Followers
Monday, November 15, 2010
பசி தீர்க்கும் தாய்மை
நம் பசி தீர்க்க தன்
பசிக்கு உணவு
நாடிச் சென்றவள
சென்றும் பல நாழியாச்சு
நலமோடு வரும் வரையில்
நாம இருப்போம் ஒற்றுமையாய்
நகர்ந்து சென்று ஓடாதே
நன்றும் தீதும் காத்திருக்கும்
நிறத்தில் வேறு கண்டாலும்
நிஜத்தில் நாம் உறவுகள்
பத்திரமாய் நாம் இருப்போம்
சென்ற வழி பார்த்திருப்போம்
பதறாதே சோதரி
பகல் பொழுது சாய முன்
பசி தீர்க்கும் தாயவள்
பாயந்து ஓடி வந்திடுவாள்
Subscribe to:
Post Comments (Atom)
-
மாலதி டீச்சர் .......அப்போது மூன்று வயது இருக்கும். என் அண்ணா பள்ளிக்கு போகும் போதெல்லாம் நானும் அடம் பிடிப்பேன் கூட போகவேணு மென்று . ஏற்...
-
நன்றி சொல்ல உனக்கு ( உங்களுக்கு ) வார்த்தையில்லை எனக்கு ........... மனதில் இனம் தெரியாத ஒரு உணர்வு, வார்த்தைகளாக் வெளி வரும் இந்த வேளையில்...
-
பெரிய பண்ணை யின் வளர்ப்பு நாய் ............ அந்த ஊரிலே , மிகவும் மிடுக்காகவும் , அதிகாரத்துடன் ஒருவர் நடந்து போனார் என்றால் அவர் பெரிய பண்...
20 comments:
நல்லா இருக்குங்க
கவிதை அருமை..!!
வாழ்த்துக்கள்!!
நீங்கள் எதை நினைத்து எழுதினாலும் எனக்கு ஈழத்து சோகம் தான் நினைவுக்கு வந்து நெஞ்சை பிசைகிறது. இந்தக் கவிதை கூட
அருமை.. அருமை. இந்த மென்மை தாங்கும் உணர்வுகள்... தந்த எச்சரிக்கைகள்.... அற்புதம். நல்ல நடை. வாழ்த்துக்கள். தொடருங்கள்.
ப்சி தீர்க்கும் தாய்மை அருமை!
..பதறாதே சோதரி
பகல் பொழுது சாய முன்
பசி தீர்க்கும் தாயவள்
பாயந்து ஓடி வந்திடுவாள் ..
உண்மைதான்...
தாய் எங்கிருந்தாலும் சேயின் பசி தீர்க்க ஓடி வருவாள்.
பதறாமல் சிதறாமல் அழகாய் வந்து விழுந்து இருக்கின்றன வார்த்தைகள் உங்கள் கவிதையில். படத்திற்கு ஏற்ப நல்ல சிந்தனை.
அழகான கவிதை.
கவிதையின் சாயலில் உலகம் மனிதத்தோடு வாழ்ந்தால் எவ்வளவு நல்லாயிருக்கும் !
உணர்வ்வோட்டம் உள்ள நல்ல கவிதை.
கவிதை அருமை..!!
சோகம் இழையோடும் உருக்கமான கவிதை.
நல்ல சொல்லாடல்! அருமை!!!
super கவிதை
மிகவும் அருமையா இருக்கு அக்கா வாழ்த்துக்கள்
ஃஃஃஃநிறத்தில் வேறு கண்டாலும்
நிஜத்தில் நாம் உறவுகள்
பத்திரமாய் நாம் இருப்போம்ஃஃஃஃ
அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்..
அன்புச் சகோதரன்
ம.தி.சுதா
http://mathisutha.blogspot.com/
கவிதை கவிதை ஆஹா.. ஆஹா.. கவித்துவம் என் நெஞ்சை தைக்குதே.. மன்னிக்கவும் இன்ரு தான் உங்கள் பக்கம் வந்தேன் அருமை அணைத்து தேன். வாழ்த்துக்கள்.
எனக்கு ரெம்ப பிடித்திருக்கு இந்த சித்திரமும் கவிதையும்
அருமையான கவிதை...
வாழ்த்துக்கள்....
இப்படிக்கு அனீஷ் ஜெ
Post a Comment