கர் பேசி வந்த  திருமணங்களையும் மறுத்து விட்டாள்.  தயார் மிகவும் கவலைபட்டாள்.  தன்னை தனித்து துன்பப்பட விட்டு கணவர் சென்று விடாரே என்று எண்ணி கவலைப் பட்டாள்.  மூன்றாவது பெண மிகவும் பிடிவாதமாய் பேசும் திரு மண ங்களைஎல்லாம் தவிர்த்து விட்டாள். அவளது கர்வம் மேலும் மேலும் அவளை பீடித்தது. மாற்றிய பெண்களைப்போல் உறவினர்களுடனும் நன்றாக் பேச மாட்டாள். இந்தக் கவலையால் தாயார் நோய் வாய்ப்பட்டாள். தான் இல்லாத காலத்தில் தனித்து விடுவாளே என்று எண்ணிக் கண்ணீர் உகுத்தாள். அடிக்கடி  வைத்திய சாலைக்கு  சென்று அங்கு தாங்கினாள் இறுதியில் மரணித்து விட்டாள் ...........  எல்லா  பெண்களும் குடும்பத்துடன் வந்திருந்தார்கள். 
இறுதி சடங்கு முடிந்ததும் அடுத்தது என்ன என்ற கேள்வி எல்லோருக்கும் வந்தது. மூத்தவள் தன்னுடன் வந்து தங்கியிருக்கும்படி கேட்டாள். இரண்டாவது தன்னுடன் லண்டனுக்கு வர கேட்டாள்.  கடைசி சகோதரி தன்னுடன் வரும்படி கேட்டாள். எல்லோருக்கும் மறுத்து விடாள் . தான் தனியே அந்த வீட்டில் இருக்க போவதாகவும். உதவிக்கு அவ்வூரில்  உள்ள ஒரு வயதான் வரை (அவுட் கவுசில் ) வளவின் எல்லயில் உள்ள கொட்டகையில்  தங்கியிருக்க் அனுமதிப்பதாகவும் சொல்லி விட்டாள். எல்லோரும் தங்கள் ஊருக்கும் வீட்டுக்கும் சென்று  விட்டனர்.

அவளுக்கு எல்லாம் இருக்கிறது.  வீடு,  பணம் வசதி ஆனாலும் ஒரு வெறுமை. தனிமை
சிலசமயம் தன் கர்வத்தை  எண்ணி கவலைப் படுவாள்.கடந்து போகும் இளமை .மனப்பாரங்களை  பகிர்ந்து கொள்ள முடியாத தனிமை . மனச்சுமை  போன்ற உணர்வு ....வீணாகி விட்ட வாழ்க்கை இப்படியாக எண்ணிக கவலைப்படுவாள்    குடும்ப வாழ்க்கை தாம்பத்தியம் மட்டுமல்ல . ஒரு வித பிணைப்பு . தாய் தந்தை குழந்தைககள் என்ற  ஒரு வலைபின்னல். ஒருவர்  மற்றவருக்காக  வாழும் விட்டுக் கொடுப்பு .தியாகம் பரிவு ..ஒரு வித பாச பந்தம். இத்தனயும் இழந்து விட்டாள். தன் கர்வம் மன இறுக்கம் என்பவற்றால்.. 

கடந்து போன காலம் மீண்டும் வரவா போகிறது ?. பருவத்தே செய்யும் பயிர் போன்றது வாழ்க்கை .மனிதன் ஒரு சமுதாய பிராணி.  இயற்கை வட்டத்தின் படியே வாழவேண்டும். இல்லாவிடால் எதிர்கால மற்று ஒரு போலியான் வாழ்வை , வட்டத்துக்குள் வாழவேண்டியிருக்கும். பல வருடங்களுக்கு முன்னைய  கதையாய் இருப்பினும், ஒரு வேளை இது படிப்பவர்களுக்கு பாடமாக அமையலாம் என்பதால் பகிரப்படுகிறது .

Friday, April 13, 2012

எண்ணிய யாவும் பெற்று இன்புற்று வாழ்க

மிகவும் நீண்ட  நாட்களின் பின் உங்களுடன் .............

