Followers

Sunday, April 10, 2011

பிரிந்தும் பிரியாத வரம் .

பால நாயகியும் ராஜ குமாரனும் இணை  பிரியாத தம்பதிகள்.அவர்களது மகிழ்வான் வாழ்வின் பயனாக் இரு ஆண்களும்  இரு  பெண க்களுமாய் நான்கு குழந்தை கள் .வாழ்வு சந்தோஷமாய் தான்போனது அந்த சம்பவம்  நடக்கும் வரை . ராஜகுமாரன் அவ்வூரின் கிராம சேவை அலுவலராக பணியாற்றி  கொண்டிருந்தார். .அவ்வூர்  மக்களின்  முகவரிக்  கணக்கு அறிக்கைகள் பங்கீட்டு புத்தக பதிவு போன்றவை அவரிடம்தான் இருந்தன . அது ஒருபோர்க்காலம். அவரிடம் இரவு நேரங்களில் படை அதிகாரிகள். சில இளைஞ்சர்களின் விபரம் கேட்க அவரிடம் வருவதுண்டு ...மனச சாட்சிப் படி   விபரங்கள் கொடுத்தாலும் சமுதாய  இளையவர்களின் உணர்வுக் கேற்ப  சில மாறுதல்களும் செய்து கொடுப்பார். அவ்வூர்  பையன்களைக் காப்பாற்ற . படை யினர் கையில் சிக்கினால் பிறகு மரண காண்டம் தான்.   காப்பரண் களில் வைத்துச் சித்திர வதையில்   உயிர் போக  வதைத்து விடுவார்கள்.இதனால் சில  இளைய வர்களுக்கும் ராஜகுமாரன் மீது ஒரு சந்தேகப் பார்வை. தங்கள் விபரங் களைக்  கொடுத்து . விடுகிறார் என்று