Followers

Thursday, June 24, 2010

ஒரு சில துளிகள்.

கவிதைக்கான ஒரு சின்ன முயற்சி ....


ஏக்கம் ....
மலர் ஒன்று காத்திருந்தது
தென்றலின் தொடுகைக்காய்
தென்றல் திசை மாறியதும்
வாடியது தன் தோற்றத்தில்

உற்சாகம் ...
புது வருகைகளினால்
மனம் துள்ளுகிறது
வருகை தரும் களிப்பு
கானம் பாட வைக்கிறது

சோகம்  ....

குயிலொன்று தன் துணையின்
 வரவுக்காய் கூவியழைத்தது
எதிர்பாட்டு கேளாமல்
சோகத்தின் கலவரத்தில்

சுமை .........

இதயங்களின் பாரம்
அழுகையில் குறையும்
அழுகையின் துளிகள்
அன்புள்ளத்தை சேரும்

எதிர்பார்ப்பு ......

தேக்கி வைத்த சோகம்
சொல்லி அழ ஏக்கம்
எதிர்பார்த்திருக்கும் நாளில்
மெளனமாய் வெடிக்கும். 

காத்திருப்பு .....

வழி மீது விழி வைத்து
உன் வரவுக்காய் காத்திருப்பு
மெளனமாய் பேசின் கண்கள்
ஆயிரம் அர்த்தங்களில்