Followers

Tuesday, January 17, 2012

தாயும் நீயே தந்தை நீயே ..........

தாயும் நீயே தந்தை நீயே ..............

லண்டன் கீத்ரோ விமான நிலையத்தில்  இருந்து புறபட்ட   விமானம் பலரோடு லதாங்க்கினி  யையும் ஏற்றிக் கொண்டு தான் பயணத்தை தொடங்கியது .பல நாட்களாக் ஆசைபட்ட   பயணம் அவளுக்கு .லண்டன் மாநகரம் மாணவ விசாவில் படிக்க சென்று ஐந்துவருடங்களின்  பின் நாடு திரும்புகிறாள். போர்க்கால   சூழலில் ....தாய் தந்தையை வன்னிக் கிராமத்தில் பறி  கொடுத்த பின் எரியூட்ட   பட்ட் வீடில் .பெற்றவர் உடல்களையும் காணத துயரங்களில் மூழ்கி  இருந்த வேளை,...... அவளுக்கு சித்தப்பா தான் கை கொடுத்தார். இருவரையும் கொழும்புக்கு எடுப்பித்து  ஒரு விடுதிக் நிர்வாக காப்பாளர் மூலம் ஒரு பெண்கள் விடுதியில் லதாவையும் உறவினர் வீட்டில் மனோகரையும்......சேர்த்துவிட்டு சகோதரனின் மறக்க முடியா இழப்பையும் தாங்கி கொண்டு பணி நிமித்தம் சித்தப்பா லண்டன் திரும்பி விட்டார் ......அவர்களுக்கு படிப்பு வாழ்விட செலவுகளத்தனையும்  கவனித்து கொண்டார் ........

லதா பட்டபடிப்பு முடித்த் பின் ..ஒரு ஆசையில்  விண்ண்பித்த் விசாவுக்கு நல்ல பதில் வந்தது லண்டனுக்கு செல்ல விடுமுறை  நாட்களில் இவள் தம்பியிடம் சென்று வரும் அந்த பொற்காலம் தூர......போகிறதே  என்ற மனக்கவலையிலும்  அக்காவுக்கு விடை  கொடுத்தான் பெற்றவர்கள் இல்லதா துயரம் ..எதிர்கால   நோக்கம் கல்வியின்  முன்னுரிமை என உணர்ந்த  இவர்களை காலம் நன்றாகவே வழி காட்டியது .மனோகரின் கடும் முயற்சி அவனை கல்வியிலும் முன்னேற்றியது அந்த வருட  ஆண்டு இறுதியில் சித்தி எய்தி ... கண்டி பெரதேனியா .மருத்துவ பிரிவுக்கு தெரிவு செய்ய பட்ட் போது அக்கா   லதாவுக்கு இனம்புரியாத   பெருமை .அக்காவின் வழிகாட்டல் ஊக்குவிப்பு கடின உழைப்பு ........அவனை ஒரு  மருத்துவருக்கு தயார் படுத்தி இருந்தது .......அவனுக்கான  பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ளத்தான் தாயகத்துக்கு புறப்பட்டு  இருக்கிறாள்.

பயணம் தந்த களைப்பை தம்பியை பல வருடங்களுக்கு அப்பால் ..சந்திக்க் போகுமாவல் ......தணித்துவிட்டு இருந்தது.  இன்னும் சில மணி நேரங்களில் விமானம் தரையிறங்கக் போகிறது ....அவளது உள்ளம் எப்போதோ தரை தொட்டுவிட்டது.  தம்பியின் தோற்றம் .....அவனது நண்பர்கள் ..உறவினர்களை     எதிர் கொள்ள நிலைமை தயாராகி விட்டது .
இதோ சற்று ஆட்டமுடன் விமானம் தரை தட்டுகிறது ...குடிவரவு திணைக்கள கட்டுப்பாடுகள்    முடிந்து வெளி வந்தவளுக்கு ."அக்கா "  என கட்டியணைக்க   வரும் கம்பீரமான இளைஞ்சன் இவனா? என் தம்பி என அதிர்சியடையுமக்கா ..........அன்புப்பரிமாறல்களுக்கு  பின் உறவினர் வீட்டை அடைந்தார்கள் 


