Followers

Wednesday, June 30, 2010

பெற்றவர்கள் பட்ட கடன் ........

அந்த  தொடர் மாடிக்கட்டத்தின் நான்காம் மாடியில் அமைந்து இருந்தது  அவர்களது குடியிருப்பு. தாய் மாலதி .தந்தை வாகீசன் மகன்கள் சுபன் .சுதாகரன் ஆகிய நால்வரும் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். முதலில் நாட்டுப்பிரச்சினை  காரணமாக் தந்தை வாகீசன் தான் குடிபெயர்ந்து இருந்தார். மனைவி மாலதி அவனது தூரத்து உறவு தான் . அப்போது  சவூதியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான் . திருமணமாகி இரு குழந்தைகள் பிறக்கும் வரை  ஒழுங்காக் தான் இருந்தான். ஒரு தடவை விடுப்பில் வந்தவன் நாட்டு பிரச்சினை காரணமாக  மீண்டும் போக முடியாது போனது. மதுவகை பாவிக்க் தொடங்கினான். மாலதி இருந்த நகை நட்டு எல்லாம் விற்று சகோதரர்களிடமும் கடன் வாங்கி ஒரு பாடசாலை வாகனம் எடுத்து கொடுத்தாள் பிள்ளைகளை பாடசாலைக்கு ஏற்றி வரும்  பணியில் இருந்தான். கையில் காசு புரளவே மீண்டும் குடிக்க தொடங்கினான் முன்பு நட்புகளோடு சேர்ந்து குடித்தவன் இப்பொது தானே வீடில் வைத்து குடிக்க தொடங்கினான். ஒரு நாள் போதையில் வாகனத்தை ஓட்டிசெல்கையில் ..திடீரென வாகனம் பற்றி எரிந்தது . அதிக வெப்பமாகி விட்டது முறையாக கவனிக்கப்படவில்லை.

 மாலதி குடும்பத்தை  கொண்டு செல்ல மிகவும் கஷ்ட பட்டாள். தன் பிரச்சினைகள் எதுவுமே தன் சகோதரர்களிடம் சொல்வதில்லி. ஒரு நாள் வெளி நாடில் இருக்குமஇளைய சகோதரனுக்கு செய்தி எட்டவே நீண்ட கடிதம்  ஒன்று எழுதினார். கொழும்புக்கு வந்து ....நிற்கும் படியும் அவரை தங்களிடம் கூப்பிடுவதாகவும் ஆறுதல் சொன்னார் சகோதரன் மனைவியின்  பிராத்தனையோ தெரியாது ...வசீகரன் கனடா நாடுக்கு வந்து சேர்ந்தார். ஒருவாறு மிகுந்த சிரமமப்ட்டு ...காலக்கிரமத்தில்  மனைவி பிள்ளைகளை குடும்ப இணைவில்  அழைத்துக்கொண்டார். அவர்களும் வந்து பாடசாலயில் சேர்ந்து ....நனறாக் கல்வி கற்றார்கள் .  மாலதி வசீகரன் வாழ்வில் கடன்கள் தீர்ந்து  வசந்தம் வீசியது.
ஒரு நாள் பால்ய நண்பன் ஒருவர் அவர்கள் வீட்டுக்கு வந்தார் . அவரது சிநேகம் தொடரவே மீண்டும் குடிவகை தொடங்கினார் .  இத்துடன் புகைத்தலும் சேர்ந்து கொண்டது மீண்டும் மாலதி  வாழ்வு சீர்குலைந்த்து . குடித்துவிட்டு பணியிடம் ( வேலைக்கு )செல்ல தொடங்கினார் . பொய் புளுகு ...அவரை  ஆட்கொண்டது மனைவிக்கு  உண்மை சொல்ல மாட்டார். மனைவியை அடித்து துன்புறுத்த  தொடங்கினார். இதனால் பணியிடத்தில் வேலையில்  இருந்து விலக்கப்பட்டார் . மாலதியின் சகோதரன் வேலைபார்க்கும் பணிஇடத்தில் தான் இவரது வேலை . மாலதியின் சகோதரனுக்கும் இதனால் மிகவும் மதிப்பின்மை ஏற்பட்டது. வேலையுமில்லை .ஒரு நாள் மதுபோதையில் வாகனம் செலுத்தி .அகப்ப்டார் .. சாரதி அனுமதி தடை செய்யப்பட்டது எச்ச்ரிக்கையுடன் மீண்டும் கொடுத்தார்கள். ஒரு தடவை வாகனத்தில் திறந்த மதுப்போத்தல் இருக்க பிடிபட்டார் .. இதனால் ஆறு வருடங்கள் வாகன சாரதி பத்திரம் ரத்து செய்யப் பட்டது.
 கடுங்குளிரில் மாலதி மிகவும் போக்கு வரத்துக்கு கஷ்ட பட்டாள். இதற்கிடையில் அவர்களது மூத்த புதல்வன் வாகன சாரதி .ஓட்டுனர் பத்திரம் .பெற்றுக்கொண்டான். தந்தையின் அனுமதி ரத்து செய்ய பட்ட் நிலையில் ..அவன் வாகனம் செலுத்தத்  பெருந்தொகை காப்புறுதிப்பணம் மாதம் கட்ட் வேண்டியுள்ளது . தந்தைக்கு அனுமதியிருப்பின்  அவரது உதவி ஓட்டுனர் என குறைந்த காப்புறுதியில் வாகனம் செலுத்தத் அனுமதி கிடைக்கும்.  புதல்வனுக்கு பயிற்சிக் காலம்  அதிகமாகும். அனுமதிப் பத்திரம் காலம் செல்லச்செல்ல பெறுமதி கூடும் சிறந்த ஒரு அடையாளமாக் ( identification ) வெளி நாட்டில்  கணிப்பர் . மகன் சுபன் வாகனம் ஓட்டுவதானால் காப்புறுதிப்ப்  பணமாக பெருந்தொகை  கட்ட் வேண்டியிருக்கும்  .மகனுக்கு தடையாக் இருப்பது தந்தையின் பொறுப்பற்ற செயல். புதல்வன் இப்பொது வாகனம் செலுத்தி பயிற்சி பெற்றுக் கொண்டால் இன்னும் இரு வருடங்களில் பெருந் தெருக்களுக்கான அனுமதி கிடைக்கும். மகனின் எதிர்காலம் தந்தையின் செயலில்..
இப்படிப்பட்ட  தந்தை  மீது எப்படி அன்பு வரும் ..............

