Followers

Thursday, June 17, 2010

வஞ்சகரின் உலகம்.

வஞ்சகரின் உலகம்.

அமைதியான அந்தக்குடும்பத்தில் நட்பாக் வந்து இணைந்தாள் . பாமினி என்னும் பெண் . கையில் ஒரு கைக்குழந்தை . கணவன் கார் கம்பனியில் வேலை . அந்த தொடர் மாடிக்கு குடிவந்தார்கள். வந்து அயல வீடு என்பதால் கோமதியின் குடும்பத்துடன் உறவு கொண்டாடி .நட்பை வளர்த்துக்கொண்டாள்.   கோமதி அந்த நாட்டு க்கு வந்து ஐந்து வருடமிருக்கும்.  பாமினியும் அவளது நாட்டை சேர்ந்தவள் அவள் மொழி பேசுபவள் என்பதால் ...இரக்கத்துடன் அணைத்து கொண்டாள் கோமதி ....கோமதிக்கு இரு மகன் கள் ஆறு வயதிலும் மூன்று வயதிலும். குழந்தைகளை  கவனிக்க் வேண்டியிருபதால் அவள் வேலைக்கு செல்வதில்லை . கோமதி மூத்தவனை பாடசாலை பஸ்ஸில் பள்ளிக்கு அனுப்பி மதியம் சின்ன்வனுடன் காத்திருந்து மகனைக்  கூட்டி வருவாள்.  பாமினி ... ஒரு மாலை நேரவேலையில் சேர்ந்து கொண்டாள். நன்றாக் கார் ஓடுவாள். கோமதி பாமினியின் கணவனை காண்பதேயில்லை .இரவில் வந்து அதிகாலையில் சென்று விடுவான் . அவனுடன் பேசியதும் கிடையாது . ஒரு நாள் அவர்கள் ஒரு திருமண் வீடுக்கு செல்லும் போது தூரத்தில் அவன் தோற்றம் கண்டாள். கோமதி ....

பாமினி மாலையில் வேலைக்கு செல்லும் போது குழந்தை ( பாமினியின் ) கோமதி வீட்டில் தங்குவாள். இரவு ஒன்பது மணியளவில் குழந்தயை எடுக்க வருவாள். இப்படியே இவர்களது நட்பு வளர்ந்தது. ஒரு நாள் கோமதியின் குழந்தைகளும் பாமினியும் குழந்தையுடன் ஒரு கடைத்தொகுதிக்கு சென்று வந்தார்கள். வீடுக்கு வந்ததும் கோமதி கணக்கு பார்க்க தனது கைபையை தேடினாள். காணவில்லை . ஓடிசென்று ....பாமினியிடம் கேட்க அவள் தானும் காணவில்லை  எனறாள்.கார் தரிப்பிடத்துக்கு சென்று அங்கு காரை திறந்து பார்த்த போது ...அங்கு இருந்தது இருக்கையின் அடியில் . கைப்பையின் ..திறக்கும் இடம் ( சிப்பர் )....திறந்தே இருந்தது . யாரோ ..எதையோ தேடியமாதிரி ....கோமதி ...எல்லாம் இருக்கிறதா என் மீண்டும் ..பரிசோதித்து ...எடுத்துக்கொண்டாள். பணமும் அதிகம் இருக்க்வில்லை ....கைப்பை கிடைத்த மகிழ்வில்.... அதை பற்றி பாமினியிடம் அவள் எதுவுமே கேட்கவில்லை. கோமதி கணவனிடம் சொன்ன போது .....முன் பின் தெரியாதவர்களிம் அவதானமாக இருக்கும்படி எச்சரித்தான். ....காலம் உருண்டோடியது .....பாமின் குடும்பம் அவர்கள் கட்ட தொகுதிக்கு குடிவந்து ...ஆறு மாதமாகியது .....