.வாரம் ஒன்று ஓடிவிட்டது .வார இறுதியில் .பல்கலைகழகம் முடிய ..அவளை வெளியே அழைத்து சென்று ..உரையாடுவான்..அவன் நன்றாக் மாறிவிட்டு இருந்தான். பொறுப்புள்ள தம்பியாக, கஷ்டம் தெரிந்த்வனாக் ..எந்த கெட்ட  பழக்கங்களுக்கும் ஆளாகாதவனாக  இருந்ததையிட்டு    லதாங்ககினி  பெருமைப்பட்டாள்.  தாய் தந்தையருக்கு பின் தன் பொறுப்பை நன்றாக் உணர்ந்த்வனாக் என் தம்பி வளர்ந்திருக்கிறான் என் பணியை  செய்து இருக்கிறேன்  என்ற திருப்தியுடன்  மன அமைதிபெற்றாள் .

எதிர் பார்த்த  அந்த பரிசளிப்பு விழா நாளும் வந்தது ஒருதனியார் வாகனத்தில் உறவினருடன் கண்டிக்கு சென்று ... விழாவில் கலந்து கொண்டனர்........அவன் உடன் இன்னும் இரண்டுபேர் அதி திறமை சித்தி பெற்று இருந்தனர்.உடன் பேராசிரியர்கள் அவனை புகழ்ந்து  பேசும்போது கண் கலங்கினாள் . ...விழா முடியும் தருணம்  உறவினருக்கான   விடுதியில் விருந்துபசாரம் நடக்க இருந்தது அவனும் நண்பர்களும் பிரமாண்டமாக் ஒழுங்கு செய்து இருந்தனர். இவனது பிரிவுக்கான  மருத்துவ பேராசியரியர ராஜபாலன் தூரத்து தாய்வழி சொந்தமும் கூட .ஒழுங்க்கமைக்க் பட்ட் மேடையில் மனோகரின் சிறப்புக்கள்.......அவனது கடின  உழைப்பும் ..விடாமுயற்சியும் , கூடுதல் உனது சக்தியாக அக்காவின்  அன்பும் வழி நடத்தி இருந்தன
என்ற பொருள் பட பேசினார் நன்றி கூறி விருந்து ஆரம்ப மாகும் வேளை .........

ஒலிவாங்கியை கையில் எடுத்த மனோகர் என் அக்காவாக  மட்டும் அல்ல என் தாயும்  தந்தையுமானவள் .என்ற உணர்வு மேலீட்டினால் ..பாடினான்

http://www.youtube.com/watch?v=d2VJW5CHxhQ .



 படம்:  குமரன் சன் ஒப் மகாலட்சுமி .............நீயே நீயே ...........தாயும் நீயே தந்தை நீயே .உயிர்த் தோழி நீயே ...(அழகான   அன்பை பொழியும் ஒரு பாடல் )  .இதோ ...நீங்களும்    கேளுங்கள்..........விழா நடுவில் கண்கள் சிவந்து கண்ணீர் பெருகியது லதாவுக்கு ..இதயம் மகிழ்வால் பெருமிதத்தால் விம்மியது 

.குறிப்பு: 

எனக்கு பிடித்தபாடல் இது பாடலுக்கான எனது உணர்வுகளை உணர்த்தும்   சிறுபகிர்வு.  .பிடித்திருந்தால் உங்களது ஒரு சில வரிகள் என்னை மகிழ்விக்கும். 

10 comments:

அம்பலத்தார் said...

நிலா உங்க ரசனைப்பாடலும் பாடலுக்கான உணர்வுபூர்வமான உங்க குட்டிக்கதையும் நன்று.

தமிழ்த்தோட்டம் said...

அழகான கதை பகிர்வுக்கு நன்றி அக்கா

தமிழ்த்தோட்டம்
www.tamilthottam.in

வாங்க பார்த்து செல்லுங்க said...

NICE

Muruganandan M.K. said...

சுருக்கமான சுவையான கதை.
இனிய பாடலுடன்.

Marc said...

அருமையான பதிவு வாழ்த்துகள்

உழவன் said...

மிகவும் உருக்கமான கதை...நன்றி அக்கா..

Anonymous said...

அருமை..<< கோவை ரவி

Vijayakumar .P said...

அழகான கதை அக்கா

அன்புடன் மலிக்கா said...

அருமையான பதிவு அழகான கதை
அருமை நிலாக்கா..

dafodil's valley said...

அன்பை எதிரொலிக்கும் அழகான ஒர் கதை அற்புதமான பாடலுடன். நன்றாக இருக்கிறது!