Followers

Tuesday, January 19, 2010

உனக்கான பெண்.......

உனக்கான பெண்.........

அந்த நகரத்தின் ...சற்று ஒதுக்கு புறமான அழகிய வீடு அதில் , வாழ்த்து வருபவள் தான்  சுஜித்தா  எனும் சுஜி, கடந்த ஐந்து மாதங்களுக்கு முன்பு தான்.....தன் தாயை கான்சர் வருத்தத்துக்கு பலி கொடுத்தாள். அழகிய அடக்கமான பெண் . சென்ற வருடம் தான் பட்ட படிப்பை முடித்திருந்தாள்.  அவள் தந்தை மிகவும் , நேசிக்கும் ஒருத்தி ..மொத்தத்தில் அவர் அவளுக்காகவே வாழ்கிறார்....அவரது நிருவனங்க் களை மேற்பார்வை செய்வதிலும்....அங்கு ஏற்படும் சிக்கல்களை தீர்ப்பதிலும் அவரது காலம் .... ஓடிக்கொண்டு இருந்தது....அன்று காலை தேநீரை கொடுத்தவள் அப்பா.....என்று இழுத்தாள். எத்தனை வேலையாட்கள் இருப்பினும் அம்மா நோயாளியாக இருக்கும் போது ......இந்த பொறுப்பை ஏற்றுக்கொண்டவள். தந்தைக்கு விருப்பமான் தும் கூட . அவ்வேளைகளில் அன்றைய தன் வெளி அலுவல்களை பற்றியும்  கலந்து உரையாடிக் கொள்வார்கள் . இன்று அவள் அப்பா........என்பதில் எதோ தேவை இருப்பதாய் புரிந்து கொண்டார்.....என்னம்மா சுஜி ? .....வந்து எனக்கு போரடிக்குதுப்பா ...மகளிர் சங்க காரியாலயத்தில் ....பணிக்காக் கேட்கிறார்கள். போகலாமாப்பா ...? இங்க பாரும்மா ....உனக்கு தீவிரமாக் மாப்பிள்ளை பார்க்கும் பணியில் இறங்கியிருக்கேன்...வெளித்தொடர்பு ....காதல் அது இது எல்லாம் எனக்கு பிடிக்காத்தாம்மா ...நீ கவனமாய் இருப்பதாக , வாக்கு கொடுத்தால்...உன் ...நேரம் பயனுள்ளதாக இருக்குமானால் போய் வா என்றார். ,,,அவளுக்கு மகிழ்ச்சி பிடிபடவில்லை....மானாக துள்ளி சென்றாள்.  காலம் யாருக்காகவும் ,காத்திராமல் ஓடிக்கொண்டிருந்தது....வீட்டில் இரண்டு கார் இருந்தும்...தன்  உந்துருளியிலே ...(.skooter )
போவாள். ஒரு நாள் ...இடையில் வண்டிக்கு ...ஒரு சிறு சிக்கல் வரவே ..வீதியில் நின்று செய்வதறியாது நின்றாள் .. அந்த வழியில் வந்தது ஒரு வண்டி.....அதிலே ராகுலன்  என்னும் அழகிய  இளைஞன் . , வண்டியை ...திருத்தும் இடத்துக்கு அனுப்பவும். அவளை காரியாலயம் செல்லவும் உதவினான். ......தொலைபேசி மூலம் இவர்களது நட்பும் நீடித்தது ......ஒரு நாள் அவளை தனிமையில் கண்டு பேச விரும்புவதாக சொன்னான். அந்த நாளும் வந்தது....இருவரும் ஒரு ....போது இடத்தில சந்தித்தார்கள்.....அவன் தன் விருப்பத்தை சொன்னான்.....மறு வாரம் சொல்வதாக சொல்லி இருவரும் விடை பெற்றனர்....மறு வாரத்தில் ஒரு நாள் அவன் அலுவலக முகவரிக்கு ஒரு மடல்........

நட்புடன் ராகுலனுக்கு.........என்னைக்கண்டதும் என் பால் ஈர்க்க பட்டதும் எனக்கும் புரியும . ஆனால் ....உங்களுக்கான பெண் நானல்ல .......இந்த உலகம் பூந்தோட்டம் ஆயிரம் பெண்களை சந்திக்கலாம் ஆனால் நான் என் தந்தையின் சொல்லை மீற முடியாதவளாக இருக்கிறேன்.....ஒரு வேளை நீங்கள் என் தந்தையிடம் பெண்கேட்டு வந்து அது நிறைவேறினாலும் ....நிறைவேறாவிடாலும்.....நான் உங்களை காதலித்தேன் என அறிந்தால்  என் தந்தை என்னை இருபத்து மூன்று வயதுவரை வளர்த்த ...பாசம்....சத்தியம்... இன்றும் இன்னொரு மனைவியை தேடாத வைராக்கியம் ,...என்பவற்றை சிதறடித்தவளாகி விடுவேன் .......ராகுலன் .....என்னை மன்னித்து விடவும்....இந்த எண்ணம் வரும் என, எண்ணியியிருந்தால்...உங்களிடம் நட்பை  வளர்த்திருக்க  மாட்டேன் .....சத்தியத்தை ..காப்பாற்ற மிகவும் போராடுபவள்....அப்பா எனக்கு விரைவில் திருமண பணத்தில் ஈடுபட வைக்க இருக்கிறார்..அவர் விருப்பமும் ஆசைகளும் ....எனக்கு மிகவும் முக்கியம்....உங்கள் , எண்ணத்தை நிறைவேற்ற முடியாமைக்கு வருந்துகிறேன்......இந்த எண்ணம் தொடர்ந்தும் உங்களுள்ளத்தில் இருக்குமானால் என்னை தொடர்பு கொள்ள , தொந்தரவு செய்ய , வேண்டாம்.......
நட்புடன் சுஜி .........