எல்லோரும் நலமா ? இன்று  சித்திரைப் புத்தாண்டு  வலையுலக  உறவுகள் யாவரும் நலமோடும் வளமோடும் எண்ணிய யாவும் பெற்று இன்புற்று  வாழ்க என வாழ்த்துகிறேன் . குடும்ப நிலை என்னை வலை  உலக பங்களிப்பில் இருந்து  தூர வைத்து விட்டது . இனித் தொடர முயற்சிக்கிறேன் . நேரமும் காலமும்  கை கூடும்  போ து ... மீண்டும் சந்திப்போம். நண்பர்களே .

Tuesday, January 17, 2012

தாயும் நீயே தந்தை நீயே ..........

தாயும் நீயே தந்தை நீயே ..............

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில்  இருந்து புறபட்ட   விமானம் பலரோடு லதாங்க்கினி  யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட   பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின்  பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால   சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி  கொடுத்த பின் எரியூட்ட   பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி  இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து  ஒரு விடுதிக் நிர்வாக காப்பாளர் மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார் ......அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும்  கவனித்து கொண்டார் ........

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில்  விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை  நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே  என்ற மனக்கவலையிலும்  அக்காவுக்கு விடை  கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால   நோக்கம் கல்வியின்  முன்னுரிமை என உணர்ந்த  இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட  ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா   லதாவுக்கு இனம்புரியாத   பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு  மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு  இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது.  இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது.  தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை     எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .
இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள்    முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா "  என கட்டியணைக்க   வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு  பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள் 


Monday, January 16, 2012

தை மகளே வா


புதுப்பானையில் புத்தரிசியிட்டு
சுவையோடு சக்கரை சேர்த்து
பால் பழமும், இன்முகம் கொண்டு
வரவேற்கிறோம் ,தை மகளே வா.

பழையன கழிய வேண்டும்
புதியன பல புக வேண்டும்
இன்பம் தரவா..இன்னல் தீர்க்க வா
ஈழத்து மக்களுக்கு விடிவு கொண்டு வா

பசித்தவனுக்கு  உணவளித்த கூட்டம்
பசிப்பிணியால் வாடுகிறது
ஆட்சி பீடத்தில் போலி வாக்குறுதி
 கால இழுத்தடிப்புக்களும்   தாராளம்

வெளிநாட்டு உதவியில் உண்டு
கொழுக்கிறது  பெரும்பான்மையினம்
உதவிக்கரங்கள் உரியவ்ரகளை
உரிய வேளையில்  போய்  சேர்வதில்லை

கலப்பை மறந்த பூமியில்
காலத்தின் தேவை கருதி
காலமெல்லாம்  சிறக்க
உழவுத்தொழில் மலர வேண்டும்

Friday, December 30, 2011

இனிய புது வருடம் உதயமாகட்டும்.....

இனிய புது வருடம்  உதயமாகட்டும்...................

பழைய  ஆண்டு கழிந்து புது ஆண்டு ...காண இருப்போருக்கு .2012 .......என்னும் புதிய ஆண்டு மகிழ்ச்சிகரமாக  உதயமாகட்டும் என வாழ்த்துகிறேன் . அத்தோடு .........சென்ற வருடம்  மகிழ்ச்சி .....வெற்றி ....சிறு சோகம் ......சாதனை ...வீடு மாற்றம் ...........என பலவாறாக  என் வாழ்வில் வந்து விளையாடியது .......இத்தனையும் தந்து என்னை  இன்றுவரை வாழ வைக்கும் அந்த எல்லாம் வல்ல பரம்பொருளுக்கு நன்றி ...........என் வலை பக்க  வாசகர்களுக்கும் கருத்து பரிமாறும் உறவுகளுக்கும் .இனிய புதுவருடம அமைய    வாழ்த்துக்கள் ........வரும் வருடத்திலிருந்து  வாரம் ஒருபதிவாவது போடணும் ......என சங்கற்பம் பூண்டு .............மீண்டும் வருட  முதல் வாரத்தில் உங்களை சந்திப்பேன்.......சகோதரி நிலாமதி ..