Followers

Wednesday, March 17, 2021

வாழ்க்கையின் திசைமாறல்கள்

 வாழ்க்கையின் திசைமாறல்கள்



அன்று வெள்ளிக் கிழமை இரவு . குளிர் சூழ்ந்த   பனிக்காலஇரவு அனித்தா புரண்டு புரண்டு படுத்தாலும் நித்திரை வரவே இல்லை. இரவு மங்கிய வெளிச்சத்தில் ..கடிகாரம் மணி 1.05 காட்டியது . நடுநிசிஎழுந்து பாத்ரூம்   போய்  விட்டு வந்து  தண்ணீரைக் குடித்து விட்டு மீண்டும் தூங்க  முயற்சிக்கிறாள் ..அருகே இரு   குழந்தைகளும்  ஆழ்ந்த் நித்திரை.

முன்னைய  நாட்களேன்றால் அவரவர்  அறையில்  தனியேதூங்குவார்கள் . இரவில் ஏதும் அவசரமென்றால் கதவைத்தட்டி   உள்வரவேண்டும் என்பது பாஸ்கரனின் கண்டிப் பான  கட்டளை.   இந்நாட்டு  வழக்கப்படி   ஆணுக்கு  ஒன்றும் பெண்ணுக்கு  ஒன்றுமாக மூன்று அறை கொண்ட வீட் டில் தான் ஒரு குடும்பத்தை  அனுமதிப்பார்கள்.  சில வாரங்களாக அவர்கள் இவளோடு தூங்குகிறார்கள். இவளுக்கும் அது இதமாக் இருந்தது. அவர்களும் ஒரு ஆதரவாக உணர்ந்து   இருந்தார்கள்.

பாஸ் கரனுடன் அமைதியாக  சென்ற குடும்ப வாழ்க்கை இப்படி புயலாக  மாறும்  என  அவள்  எண்ணவே  இல்லை. சில மாதங்களுக்கு முன் நாங்கள்  சற்று பெரியவீடுவாங்குவோம்  ஆலோசனை கூறி  ..அவர்களிருந்த  வீடு விற்பனைக்கானது . பின்பு ஒரு மூன்று அறைகள் கொண்ட தொடர்மாடிக்கு  இடம்  மாறியபோது தான்  அனித்தா விழித்துக்  கொண்டாள் .

சில  மாதங்களாக அவன் இரண்டு நாள் வேலை,.தூர இடத்தில் வேலை  எனசாட்டு சொல்லி அங்கு  தங்குவதாக  சொல்வான். வீட் டிலும் எந்நேரமும் சிந்தனை வயப்பட்டவனாக இருப்பான். பிள்ளைகள்  எங்காவது வெளியில் கூட்டிப் போவதற்காக  இருந்தாலும் தாமதமாக் வந்து அந்த நாளை சோகத்தில் ஆழ்ந்துவான். மகளுக்கு பன்னிருவயதாகிறது அவளில்  மிகுந்த நேசம் உள்ளவன். தன தாயின் சாயல் என்று சொல்வான். படிக்கும் காலத்திலேயே காதலித்துகைப்  பிடித்தவன். இவளும் தந்தையை இழந்த்தவள் . கனடா நாட்டில் கடின உழைப்பால்  முன்னுக்கு வந்தவர்கள். ஒரே ஒரு தங்கை அவளும் மணமாகி ஒரு ஆண் குழந்தையுடன் மகிழ்வாய்  வாழ்கிறாள். கோடை விடுமுறையில் மகனுடன் சேர்ந்து பந்துவிளையாடுவான்.  அமைதியான  வாழ்வில்  ஏன்  இப்படி ஒரு சுழல் காற்று ?


 சில மாதங்களுக்கு  முன்பு ,அவள் அவனது செல் போனை ஆராய்ந்த போது தான் ஒரு பெண்ணின் பெயர் பல தடவை பதிவாகி இருந்தது. அதுபற்றிக்  கேட்டதும்  முதலில் சாட்டு போக்கு சொன்னான் .பின் பிரச்சினையாகி ஒரு பூகம்பமே வெடித்து,  சென்ற வாரம் தனது  உடுப்புக்களை எடுத்துக்கொண்டு தன்  ஒன்றுவிட்ட  சகோதரனின்  வீட் டுக்கு  செல்லுமளவுக்கு வந்து விட்டது .. மறுநாள் அவனது  சகோதரன் வந்திருந்தார். தன் தம்பிக்கு சில  வருடங்களாக  ஒரு பெண்ணின் சிநேகிதம் இருந்தது என்றும் அவளுடன்  வாழப்போவதாக சொல்லி விட் டாராம்.  அவளும் மன்றாட்டமாய் கேட்டாள் . பிள்ளைகளை   எண்ணி தன்னுடன் சேர்த்து வைக்ககேட்டு கெஞ்சினாள் .அவரோ இது குடும்ப விடயம் என  நழுவி விட்டார்.  

