Followers

Saturday, September 12, 2009

தேவதையிடம் பத்து வரங்கள்.

தேவதையிடம் பத்து வரங்கள்.

இன்று தேவதை உங்கள் முன் தோன்றி பத்து வரங்கள் தருவதாக் கூறினால் என்ன வரங்கள் கேட்பீர்கள் .இந்த தலைப்பை ஆரம்பித்து அதை  தொடரும்படி என்னிடம் மேனகா சத்தியா கேட்டுக்கொண்டார். அதன் படி ஏன் பத்து ஆசைகளை  வரங்களாக் கேட்கிறேன்.

  • (1)   மீண்டும் என் தாய் மண் மீது தோன்ற வேணும். ( கடைசியாய் ஒரு  வார்த்தை சொல்லாமல் சடுதி மரணம் அடைந்து  விடார்.)
  • (2) அழகான் அந்த பள்ளி வாழ்கை (அப்போது புரியவில்லை) இப்போது தேடுகிறேன்.
  • (3)என் தாய் மண்ணில் , மீண்டும் வாழ வேண்டும் தொலைத்த இன்பமெலாம்     பெறவேண்டும்.
  • (4)என் சக உறவுகள் ஒரு நாளில் ஒரு இடத்தில கூட வேண்டும்.
  • (5)உலகம் முழுக்க சுற்றி  வர ஒரு பறவையாய் மாறவேண்டும்.
  • (6)என் தமிழ் ஈழத்தனி நாட்டை உலகம் அங்கீகரித்து , அதை உறுதி படுத்தி ஈழத்த்மிலரெல்லாம் அங்கு வாழவேண்டும்.
  • (7) உலகமெல்லாம் வறுமை ,நோய் பிணி ஒழிய வேண்டும்.
  • (8)என் தாய் நாட்டில் ஈழத்து போரால் சடுதி மரணம் அடைந்த்த்வர் உயிர் பெற்று எழவேண்டும்.
  • (9)இறக்கும் வரை நோயிலாதவாழ்வு வேண்டும்.
  • ( 10)வேண்டியது எல்லாம் கொடுக்கும் தேவதை என் முன் நிஜமாக்   ோன்ற வேண்டும். ..............இதை தொடர நான் அழைப்பவர்கள்.

மெயசொல்ல போறேன் (கிருத்திகன்)
சந்து ருவின் பக்கம் ....சந்து ரு)
யோ வாய்ஸ் ..........யோகா
ஈரோடு கதிர் அவர்கள்
சீமான் கனி அவர்கள் 
சப்ராஸ் அபூ பக்கர்
கவிக் கிழவன் யாழவன்..
மற்றும் என் தளத்தை  பார்வையிடும் உறவுகள் எவரும் எழுதலாம்.எங்கே தொடருங்கள்.பார்க்கலாம். .

20 comments:

Unknown said...

அழைப்பை ஏற்று பதிவும் போட்டாச்சு.. இருந்தாலும் இப்பிடி மாட்டி விட்டிருக்கக் கூடாது நீங்கள் http://kiruthikan.blogspot.com/2009/09/blog-post_12.html

ஈரோடு கதிர் said...

ஆசைகள் நிறைவேறும் போது வரமாகின்றது...

இல்லாவிடில் ஏமாற்றமாகவே
தவிக்கிறது...

thiyaa said...

சிலது நடக்கலாம்
சிலது நடக்கும்
சிலது நடவாது என்று நினைக்கிறேன்.

கவிக்கிழவன் said...

நன்றி உங்கள் அன்புக்கு உங்கள் 10 ம்
எனக்கு பிடிச்சிருக்கு நானும் எழுதுபட்ட முயற்ச்சி செய்கிறான்

Unknown said...

தேவதை நிச்சயமாக ஒரு நாள் வருவாள்....வழமான வாழ்வை உங்கள் தாய் மண்ணில் தருவாள்.... நம்பிக்கையுடன் காத்திருங்கள்...

டவுசர் பாண்டி said...

சகோதரி , நீங்கள் விரும்பும் அந்த பத்து வரங்களும் உங்களுக்கு கிடைக்க
வேண்டி , அமைதியான வாழ்வு விரைவில் கிடைக்க இறைவனை வேண்டும் , - பாண்டி .

ப்ரியமுடன் வசந்த் said...

நல்ல ஆசைகள் அனைத்தும் நிறைவேற வாழ்த்துக்கள்

நிலாமதி said...

என் அழைப்பை ஏற்றுக் கொண்ட கீத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள் .
யாரையடா கண்ணா உரிமையுடன் அழைப்பேன். உன்னை தானே.

நிலாமதி said...

ஆசைகள் நிறைவேற நாம் தான் முயற்சிக்க வேண்டும் அல்லது தேவதையிடம் தான் கேட்டு எழுதவேண்டும் நன்றி பிரியமுடன் வசந்த்/

நிலாமதி said...

டவுசர் பாண்டி உங்களுக்கு என் நன்றிகள்.

நிலாமதி said...

அன்ரோ .......உங்கள் வரவுக்கும் பண்பான தென்பு ஊட்டலுக்கும் என் நன்றிகள். .

நிலாமதி said...

கவிக்கிலவரே உங்களுக்கு என் நன்றிகள் . முயற்சித்து எழுதுங்கள்.

நிலாமதி said...

தியா ..........நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே. வரவுக்கு நன்றிகள்.

நிலாமதி said...

நீங்கள் கூறுவது முற்றிலும் சரியே உங்கள் பதிவுக்கு நன்றி..........

யோ வொய்ஸ் (யோகா) said...

நன்றி நிலாமதி அக்கா.. எனக்கு அழைப்பு கொடுத்ததற்கு.. எழுத முயல்கிறேன்..

Admin said...

//(6)என் தமிழ் ஈழத்தனி நாட்டை உலகம் அங்கீகரித்து , அதை உறுதி படுத்தி ஈழத்த்மிலரெல்லாம் அங்கு வாழவேண்டும்.


அருமை நடக்கும் என்ற நம்பிக்கை இருக்கின்றது.... நம்புங்கள் தலைவன் வழி எல்லாம் நடக்கும்



(8)என் தாய் நாட்டில் ஈழத்து போரால் சடுதி மரணம் அடைந்த்த்வர் உயிர் பெற்று எழவேண்டும். //


எத்தனை உறவுகளை இழந்து தவிக்கின்றோம். நல்ல எதிர் பார்ப்பேதான்.

Admin said...

உங்கள் அழைப்பை ஏற்று தொடர்கின்றேன்.

Admin said...

உங்கள் அழைப்பினை ஏற்று உடனடியாகவே பதிவிட்டுவிட்டேன்.

நன்றிகள் அழைத்தமைக்கு.

சப்ராஸ் அபூ பக்கர் said...

நோன்பு முடிந்ததும் அழைப்பைத் தொடர்கிறேன்... அழைத்தமைக்கு நன்றி அக்கா....

கொஞ்ச நாட்களா வலைப் பக்கம் வந்து கொள்ளவில்லை. இன்னும் சிறிது நாட்களுக்குப் பின் ஆரம்பிப்பேன்....

Anonymous said...

கொஞ்சம் யோசிச்சு பார்க்கவேண்டி இருக்கிது