 பாமினி குடும்பம் ....விடுமுறைக்காக ஐரோப்பா சென்றார்கள்.  பின்பு வந்து ...கணவனின் உறவினர் வீடுக்கு மாடிப்பகுதி காலியாக் இருப்பதால் அங்கு குறைந்த வாடகை செலுத்தி அங்கு குடிபோக போவதாக் சொன்னாள்.அடுத்த வாரமே இடம் மாறி விட்டனர்.
ஒரு நாள் அந்த நாட்டு தொலை பேசி கம்பனியில்  இருந்து கோமதிக்கு அழைப் பு ...வந்தது . பாமதி யுடன் பேச வேண்டும் என்று ...அப்படி எவரும் தன் வீடில் இல்லையென்று சொல்லி விட்டாள். மீண்டும் ஒரு நாள் அழைப்பு ....இவர்கள் தொலைபேசிக்கு.. பின்பு இவளது பிறந்த திகதி ....மற்றும் தன்ன்றிமுக விபரங்களை கேட்ட போது அது கோமதியின்தாக் இருந்தது .... பெயரின் முதல் எழுத்துக்கள் மட்டும் மாற்றம் செய்யபட்டு ....பெற்று  ...அவளது சுய விபரங்களைக்க் கொடுத்து .தொலைபேசி ...டி வீ அனுமதி ....என்பன் பெறப்பட்டு  இருந்தது ....கட்டணமாக் ஆயிரத்து இருநூறு ....(1200dollers) ..செலுத்தத் படவேண்டும் என் கம்பனி கேட்டுக்கொண்டது ......கோமதி அதிர்ந்து போனாள். தன் வீட்டு  தொலைபேசிக்கட்டனம் தனது கணவன் பெயரில் இருக்கிறது ... தனக்கு இன்னோர் இணைப்பு எடுக்க வேண்டிய தேவை இல்லை என்றும் அது யாரோ சதி காரர் செயதவேலை என்றும் வாதாடினாள். கம்பனி நம்ப வில்லை . கோமதியின் நிலை ........மிகவும் சங்கடமாகியது . கணவனும் நான் அப்போதே சொன்னேன் கேடாயா?
பாம்புக்கு பால்  வார்த்த கதையாகி விட்டது ..எந்த புற்றில் என்னவகை பாம்புகளோ ?   .கோமதி கணவனின் வருமானத்தில் மிகவும் சிக்கனமாகவே வாழ்ந்தார்கள் இவ்வளவு தொகைக்கு என்ன செய்வாள்......பணத்தைக்கட்டாவிடால் இவளது கிரெடிட் ( நம்பகத்தன்மை ) பழுதாகி விடும் . ..சிறுக் சிறுக் கட்டலாம் என் தீர்மானித்து இருக்கிறாள். கோமதி ....என்ன செய்யலாம் ......? ...

பாமினி ..குடும்பத்தின் மீதே சந்தேகம் வந்தது.  அவளை எங்கே தேடுவது அவள் பெயர் தவிர எதுவும் தெரியாது ......இந்த உலகில் இப்படியும் சில மனிதர்கள்.கொஞ்சிக் கொஞ்சி பேசி மதி மயக்கும் . வஞ்சகரின் உலகம் வலை விரிக்கும் ..நாம தான் அவதானமாக் இருக்கணும் . யாரைத்தான் நம்புவதோ ...

குறிப்பு ...ஒரு சம்பவத்தை அடிப்படியாக் வைத்து எழுதியது ..
.கதை உண்மை பெயர் கற்பனை ..

Tuesday, June 15, 2010

மண்ணில் வந்த மலர்களே

  .

தவமாய் தவமிருந்து
தாய்  உன்னை பெற்றவள் ,
மகிழ்வுற்ற காலத்தில்
என் இல்லம் தேடி வந்து
என்னையும் மகிழ்வித்த மலர்களே

என் விரல்கள்  பஞ்சு போன்ற
 உங்கள் பிஞ்சு விரல்கள் தீண்டுகையில்
என் உள்ளம் மகிழ்வால் மிஞ்சி விடும்
பூவொன்று மலர்ந்தது போல்
 கன்னங் குழிய சிரிக்கையில்
கவலை எல்லாம் மறைந்து விடும்

ஒன்றுக்கு இரண்டாய் பெண்
புஷ்பங்களை கொடுத்த
அந்த இறைவனின் கருணையை ,
என்ன வென்பேன் மனம் நிறைய
வாழ்த்துகிறேன் பிஞ்சுகளை  

நோய் நொடியின்றி சிறப்போடும்  
வளமோடும் நலமோடும் வாழ்க.
பல்லாண்டு,பாரிலே புகழ் பெற்று
ஈன்ற தாய்க்கும் ,  உறவினர்க்கும்
என்றும் மகிழ்ச்சி தங்குக.

குறிப்பு :    என் வீடில் உறவினர் வருகை ...
அந்த மகிழ்வால் எழுந்த கவி தா வரிகள்.

Monday, June 14, 2010

விரைவில் வருவேன்......

விரைவில் வருவேன்..............

காலம்தான் எவ்வளவு வேகமாக ஓடுகிறது. சித்திரை 23 க்குப்பின் எந்த பதிவும் போடவில்லை அவசரமாய் ஓடிவந்துபார்த்து  போவதுடன் சரி . என் வீடில் விருந்தினர்கள் வந்து இருக்கிறார்கள் .சிறு குழந்தைகளுடன் காலம் இனிதாய் போகிறது .அவர்கள் வீடில் திருத்தவேலை. எங்களுடன் தங்கியிருகிறார்கள். நலம் விசாரிக்கும்  அன்பு உள்ளங்களுக்கு நன்றி . என் வலைப் பக்கத்திலும் ஒரு சிறுமாறுதல். மீண்டும் ஒரு இனிய பதிவில் உங்களுடன் இணைந்து கொள்வேன். நட்புடன் நிலாமதி