 அவன் மனம் மாறுவான் என  காத்திருந்தாள் .  அப்போது தான் அவள்  கடந்தகால அவனது நடவடிக்கைகளை அசைபோட்டாள். சில் மாதங்களாகவே திட்டமிட்டு வீட்டையும் விற்க பண்ணி அதில் வந்த தொகையில் சிறுபகுதியில் இந்த மூன்று  அறைகொண்ட தொடர் மாடியை வங்கி விட்டு  மீதிப் பணத்தை தன் வசப் படுத்தி விட்டான்  என்று.

இனி என்ன செய்வாள் தன் னோடு   வாழப்பிடிக்காதவனை ?  விவாகரத்து மிகவும் மலிந்த பொருளாகி விட்டது .பதின் மூன்றுவருட இல்வாழ்க்கை சலித்து விட்டது. ஒரு  கணமாவது  பெற்ற பிள்ளைகளை எண்ணி பார்த்தானா? மகள் மிகவும் சோகமாய் இருக்கிறாள். எப்படி விளங்கப்படுத்துவேன் அவனது அயோக்கியத்தனத்தை? 

சென்ற வாரம் அம்மாவும் தங்கை குடும்பமும் வந்துபார்த்து விட்டுபோனார்கள்.ஒரு விழாவுக்கு சென்றால்'ஊரவர்  உறவினர் என்ன எண்ணுவார்கள்.  பெண்கள்  கூடிக் கதைப்பார்கள் . இப்படியும் ஒரு துரோகமா?... இரண்டு பிள்ளைகளுக்கு  தந்தையானவனை எப்படி தான்  வளைத்து பிடித்தாளோ?  இன்று சில ஆசைகளுக்காக  என்னை விட்டு செல் கிறவன் நாளைக்கு அவளையும் விட்டு செல்லமாட்டான் என்பது என்ன நிச்சயம் .மின்னுவதெல்லாம்  பொன்னென்று  எண்ணி ..இவனது மதி கெ ட்ட  தனத்தால் வரும் விளைவு/?

என் பிள்ளைகள்   என்ன பாவம் செய்தார்கள்? அவர்களை தாயும் தந்தையுமாக் கவனித்து வளர்க்கக் வேண்டும்.இப்படியானவர்கள் எப்போது குடும்பத்தின் அருமை பெருமை,பெறுமதியினை,உணரபோகிரார்கள்..?..கட்டியவளைக் கைவிட்டு,  , காசுபண மேலாம் சுருட்ட ..கூட  வந்து  ஓட்டியவளும் கைவிட்டு,  நோய் வாய்பட்டு வைத்திய சாலை யில் ..பார்க்க ஒருவருமில்லாமல் கடந்த காலத்தை  நினைத்து கடைக்  கண்ணால்  நீர் வழிய ஒரு காலம்  அவனுக்கு  வந்தால் ?.அப்போது காலம் கடந்து விடும். .இவ்வாறு எண்ணியவள் நன்றாக  அயர்ந்து போனாள் .

 திடீரென விழித்தவள்  நேரத்தை பார்த்தும் ..ஒ இன்று சனிக் கிழமை சற் று அவர்கள் தூங்கட்டும் என்று  எண்ணி சத்தமிடாமல் எழுந்து சென்று காலைக் கடன் களை முடித்து காலை  உணவுக்கு தயாரானாள் .என்ன கஷ்ட் துன்பம் வந்தாலும் என்  பிள்ளைகளை  வளர்த்து ஆளாக்குவேன் என்று எண்ணிய வாறு பிள்ளைகளை .தற்காப்புக் கலை (.கராட்டி) வகுப்புக்கு அழைத்து  செல்ல  தயாரானாள் ஒருபுதுமை பெண்ணாக ...

கதை கற்பனை அல்ல.பெண்கள் விழிப்பாக இருக்க வேண்டும். தன்னம்பிகையுடன் வாழ  வேண்டும் எனும் நல்  நோக்கத்துக்காக 
எழுதபட்ட குட்டிக் கதை . .