Followers

Wednesday, July 22, 2009

பாடி திரிந்த் பறவைகள் ......

பாடி திரிந்த் பறவைகள் .......


அது ஒரு பாடசாலை பருவம் ...பல்கலை புகு முக வகுப்பின் இறுதி வருடம் .
வழக்கமாக இளயோர் ஒன்று கூடல் (get together )நடத்துவார்கள் .அருகிலிருக்கும் சகோதர பாடசாலையிலும் இருந்து 5 பேரை எடுப்பார்கள். அதன் படி நானும் போய இருந்தேன் . அதில் பெண்கள் சாரியிலும் ஆண்கள்,ஆங்கில கலாசார உடை ( கோட் சூட் )யிலும் இருப்பார்கள் என்பது சொல்லித் தெரிவதில்லை .உங்களுக்கும்  விளங்கும் தானே .

அதில் ஒரு நிகழ்ச்சியில் பொதி மாருகை ( parcel passing ) போது அதில் எழுதி
இருப்பதை செய்து காட்ட வேண்டும். என் நண்பிக்கு "ஆண் என்றால் பெண்ணுடனுடனும் பெண் என்றால் ஆணுடனும் கை கோர்த்து வலம்வரவும் .எல்லோரும் ஆச்சரியமாய் பார்த்தார்கள்.

அவள் எழுந்து அதிபரின் (ஆண் ) கை பிடித்து உலா வந்தாள் ...புத்திசாலி ....60 வயது அதிபருக்கு இனம் புரியாதா சந்தோசம் ...பக்கத்தில் அவர் மனைவி ...ஆச்சரியத்துடன் ...என்று பார்த்தார் . சக வயதினரை சேர்த்து நடந்தால் மறுநாள் ஊரில் தலை காட்ட முடியுமா?....அப்படி .. ஒரு நிகழ்ச்சி....

அது ஒரு பாடி பறந்த ... பருவம் . இது ஒரு பசுமை நிறைந்த நினைவு ...

......நன்றியுடன் நிலாமதி

1 comment:

Admin said...

உங்கள் பதிவுகள் அருமை. தொடருங்கள் வாழ்த்துக்கள்...