Followers

Monday, November 7, 2011

நாள் தோறும் ....நீ தானே .....



அந்தச் சின்னஞ் சிறு கிராமம் ........காலை யில் மிகவும் சுறுசுறுப்பாக  
இயங்கும் ..... பட்டணத்துக்கு  போக பஸ் வண்டிக்கு விரைவோர்....காலை,ஆலயமணியின் பக்தி மிகு எழுப்புதல்கள் .. பள்ளிச் சிறார்கள் ..என்று வீதி ...போக்குவரத்தால் நிறைந்து இருக்கும்..
 கலைவாணி அந்த ஊரின் பாட்டு வாத்தியார் பொண்ணு ...கல்லூரியின் 
இறுதி யாண்டு படித்துக்  கொண்டிருந்தாள் ......பெணகள் கல்லூரி அது .எந்நேரமும்  சிரிப்பொலிக்கு பஞ்சமில்லை .....பெண்கள் என்றாலே மகிழ்ச்சி தானகவே வரும்.  

ஆண்டு இறுதிகளில் ...வகுப்பேற்றம்  நிகழும்..பன்னிரண்டாம்வகுப்பு, முடிவில் (  பிளஸ் டூ போன்று  ) . பல்கலை யின் நுழைவு தேர்வு இருக்கும். 
 பாட்டுவாத்தியாரின் மகள் என்பதாலோ என்னவோ கலை வாணிக்கு  நன்றாக பாட்டு வந்தது .மேடைகளில் கல்லூரியின் விசேடங்களில் பாடுவாள். .கர்நாடக சங்கீதம் மட்டுமன்றி ...சினிமா பாடல்களையும் வகுப்பு பெண்கள் பாடச் சொல்லி கேட்பார்கள்.  வாழ்வை  சினிமா ஆட்கொண்டிருந்த   காலம்.
உயர்கல்லூரி   மாணவிகளுக்கு வருட முடிவிலே பிரியாவிடை நடைபெறும் .

அயலிலுள்ள   சகோதர பாட சாலையும் அழைக்க படுவர்.விழா முடிவில் விருந்துபசாரம் நடக்கும்.ஆசிரியைகள் தலைமை யாசிரியர் தம்பதியர் .சகிதம் .அயல்பாடசாலை  அதிபர் குடும்ப ..சகிதம் விழா களை கட்டும். இதற்காகவே உள்ளவற்றில் நல்ல ஆடை உடுத்து ......அன்று பெண்களை சேலையிலும் பையன்கள் கோட் சூட் ஆங்கில உடையிலும்  காணப்படுவர் .