வாழுகின்ற மக்களுக்கு,வாழ்ந்தவர்கள் பாடமடி
பெற்றவர்கள் பட்ட் கடன், பிள்ளைகளை சேருமடி
சேர்த்து வைச்ச புண்ணியந்தான், சந்ததியை காக்குமடி...

 என்னை இப்பதிவு எழுத தூண்டியது உண்மைச்சம்பவம்.

.

6 comments:

சீமான்கனி said...

நான்தான் பஸ்ட்டு ஊ..ஊ..ஊ..ஊ..ஊ..ஊ..ஊ..

சீமான்கனி said...

பிள்ளைகளுக்கு பெற்றோர்கள் தானே முதல் வழ்க்கைபாதையின் குறுக்கு வழியும், நேர்வழியும் என்பதை அழகாய் கதைல சொல்லிடீங்க நிலாக்கா வாழ்க்கையில் இருந்து கதைகளை எடுத்து அழகாய் தருவதற்கு நன்றிகள...எழுத்து பிழைகளை கொஞ்சம் கவனிக்கவும் அக்கா...

ஹேமா said...

நிலா..எல்லா அதிஷ்டங்களும் எல்லாவற்றிலும் கிடைத்துவிடுவதில்லை.
சிலருக்குப் பெற்றவர்களும் கூட !

'பரிவை' சே.குமார் said...

உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் நீங்கள் எழுதியிருக்கும் இந்தப் பதிவு பொறுப்பற்றவர்களுக்கு ஒரு பாடமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் மதுரம் said...

உங்களிடம் படிக்க நிறைய விடயங்கள் இருக்கின்றன. எம்மவர்களின் நிறைய விடயங்களை எழுத்துருவில் தத்துவம் நிறைந்த பதிவுகளாக எப்படி வாழ வேண்டும் என்ற வகையில் வழங்குகிறீர்கள்.

குடி குடியைக் கெடுக்கும் என்பது இது தானே?

நிலாமதி said...

சீமான்..ஹேமா..ஜெய்லானி..சே குமார்....தமிழ் மதுரம்.
உங்கள் வரவுக்கும் கருத்துக்கும் நன்றி.தொடர்ந்தும் அவ்வப்போது வாருங்கள்.