.மடல் கண்ட ராகுலனுக்கு.......அவன் ஏக்கத்துக்கு ஒரு இடி......இந்த நாட்டில் இந்தக் காலத்தில் இப்படியும் ஒரு பெண்ணா? ........இரண்டு வாரங்களாக ஒரு பதிலும் சொல்லாதிருந்தான்....மூன்றாம் வாரம்....

.நட்புடன் சுஜிக்கு......செல்வ செழிப்பிலும் ...உன் தந்தையின் ..வளர்ப்பிலும்..... உன் அழியாத பாசத்தை மெச்சுகிறேன்.....என விருப்பம்  உன்னிடம் ஒரு விண்ணப்பம் மட்டுமே .......உன் இன்பமான் மண வாழ்வுக்காக வாழ்த்தும் ராகுலன்.......

.மறு வாரமே அவளுக்கு நிச்சய தார்த்தங்களுக்கான  ஆயத்தங்கள் நடந்தது ......சுஜி யின் தூரத்து உறவு......அமெரிக்காவில் மேற்படிப்புக்காக சென்றவன்.......சுஜியையும் ஏற்று தந்தையின் ..தொழிலை  பொறுப்பெடுத்து பார்துக்கொள்வதாக் ஏற்றுக்கொண்டு ....வாக்கு சொன்னவன்.....பாலேந்திரன்........சுஜிக்கு மண மகனாக  ஏற்படுத்த பட்டான்.....

சில காதல் கனிந்து மணம் பரப்புவதுண்டு .....பல காதல்  மலராமலே போவதுண்டு.....ஒரு சில மலர்ந்து இடையில் வாடி விடுவதும் உண்டு........ராகுலனுக்கான் பெண்......அவள் அல்ல ..எங்கோ ஒருத்தி பிறந்திருப்பாள்.......

16 comments:

அண்ணாமலையான் said...

எங்க இருக்கா?

sathishsangkavi.blogspot.com said...

ரசிக்கும் படியான கதை...

Unknown said...

தெளிவான நடை...தேர்ந்த சொல்லாடல்...வாழ்த்துக்கள் நிலாமதி!!

VISA said...

கதை பழசு என்றாலும் எழுதிய விதம் ஒரு சின்ன குழந்தை கதை சொல்வது போல் மிக அருமையாக இருந்தது

'பரிவை' சே.குமார் said...

//சில காதல் கனிந்து மணம் பரப்புவதுண்டு .....பல காதல் மலராமலே போவதுண்டு.....ஒரு சில மலர்ந்து இடையில் வாடி விடுவதும் உண்டு//

அருமையான வரிகள். நல்ல கதை. வாழ்த்துக்கள் நிலாமதி.

நிலாமதி said...

அண்ணா மலையான்..... இனிமேல் தான் பிறந்து வர போகிறா........

நிலாமதி said...

சங்கவி ..........உங்கள் வரவுக்கு நன்றி .

நிலாமதி said...

அன்ரோ உங்கள் வரவுக்கும் பதிவுக்கும் நன்றி....

நிலாமதி said...

விசா .......உங்களுக்கு நன்றி.....

நிலாமதி said...

சே.குமார் ...உங்களுக்கு நன்றி.

கலகலப்ரியா said...

நல்லாருக்கு நிலாமதி..

ஹேமா said...

கதை நல்ல்லாருக்கு நிலா.இயல்பாய் நடக்கிறதாயிருந்தாலும் சொல்லியிருக்கும் விதம் இன்னும் மனசை நெகிழவைக்கிறது தோழி.

கவி அழகன் said...

சில காதல் கனிந்து மணம் பரப்புவதுண்டு .....பல காதல் மலராமலே போவதுண்டு.....ஒரு சில மலர்ந்து இடையில் வாடி விடுவதும் உண்டு........ராகுலனுக்கான் பெண்......அவள் அல்ல ..எங்கோ ஒருத்தி பிறந்திருப்பாள்.......

அருமை வாழ்த்துக்கழ்த்துக்கள்...

சீமான்கனி said...

கதை அருமை அக்கா..ரசித்தேன்...

ஈரோடு கதிர் said...

ரசிக்கும் நடை

ரிஷபன் said...

அமைத்த விதத்தில்.. அமர்க்களம்..